சனி, 31 மார்ச், 2018

தமிழக அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை இடம்பெற பரிந்துரைத்தவர் ரசிகமணி டி.கே.சி...



தமிழக அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை இடம்பெற பரிந்துரைத்தவர் ரசிகமணி டி.கே.சி...

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரை ஒன்றை வடிவமைக்கத் திட்டமிட்டனர். பலரும் பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ரசிகமணி டி.கே.சி. அவர்களிடம் ஓமந்தூரார் யோசனை கேட்டார். “இதற்கா இவ்வளவு யோசனை? தமிழ்நாடு முழுவதும் வானளாவிய கோபுரங்கள் எழுந்து நிற்கின்றனவே. அதைவிடவா தமிழ்க் கலையையும், தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்துக் காட்டும் சின்னம் வேறு இருக்கிறது? நம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் மிகவும் அழகான தோற்றத்துடன் இருக்கிறது. அதையே தமிழக அரசின் சின்னமாக வைத்துவிடலாமே” என்று உடனே பதில் சொல்லிவிட்டார் ரசிகமணி. டி.கே.சி. அவர்களின் இந்த அரிய யோசனை ஏற்கப்பட்டு தமிழ்நாட்டின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூரின் கோபுரம் இடம்பெற்றுவிட்டது.


தமிழக அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரத்தை முதன்முதலில் தமிழக அரசு சின்னமாக அறிவித்தவர் திரு .பி.எஸ்.குமாரசுவாமி ராஜா ஆவார். தற்போதைய தமிழக அரசு சின்னம் திரு.காமராஜரால் 1956ல் அறிமுகப் பட்டது அப்போது மதராஸ் மாகாணம் என்ற பெயரே இருந்தது. பிறகு 1968ல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பட்டபோதும், இந்தச் சின்னமே நீடித்தது. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் தனித்தன்மை கொண்டது; அகலம் குறுகியிருப்பதால் பதினொரு நிலைகள் கொண்ட அதன் உயரம் ஒருவித பிரம்மாண்ட தோற்றத்தை அளிக்கிறது. உலக பன்னாட்டு நிறுவனம் புராதன சின்னமாக இக்கோபுரத்தை அறிவித்துள்ளது.

புதன், 28 மார்ச், 2018

இந்திய தண்டனை சட்டத்தின் (INDIAN PENAL CODE) பிரிவுகள் 96 முதல் 106 வரை...


 இந்திய தண்டனை சட்டத்தின் (INDIAN PENAL CODE) பிரிவுகள் 96 முதல் 106 வரை...

  96 to 106 IPC Section

 இந்திய தண்டனை சட்டத்தின் (INDIAN PENAL CODE) பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.

பிரிவு 96: தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும் எச்செயலும் குற்றச்செயல் ஆகாது.

பிரிவு 97: முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள உரிமை.

இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு. இந்த பிரிவின்படி நமக்கோ, நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ – உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.

பிரிவு 98: இளமை, புரிந்து கொள்ளும் பக்குவமின்மை, சித்தசுவாதீனம் இல்லாமை அல்லது போதை இவற்றின் காரணமாக ஒருவர் செய்யும் செயல் குற்றச்செயல் அல்ல என்று கருதப்பட்டாலும், அந்த செயல்களுக்கு எதிரான காப்புரிமை செயல்படும்.

அதாவது உரிய வயதடையாத மைனர் ஒருவரோ, மனநலம் குன்றியவரோ, போதைப்பொருளின் ஆக்கிரமிப்பில் உள்ள ஒருவரோ செய்யும் செயல் குற்றம் ஆவதில்லை என்பது சட்டத்தின் கருத்து. எனினும் இந்த செயல்களால் ஏற்படும் ஆபத்து குறைவானதல்ல. சிறுவன் ஒருவனோ, போதையால் பாதிக்கப்பட்டவரோ கொலை செய்யும்போது அது சட்டம் எவ்வாறு பார்த்தாலும் போன உயிர் திரும்ப வராது. எனவே இந்த சூழ்நிலைகளிலும் பாதுகாப்புரிமை செயல்படவே செய்யும்.

பிரிவு 99: 1 மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படும் என்னும் அச்சத்தை நியாயமாக விளைவிக்காத ஒரு செய்கையானது,-

(i) ஒரு பொது ஊழியரால் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால் அந்த செய்கையானது…

(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவின்படி செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால், அந்த பொது ஊழியரின் செய்கையோ, அல்லது பொது ஊழியரின் உத்தரவோ சட்டப்படி நியாயமானதாக இல்லையென்றாலுங்கூட அச்செயலைப் பொறுத்தமட்டில் தற்காப்பு உரிமையை பயன்படுத்த முடியாது.

2. எச்சமயத்தில் ஒருவன் தனது தற்காப்புரிமையை மேற்கண்ட பிரிவை பொறுத்து இழப்பதில்லை என்றால் –

(i) ஒரு பொது ஊழியரால் அச்செயல் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் ஒருவன் தற்காப்பு உரிமையை பயன்படுத்தி இருந்தால் அது குற்றமாகாது.

(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவுப்படி செயல் நடைபெறுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது குற்றமாகாது.

3. காக்கும் நோக்கத்திற்கு அவசியமாக எந்த அளவிற்கு கேடு உண்டாக்கலாமோ அதைவிட அதிகமான கேட்டை உண்டாக்குமளவிற்கு தற்காப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் நீடிக்காது. காவல்துறை அதிகாரி, பொது ஊழியர் ஆவார். இவர் நம்மைக் கைது செய்தால் அது நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயலாகும். ஆனால் அவர் பொது ஊழியர் என்பதால் அந்தச் செயல் குற்றச்செயல் ஆகாது. அந்த கைது நடவடிக்கைக்கு நாம் கட்டுப்பட வேண்டும். ஆனால் அந்த கைது சட்டப்படி அமைய வேண்டும். அவர் காவல் அதிகாரி என்பதையும், அவர் சட்டரீதியான நடவடிக்கையே மேற்கொள்கிறார் என்பதையும் உணரும் சூழலும் வேண்டும்.

அவ்வாறு அல்லாமல் அந்த நபர் யாரென்றே தெரியாமல், எதற்காக அழைக்கிறார் என்பதும் புரியாத நிலையில் நாம் உடன் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆனால் அதையும் தேவையான அளவிற்கே பயன்படுத்த வேண்டும். வெறும் கையுடன் நம்மை மிரட்டும் நபருக்கு எதிராக கடப்பாரையையோ, துப்பாக்கியையோ நீட்டக்கூடாது. ஆபத்தின் தன்மைக்கேற்பவே தற்காப்புரிமையை செயல்படுத்தலாம்.
: பிரிவு 100: உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதை குற்றமாகக் கருத முடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.

1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்போது,

2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்க தக்கதான ஒரு தாக்குதலின்போது,

3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்பொழுது,

4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்து கொள்ளும் கருத்துடன் தாக்கும்பொழுது,

5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்போது,

6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில், ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்பொழுது,

மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்த சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயத்தை ஏற்படுத்துவதோ குற்றமாவதில்லை.

பிரிவு 102: உடலுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்ற நியாயமான அச்சம் எழுந்த உடனேயே, உடலைப் பொறுத்து தற்காப்பு உரிமை தொடங்குகிறது. அந்த அச்சம் இருக்கும்வரை தற்காப்பு உரிமையும் நீடிக்கும். எதிரி நம்மை தாக்கும்வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் எதிரியின் முதலடியே மூர்க்கத்தனமாக விழுந்தால் அது நமது உயிரையே பறித்துவிடக்கூடும். எனவே நம்மைத் தாக்க முடிவெடுத்துவிட்டதும், அதன் மூலம் நமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ, கொடுங்காயங்கள் விளையும் என்றோ உறுதியாக நம்பும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.

அதேபோல எதிரி வன்புணர்ச்சி செய்யவோ, இயற்கைக்கு மாறான வகையில் பாலுறவுக்கோ முற்படுகிறார் எனத் தெரியும்போதும் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆளைக்கடத்தும் நோக்கத்துடனோ, அதன் மூலம் கடத்தப்படுபவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையிலோ, இந்த அனைத்து நிகழ்வுகளின்போதும் பொது அதிகாரிகளான காவல்துறை அதிகாரிகளின் உதவியை நாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்னும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.

பிரிவு 106: மரணம் ஏற்படும் என்னும் அச்சம் உண்டாக்கக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையைப் பயன்படுத்தும்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதி ஒருவருக்கு தீங்கு விளைவித்துவிட்டால் அது குற்றமாகாது. தற்காப்புரிமையை பயன்படுத்தும்போது சில நேரங்களில் குற்றவாளி அல்லாத சிலருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

உதாரணமாக, ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று சுமார் 20 அல்லது 30 பேர் கொண்ட கூட்டம் ஒன்று முனைந்து நிற்கிறது. அந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டால்தான் அந்த நபர் தப்பமுடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் அந்த கூட்டத்தில் சில குழந்தைகளும் தற்செயலாக நிற்கின்றனர். துப்பாக்கியால் சுட்டதால் ஒரு குழந்தை உயிரிழக்க நேரிடினும் அது குற்றம் அல்ல. இந்த தற்காப்புரிமைக்கு எல்லை உண்டு. நம்மை தாக்க வரும் நபர், நாம் பதில் தாக்குதல் நடத்த தயாராகிவிட்டதைக் கண்டு தப்பியோடும்போது அவரைப் பிடித்து தாக்கக்கூடாது.

நம்மை பலவந்தமாக ஒருவர் அறையில் அடைக்க முயற்சித்தால் தற்காப்புரிமையாக அவரை நாம் தாக்கலாம். ஆனால், நம்மை அவர் அடைத்து வைத்துவிட்டு சென்றபின் தப்பியோடி அவரை தாக்கக்கூடாது. காவல்நிலையத்தில் புகார்தான் செய்யவேண்டும்.

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 97, 103, 104, 105 ஆகியவை சொத்து தற்காப்புரிமை குறித்த அம்சங்களை விளக்குகின்றன.

பிரிவு 97 (2): தம்முடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செய்கையிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.

பிரிவு 103: கொள்ளை, இரவில் வீட்டை உடைத்து உள்ளே புகுதல், தீ வைத்து சொத்துகளை நாசம் செய்தல், வீட்டினுள் அத்துமீறி நுழைதல் போன்றவற்றில் விளைவு மரணமாகவோ, கொடுங்காயமாகவோ இருக்கும் என்ற அச்சத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலையில் சொத்தைப் பாதுகாக்க தற்காப்பு உரிமையை பயன்படுத்தினால் எதிராளிக்கு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் நிகழ்ந்தாலோ அது குற்றமாகாது.
: பிரிவு 104: பிரிவு 103ல் கூறப்பட்ட குற்றங்களை சேர்ந்திராத திருட்டு, சொத்தை அழித்தல் அல்லது அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களை செய்தாலும் செய்ய முயற்சி செய்தாலும், அப்பொருளை காக்கும் பொருட்டு தற்காப்புக்கென மரணத்தை தவிர வேறு எவ்வித காயத்தையும் விளைவிக்கலாம்.

பிரிவு 105:சொத்துக்கு அபாயம் நேரிடுமென்ற ஓர் அச்சம் தொடங்குகிறபோது, சொத்தை பொறுத்த தற்காப்புரிமை தொடங்குகிறது.

திருட்டிலிருந்து சொத்தை காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையானது, சொத்தை திருடனிடமிருந்து மீட்கும் வரையிலும் வரையிலும் அல்லது பொது அதிகாரிகளின் உதவி பெறப்படும் வரை தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும். குற்றமிழைப்பவர் அத்துமீறல் அல்லது சொத்து அழித்தல் குற்றங்களை தொடர்ந்து செய்யும் வரையில் தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும். இரவில் கன்னமிடுவதன் மூலம் ஆபத்து தொடர்ந்திருக்கும்வரை தற்காப்புரிமையும் தொடர்ந்து இருக்கும்.

பொருளுக்கான தற்காப்புரிமைக்கும் எல்லை உண்டு. அப்பொருளை கயவர்கள் கவராவண்ணம் தடுப்பதற்காக தற்காப்புரிமையின் அடிப்படையில் அக்கயவனை தாக்கலாம். ஆனால் பொருளை மீட்டபின் அக்கயவனை தாக்கக்கூடாது. இவ்வாறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் நியாயமான தேவை உள்ள சந்தர்ப்பங்களில் தற்காப்புரிமையை பயன்படுத்துவதை சட்டம் பரிந்துரைக்கிறது. எனினும் மக்களிடம் சட்டம் குறித்து தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலையில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் முதலான குற்றங்களை தடுக்க வாய்ப்பிருந்தாலும் சட்டம் குறித்த தெளிவின்மையால் அக்குற்றங்களை அனுமதிக்கிறோம்.

பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய இந்த தற்காப்புரிமையை பரவலாக (தவறாக) பயன்படுத்துபவர்கள் காவல்துறை அதிகாரிகள்தான். பொதுமக்கள் தற்காப்புரிமையை சரிவர பயன்படுத்தாததால், ரவுடிகள் உருவாகின்றனர். இவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் குறிப்பிட்ட காலத்திற்கு லாபம் பார்க்கின்றனர். இந்த ரவுடிகளின் தேவை முடிந்த பின்னரோ, ரவுடிகள் தங்கள் கட்டுப்பாட்டைமீறி நடக்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த ரவுடி காவல்துறையினரின் போலி என்கவுன்டரில் தீர்த்துக்கட்ட படுகின்றனர். அரசு அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொலைக்குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்றன.
        

திங்கள், 26 மார்ச், 2018

தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன் குறிப்புகள்



தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன் குறிப்புகள்

நடத்தை விதிகள் என்றால் என்ன?அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ளநடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

சொத்து வாங்குதல், விற்றல், நிதி ஆதாரங்கள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்கு முறைப்படி தெரிவித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை பணிபுரிபவர்கள் கடைபிடிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1976 உருவாக்கப்பட்டது.

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) &  (6) ன் கீழ்க்கண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.

தந்தை / வளர்ப்பு தந்தை

தாய் / வளர்ப்பு தாய்

கணவன்

மனைவி

மகன் / வளர்ப்பு மகன்

மகள் / வளர்ப்பு மகள்

சகோதரன்

சகோதரி

மனைவியின் தாய் மற்றும் தந்தை

கணவரின் தாய் மற்றும் தந்தை

சகோதரனின் மனைவி

சகோதரியின் கணவர்

மகளின் கணவர்

மகனின் மனைவி

இந்த உறவுமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவர்.

உயர்கல்வி பெறுவது தொடர்பான அரசாணை :

தொலைதூரக் கல்வி, மாலைநேரக் கல்லூரி மற்றும் தனியாக படிக்க அரசு ஊழியர், தன் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அந்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு ஊழியர் கருதிக் கொள்ளலாம்.

அரசாணை எண்  Ms. No - 200, P & A. R, dt - 19.401996 ன்படி அரசுப் பணியை தவிர எந்த பணியையும் அரசு ஊழியர் ஏற்கக்கூடாது.

அரசு ஊழியர் எவரும் பகுதி நேர வேலை எதையும் செய்யக்கூடாது. ( G. O. Ms - 893,P &  A. R, dt - 22.9.1983 மற்றும்  Rule 8(1)(aa)).ஆனால் Provision 6 under Rule 8(1)(a) ல் கண்டுள்ள விலக்களிப்பின்படி அரசு ஊழியர் ஒருவர் கல்வி நிலையங்களில் விரிவுரையாற்றி அதற்கென மதிப்பூதியம் பெறலாம்.

தனியாக வகுப்பு நடத்துதல் :

எந்த ஆசிரியரும் தனிவகுப்பு(Tution) நடத்தக்கூடாது. Tution  நடத்தும் எண்ணத்துடன் மாணவரிடமோ, அவருடைய பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இருப்பினும் பணம் எதுவும் பெறாமல் மாணவர்களுக்கு Tution எடுக்க தடை ஏதும் இல்லை. (Rule 6(17)).

விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்பு :

அலுவலக வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருவர் விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்கலாம். ஆனால் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அலுவலகத் தலைவர் அறிவுறுத்தினால் அதுபோன்ற
வேலைகளில் ஈடுபடக்கூடாது. (Provision 1 under rule 8(1)(a)).

அசையாச் சொத்து தொடர்பான விதிகள் :

அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் சொந்த வருவாயிலிருந்து ஒரு சொத்தை கையகப்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ எவருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் அரசு ஊழியரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரு சொத்தை கிரையமாக பெற்றால் அதற்கு துறைத் தலைவரின் அனுமதியை பெற வேண்டும். ( G. O. Ms - 3158, Public (service - A) Dept, dt - 27.9.1974).

அரசு வேலையில் இருக்கின்ற கணவன், மனைவி இரு சேர்ந்து ஒரு சொத்தை கிரையம் வாங்கினால் அதன் விவரத்தை துறைத் தலைவருக்கு இருவரும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். ( Govt. Lr. No. 29546/80-4 P & A. R, dt - 22.10.1980).

மூதாதையர் சொத்து ஒன்று வாரிசுரிமையின் படி இறங்குரிமையின் மூலம் கிடைக்கும் தருவாயில் அந்த நிகழ்வை துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டாம். சொத்து அறிக்கையில் மட்டும் காட்ட வேண்டும். (Rule 7(3).

அரசு ஊழியர் பணிபுரியும் மாவட்டத்தில் எந்த சொத்தையும் கையகப்படுத்தக்கூடாது. முன்னர் பணிபுரிந்த மாவட்டமாக இருந்தால் இடம் மாறுதல் பெற்று 2 ஆண்டுகள் கடந்த பின்னர் தான் சொத்து ஒன்றினை கையகப்படுத்த வேண்டும் . ( Rule 7(14).

இருப்பினும் வீடு அல்லது வீட்டுமனை ஒன்றினை பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மாவட்டத்தில் வாங்கவே அல்லது விற்கவோ தடையில்லை. (Provision under rule 7(14)(a).

வருவாய்த்துறை அல்லது நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அத்துறையில் நடத்தப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்தக்கூடாது. (Rule 7(16).

Record Sheet அல்லது Personal File - ஐ பராமரித்து வரும் அதிகாரி ஊழியர்களின் சொத்து விவரங்களையும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். ( Rule 7(9).

கீழே குறிப்பிட்டுள்ள தொகைக்கும் அதிகமாக சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த Rule 7(2) as amended in G. O. Ms. No - 39, P & A. R. dt - 9.3.2010.

A Group Employees may Purchase upto Rs. 80,000/-

B Group Employees may Purchase upto Rs. 60,000/-

C Group Employees may Purchase upto Rs. 40,000/-

D Group Employees may Purchase upto Rs. 20,000/-

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை, 5 ஆண்டுகள் முடிவில் சொத்து அறிக்கை ஒன்றை துறைத் தலைவரிடம் தாக்கல் செய்ய வேண்டும். ( Rule 7(3).



அரசு ஊழியரின் அரசியல் செல்வாக்கு :

அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு கொண்டு வருதல் அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அவரை அலுவலகத் தலைவர் கூப்பிட்டு தவறு என்று அறிவுறுத்த வேண்டும். அந்த அறிவுரையை பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக ஒரு அரசு ஊழியர் திரும்பவும் அரசியல் செல்வாக்கை கொண்டு வந்தால் அவரை துறைத் தலைவர் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதற்கு பின்னரும் அரசு ஊழியர் தொடர அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (Govt. Letter No  9637/A/95-1,P & A. R. (A) Dept, dt - 24.4.1995).

அலுவலக பிரச்சினை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். (G. O. Ms. No - 9, P & A. R (A) Dept, dt - 2.10.1985).

சனி, 24 மார்ச், 2018

யாரெல்லாம் சொத்துக்கு உரிமையாளர் ஆகலாம்? தான பத்திரம் என்றால் என்ன?


யாரெல்லாம் சொத்துக்கு உரிமையாளர் ஆகலாம்? தான பத்திரம் என்றால் என்ன?
----------------------------------------------
ஆங்கிலத்தில் செட்டில்மென்ட் என்று சொல்வார்கள். தன்னுடைய சொத்தை ரத்த உறவுகளுக்கு மட்டும் மாற்றி கொடுப்பதுதான் தான பத்திரம். ரத்த உறவுகள் என்றால் சகோதரன், சகோதரி, மகன், மகள், பேரன், பேத்தி, மகன் வழி கொள்ளு பேரன் போன்றோருக்கு தானமாக எழுதி தரலாம். தானம் தருவது என்றால் தான பத்திரம் என்றும், சொத்தை செட்டில்மென்ட் செய்வது போல எழுதினால், செட்டில்மென்ட் என்றும் குறிப்பிடுவார்கள். ‘செட்டில்மென்ட்’ என்று எழுதினால் அதை மாற்ற இயலாது.

ஆனால், உயில் அப்படி அல்ல. மாற்றி மாற்றி எழுத முடியும். எனவே, அவசர கதியில் செட்டில்மென்ட் எழுதுவதற்கு முன் பல முறை யோசித்து முடிவெடுப்பது சால சிறந்தது. இதை உரிய கட்டணம் செலுத்தி சார்பதிவாளர் அலுவகத்தில் பதிய வேண்டும்.

உயில் ... !
----------------
இது விருப்ப ஆவணம். சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதி தரும் முறைதான் உயில். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்கு பிறகு, தான் விரும்பும் நபருக்கு தனது சுய நினைவோடு எழுதி தருவதுதான் உயில். ஆனால், பூர்வீக சொத்தை உயிலாக எழுத முடியாது.
தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குதான் உயில் எழுத வேண்டும் என்கிற கட்டாயமில்லை. ரத்த உறவு அல்லாத மொன்றாம் நபர்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் கூட உயிலாக எழுதி தர முடியும். அதே நேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து தானாக சேர்ந்து விடும்.
மன நிலை சரியில்லாத நிலையில் அல்லது குடி போதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது, மேலும், மைனர் மீது உயில் எழுதப்படுமானால், அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

வாரிசு சான்றிதழ் ...!
-------------------------------
வங்கி வைப்பு நிதி, பங்கு சந்தை முதலீடு, ம்யூச்சுவல் fund போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில், நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஆனால், நாமினி இல்லாத பட்சத்திலோ, அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்திலோ வாரிசு சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate) அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும்.

பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெற வேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்கு தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாக பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாளில், இது தெரிய வரும்போது அந்த தீவு ரத்து செய்யப்படும்.
முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, இரண்டாவது திருமணத்தை இந்து திருமண சட்டம் அங்கீகரிக்கவில்லை. இதனால், இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமை இல்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோர முடியும்.

பொதுவாக, சொத்து பாக பிரிவினையில் இது போன்று பல அடிப்படை விஷயனகளை கவனித்தாலே, சிக்கல் இல்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு, நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு பொருந்தும் வகையில் ஒருவர் பெயரில் உள்ள சொத்து அவர் மறைவுக்கு பிறகு மற்றவர் உரிமை கொண்டாட வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம், கிறிஸ்துவர், இஸ்லாமியர், பார்சி வகுப்பினருக்கு பொருந்தாது. அதே நேரத்தில் இந்து மக்களுடன் ஒத்து போகும் வீர சைவ, லிங்காயத்து, ஆர்யா சமூகம், பிராமணர் ஆகியவற்றுடன் பௌத்த, சமண, சீக்கிய வகுப்பினருக்கு பொருந்தும். இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் பிரிவினையாகாத இந்து கூட்டு குடும்பத்தில் சொத்து பாகம் பிரிப்பதற்கு முன் குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டால், அவருக்கு சேர வேண்டிய பங்கு சொத்து அவரின் விதவை மனைவிக்கு சேரும். இது இந்து பெண் சொத்துரிமை சட்டம் – 1937 ல் கொண்டு வரப்பட்டது.

இந்த உரிமை அடிப்படையில் பெரும் சொத்தை விற்பனை செய்யவோ அல்லது வேறு விதத்தில் மாற்றம் செய்து கொடுக்கவோ அதிகாரம் வழங்கப்படவில்லை. மேலும் விதவை பெண் இறந்து விட்டால், அந்த சொத்து அவரது கணவரின் சகோதரருக்கு திரும்ப கொடுக்கும் வகையில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 1956 ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்து வாரிசு சட்டம் 1956 ன் படி கணவர் மரணமடையும்போது, அவருக்கு சேர வேண்டிய சொத்தின் பங்கு அவரின் மனைவி, தாய், பிள்ளைகள், மகள் அல்லது மருமகள், பேர பிள்ளைகள் என ரத்த சம்பந்தமான உறவினர்களுக்கு சேர்வதுடன், அந்த சொத்தை அவர்கள் சுதந்திரமாக பயன்படுத்துவது, விற்பனை செய்வது அல்லது விரும்பியவருக்கு எழுதி கொடுக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.

இறந்து விடும் இந்து ஆண் மகனின் சொத்தை யார், எப்படி பெற முடியும்?
---------------------------------------------------------------------------
இந்து கூட்டு குடும்பத்தில் சொத்து பிரிக்காத நிலையில் ஆண் உறுப்பினர் ஒருவர் மரணமடைந்தால், இந்து வாரிசு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளா வழி காட்டுதல் படி இறந்தவரின் மனைவி, மகன், மகள்கள், இறந்தவருக்கு முன் அவரது ரத்த சம்பந்தமான பேரன், பேத்திகள் (மகன் வழி) என 12 வாரிசுகள், சட்டத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயத்தில் இறந்தவருக்கு நேரடி ரத்த சம்பந்தமான உறவினர்கள் இல்லாத பட்சத்தில் அவருடன் பிறந்த சகோதரன், சகோதரிகள் அல்லது அவரது வாரிசுகள் சொந்தம் கொண்டாட முடியும்.

இறந்தவரின் தந்தை, இறந்தவரின் மகனின் மகள் வழி மகன் (பேரன்), மகனின் மகள் வழி மகள் (பேத்தி), சகோதரர்கள், சகோதரிகள், ரத்த சம்பந்தமான உறவில் வரும் கொள்ளு பேரன், பேத்திகள், சகோதரரின் மகன் அல்லது மகள், சகோதரியின் மகன் அல்லது மகள், இறந்தவரின் தாத்தா அல்லது பாட்டி (தந்தை வழி), இறந்தவரின் சகோதரன் அல்லது அவரின் மனைவி, இறந்தவரின் சித்தப்பா அல்லது சின்னம்மா (தந்தை வழி), இறந்தவரின் தாத்தா அல்லது பாட்டி (தாய் வழி), இறந்தவரின் தாய் மாமன் அல்லது அவரது மனைவி.

இரண்டாம் நிலை வாரிசுகள் என்று மேலே குறிப்பிட்டுள்ள 9 ரத்த சம்பந்தமான உறவினர்கள் இருந்தாலும், இறந்தவரின் தந்தை உயிருடன் இருக்கும்போது அவரது மகனோ, மகளோ, பேரன், பேத்திகளோ சொத்தை சொந்தம் கொண்டாட முடியாது.

2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு ​


2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு

2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் 25 SET/NET முடித்தவர்களையும், 18 M.Phil/Ph.D முடித்தவர்களையும் தேர்வு செய்தது. ஆனால், 2009 ல் யூ.ஜி.ஸி SET/NET ஐ குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்து, அறிவிக்கை வெளியிட்டது. முன்னதாக நீதி மன்றம், ஏற்கனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட 43 உதவி பேராசிரியர்களில் (25 நபர்கள் SET/NETமுடித்தவர்கள், 18 நபர்கள் M.Phil/Ph.D முடித்தவர்கள்) 18 நபர்கள் SET/NET முடிக்காத, M.Phil/Ph.D முடித்தவர்களின் தேர்வு செல்லாது என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, 25 நபர்களின் தேர்வை மட்டும் நீதி மன்றம் அங்கீகா¢த்தது. இந்த வழக்கின் மேல் முறையீட்டில், யூ.ஜி.ஸி July 2016 ல் அன்று, உதவி பேராசி¡¢யர் குறைந்தபட்ச தகுதியில் மாற்றம் செய்து, யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) வெளியி¢ட்டது. அதில் 2009 ல் கொண்டு வரப்பட்ட விதியானது, அதாவது, July11, 2009 அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விதியானது, July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களுக்கு பொருந்தாது என்றும் July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள SET/NET தேர்வுகளிலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக்காட்டி, இந்த யூ.ஜி.ஸி வரைவு 2016 (4வது மாற்றம்) புதிய விதியின் படி, மீண்டும் அந்த 18 நபர்களின் தேர்வையும் நீதி மன்றம் உறுதி செய்ததுடன், தேர்ச்சிப் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே, இனி, தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லுரிகளில் இந்த July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களை உதவி பேராசி¡¢யர் பணியிடங்களுக்கான குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்க வேண்டும். இதேபோல், யூ.ஜி.ஸி & உயர் நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ள இந்த நிலையில், டி.ஆர்.பி மூலம் அரசு கலை & அறிவியல் கல்லூ¡¢களில் நிரப்படவிருக்கும் காலி உதவி பேராசிரியர்கள் பணியிடங்களில், இந்த விதி, July 11, 2009 ற்கு முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களையும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்க வேண்டும். எனவே, July 11, 2009 ற்கு முன் M.Phil முடித்தவர்களுக்கு 5 மதிப்பெண்ணையும், Ph.D முடித்தவர்களுக்கு, தற்போது வழங்கப்படும் 9 மதிப்பெண்ணையும், டி.ஆர்.பி நிர்ணயிக்க வேண்டும், என்கிறார்கள் கல்வியாளர்கள்.



வெள்ளி, 23 மார்ச், 2018

விலங்கினங்கள் பற்றி...


விலங்கினங்கள் பற்றி...

சந்தரசேகரன் முதுகலை தமிழாசிரியர் . விலங்கினங்களின் பேச்சு

நமது பூமியில் உயிர் வாழ்க்கை துவங்கியதும், எங்குமே அமைதியே நிலவிருந்தது. இயற்கையால் ஏற்பட்ட இடி முழக்கங்கள், கடல்களில் பெரிய அலைகள் பாறைகள் மீதும், கரைமீதும் வந்து மோதிச் செல்லும்போது ஏற்பட்ட ஓசை மட்டுமே கேட்டன. விலங்கினங்கள் தோன்றிய பிறகு அவை அங்கும், இங்கும் உணவிற்காக அலைந்து திரிந்தன. ஒன்றையொன்று கொன்று தின்னத்துவங்கியதும், அவைகளிடம் இருந்து முதலில் அபாய ஓசை கேட்கத் துவங்கின. இதுவே செவிப்பறைப் பகுப்பியும், ஒலியும் வளர்ச்சியடைய தூண்டியது. மிருகங்களின் மூளை மனித மூளையளவு வளர்ச்சி அடையவில்லை. இருப்பினும் அவைகளுக்கும் உணர்ச்சி உண்டு. ஆனால் இதை வெளிப்படுத்த மொழியோ, சொற்களோ கிடையாது. ஆகவே இவைகள் ஒலியையும், சைகைகளையும் பயன்படுத்தி, அன்பு, பாசம், கோபம், வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளையும், பசி, தாகம், தற்காப்பு போன்றவற்றை வெளியிடுகின்றன. எந்த ஒலியையும் எழுப்பாத நேரத்தில் கூட அவற்றுக்கிடையே தொடர்ந்து கருத்து பரிமாற்றம் நிகழ்கிறது.

ஒலிப்பகுப்பிதான் முதலில் தோன்றியது. ஏனெனில் பகைவர்களிடமும் இரைகளிடமும் இருந்து வெளியிடப்படும் ஒலியைக் கேட்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

விலங்கினங்கள் காதுகளைப் பெற்றதும் தங்களது இனத்தவரிடமிருந்து மிக முக்கிய தகவல்களை எளிதில் பெற முடிந்தது. மேலும் ஒன்றுடன் ஒன்று தகவல்களை பரிமாறிக்கொள்ள ஒலிகளை உருவாக்கும் திறனை பெற்றன. அதேசமயத்தில் ஒரு விலங்கு ஒலிகளை போதிய அளவு துல்லியமாக உருவாக்க வேண்டும் என்றால் அது ஒலியை நன்றாக கேட்கும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்.

ஒலிப்பகுப்பிகள் தோன்றாத கீழ்மட்ட உயிரினங்கள்கூட தங்களது தகவலைப் பரிமாறிக்கொள்கின்றன. அதற்கு அவை வேதி மூலக்கூறுகளைப் பயன்படுத்துகின்றன. பாக்டீரியா, அமீபா, பூஞ்சைகள், பாசி இனங்கள் போன்றவை செய்திகளை சிறு வேதி மூலக்கூறுகளாக, தாம் வாழும் நீர் நிலைகளில் கரைத்து வெளியிடுகின்றன. தமது உடல் முழுபரப்பிலும் பிற உயிரிகளிடம் இருந்து வரும் செய்தி மூலக்கூறுகளை பெற்று உணர்கின்றன.


சமுத்திரத்திலிருந்து தான் உயிரினங்கள் நிலத்திற்கு வந்தன. அதன் பிறகுதான் காற்றில் கரைந்த மூலக்கூறுகளை உணர மூக்கு என்கிற உறுப்பைப் பயன்படுத்தின. செய்திகளை காற்றில் உலவவிட்டு, அதனை முகர்ந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டன. அதன்மூலம் அவை ஒன்றுடன் ஒன்று கருத்துகளை பரிமாறிக்கொண்டன.

விலங்கினங்களைப் பொருத்தவரை ஒலியை உணரும் நினைவுகளை விட மோப்ப சக்தியே அதிகம். விலங்குகளின் உலகம் முழுக்க முழுக்க வாசனையின் மூலம்தான் நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக நண்பன், பகைவன், தன் இனம், வேற்றினம், தம்மக்கள், எச்சரிக்கை, அபயம் போன்றவைகளை வெளியிடுகின்றன. மேலும் அதனை நன்கு அறிந்தும் தெரிந்தும் கொள்கின்றன ஆகவே இவைகளுக்கு மனிதனைவிட அபரிமிதமான மோப்பச்சக்திகள் இருக்கின்றன.

வாசனைப் பொருட்கள் சின்ன மூலக்கூறுகளான கார்பன் அணுக்களைக் கொண்டது. இவற்றின் முக்கிய ஆக்கப்பொருள் 14 அல்லது 16 கார்பன்கள் கொண்டவையாகும்.

பெரோமோன்கள் என்பது ஒரு உயிர் வேதியியல் பொருள் ஆகும். பல ஆண், பெண் உயிரினங்களில் ஆண், பெண் உறவை நிறுவுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் அதிக வீரியத்தன்மை கொண்டிருக்கிறது. மனிதன் தன் பரிணாம வளர்ச்சியின்போது பெரோமோனை இழந்துவிட்டான்.


சங்கேத மூலக்கூறுகளை பெரோமோன்கள் (Pheromones) என்று அழைக்கிறார்கள். பட்டுப்பூச்சி, வண்டினம், கொசு, ஈக்கள், தத்துப்பூச்சி போன்றவைகளைத் தத்தம் இனத்தோடு பிணைத்து வைப்பவை இந்த பெரோமோன்கள் ஆகும். பெரோமோன்கள் மிகுந்த சக்தி மிக்கவை. ஒரு கிராம் எடுத்து டிரில்லியன் லிட்டர் நீரில் கரைத்தாலும் அதன் செய்தி அளிக்கும் திறன் குறைவதில்லை. பெரோமோன்கள் எப்போதும் ஆம் அல்லது இல்லை என்ற ஒரே பொருளைத் தரும்.

பெரோமோன்கள் உடலின் மேற்பரப்பு அல்லது முகரும் உறுப்பின் மீதுபட்ட உடனேயே வேலை செய்கிறது. பெரோமோன்கள் விலங்குகளில் உடலில் பிரத்தியோகமான சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படுகின்றன. உடனே ஆவியாகிக் காற்றில் அல்லது நீரில் கலந்து விடும் இயல்பு கொண்டவை. பெரோமோன்கள் வாசனை தரக்கூடியதாகவோ, செய்தி உடையதாகவோ இருப்பதில்லை. காற்றிலுள்ள ஆக்ஸிஜன், ஓசோன் உடன் சேர்ந்த பின்னரே அவ்வாறு செயல்படுகின்றன. சில உடல்மீது இருக்கும் பாக்டீரியாக்களினால் மாற்றம் செய்யப்பட்ட பிறகே செய்தி உடையதாக ஆகின்றன.

ஒவ்வொரு உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனைகளைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தன் வாசனையால் பல மைல்களுக்கப்பாலுள்ள தன் இணையைக் கவரும். வண்ணத்துப்பூச்சிகளும், தேனீக்களும் தங்களின் உடலில் சுரக்கும் வேதிப்பொருளைப் பயன்படுத்தி தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றன.

ஓநாய், நரி போன்ற விலங்குகளைப் பிடித்து வைக்கப்பயன்பட்ட கூண்டினுள் மற்ற விலங்குகள் செல்ல மறுக்கும். காரணம் கூண்டுக்குள் ஆபத்து என்கிற வாடை வீசும். ஆபத்து மூலக்கூறுகள் அதிகமாக கொறி விலங்குகள், மான்கள், எலி முதலியன கொண்டுள்ளது, நாய்களில் சிறுநீரில் கலந்துள்ள மூலக்கூறுகள் ‘ஜாக்கிரதை’ என் எல்லைக்குள் இருக்கிறாய் என்கிறது.


எறும்புகளும் பெரோமோன் போன்ற மூலக்கூறுகளை சுரக்கின்றன. எறும்புகள் வரிசையாக செல்வதை பார்த்திருப்போம், அது ஆச்சரியத்தைக்கூட நமக்கு ஏற்படுத்தும் எறும்புகள் இப்படி வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக செல்வதற்குக் காரணமாக இருப்பது பெரோமோன்களே. பெரோமோன்களை தேய்த்துவிட்ட கோட்டிலேயே அனைத்து எறும்புகளும் வரிசையாகச் செல்லும். ஒரு கூட்டில் உள்ள எறும்புகளை அறிந்துகொள்ள பெரோமோன்கள் உண்டு. சரியான வாசனை இல்லாத எறும்பை தனது கூட்டில் சேர்த்துக்கொள்வதில்லை.

வாசனையைக் கண்டறியும் இந்த அறிவு உணவை கண்டுபிடிப்பதற்கும் பயன்படுத்துகிறது. ஒரு எறும்பு உணவைக் கண்டுபிடித்துவிட்டால் அது தனது கூட்டிற்குத் திரும்பி வரும்போது தனது வாசனையை கசியவிட்டவாறே வரும். இது பெரோமோன் ஆகும். எறும்புகளின் வயிற்றில் பெரோமோன்கள் சுரக்கின்றன. இதுதான் மற்ற எறும்புகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.


விலங்குகளில் எத்தனை இனம் இருக்கிறதோ அத்தனை விதமான ஒலி இருக்கிறது. வருகைப்பதிவுக்கு ஒரு ஒலி, ஆபத்தை உணர்த்த ஒருவித ஒலி, கூடு கட்ட இடம் கிடைத்துவிட்டது என்று கூறும் ஒலி, தன் ஜோடியை அழைக்க எழுப்பும் ஒலி என்று பலவிதமான சைகைகளைப் பறவைகள் செய்கின்றன. இங்கிருந்து ஓடிவிடு கூடுகட்ட உதவி செய்யேன் என்பன போன்ற விதவிதமான வேண்டுகோள்களும் அதிகாரங்களும் இதில் அடங்கும்.
ஜந்துகளுக்கு ஒலி உறுப்புகள் கிடையாது. சில வாயினால் ஒலி எழுப்புவதில்லை. குளவி, தேனீ போன்றவை தம் சிறகுகளை அதிக வேகமாக அசைப்பதன் மூலம் ரீங்கார ஒலி எழுப்புகின்றன. நண்டுகள் தம் பெரிய கொடுக்குகளைப் பாறையில் தட்டித்தட்டி ஒலி எழுப்புகின்றன. எறும்புகள்கூடத் தங்களால் இயன்ற அளவு பின்னங்கால்களைத் தரையில் தட்டி ஒலி எழுப்புகின்றன. வெட்டுக்கிளி தனது பாதத்தை இறுக்கமான சிறகுகளின்மீது உராய்வதால், ஒலியை உண்டாக்குகின்றது. மீன்கள் தங்கள் கழுத்துப்பட்டைகளை ஒருங்கே தேய்த்து ஒலி எழுப்புகின்றன.

பாம்புகளில் சில தனது வாலை வேகமாக தரையில் அடிப்பதன் மூலமும் வேகமாக மூச்சு விடுவதன் மூலமும் ஓசை செய்கின்றன. பறக்காத பறவைகள் வாய் தவிர்த்த மற்ற உறுப்புகளினால் ஓசை எழுப்ப வல்லவை. இவை தங்களது கால்கள், இறகுகள், அலகுகள் ஆகியவற்றின் அசைவினால் ஒலி எழுப்புகின்றன. மரங்கொத்தி பறவை தனது அலகினால் மரப்பட்டையை தட்டி தனது உணர்ச்சிகளை வெளியிடுகின்றது. ஹட்சன் ஆந்தையின் சிறப்பான ஒலி, அலகைப் பலமாக அடிப்பதன் மூலம் உண்டாக்குகின்றது.

பறவைகளும், பாலூட்டிகளும்தான் மிகச்சிறந்த ஒலி சாதனங்களை கொண்டுள்ளன. பல்வேறு இனங்களின் குரல்கள் பெரிதும் வேறுபடுகின்றது. பறவைகளும், விலங்கினங்களும் தங்களது மொழியின் எல்லா சொற்களையும் பரம்பரையாகவும், பாரம்பரியமாகவும் பெறுகின்றன. மனிதக் குழந்தைகளைப் போன்று அவற்றைக் கற்றுக்கொள்வதில்லை.


தாகத்துடன் இருக்கும் நாய்க்கு ஏப்பமிடத் தெரியும். பசியுடன் இருக்கும்போது பலமாகவும் அடிக்கடி குரைக்கவும் முடியும். வெளியே செல்லும் நேரம் வந்தவுடன் சிணுங்கவும் நாய்க்குத் தெரியும். மனிதனைப் போன்ற குரல்நாண்களை கிளிகள் பெற்றிருக்கின்றன. கிளிக்கு எந்த வார்த்தையையும், எந்த மொழியிலும் கற்றுத்தரலாம். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள கிளிக்கு கற்றுத்தர முடியும்.

கோழிகளை நாம் உற்றுக் கவனித்தால் அவை தனது குஞ்சுகளை அழைப்பதற்கு ஒருவாறு ஒலி எழுப்பும். உணவு கிடைத்துவிட்டால் வேறுமாதிரி ஒலி எழுப்பும். பருந்துகள் குஞ்சுகளை தூக்கிக் செல்லும்போது அபாயக்குரல் எழுப்பி தனது இறக்கைக்குள் மறைத்துக்கொள்ளும். இப்படி டால்பின் 32 வெவ்வேறு விதமான ஒலிகளை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு இனத்திற்கு என சைகைகளின் சுயமான பட்டியல் உண்டு.

மனிதனுக்கு மாநிலத்திற்கு மாநிலம், நாட்டிற்கு நாடு மொழி மாறுபடுகிறது. அதேபோலவே மற்ற உயிரினங்களுக்கும் மொழிவாரி பகுதி உள்ளன என்பது ஆச்சரியமான தகவல்தான்.

பிடியாணை (Warrant) பற்றிய விளக்கம்




பிடியாணை (Warrant) பற்றிய விளக்கம்

குற்றம் செய்த ஒருவரை அல்லது குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படுகின்ற ஒருவரை எங்கு பார்த்தாலும் கைது செய்து தன் முன்னால் ஆஜர் படுத்துவதற்கு காவல்துறைக்கு  நீதிமன்றம் இடுகின்ற ஆணை பிடியாணை  (Warrant) ஆகும்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-70
ஒரு பிடியாணை என்பது எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டு, நீதிமன்றத்தில் தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற அலுவலரால் கையெழுத்து போடப்பட்டு, அந்த நீதிமன்றத்தின்  முத்திரையைக் கொண்டிருக்க  வேண்டும். இந்த பிடியாணை அதனை பிறப்பித்த நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுகின்ற வரையிலோ அல்லது உரிய காவல்துறை அதிகாரியால் நிறைவேற்றப்படுகின்ற வரையிலோ அமுலில் இருக்கும்.
பிடியாணைகள் ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை, ஜாமீனில் விடமுடியாத பிடியாணை என்று இரண்டு  வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை (Cr.P.C:71 - Bailable Warrant)
ஒருவர் பிடியாணையின் மூலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால் அவரிடமிருந்து தக்க பிணையத்தை (Surity)பெற்றுக்கொண்டு அவரை காவல்துறை பாதுகாப்பில் இருந்து விடுவிக்கலாம் என்று அந்தப் பிடியாணையில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை ஆகும்.
ஜாமீனில் விட முடியாத பிடியாணை (Non-Bailable Warrant)
ஒருவர் பிடியாணையின் மூலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால்,  அவரை பிணையில் விடுவிக்க அந்த பிடியாணையில் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றால்  அது ஜாமீனில் விடமுடியாத  பிடியாணை ஆகும்.  இருந்த போதிலும், கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சமயத்தில், அவருக்கு அந்த நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கலாம்.
வாரண்ட் இருக்கா?
சில திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். காவல்துறையினர் யாராவது ஒருவரை கைது செய்ய முற்படும் சமயத்தில், அவர் அவர்களிடம் “வாரண்ட் இருக்கா?” என்று கேட்பார்.   காவல்துறை அதிகாரி வாரண்டை எடுத்து காண்பிப்பார்.

பிடியாணையின் சாராம்சம்  (Cr.P.C:75)
பிடியாணையினை நிறைவேற்றுகின்ற காவல்துறை அலுவலர் அல்லது வேறு நபர் அதில் கூறப்பட்டுள்ள சாராம்சத்தை கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு அறிவிக்க வேண்டும். அவர் பிடியாணையை பார்க்க வேண்டும் என்று கேட்டால் அதனை அவருக்கு காண்பிக்க வேண்டும்.
24 மணி நேரத்திற்குள் ...  (Cr.P.C:76)
பிடியாணையின்படி கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடாத பட்சத்தில் அவரை 24 மணி நேரத்திற்குள் காவல்துறை அலுவலர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும்.
பிடியாணையை நிறைவேற்றும் இடம் (Cr.P.C:77)
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஒரு பிடியாணையை இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் நிறைவேற்றலாம்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-78
ஒருவரை அல்லது பலரை கைது செய்யுமாறு ஒரு பிடியாணையை பிறப்பிக்கும் நீதிமன்றம், அதன் அதிகார வரம்பிற்கு வெளியே அந்த பிடியாணையானது நிறைவேற்றப்பட வேண்டியதிருக்கும்போது, அந்த மாவட்ட நீதித்துறை நடுவர் அல்லது காவல் ஆணையர் அல்லது மாவட்ட கண்காணிப்பாளர்  ஆகியவர்களில் ஒருவருக்கு தபால் மூலமாகவோ, அதனை அனுப்பி அதனை நிறைவேற்றச் செய்யவேண்டும்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-79
ஒருவரை அல்லது பலரை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையானது, அதனை பிறப்பித்துள்ள நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே நிறைவேற்றப்பட வேண்டியதிருந்தால்,  அந்தப் பகுதிக்குரிய நீதிமன்ற நடுவரிடமோ, தகுதி வாய்ந்த காவல்துறை அதிகாரியிடமோ ஒப்புதல் கையொப்பம் பெறுவதற்கு அந்த பிடியாணை கடிதம் காவல்துறை அலுவலர் ஒருவரால் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.  அப்பிடியாணையில் மேற்கண்ட அதிகாரிகளால் ஒப்புதல் செய்யப்பட்டால் அந்த காவல்துறை அலுவலர் அந்த பிடியாணையை நிரைவேற்றும் அதிகாரத்தை பெற்றவர் ஆவார்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-80
சரி, பிடியாணையின்படி  அதனை பிறப்பித்துள்ள நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே நியமிக்கப்பட்ட காவல்துறை அலுவலர் ஒருவரை கைது செய்து விட்டார்.  அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?
பிடியாணையை பிறப்பித்த நீதிமன்றமானது (பிடியாணை கைதி)  கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இல்லை என்றால், அந்த வட்டார எல்லைக்குள் அதிகாரமுடைய காவல்துறை அதிகாரி முன்னால் கைதியை ஆஜர் படுத்த வேண்டும்.

கைது செய்யப்பட்ட நபர் பிடியாணையில் குறிப்பிட்டுள்ளவர்தான் என்று தங்களுக்கு தோன்றினால், நீதித்துறை நடுவர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது காவல் ஆணையர் அந்த கைதியை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட வேண்டும். பிணையம் கொடுக்கக்கூடிய குற்றம் என்றால் பிணையம் கொடுக்கலாம். அந்த பிணைய பத்திரத்தை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-81

பிணையில் விட முடியாத குற்றமாக இருந்தால், எந்த மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதோ அந்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அல்லது செஷன்ஸ் கோர்ட் நீதிபதியோ தக்க பரிசீலணை செய்து அந்த கைதியை பிணையில் விட  உத்தரவிடலாம்


பல கேள்விகள் ஒரு பதில்



பல கேள்விகள் ஒரு பதில்

1.நச்சுத்தன்மை உள்ள பாம்புகளின் வகை
2.தேசிய கீதம் பாட ஆகும் வினாடி
3.தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் கிணற்று பாசனம்
4.குடியரசு தலைவர் பதவியை குறிக்கும் சரத்து
                   #ANSWRR:52

 ¤பலகேள்வி ஒரு பதில்¤
1.பாரதியார் பிறந்த ஆண்டு
2.ஆனந்தமடம் நூல் வெளிவந்த ஆண்டு
3.முக்கூட்டு உடன்படிக்கை ஆண்டு
                  #ANSWER:1882

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.விஜயலட்சுமி பண்டிட் பொதுப்பேரவையின் தலைவரான ஆண்டு
2.UNCHR நோபல் பரிசு பெற்ற ஆண்டு
3.முதல் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்ட ஆண்டு
4.ஆனந்தத்தேன் நூல் வெளிவந்த ஆண்டு
                       #ANSWER:1954

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்
2.குறைந்தபட்ச கூலிச் சட்டம்
3.தொழிற்கூட சட்டம்
                                   #ANSWER:1948

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஆண்டு
2.காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ஆண்டு
3.MGR சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினரான ஆண்டு
4.கீழார்வெளி பகுதியில் மூன்றாம் நூற்றாண்டு கட்டிட இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
5. 15வது சட்டத்திருத்தம் ஆண்டு
6.CAC நிறுவனம் FAO மற்றும் WHO நிறுவனங்களை ரோம் நகரில் நிறுவிய ஆண்டு
                                   #ANSWER:1963

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.மாநில மறுசீரமைப்பு சட்டம்
2.ஆயுத குறைப்பு தீர்மானம்
3.முதல் அணுசக்தி நிலையம் டிராம்பேவில் தொடங்கப்பட்ட ஆண்டு
4.சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
5.இந்து வாரிசு சட்டம்
6.முத்துலெட்சுமி ரெட்டி பத்மபூஷன் பெற்ற ஆண்டு
7. 7வது சட்டத்திருத்தம் ஆண்டு
8.மொழி அடிப்படையில் இந்தியா பல மாநிலங்களாக பிரிக்கப்பட்ட ஆண்டு
                                #ANSWER:1956

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.கரும்பலகை திட்டம் ஆண்டு
2.தாய்ப்பாலுக்கு மாற்றாக உணவுப்புட்டிகள் மற்றும் குழந்தை உணவுத்திட்டம்
3.71 to 74 வரை சட்டத்திருத்த ஆண்டுகள்
                              #ANSWER:1992

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.சாலை இளந்திரையன் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு
2.புதிய பொருளாதார கொள்கை தொடங்கப்பட்ட ஆண்டு
3.டெல்லி தேசிய தலைநகரான ஆண்டு
4.69வது சட்டதிருத்த ஆண்டு
5.குறைந்தபட்சகற்றல்(MLL) அறிமுக ஆண்டு
                  #ANSWER:1991

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.பாரதிதாசன் பிறந்த ஆண்டு
2.அம்பேத்கர் பிறந்த ஆண்டு
3.மனோன்மணீயம் நூல் வெளிவந்த ஆண்டு
                   #ANSWER:1891

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.வளையாபதி பாடல்களின் எண்ணிக்கை
2.குடியரசு தலைவர் மன்னிப்பு வழங்கும் சரத்து
3.தமிழகத்தை நாயக்கர்கள் எத்தனை பாளையங்களாக பிரித்தனர்
                  #ANSWER:72

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.RBI தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
2.பாரதியாரின் படைப்புகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
3.சீனா சுதந்திரம் அடைந்த ஆண்டு
4.குமாரசாமி தமிழக முதல்வரான ஆண்டு
                 #ANSWER: 1949

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.தேசிய ஒருமைப்பாட்டு தினம்
2.இந்திரா காந்தி பிறந்த நாள்
3.world toilet day
4.international journalist's remembrance day
                 #ANSWER: nov 19

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.நேரு அல்மோரா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு கடிதம் எழுதிய நாள்
2.தில்லையாடி வள்ளியம்மை மறைந்த நாள்
3.world scout day
 ◆                       #ANSWER: feb 22

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.ஆனந்தரங்கர் தந்தை பெயர்
2.சுரதா தந்தை பெயர்
3.மு.வ இயற்பெயர்
                       #ANSWER:திருவேங்கடம்

¤பிறப்புகள்¤

1869-காந்தி
1879-பெரியார்
1889-நேரு
1899-உடுமலைகவி,அம்புஜம்
1909-அண்ணா

 ¤பிறப்புகள்¤

1627- சிவாஜி
1827-H.A.கிருட்டிணப்பிள்ளை
1927-கண்ணதாசன்
1927-சைமன் குழு அமைத்தல்

வியாழன், 22 மார்ச், 2018

தமிழகம் பற்றிய பொது அறிவு குறிப்புகள்


தமிழகம் பற்றிய பொது அறிவு குறிப்புகள்

1. தமிழகத்தின் முதல் கவர்னர் – ஜார்ஜ் மெக்கார்டினி
2.தமிழகத்தின் முதல் கவர்னர் – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை (சுதந்திரத்திற்கு பிறகு)
3.தமிழகத்தின் முதல் இந்திய கவர்னர் – கிருஷ்ண கிமார சிங்ஜி பவசிங்ஜி
4.தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் – செல்வி. பாத்திமா பீவி
5.இந்தியா குடியரசு ஆனபோது தமிழக ஆளுநராக இருந்தவர் – கிருஷ்ண குமாரசிங்ஜி பவசிங்ஜி
6.இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராக பதவி வகித்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா
7.தமிழகத்தில் நீண்ட காலம் ஆளுநராக இருந்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா (நவம்பர் 3, 2004 – ஆகஸ்ட் 31, 2011, சுமார் 6 ½ ஆண்டுகள்)
8. தமிழகத்தின் குறுகிய காலம் ஆளுநராக இருந்தவர் – எம்.எம்.இஸ்மாயில் (அக்டோபர் 27, 1980 முதல் நவம்பர் 4, 1980 வரை, 9 நாட்கள் தற்காலிக ஆளுநர்)
9. தமிழ்நாட்டில் முதல் முதலமைச்சர் – திரு. சுப்புராயலு ரெட்டியார்
10.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழக முதல்வராக இருந்தவர் – திரு. ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார்
11.சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் முடிந்த பிறகு தமிழக முதல்வரானவர் – திரு. இராஜாஜி
12.தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன்
13.தமிழகத்தில் மிக நீண்டகாலம் (தொடர்ந்து) முதல்வராக இருந்தவர் – எம்.ஜி.ராமச்சந்திரன் (ஜூன் 30, 1977 முதல் டிசம்பர் 24, 1987 வரை – 10 ஆண்டுகள் 5 மாதங்கள் 25 நாட்கள்)
14.மிகக்குறுகிய காலம் முதல்வராக இருந்தவர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (ஜனவரி 17, 1988 முதல் ஜனவரி 30, 1988 வரை முதல்வராக இருந்தார் – 24 நாட்கள்)
15.தமிழகத்தில் மிக அதிகமுறை முதல்வர் பதவி வகித்தவர் – திரு. மு. கருணாநிதி (5 முறை)
10 பிப்ரவரி 1969 – 4 ஜனவரி 1971
15 மார்ச் 1971 – 31 ஜனவரி 1976
27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991
13 மே 1996 – 13 மே 2001
13 மே 2006 – 13 மே 2011
16.தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பு:
மக்களவை தேர்தல் – 25
மாநிலங்களவை தேர்தல் – 30
சட்டப்பேரவை தேர்தல் – 25
சட்ட மேலவை தேர்தல் – 30
உள்ளாட்சி அமைப்பு தேர்தல் – 21
வாக்களுக்கும் வயது – 18
17. வேட்பாளரின் டெபாசிட் தொகை
பொது பிரிவினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.10,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.25,000/-
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.5,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.12,500/-
18. கிராமசபை கூடும் நாட்கள்:
குடியரசு தினம் – ஜனவரி 26
தொழிலாளர் தினம் – மே 1
சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15
காந்தி ஜெயந்த் – அக்டோபர் 2
19. தமிழ்நாட்டில் மொத்தம் 12,620 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
20. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 421 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
21. தமிழ்நாட்டில் அதிக கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்ட மாவட்டம் விழுப்புரம். இதில் 1104 கிராம பஞ்சாயத்துக்கள் அமைந்துள்ளன.
22. தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் கிராம பஞ்சாயத்துகளைப் பெற்றுள்ள மாவட்டம் நீலகிரி. இதில் 35 கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே உள்ள

TNTET Important questions answers சைக்காலஜி 500 கேள்விகள் - PART 1


TNTET Important questions answers சைக்காலஜி 500 கேள்விகள் - PART 1

கல்வியியல்

1 உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? சிசுப்பருவம்
2 வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது…… ஏற்படுகிறது அசாதாரண உடல் வளர்ச்சி
3 குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் ……. வயதில் ஏற்படுகிறது 2-3 ஆண்டுகள்
4 பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது ஸ்கீமா
5 எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது? 8 நிலை
6 கவனவீச்சு அறிய உதவும் கருவி டாச்சிஸ்டாஸ் கோப்
7 ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது மனவெழுச்சி அதிர்வுகள்
8 ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் பியாஜே
9 நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் ஸ்பியர்மென்
10 நுண்ணறிவு ஈவு என்பது நு.ஈ. = மனவயது (M.A) / கால வயது (C.A) X 100
11 பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை …….. எனலாம் தர்ம சிந்தனை
12 கற்றல் வகைகளில் பொருந்தாத ஒன்று மனப்பாடம் செய்து கற்றல்
13 குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் ரூசோ
14 தன்னிச்சையாக எழும் துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு எலி
15 இவற்றுள் பொருத்தமான ஜோடியை கூறு ஸ்கின்னர் கற்றல் விதி
16 சிக்கலான பொதுமைக் கருத்து சிறிய நீல நிற சதுர கட்டை
17 கற்றலுக்கு உதவாத காரணி தனிப்பட்ட காரணி
18 மொழியில்லா சோதனை …………...….... வகை சோதனையைச் சாரும் ஆக்கச் சிந்தனை
19 அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது மனப்பாடம் செய்வித்தல்
20 குழந்தைகளுக்கான "கற்கும் உரிமை"யை ஐ.நா. சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது 1959 நவம்பர் 20
21 தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது மறுபடி செய்தல்
22 கற்றலின் முக்கிய காரணி ஒன்று கவனித்தல்
23 வெகுநாட்கள் நமது நினைவில் இருப்பவை பல்புலன் வழிக்கற்றல்
24 கற்றலின் அடைவு திறன்
25 நடத்தை கோட்பாட்டின் அடிப்படை தூண்டல்-துலங்கல்
26 பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது
27 சராசரி நுண்ணறிவு ஈவு 90-109
28 ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் பெற்றோர்
29 தர்க்கரீதியான சிந்தனை என்பது விரி சிந்தனை
30 நினைவாற்றல்’ என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர் எபிங்கஸ்
31 தன்னெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தலை பிரபலப்படுத்தியவர் கார்ல்ரோஜர்ஸ்
32 கனவுகள் ஆய்வு’ என்ற நூலை வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்டு
33 மனப்போராட்டங்களின் வகைகள் 3
34 கற்பித்தலின் முதல் படிநிலை திட்டமிடுதல்
35 கருவுறுதலின்போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம் Y
36 நுண்ணறிவு சார்ந்த பன்முகக்காரணிக் கோட்பாட்டினை அளவிட தாண்டைக் கூறும் வழி யாது? CAVD
37 தூண்டல்-துலங்கல் ஏற்படக் காரணம் புலன் உறுப்புகள்
38 குமரப் பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் கூறியவர் ஸ்டான்லி ஹால்
39 உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி
40 நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள் பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை ........ என அழைக்கின்றோம் உயிரியல் மரபு நிலை
41 ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தபோது, இவர்களிடையே நுண்ணறிவு ஈவு r = 0.87
42 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை ....... கண்கூடாக பார்ப்பதை வைத்துச் சிந்தித்து செயல்படும் நிலை
43 உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர் கோலர்
44 தவறு செய்யும் மாணவனை திருத்த ஏற்றது நல்வழி காட்டுதல்
45 நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது 15-16
46 ஆக்கதிறன் பற்றிய மின்னசோடா சோதனையின் (மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை) உருப்படிகள் எத்தனை 10
47 அகமுகன், புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர் யுங்
48 ஆளுமையை அளவிடப் பயன்படும் மிகப் பொருத்தமான முறை சுயசரிதை
49 மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது 3-6
50 ஹல்ஸ் என்பவரது கற்றல் கொள்கையினை குறிக்கும் சூத்திரம் யாது SER = DXSHR x K - I
51 மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள் ஆர்.என்.ஏ.
52 கால வயது 8, மன வயது 7 மற்றும் கால வயது 7, மன வயது 8 உள்ள இவ்விருவரின் நுண்ணறிவு ஈவு யாது? 87.5 & 114.5
53 ஹிலி என்பவர் 1909ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உள நல மருத்துவ விடுதி எங்கு அமைந்துள்ளது சிக்காகோ
54 கவனவீச்சு அறிய உதவும் கருவி டாச்சிஸ்டாஸ் கோப்
55 ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ............படிநிலைகளை கொண்டது 8
56 நினைவின் முக்கிய இரண்டு வகைகள் STM & LTM
57 VIBGYORஎன்பது ................ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நினைவு சூத்திரங்கள்
58 புரூஸ் டக்மானின் ஆசிரியர் தர அளவு கோலினைப் பயன்படுத்தி கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள எப்பண்பினை ஆசிரியரிடம் அளவீடு செய்யலாம் ஆசிரியரின் நடத்தை மற்றும் ஆக்கப்பண்பு,ஆசிரியரின் பரிவு மற்றும் ஏற்பு,ஆசிரியரின் இயங்கும் பண்பு மற்றும் நடத்தை
59 கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி
60 கற்றல் என்பது - அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை
61 பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது
62 தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்
63 கற்றலுக்கு உதவாத காரணி - குழுக் காரணி
64 மொழியில்லா சோதனை - ஆக்கச் சிந்தனை வகை
65 அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது - செய்து கற்றல்
66 குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் - ரூசோ
67 தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது பரிசு
68 ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - மக்டூகல்
69 நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் - ஸ்பியர் மென்.
70 நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு
71 புலன் காட்சிகள் அடிப்படை கவனம்
72 நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது கவனித்தல்
73 சமூக மனவியல் வல்லுநர் பாவ்லாவ்
74 உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் கான்ட்
75 சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் மெக்லீலாண்ட்
76 ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது அயோவா
77 ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர் மெண்டல்
78 புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது சூழ்நிலை
79 நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை உற்று நோக்கல் முறை.
80 தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை ஏழு
81 அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் எல். தர்ஸ்டன்.
82 பிறந்த குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது உடல் தேவை
83 ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை மூன்றாம் நிலை.
84 சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது பெரு மூளை
85 மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் மனவெழுச்சி
86 மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் அறிவுத்திறன் வளர்ச்சி.
87 ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது பால்லாவ்
88 கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் சுல்தான்
89 உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் கோஹலர்
90 ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம் சோபி
91 சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் டார்வின்
92 மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன மனவெழுச்சி நீட்சி
93 குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் தார்ண்டைக்
94 தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் ஏ.எஸ். நீல்
95 முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் மெக்லிலாண்டு
96 மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் ஃபிராய்டு
97 மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் அடிப்படைத் தேவைகள்
98 தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் மாஸ்லோ
99 முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் ஜான்டூயி
100 டோரனஸ் என்பவர் தந்துவவாதி.
101 புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் மாண்டிசோரி
102 ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை பரிசோதனை முறை
103 தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை பரிசோதனை முறை
104 பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர் ஏ.குரோ, சி.டி.குரோ
105 வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை வினாவரிசை முறை
106 இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை
107 நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை அகநோக்கு முறை
108 எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை போட்டி முறை
109 உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் குரோ, குரோ
110 உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் கான்ட்
111 ''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் வாட்சன்
112 மனிதனின் புலன் உறுப்புகள் அறிவின் வாயில்கள்
113 புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை ஐந்து
114 ஒப்புடைமை விதி என்பது குழுவாக எண்ணுதல்
115 ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன வளருதல்
116 பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு தற்காலச் செய்திக் கோட்பாடுகள்
117 சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை பொருள்கள் காரணிகள்
118 தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது கவன மாற்றம்
119 முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7
120 குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது ஒப்பார் குழு
121 குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது குமாரப்பருவம்
122 ஸ்கீமா எனப்படுவது முந்தைய அறிவு
123 மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் அரிஸ்சாட்டில்
124 குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர் நெஸ் மற்றும் ஷிப்மேன்
125 தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம் நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்
126 தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு மனச்சிதைவு
127 தன்னையே ஆராயும் முறை என்பது அகநோக்கு முறை
128 உன்னையே நீ அறிந்து கொள் என்று கூறியவர் சாக்ரடீஸ்
129 ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறை உற்றுநோக்கல் முறை
130 மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது ஆசிரியர்
131 மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மரபுநிலையும், சூழ்நிலையும்
132 ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார் நான்கு
133 நுண்ணறிவு ஏழு வகையானது என்றவர் வெஸ்ச்லர்
134 பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும் ஒத்திருக்கும் விதி
135 ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர் கிரிகோர் மெண்டல்
136 ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது வேற்றுமுறை விதி.
137 மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் கால்டன்
138 கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை 1260
139 அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்
140 அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு சிந்தனை
141 ஆரம்பக் கல்வி வயதினர் பின் குழந்தைப் பருவம்
142 ஒப்பர் குழு என்பது சமவயது குழந்தைகள்
143 அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது உள்ளம்.
144 உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம்
145 குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது பாராட்டும், ஊக்கமும்
146 தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது தன் தூண்டல்
147 சிக்கலான மனவெழுச்சி பொறாமை
148 மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை மனவெழுச்சி
149 மிகை நிலை மனம் ஏற்படும் வயது 3-6
150 அடிப்படை மனவெழுச்சி சினம்
151 அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள் மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்
152 வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது பேசுதல்
153 மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
154 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது பிறப்பிலிருந்து 18 மாதம் வரை
155 குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும்.
156 மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
157 வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி.
158 குழந்தைகள் எதிர்பார்ப்பது - நிபந்தனையற்ற அன்பு
159 சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது - குடும்பம்.
160 குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் - பியாஜே.
161 அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது கூறியவர் பியாஜே
162 அக நோக்கி முறை என்பது - மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.
163 அகநோக்கு முறையானது - அகவய தன்மை கொண்டது.
164 மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
165 உற்றுநோக்கல் முறையின் முதற்படி - உற்று நோக்குதல்
166 தேசிய கலைத் திட்டம் அறிமுகப்படுத்ப்பட்ட ஆண்டு - 2005
167 மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் - 8
168 சிசுப் பருவம் என்பது - 0-1 ஆண்டுகள்
169 குறுநடைப் பருவம் என்பது - 1- 3 ஆண்டுகள்
170 பள்ளி முன் பருவம் என்பது 3-6 ஆண்டுகள்
171 பள்ளிப்பருவம் என்பது - 6- 10 ஆண்டுகள்
172 குமாரப் பருவம் என்பது - 10-20 ஆண்டுகள்
173 கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது - 14 ஆண்டுகள் வரை
174 ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிராமப்படி சிந்திக்கத் தொடங்கும் காலம் - 7-8 ஆண்டுகள்
175 குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் ஆரம்பிக்கின்றார்கள் - அனுமானம்
176 குழந்தை இவ்வுலகத்தை புரிந்து கொள்ள உதவுவது - இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள முதிர்ச்சி
177 குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது. தன்னடையாளம்
178 தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் - எரிக்சன்
179 குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது - 4-6 ஆண்டுகளில்
180 உடலால் செய்யும் செயல்கள் - நடத்தல், நீந்துதல்
181 நடத்தையைப் பற்றி ஆராயும் இயல் உளவியல்
182 வெகுநாட்கள் வரை நமது மனச்சுவட்டில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றவை
183 பாடம் கற்பித்தலின் முதல் படி - ஆயத்தம்
184 புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி
185 நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது - கற்றல்
186 தவறுகள் செய்யும் மாணவனை திருத்த ஏற்றது - நல்வழி காட்டுவது
187 பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது - பின்பற்றிக் கற்றல்
188 செயல் வழிக் கற்றல் என்பது - தொடர் கற்றல்
189 மனிதனின் முதல் செய்தல் - ஆராய்ச்சி
190 இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல் கற்றல்
191 கருத்தியல் நிலை தோன்றுவது - 10 வயதுக்கு மேல்
192 ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - பற்றுகள்
193 நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை - ஆரம்பக் கல்வி.
194 கற்கும் பொருளுக்கு வளமாக அமைவது - இயற்கை பொருட்கள்
195 வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)
196 மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ், மாஸ்கோ
197 உளவியல் பரிசோசனைகள் - வெபர் (E.H.Weber)
198 உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
199 முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
200 தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
201 மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்
202 அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget, புரூணர் Jerome S.Bruner.
203 நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet, சைமன் Theodore Simon
204 கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)
205 மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
206 சமரச அறிவுரைப் பகர்தல் - F.C. தார்ன் F.C.Thorne
207 முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல. கெஸ்டால்ட் Gestalt.
208 ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov பாவ்லவ் Irvan petrovich Pavlov
209 முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
210 நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
211 உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
212 உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்
213 நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
214 நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
215 நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு - ஸிரில் பர்ட் - வெர்னன்
216 நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை - தார்ண்டைக்
217 நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன்
218 நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)
219 இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
220 குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley
221 பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்
222 ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
223 மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
224 மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
225 அடைவூக்கம் டேவிட் மெக்லிலெண்ட்
226 படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே
227 களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்
228 அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ (Dembo)
229 பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்
230 முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
231 நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
232 குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்
233 கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்
234 பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.
235 மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்
236 பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்
237 தனி நபர் உளவியல் - ஆட்லர்
238 உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்
239 வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு, ஆட்லர், யூங்
240 வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)
241 அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட் , R.B.காட்டல்
242 வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
243 மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்
244 தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி
245 தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்
246 தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)
247 இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
248 படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ
249 அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்
250 மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
251 மறத்தல் சோதனை - எபிங்காஸ்
252 ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
253 பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்
254 குறிக்கோள் கோட்பாடு - பாக்லி
255 படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே
256 குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்
257 நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
258 முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
259 அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ
260 களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்
261 ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கத்தை அடைய தேவையான வயது - 11-12
262 ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது? - அயோவா
263 உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - மக்டூகல்
264 தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
265 உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் - சிக்மண்ட் பிராய்டு.
266 உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.
267 பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் - ஆன்மா.
268 பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.
269 மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
270 வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
271 உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை
272 அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை
273 கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.
274 சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.
275 உடலால் செய்யப்படும் செயல்கள் எது? - நீந்துதல்.
276 அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே
277 மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.
278 வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.
279 கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு கல்வி உளவியல்
280 பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை - அகநோக்கு முறை.
281 தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்.
282 உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்
283 உற்றுநோக்கலின் படிகள் - ஏழு
284 உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல்
285 வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? - உற்று நோக்கல் முறை.
286 மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்
287 அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.
288 குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்
289 அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்
290 குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்
291 குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்
292 திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை
293 ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி
294 புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை ....... என்கிறோம். மனபிம்பம்
295 பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.
296 புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை - மூன்று நிலைகள்.
297 ஜீன் பிலாஹே என்பவர் எந்த நாட்டு அறிஞர் - சுவிட்சர்லாந்து
298 புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.
299 குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை
300 கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை - கற்பனை
301 ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை.
302 நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.
303 ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை
304 எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.
305 கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று - கவர்ச்சி
306 வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.
307 தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்
308 கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்
309 உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
310 உற்று நோக்கலின் படி - நான்கு
311 லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
312 சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்
313 சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.
314 உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
315 கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.
316 பரிசோதனை முறைக்கு வேறுபெயர் - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
317 மாணவர்களின் கற்ரல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
318 வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.
319 கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.
320 அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.
321 அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.
322 மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும் - 4-5 வயதுவரை
323 எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.
324 எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.
325 குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.
326 மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.
327 சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.
328 உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
329 உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
330 வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்
331 பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ
332 முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.
333 மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
334 தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.
335 குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
336 தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.
337 எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.
338 வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் …………..ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம். குமரப் பருவம்.
339 மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை.
340 பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144
341 பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130
342 மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
343 மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
344 உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.
345 கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம்.
346 முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
347 சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் - நுண்ணறிவு ஈவு
348 ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை
349 தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் - ஹார்லாக்
350 ஜூக்ஸ் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - டக்டேல்.
351 காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - கட்டார்டு
352 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர்
353 சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் - செயற்கை.
354 மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை
355 பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம்.
356 குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ்
357 ஏன்? ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.
358 ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் - 3 - 4 மாதங்கள்.
359 பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமாகவும் இருக்கும். இது எந்த பருவத்தில் - பிள்ளைப் பருவம்
360 ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது - குழவிப் பருவம்.
361 உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் - பிராய்டு
362 பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் - கேட்டில்
363 புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் சர் பிரான்சிஸ் கால்டன்.
364 ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் - வில்லியம் வுண்ட்
365 உள இயற்பியல் நூலினை எழுதியவர் - ஜி.டி. பிரான்சர்
366 உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் - இ.எச். வெபர்
367 வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.
368 வலிவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்
369 கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர்.
370 கற்றலிலன் மாறுதலில் கருத்தியல் கொள்ளை என்பதனை எடுத்துரைத்தவர் - வில்லியம் ஜேம்ஸ்
371 அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - ஷெல்ட்ன்
372 நடத்தை சிகிச்சையின் வேர்களை ஊன்றிருப்பது - இயல்புணர்வு கற்றல் கருதுகோள்.
373 அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் - சாதாரண அறிவுரை பகர்தல்
374 கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது - தொடர்ச்சியான நடைமுறை.
375 விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது - வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்
376 வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் - ஆன்டர்சன்
377 தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்கோவ்
378 ஆக்கத்திறன் என்பது விரி சிந்தனை
379 நுண்ணியலைக் கற்பித்தல் என்பது - பயிற்சி நுட்பம்
380 கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறனில் குறைந்து காணப்படுவர் - படித்தல்
381 பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது.
382 குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது - கவன வீச்சு
383 கல்வி என்பது - வெளிக் கொண்டது (to bring out)
384 எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு
385 ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் - ஆல்பர்ட்
386 பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை - எதிர்மறைக் கொள்கை
387 வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்
388 உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை
389 ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்
390 பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.
391 கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது - முழுமை
392 உட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1854
393 சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1857
394 கல்கத்தா பல்கலைக் கழகக்குழு இவ்ர் தலைமையில் கூடியது - மைக்கேல் சேட்லர்
395 ………..என அறியப்படுவது - ஒரு தனிநபர் கல்வியை அனுசரிப்பதில் பணம், ஜாதி, கொள்கை, நிறம் அல்லது பாலின வேறுபாடு ஆகியவை குறுக்கீடாக அமையக்கூடாது. கல்வி வாய்ப்பில் சமத்துவம்
396 ……... என்பது இதனைப் பற்றிய படிப்பாகும் - தனிமனிதருக்கு தானாக மனதில் எழுகின்ற மனசாட்சியற்ற அனுபவம் தற்சோதனை
397 புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி
398 எமிலி இவருடைய கற்பனைக்குழந்தை - ரூஸோ
399 பயிற்சி விதி இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் - பரிசு
400 மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர் 10
401 School and Society ஆசிரியர் - ஜான்டூயி
402 Wechsler's Adult Intelligence Scale WAIS
403 District Institute of Education and Training DIET
404 கல்வியின் தற்போதைய அமைப்பு - குழந்தையை மையமாகக் கொண்டது
405 கற்ற மனிதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு குடியேறுதல் மூளைச் சக்தி வீணாக்குதல்
406 ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை நிர்ணயித்தவர் - எரஸ்மாஸ்
407 கவனத்தின் அகக்காரணி - மனோநிலை
408 கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர் - நோவக் மற்றும் கோவின்
409 விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் - படைக்கும் திறனுடைய மனிதர்கள்
410 தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு - 1948
411 கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் - மெக்காலே பிரபு
412 ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது - பாண்டிச்சேரி
413 தூங்கும் வியாதி இதனால் ஏற்படுகிறது - ஸேஸேஈ
414 ஆலிபிரெட் பினே எந்த நாட்டைச் சேர்ந்தவர் - பிரான்ஸ்
415 மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு - 50 -69
416 மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது - தான டோஸ்
417 ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது - 10 கார்ட்ஸ்
418 எப்பிங்ஹாஸ் சோதனை எதனுடன் தொடர்புடையது - மறத்தல்
419 குடேர் முன்னுரிமைப் பதிவு ஒரு மனிதனுடைய - தொழில் ஆர்வத்தினை ஆராயும்
420 சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது - அமராவதி நகர்.
421 மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
422 கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை
423 இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ
424 கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் - NCERT
425 யு.பி.இ என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி
426 SSA என்பது - அனைவருக்கும் கல்வி இயக்கம்
427 RMSA என்பது - மத்திய இடைநிலை கல்வி இயக்கம்
428 ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக்
429 மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை
430 மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ்
431 மனித ஆளுமையை உருவாக்குவது - மரபு மற்றும் சூழ்நிலைக்காரணிகள்
432 குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் - ஸ்டான்லி ஹால்
433 PERSONALITY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது - லத்தின்
434 மனிதர்களை அகமுகன் புறமுகன் என்று வகைப்படுத்தியவர் - யூங்
435 உளவுப்பகுப்பு கோட்பாட்டினை கொண்டுவந்தவர் - பிராய்ட்
436 இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர் - ஸீஷோர்
437 வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில்(WAIS) செயற்சோதனைகள் (PERFORMANCE TEST) - 5
438 குழுக்காரணி கொள்கைகளை அளித்தவர் - தர்ஸ்டன்
439 ஆசுபல் என்ற உளவியல் அறிஞர் தொடர்புடையது - மறத்தல் கோட்பாடு
440 மக்டூகலுடன் தொடர்புடையது - இயல்பூக்க கொள்கை
441 பகற்கனவு என்பது ஒருவகை - தற்காப்பு நடத்தை
442 ரோர்ஷாக் மைத்தடச் சோதனை எந்த ஆளுமை அளவிடும் - புறத்தேற்று நுண்முறை
443 சைனெக்டிக் என்ற படைப்பாற்றலை வளர்க்கும் கற்பித்தல் முறையை வகுத்தவர் - ஜே ஜே கார்டன்
444 சாந்தி நிகேதன் என்பது - ஆசிரமப்பள்ளி
445 சமூக ஒப்பந்தம் என்ற நூலின் ஆசிரியர் - ரூசோ
446 பள்ளிக்கு கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் - கிருஷ்ணமூர்த்தி
447 பள்ளியும் குழந்தையும் என்ற நூலின் ஆசிரியர் - டூயி
448 நாளைய பள்ளி என்ற நூலின் ஆசிரியர் - டூயி
449 சம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர் - ஏ.எஸ் . நீல்
450 பள்ளியை விடுதல் என்ற கருத்த்னை முன்மொழிந்தவர் - இவான் இலிச்
451 ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - 18
452 நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - மெக்டொனால்ட்
453 சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - 1901
454 வார்தா கல்வியைக் கொண்டு வந்தவர் - காந்தியடிகள்
455 ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர் - அமெரிக்கா
456 பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை பர்ந்துரைத்த குழு - கோத்தாரி குழு
457 முதல் தேசியக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1968
458 குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் நிறுவனம் - UNICEF
459 IGNOU ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 1985
460 SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர் - ஈஸ்வரராய் பட்டேல்
461 மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர்
462 ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - எரஸ்மஸ்
463 கல்வி வரம்பான அறிவை வளர்க்கிறது - பெஞ்சமின் புளும்
464 இரத்தம் கருமையாகவும் ரத்த நாளம் அறுந்து நிற்காமல் வெளியேறினால் …….. போடவேண்டும் டீர்னிக் வெட்
465 பல்லவர் காலத்தில் வேதியர்க்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்- பிரமதேயம்
466 கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - தேவபோகம் அல்லது தேவதானம்
467 பெளத்த சமண மடங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - பள்ளிச்சந்தம்
468 கவன்வீச்சின் மறுபெயர் - புலன்காட்சி வீச்சு இதனை அளக்க டாசிஸ்டாஸ்கோப்
469 டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர் - R.B.கேட்டல்
470 முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு - 6-7 ஆக இருக்கும்.
471 குழந்தைகளின் பார்வை கவன வீச்சு - 3 முதல் 7 ஆக இருக்கும்.
472 மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்
473 தார்ண்டைக்கின் விதிகள் - பயிற்சி விதி,விளைவு விதி, தயார்நிலை விதி அல்லது ஆயத்த விதி
474 உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. Aha experience
475 விளங்காமல் ஒன்றைப் படிப்பது அதனை நினைவில் நிறுத்திக்கொள்வது - நெட்டுரு நினைவு (Rote memory or Blind memory)
476 பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது - பின்னோக்குத் தடை
477 நுண்ணறிவு ஈவினை கணக்கிட யாருடைய கணக்குமுறை பயன்படுகிறது - ஸ்டெர்ன்
478 பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் - மாணிக்கப் பண்டாரம் காப்பான்.
479 பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் -தபதி
480 மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்
481 வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் - 60
482 இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் - ஸ்பியர்மேன்
483 ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் - பிராய்டு
484 பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ஆஸ்திரியா
485 நவீன இந்தியத் துறவி - இரவீந்திரநாத் தாகூர்
486 இரவீந்திரநாத் தாகூருக்கு கீதாஞ்சலிக்கான நோபல் பரிசு எப்போது கிடைத்தது - 1913
487 பயனீட்டு வாதம் (Pragmatism) - ஜான் டூயி
488 Democracy and Education என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
489 The School of Tomarrow என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
490 Freedom and Culture என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
491 Discovery of the Child என்ற நூலின் ஆசிரியர் - மாண்டிசோரி
492 மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் - குழந்தை வீடு
493 Education for a Better Social Order என்ற நூலின் ஆசிரியர் - ரஸ்ஸல் ரஸ்ஸல்
494 ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது - இங்கிலாந்திலுள்ள வைஸ்டன்
495 நேர்கோட்டு வகை - ஸ்கின்னர்
496 கிளைகள் கொண்ட வகை - கிரெளடர்
497 தானாக இயங்கும் சோதனைச் சாதனைகள்(Automatic Testing Device) - Pressy
498 Social Contract என்ற நூலின் ஆசிரியர் - ரூஸோ
499 ரூஸோ பிறந்த நாஅடு - ஜெனீவா
500 பள்ளிக்கு கடிதங்கள் - ஜே கே கிருஷ்ணமூர்த்தி

முதியோர் உதவித் தொகை திட்டம்




முதியோர் உதவித் தொகை திட்டம்

           தமிழகத்தில் வயது முதிர்வின் காரணமாக உழைத்து சம்பாதித்து வாழ முடியாமலும் உறவினர்களின்  ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது சிரமப்படும் முதியோர்களின் நலநன கருத்திற்கொண்டு அவர்களுக்கு உதவிடும் நோக்கில் 1.4.1962 முதல்  “தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம்” என்ற  ஒரு திட்டத்தினை அரசாணை எண்.73 நிதி (ஒய்வு) துறை நாள்:22.1.62ன் படி அரசு துவக்கியது. இத்திட்டம் ஆரம்பித்த காலத்தில் மாதம் ரூ.20/- வீதம் உதவித்தொகை வழங்கிட அனுமதித்து  பின்வருமாறு படிப்படியாக உயர்த்தி தற்போது மாதம் ரூ.200/-வழங்கப்பட்டு வருகிறது.

1.4.62 முதல் 31.3.79 முடிய ரூ.20/-(அரசாணை எண் 73 நிதி (ஒய்வு) துறை நாள்:22.1.62)

1.4.79 முதல் 31.3.82 முடிய ரூ.25/-(அரசாணை எண் 805 நிதி (ஒய்வு) துறை நாள்:11.6.79)

1.4.82 முதல் 30.4.89 முடிய ரூ.35/-(அரசாணை எண்1412 சமூக நலத்துறை நாள்:13.5.82)

1.5.89 முதல் 31.1.92 முடிய ரூ.50/-(அரசாணை எண்944 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை நாள்:8.5.89)

1.2.92 முதல் 30.6.96 முடிய ரூ.75/-(அரசாணை எண் 255 சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட துறை நாள்:1.4.92)

1.7.96 முதல் 31.3.98 முடிய ரூ.100/-(அரசாணை எண் 187 சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள்.4.7.96)

1.4.98 முதல் 31.3.2000 முடிய ரூ.150/-(அரசாணை எண் 67 சமூக நலம் மற்றும்  சத்துணவு திட்டதுறை நாள்:21.4.98)

1.4.2000 முதல் இன்றுவரை ரூ.200/-(அரசாணை எண் 86 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டதுறை நாள்:2.6.2000)

இத்திட்டத்தினைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மட்டுமின்றி

1) ஆதரவற்ற விவசாயக் கூலிகள்

2) உடல் ஊனமுற்றோர்

3) ஆதரவற்ற விதவைகள்

4) கணவனால் கைவிடப்பட்ட மனைவியர்

ஆகியோருக்கும் இத்திட்டத்தினை தமிழக அரசு பின்னர் விரிவு படுத்தியது. இவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.200/- தவிர்த்து மாதந்தோறும் அரிசி 4 கிலோவும்(அரசாணை பல்வகை எண் 771 சமூக நலத்துறை நாள் :6.10.80) பொங்கல்  மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு  இலவசமாக வேஷ்டி / சேலையும் வழங்கப்பட்டு வருகிறது. (அரசாணை பல்வகை எண் 995 நிதி (ஓய்வூதியம்) துறை நாள்:18.7.79).

தற்போது முதியோர் உதவித்தொகை திட்டத்திற்கான நிதியுதவி மத்திய அரசினால் அளிக்கப்பெற்று தேசிய முதியோர் உதவித்தொகை திட்டம் (National Old Age Pension) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் வயது மூப்பில் அதிக வயதுடையவர்களுக்கு (இந்த எண்ணிக்கை அவ்வப்போது மத்திய அரசின் ஒதுக்கீட்டிற்கு ஏற்ப  நிர்ணயிக்கப்படும்)”அன்ன பூர்ணா திட்டத்தின் “ கீழ் மத்திய அரசு மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி வழங்கி வருகிறது.

திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள்

1) முதியோர் உதவித்தொகை திட்டம்:

1) 65வயதும் அதற்கு மேலும் வயது முதிர்ந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும்            தகுதியுடையவர்கள்

ஆதரவற்றவர்கள் என்பவர்கள்:

அ) எவ்வித வருமானமும் இல்லாதவர்கள் (ஒருவேலை உணவுக்கு கூட வழி இல்லாதவர்கள்.

ஆ) 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் மகன் / 18 வயதுக்கு மேற்பட்ட மகன் வழி பேரன் இல்லாதவர்கள்.

இ) 55 வயதும் அதற்கு உட்பட்ட வயதுடைய மனைவி இல்லாதவர்களாக இருக்க வேண்டும். (அரசாணை எண் 1184 நிதி (ஓய்வு) துறை நாள்:29.9.62).

2)முதியோர் உதவித்தொகை கோருபவர்கள் பிச்சை எடுக்கக்கூடாது. ஆனால் எப்போதாவது  யாராவது கொடுக்கும் ஒருவேளை உணவை உதவியாகப் பிறரிடம் பெறுபவர்கள் பிச்சை எடுப்பவர்களாகக் கருதக்கூடாது.

3) நிரந்தா குடியிருப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

4) இவர்கள் உறவினர்கள் மட்டுமின்றி வேறு யாருடைய பாதுகாப்பிலும், ஆதரவிலும் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.

5) அரசாணை எண் 2500 சமூக நலத்துறை நாள் :9.11.84 ன் படி அதிக பட்சமாக ரூ.1000/-வரை மதிப்புள்ள கூரை அல்லது ஒட்டுவீடு வைத்திருப்பவர்கள் பிற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் முதியோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அரசாணை (நிலை) எண் 1000 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறை நாள்:4.7.2002ன் படி அதிக பட்சமாக ரூ.5000/-வரை மதிப்புள்ள நிலத்தின் மதிப்புடன் கூரை வேய்ந்த அல்லது கல்நார் வேய்ந்த வீடு வைத்திருப்பவர்கள் முதியோர் உதவித்தொகைப் பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6) கணவன் அல்லது மனைவி 65வயது அல்லது அதற்கு றேம்பட்டு வயது முதிர்ந்த நிலையில் வேறு உறவினர் ஆதரவின்றி ஆதரவற்றவர்களாக இருந்தால் கணவன் /மனைவி இருவருமே உதவித் தொகைப்பெற தகுதியுடையவர்கள்.

7) இவர்கள் மற்றவர்களிடம் சிறிய வேலை செய்தால் அதனால் பெறக் கூடிய கூலியின் மதிப்பு ஒரு வேளை உணவுக்கு மேல் கிடைக்கக் கூடியதாக இருக்கக் கூடாது.

8) ஆதரவற்ற கண்பார்வையற்றவர்களுக்கு, உடல் ஊனமுற்றோர் இனத்தில் வயது வரம்பில்லாமல் முதியோர் உதவித் தொகை வழங்கலாம்.

9) 18வயதுக்கு உட்பட்ட ஆண்மகனோ அல்லது மகன் வயிற்று பேரனோ இருந்தால் அவன் 18 வயதினை அடையும் வரை உதவித்தொகை வழங்கிடலாம். 18 வயது அடைந்தவுடன் உதவித்தொகை நிறுத்தப்பட வேண்டும். இந்த நிபந்தனையுடன் உதவித்தொகை அனுமதிக்கும் போது, மகன் அல்லது மகன் வயிற்று பேரன் 18 வயதினை அடையும். ஆண்டு / மாதம் குறிப்பிட்டு காண்பிக்கும் நினைவூட்டு பதிவேடு ஒன்று பராமரிக்கப்பட வேண்டும். பிரதி மாதம் முதியோர் உதவித்தொகை அனுப்பும் போது இப்பதிவேட்டின்படி முதிர்வுறும் இனம் உள்ளதா என்பதை கண்டறிந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

1962-ல் துவக்கப்பட்ட இத்திட்டத்தின் ஒப்புதல் வழங்கும் அதிகாரிகளாக வருவாய் கோட்டாட்சியர்களே இருந்து வந்தனர். அரசாணை எம்.எஸ் எண்.1080 வருவாய்த்துறை நாள்:10.7.89ன் படி நலிவடைந்தோர் நல்வாழ்வு திட்ட தனி வட்டாட்சியர்கள் ஒப்புதல் வழங்கும் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1.முதியோர் உதவித்தொகை படிவம் எண் ஐல் விண்ணப்பிக்க வேண்டும்.

2.விண்ணப்பத்தில் முத்திரை கட்டண வில்லை எதுவும் ஒட்ட தேவையில்லை.

3.மனுதாரரின் வயதுக்கு ஆதாரமாக வாக்காளர் பட்டியலை எடுத்துக்கொள்ளலாம்(அல்லது) அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய அல்லது அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் வயது குறித்தான சான்று பெறலாம்.(அரசாணை எண்1726 நிதி (ஓய்வு) துறை நாள்:18.11.1969)

4.விண்ணப்பதாரர் மனநிலை பாதிக்கப்பட்டு புத்தி சுவாதீனமுடையவராக இருப்பின் அவரது பாதுகாவலரே அவருக்காக விண்ணப்பிக்கலாம். இது போன்ற இனங்களில் வழங்கப்படும். உதவித்தொகை பாதுகாவலரிடம் உரிய உறுதிமொழியினைப்பெற்றுக் கொண்டு அவரது பெயருக்கே உதவித்தொகையினை அனுப்பிடலாம்.

5.இதேபோன்று ஆதரவற்ற நிலையில் அனாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள் போன்றவற்றில் தங்கியுள்ள தகுதியான முதியோர்களுக்கான உதவித்தொகையினை அவர்களது விருப்பத்தின் பேரில் அந்த நிறுவனத்திற்கே அனுப்பிடலாம்.

விசாரணை செய்யும் முறை:

1)சரக வருவாய் ஆய்வர்களே விண்ணப்பதாரனரை நேரடியாக பார்வையிட்டு விசாரணை செய்து வாக்கு மூலம் பெற வேண்டும்.

2)மனுதாரரின் வயது குறித்து வாக்காளர் பட்டியல் / குடும்ப அட்டை ஆகியவற்றுடன் சரிபார்க்கப்பட வேண்டும்.

3)மனுதாரர் ஆதரவற்றவர் என்பதற்கு விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ளவர்களிடம்  விசாரணை  மேற்கொள்ள  வேண்டும்.

4)சரகவருவாய் ஆய்வர்கள் தங்களது அறிக்கையில் விண்ணப்பதாரரின் தகுதி, வருமானம், சொத்து விபரம் ஆகியவை குறித்து தெளிவாக குறிப்பிட வேண்டும்.

5)விண்ணப்பம் பெறப்பட்டு 30 நாட்களுக்குள் விசாரணை முடித்து இறுதி ஆணை பிறப்பித்திட காலக்கெடு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உதவித் தொகை அனுமதி:

1)உரிய விசாராணைக்குப் பின்னர் வட்டாட்சியர் முதியோர் உதவித்தொகை வழங்கிட உத்தரவிட்ட அதே மாதத்தில் முதல் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.

(அரசாணை எண் 586 சமூக நலத்துறை நாள்:10.8.81)

2)விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் விண்ணப்பதாரருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். இது குறித்து விண்ணப்பதாரர் மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம். மாவட்ட ஆட்சியரின் முடிவே இறுதி முடிவாகும்.

3)வட்டாட்சியர் உத்தரவிட்டவுடன் மனுதாரர் மூன்று புகைப்பட நகல்கள் எடுத்து வட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும். உத்தரவில் புகைப்படம் ஒட்டப்பெற்று வட்டாட்சியரால் அத்தாட்சி செய்யப்பட்டு ஒரு நகல் மனுதாரருக்கும் ஒரு நகல் கிராம நிர்வாக அலுவலருக்கும் அனுப்பப்பட வேண்டும். ஒரு போட்டோ நகல் வட்டாட்சியர் அலுவலக பதிவேட்டில் ஒட்டப்பெற்று மனுதாரரின் கைரேகை அல்லது கையொப்பம் பெற்று வைக்கப்பட வேண்டும்.

சரக வருவாய் ஆய்வர்கள் கிராமங்களில் முகாம் செய்யும் பொழுது கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்படும் பதிவேட்டினைப் பெற்று உதவித்தொகை பெறும் நபர்களை சரிபார்த்து சான்று அளிக்க  வேண்டும். சரக வருவாய் ஆய்வர்கள் சனவரி மற்றும் சூலை மாதங்களில் 15ந் தேதிக்குள் அனைத:து இனங்களையும்  சரிபார்த்து வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பிடவேண்டும். வட்டாட்சியர்கள் அந்த மாதமே கோட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பிட வேண்டும்.

முகவரி மாற்றம்:

உதவித்தொகை பெறுபவர்கள் அதே தாலுக்காவில் முகவரி மாற்றம் செய்து கொண்டால் வட்ட அலுவலக பதிவேட்டில் உரிய மாற்றம் செய்து அதன் விவரத்தினை தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தெரிவித்து பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ள வட்டாட்சியர் உத்திரவு இட வேண்டும்.
உதவித் தொகை பெறுபவர் வேறு தாலுக்காவிற்கு முகவரி மாற்றம் செய்து கொண்டால், உதவித்தொகை பதிவேட்டில்  விண்ணப்பம்  கிடைத்த மாதத்துடன் உதவித்தொகை நிறுத்தம் செய்து பதிவுகள் மேற்கொண்டு நிறுத்தம் செய்யப்பட்ட விவரத்தை தொடர்புடைய வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும். புதிய வட்டத்தில் தொடர்புடைய வட்டாட்சியர் இவர் இருக்கும் முகவரியை சரி பார்த்துக் கொண்டு புதிதாக உதவித் தொகை அனுமதித்து ஆணைகள் வழங்க வேண்டும்.

இறப்பு :

உதவித்தொகை பெறுபவர் இறந்துவிட்டால் படிவம் 6ல் கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அதே போன்று குறிப்பிட்ட முகவரியில் இல்லாமல் நிரந்தரமாக சென்று விட்டாலும் இதே போன்று உதவித் தொகை பெறுபவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இவரது பாதுகாவலர், உதவித்தொகையினைப் பெற்று முறையாக உதவித்தொகைப் பெறுபவரை பராமரிக்காத நிலையிலும் கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பிட வேண்டும், சரக வருவாய் ஆய்வர்கள் தங்களது முகாமின் போது இதனை கண்காணிக்க வேண்டும்.

2)உடல்  ஊனமுற்றோர் உதவித்தொகை திட்டம் :

அரசாணை எண்.1402 நிதி (ஒய்வு)த்துறை நாள்:6.11.74 ன் படி ஆதரவற்ற உடல் ஊனமுற்ற நபர்களுக்கும் உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட தகுதி:

1)வயது 45ம் அதற்கு மேலும் இருத்தல் வேண்டும்.

2)45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதர தகுதிகளைப் பெற்றிருந்தால் மாவட்ட மருத்துவ குழுவின் பரிந்துரை பெற்று வயது தளர்வு குறித்தான ஆணைகள் மாவட்ட ஆட்சியரிடம் பெற்று உதவித்தொகை வழங்கிடலாம்.

3)ஊனத்தின் அளவு 60% மற்றும் அதற்கு கூடுதலாக இருக்க வேண்டும்.

4)ஊனத்தின் தன்மை குறித்து அரசு சிறப்பு மருத்துவரிடம் மருத்துவ சான்று பெற்று தாக்கல் செய்ய வேண்டும்.

5)கண்பார்வை இழப்பு 100% பார்வை இழப்புக்குரியவர்கள் மட்டுமே ஊனமுற்றவர்களாக கருத  வேண்டும்.

6) ஊமை மற்றும் செவிடர்கள் ஊனமுற்றவர்களாக கருதி உதவித் தொகை வழங்க இயலாது.

7)சித்திரக்குள்ளன் எனும் ஊனமுற்றவர் ஆணாக இருப்பின் 2 அடி 7 அங்குல உயரமும் பெண்ணாக இருப்பின் 2அடி 6 அங்குல உயரமும் இருக்க வேண்டும்.

8)மனவளர்ச்சி குன்றியோருக்காக அவரது பாதுகாவலரே அவருக்காக விண்ணப்பிக்கலாம். இவருக்கு அனுமதிக்கப்படும் உதவித் தொகை மற்றும் பிற சலுகைகளை அவருக்காக வே பயன்படுத்தப்படும் என்றும் முறைகேடாக பயன்படுத்தப்படாது என்றும் அந்த பாது காவலரிடமிருந்து உறுதி மொழி பத்திரம் ஒன்றினை ஒப்பளிப்பு அலுவலரால் பெற்றுக் கொண்டு உதவித்தொகையினை பாதுகாவலருக்கு அனுப்பிடலாம்.

9)உழைத்து பிழைக்க இயலாதவராகவும் வசதியுடைய பெற்றோர் மற்ற உறவினர் ஆதரவிலும் பாதுகாப்பிலும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

10)முதியோர் உதவித் தொகைப் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள இதர நிபந்தனைகளை பூர்த்தி செய்யக் கூடியவராக இருக்க வேண்டும்.

3)ஆதரவற்ற விதவை உதவித்தொகை திட்டம்:

அரசாணை எண் 507 நிதித்துறை நாள்:27.5.75ன்படி ஆதரவற்ற விதவைகளுக்கும்  உதவித்தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட தகுதி:

1.அரசு நிர்ணயித்துள்ள திருமண வயதான 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

2.மறுமணம் செய்திருக்க கூடாது.

3.உழைக்கும் திறனுடன் கூடியவராக இருக்கக் கூடாது.

4.மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருந்து சுயமாக தொழில் செய்து வருமானம் ஈட்டுபவராக இருக்கக் கூடாது.

5.தாய் / தந்தை / சகோதர / சகோதரிகளின் ஆதரவிலோ இதர உறவினர் ஆதரவிலும் இருக்கக்கூடாது.

6.18வயதுடைய ஆண்மகன் இருந்தாலும் அவர் பொருள் ஈட்டக் கூடிய நிலையில் இல்லாது இருப்பின் உதவித்தொகை வழங்கிடலாம்.

(அரசாணை எண் 92 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள்:2.6.98)

7.முதியோர் உதவித் தொகை பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள தேவையான இதர அனைத்து தகுதிகளும் இருக்க வேண்டும்.

4) ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை திட்டம்:

அரசாணை எண் 164 சமூக நலத்துறை நாள்:12.3.81ன் படி 15.3.81முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு  வருகிறது.
நிர்ணயிக்கப்பட்ட தகுதி:

1) 60வயதும் அதற்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயக் கூலிகள்

2)விவசாயக் கூலி வேலை செய்து வந்து தொடர்ந்து உழைத்திட இயலாத ஆண்/பெண் இருவரும் தகுதியுடையவர்கள்.

3)நகர் புறங்களில் விவசாயம் தவிர்த்து இதர கூலி வேலை செய்து வந்தவர்கள் தகுதியற்றவர்களாவார்கள்.

4) உழகைக்கும் திறன் உள்ளவராக இருக்கக் கூடாது.

5)முதியோர் உதவித்தொகைப்பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள  தேவையான இதர அனைத்து தகுதிகளும் இருக்க வேண்டும்.

5) கணவனால் கைவிடப்பட்ட மனைவியருக்கான உதவித்தொகை  திட்டம்:

அரசாணை பல்வகை எண்:1465 சமூக நலத்துறை நாள்:3.5.84ன் படி முதியோர் உதவித்தொகை திட்டத்தினை கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கும் விரிவுபடுத்தி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட தகுதி:

1. வயது வரம்பு 30ம் அதற்கு மேலும் இருக்க வேண்டும்.

2. நிலையான குடியிருப்பு உடையவராக இருக்க வேண்டும்.

3. சட்டப்படி முறையாக திருமணமானவராக இருக்க வேண்டும்.

4. கணவனைவிட்டு 5 வருடங்களுக்கு  குறையாமல் பிரிந்தவராக இருக்க வேண்டும்.

5. சட்டபூர்வமாக நீதி மன்றம் மூலம் விவாகரத்து பெற்றவராக இருக்கக் கூடாது.

6. நீதி மன்றம் மூலம்  ஜீவானம்சம் பெறாமலும்,  கணவரிடமிருந்து எவ்வித உதவியும் பெறாதவருமாக இருந்து ஆதரவற்ற நிலையில் இருந்தால் உதவித் தொகைப் பெற தகுதியுடையவர் ஆவார்.

7. உழைத்துப் பிழைக்க கூடியவராகவோ உழைக்கும் திறனுடன் கூடியவராகவோ இருக்கக் கூடாது.

8. கணவனால் கைவிடப்பட்டவர் என்பதற்கு ஆதாரமாக வட்டாட்சியர் சான்று பெற்று தாக்கல் செய்ய வேண்டும்.

9. 18 வயது நிரம்பிய ஆண் வாரிசு இருந்தாலும், அவர் பொருள் ஈட்டக் கூடிய நிலையில் இல்லாது இருப்பின் உதவித் தொகை வழங்கிடலாம்.(அரசாணை எண்92 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள் :2.6.98)

10. முதியோர் உதவித்தொகைப் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள தேவையான இதர அனைத்து தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும்