வெள்ளி, 30 செப்டம்பர், 2016

வைரம் பற்றிய சில தகவல்கள்

வைரம் பற்றிய சில தகவல்கள்:-

💎 வைரம் என்பது எதன் புறவேற்றுமை வடிவம் - கார்பன்
💎 வைரத்தின் கார்பன் அணுக்கள் மிக நெருக்கமான அமைந்துள்ளது
💎 வைரத்தை எந்த அலோகத்தல் கீறல் செய்ய முடியும்  - போரன் கார்பைடை (B4C)
💎 கருப்பு வைரம் என்று அழைக்கப்படுவது - நிலகரி
💎 வைரத்தின் மாறுநிலை கோணம் - 24.4°
💎 வைரத்தின் ஒளிவிலகல் - 2.42
💎வைரத்தின் அடர்த்தி . 3.5 கி/செமீ^3
💎 உலகில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம் - கிம்பர்லின் (தென்னாபிரிக்கா)
💎 இந்தியாவின் வைரம் அதிகமாக கிடைக்கும் இடம் - பன்னா (மத்திய பிரதேசம்)
💎 உலகின் மிகப்பெரிய வைரம் - குல்லிமேன்
💎 முகலாய மன்னர் ஷாஜகான் வைத்திருந்த வைரம் - கோகினூர் வைரம்
💎 கண்ணாடி அருக்க  பயன்படுவது - வைரம்
💎 கடினமான அலோகம் - வைரம்
💎 வைரத்தின் வடிவம் - 4முக வடிவம்

விந்து பற்றி சில தகவல்கள்...

விந்து பற்றி சில தகவல்கள்...

ஒரு விந்து தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தின் சராசரி அளவு: 2 முதல் 6 மில்லி லிட்டர்
வாழ்நாளில் ஒரு மனிதன் விந்து பாய்ச்சும் தடவைகளின் சராசரி எண்ணிக்கை: 5,000
வாழ்நாளில் மொத்த விந்துப் பாய்மப் பாய்ச்சல்: 17 லிட்டர்
ஒரு தேக்கரண்டி விந்துப் பாய்மத்தின் கலோரிப் பெறுமானம்: 7
புணர்ச்சிப் பரவசநிலையின் சராசரி நேரம் : 4 நொடிகள்
ஓர் ஆரோக்கியமான ஆணின் விந்துதள்ளலில் வெளியேற்றப்படும் விந்துக்கலங்களின் சராசரி எண்ணிக்கை: 40 முதல் 600 மில்லியன்
ஒரு விந்து முட்டையுடன் கருக்கட்டப் பயணிக்கும் தூரம்: 7.5-10 செ.மீ.
விந்து ஆயுட்காலம்: உருவாக்கத்திலிருந்து பாய்ச்சப்படும்வரை 2.5 மாதங்கள்
பாய்ச்சப்பட்ட விந்தின் ஆயுட்காலம்: 30 நொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை (கிடைக்கும் சூழலைப் பொறுத்தது)

வடமொழி சொற்களும் அதற்கான தமிழ்ச் சொற்களும்.

தூயத்தமிழ்ச் சொற்கள்தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வடமொழி சொற்களும் அதற்கான தமிழ்ச் சொற்களும்..

அக்கினி - தீ
அநியாயம் - முறைகேடு
அன்னியதேசம் - பிறநாடு
அபராதம் - குற்றம்
அபிஷேகம் - முழுக்கு, நீராட்டு
அர்ச்சனை - வழிபாடு
அற்பம் - சிறுமை
ஆகாயம் - வான், விண்
ஆச்சாரம் - நடத்தை,ஒழுக்கம்
ஆடம்பரம் - பெருமிதம்
ஆத்மா - உயிர்
ஆபத்து - இடுக்கண்
ஆசனம் - இருக்கை
ஆபரணம் - அணிகலன்
ஆரம்பம் - தொடக்கம், கால்கோள்
ஆயுதம் - படை
இச்சை - விருப்பம்
இயந்திரம் - பொறி
இரகசியம் - மறை
இரசிகன் - சுவைஞன்
இராசா - வேந்தன், மன்னன்
இலகு - எளிமை
இலாபம் - ஊதியம்
உத்தியோகம் - வினை, தொழில்
உபதேசம் - அறிவுரை
உபத்தியாயன் - ஆசிரியன்
உபமானம் - ஒப்புப்பொருள்
ஐசுவரியம் - செல்வம்
கதி - நிலை
கல்யாணம் - திருமணம்
கவி - பா. செய்யுள்
கவிஞன் - பாவலன், புலவன்
களங்கம் - மறு
காகம் - காக்கை
கிரகம்-கோள்
கிரமம் - ஒழுங்கு
கிராமச்சங்கம் - ஊர்மன்றம்
கீர்த்தி - மிகுபுகழ்
கும்பாபிஷேகம் - குடமுழக்கு
கோபம் - வெகுளி
இந்திரன் - வேந்தன்
சக்தி - ஆற்றல்
சத்தம் - ஒலி
சத்தியம் - உண்மை
சந்திரன் - திங்கள்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்நியாசி - துறவி
சமயம் - நெறி
சமீபம் - அண்மை
சம்பவம் - நிகழ்ச்சி
சங்கம் - அவை
சர்வகலாசாலை - பல்கலைக்கழகம்.
சாட்சி - கரி
சாதம் - சோறு
சாமர்த்தியம் - திறமை
சினேகம் - நட்பு
சிந்தை - எண்ணம்
சிரத்தை - ஊற்றம், நாட்டம்
சுகம் - நலம்
சுத்தம் - தூய்மை.
சுயதேசம் - தன்னாடு
சூரியன் - ஞாயிறு
சொப்பனம்  - கனவு
சோதி - ஒளி
ஞானம் - அறிவு
தண்டித்தல் - ஒற்றுதல்
தத்துவம் - உண்மை
தரித்திரம் - வறுமை
தர்க்கம் - சொற்போர்
தவம் - நோம்பு
தானதிகாரி - பொருளாளர்
தாகம் - வேட்க்கை
தாசன் - அடியான்
தாரம் - மனைவி
தானியம் - கூலம்
தினம் - நாள்
தேசம் - நாடு
நட்சத்திரம் - நாள், நாள் மீன்(விண்மீன்).
நாசம் - அழிவு
நியாயவாதி - வழக்குரைப்போன்
நிர்வாகசபை  - ஆட்ச்சிக்குழு
நித்திரை - உறக்கம்
நீதிபதி - முறைவேந்தன்
பக்தி - அன்பு
பரீட்சை - தேர்வு
பத்திரம் - ஆவணம்
பத்திரிகை - இதழ்
பத்திராதிபர் - இதழாசிரியர்
பாகம் - கூறு
பாத்திரம் - கலம், தகுதி
பிரகாசம் - ஒளி
பிரசங்கம் - சொற்ப்பொழிவு
பிரமசாரி - மாணி
புராணம் - பழமை, பழங்கதை
புதினப்பத்திரிக்கை - செய்தித்தாள்
பூசை - வழிபாடு
மந்திரி - அமைச்சன்
மந்திரம் - மறைமொழி
மாதம் - திங்கள்
மாமிசம் - ஊன்
முகூர்த்தம் - ஓரை
முத்தி - வீடு
மேகம் - முகில்
மோட்சம் - வீடு
வசனம் - உரை.
வருஷம் - ஆண்டு
வாகனம் - ஊர்தி
வாதி - வழக்காளி
வாரம் - ஏழல்(ஏழு நாள் கொண்டது)
விசனம் - கவலை
விதி - ஊழ்
விஞ்ஞானம் - அறிவியல்
விஷேசம் - சிறப்பு
வித்தியாசம் - வேறுபாடு
விமர்சனம் - திறனாய்வு
வியாசம் - கட்டுரை
வைத்தியர் - மருத்துவர்
ஸ்ரீமான் - திருவாளர்

உலகின் முக்கிய தினங்கள்

உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு :-

*ஜனவரி*
🛏🛏🛏🛏
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்

*பிப்ரவரி*
🛏🛏🛏🛏
14 - உலக காதலர் தினம்
25- உலக காசநோய் தினம்
24 தேசிய காலால் வரி தினம்
28- தேசிய அறிவியல் தினம்

*மார்ச்*
🛏🛏🛏
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்

*ஏப்ரல்*
🛏🛏🛏
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

*மே*
🛏🛏
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்

*ஜீன்*
🛏🛏🛏
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

*ஜீலை*
🛏🛏🛏
01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்

*ஆகஸ்ட்*
🛏🛏🛏
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 -தேசிய விளையாட்டு தினம்

*செப்டம்பர்*
🛏🛏🛏🛏
05-ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்

*அக்டோபர்*
🛏🛏🛏🛏
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

*நவம்பர்*
🛏🛏🛏🛏
14-குழந்தைகள் தினம்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்

*டிசம்பர்*
🛏🛏🛏
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
23- விவசாயிகள் தினம்

இடைக்கால இந்தியாவின் முக்கிய நூல்கள் ஆசிரியர்கள் பற்றிய சில தகவல்கள்:-

இடைக்கால இந்தியாவின் முக்கிய நூல்கள் ஆசிரியர்கள் பற்றிய சில தகவல்கள்:-

📚 பாபர் நாமா - பாபர்

📚 பாதுஷா நாமா - அப்துல் ஹமீதுலாகூரி

📚 இக்கபால் நாமா - முத்தா மெய்த்கான்

📚 ஹிமாயூன் நாமா - குல்பதன் பேகம்

📚 அக்பர் நாமா, அயினி அக்பரி - அபுல்பாஸல்

📚 ஆலம்கீர் நாமா - முர்சா முகம்மது காசிம்

📚 ஷாஜகான்  நாமா - இனயத்கான்

📚 துக்ளக் நாமா - அமீர் குஸ்ரு

📚 ஷாநாமா - பிர்தௌசி

📚 தாரிக்-இ-ஹிந்த் - அல்பெருனி

📚 தாஜ்-உல்-மாசிர் - ஹஸன் நிஸாமி

📚 கிதாபுல் ரிஹாலா - இபான் பதூதா

📚 மஜீல் பக்ரின் - தாரா ஷீகோ

📚 தாஜீக்-இ-ஜஹாங்கீர் - ஜகாங்கீர்

📚 முன்தாகப்-உத்-தவாரிக் - பதௌனி

📚 ரக்கத்தி ஆலம்கீர் - ஔரங்கசீப்

உயிரியல் தீங்குயிர் கொல்லி பற்றிய சில தகவல்கள்:-

உயிரியல் தீங்குயிர் கொல்லி பற்றிய சில தகவல்கள்:-
🌴பூச்சிக் கொல்லி - என்டோசல்பான், மாலத்தியான்
🌴 எலிக்கொல்லி - துத்தநாக பாஸ்பேட், தேலியம் சல்பேட்
🌴 பூஞ்சைக் கொல்லி - தாமிர ஆக்ஸி குளோரைடு, போர்டாக்ஸ் கலவை
🌴 உருளைப் புழுக் கொல்லி - கார்போஃப்யூரான், பாராத்தியான்
🌴 களைக் கொல்லி - ஃப்ளுகுளோரலின், அட்ரசைன்
🌴 பாக்டீரியக் கொல்லி - ஆரியோமைசின், ஸ்ட்ரெப்டோமைசின்

புதன், 28 செப்டம்பர், 2016

நாடகக்கலை....


நாடகக்கலை

தமிழ்மொழிக்கு முத்தமிழ் எனச் சிறப்பிக்கப்படும் பெருமையுடையது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முப்பெரும் பாகுபாடுகொண்டது.

நாடகம் - பொருள் விளக்கம்

நாடகம் என்னும் சொல் நாடு + அகம் எனப் பிரியும். நாட்டை அகத்தில் கொண்டது நாடகம். நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதனால், நாடகம் எனப் பெயர் பெற்றது என்பர்.

அகம் - நாடு; உன்னுள் நோக்கு; உன்னை உணர்; அகத்தை நாடு என்றெல்லாம் பலவாறு அறிஞர் பொருள் கூறுகின்றனர்.

நாடகம் என்பது உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தும்.

கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர். இதற்குக் கூத்துக்கலை என்னும் பெயரும் உண்டு.

நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம் ஆகும்.

நாடகத்தில் போலச் செய்தல் என்னும் பண்பு அடிப்படையாக அமைதலைக் காணலாம்.

பிறர் செய்வதனைப்போலத் தாமும் செய்து பார்க்கவேண்டும் என்னும் மனித உணர்ச்சிதான் நாடகம் தோன்றக் காரணமானது.

பண்டைய மரப்பாவைக்கூத்து, பொம்மலாட்டமாக வளர்ச்சியடைந்த பின்னர், தோல்பாவைக் கூத்து, நிழற்பாவைக் கூத்து ஆகியன முறையே பாவைக்கூத்தின் வளர்ச்சி நிலைகளாக மக்களிடையே வழக்கிலிருந்தன.

பாவைக்கூத்துமுதல் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்த நாடகம், நாட்டியமாகி, நாட்டிய நாடகமாகி இன்று நாம் காணும் புதிய நாடக உலகில் அடியெடுத்து வைத்துள்ளது.

இலக்கியங்களில் நாடகம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பிய மெய்ப்பாட்டியல், நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்து இருக்கிறது.
‘கூத்தாட்டவைக்குழாத் தற்றே’ என்னும் குறள்வழியாக நாடக அரங்கம் இருந்த செய்தி தெரிய வருகிறது.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று நாட்டியமாடும் மாதவியைக் குறிப்பிடுகிறார்.

தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதனை நாட்டியம் என்றும், ஏதேனும் ஒரு கதையைத் தழுவி வேடம்புனைந்து ஆடுவதனை நாடகம் என்றும் குறிப்பிட்டு வந்துள்ளனர்.

‘நாட்டியம்’, ‘நாடகம்’ இரண்டிற்கும் பொதுவாகக் கூத்து என்னும் சொல்லே வழக்கில் இருந்தது.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் கூத்துவகைகளைப் பற்றியும், நாடகநூல்கள் பற்றியும் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கணம் வகுத்த நாடக நூல்கள்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கருதப்படும் தமிழ் நூல்களில், முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாட்டியத்திற்கும் நாடகத்திற்கும் இலக்கணம் வகுத்துள்ளன.

சிலப்பதிகாரம், நாடகக் கலையைப் பற்றியும் காட்சித் திரைகளைப் பற்றியும் நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளது.

பரிதிமாற்கலைஞர், செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் என்னும் நூலில், நாடகம் அதன் விளக்கம்,  வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்புக்குரிய இலக்கணம், நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி விபுலானந்தர் எழுதிய மதங்க சூளாமணியும் மறைமலையடிகள் எழுதிய சாகுந்தலமும் நாடகத்தைப்பற்றிய ஆராய்ச்சி நூல்களாகும்.

நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார், நாடகத்தமிழ் என்னும் தம்நூலில் தொழில்முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார்.
காலம்தோறும் நாடகக்கலை:
ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்தவிலாசம் என்னும் நாடக நூலை எழுதியுள்ளான்.

பதினோராம் நூற்றாண்டில் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் இராசராசேச்சுவர நாடகம் நடைபெற்றதாகக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
தஞ்சாவூரை ஆண்டபோது கோவிலில் நாடகங்கள் மராத்திய மன்னர்களால் நடத்தப்பெற்றன.

நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகங்கள் தோன்றின.
பள்ளு நாடகவகை, உழவர்களின் வாழ்க்கையைச் சித்திரித்துள்ளன.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நொண்டி நாடகங்கள் தோன்றின. செல்வக்குடியில் பிறந்த ஒருவன், ஒழுக்கங்கெட்டு, நோயும் வறுமையும் உற்று இறுதியில் திருந்தி வாழ்வதாக இவ்வகை நாடகங்கள் அமைந்தன.

பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், கோபால கிருட்டின பாரதியாரின் நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.

இக்காலத்தில் தோன்றிய பெரும்பாலான நாடகங்கள், மகாபாரதம், இராமாயணம் முதலிய காவியங்களின் கதைக்கூறுகளிலிருந்து படைக்கப்பட்டன. ஊர்களில், தெருக்கூத்து என்னும் நாடகவகை, புராணக்கதைகளையே மையமாகக் கொண்டு நடத்தப் பெற்றது.

பின்னர், நாடகங்களில் உரையாடல் சிறப்பிடம் பெற்றது; விடிய விடிய நடைபெற்று வந்த நிலைமாறி நாடகம் மூன்று மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமுதாயச் சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்றன.

காசி விசுவநாதரின் டம்பாச்சாரி விலாசம் குறிப்பிடத் தக்கது.

பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தைக் கி.பி.1891ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்நூல் லார்ட் லிட்டன் எழுதிய மறைவழி என்னும் ஆங்கிலக் கதையைத் தழுவியதாகும்.

நாட்டு விடுதலைப் போராட்டக் காலக்கட்டத்தில், பல்வேறு காலத்திய தேசிய நாடகங்கள் அரங்கேறின.

கதரின் வெற்றி நாடகம்தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகமாகும்.

இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன. நாடக மேடைகளில் தேசியப்பாடல்கள் முழங்கின.

சங்கரதாசு சுவாமிகள்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத்துறைக்குப் பெருந்தொண்டு புரிந்தவர் சங்கரதாசு சுவாமிகள்.
நாடக உலகின் இமயமலை என்றும், தமிழ்நாடகத் தலைமையாசிரியர் என்றும் சுவாமிகள் அழைக்கப்பட்டார்.

பிரகலாதன், சிறுத்தொண்டர், இலவகுசா, பவளக்கொடி, அபிமன்யு, சுந்தரி முதலான நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை சங்கரதாசு சுவாமிகள் எழுதியுள்ளார்.

இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு...

இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு...

வேலு நாச்சியார்:

வேலு நாச்சியார் வீரமும் நுண்ணறிவும் ஒருங்கே அமையப்பெற்றவர். இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி.
இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி.1730ஆம் ஆண்டு ஒரே பெண் மகவாகத் தோன்றியவர் வேலு நாச்சியார். இவர், பெற்றோரால் ஆண் வாரிசைப்போன்றே வளர்க்கப்பட்டு, ஆயுதப்பயிற்சிமுதல் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேலு நாச்சியாரை மணந்துகொண்டார்.
ஆங்கிலேயர் 1772ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின்மீது படையெடுத்தனர். ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும் இடையே போர் நடைபெற்றது.

கடலூர் அஞ்சலையம்மாள்

கடலூர் அஞ்சலையம்மாள் 1890ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.
1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே, அஞ்சலையம்மாளும் தமது பொதுவாழ்க்கையைத் தொடங்கினார்.
அஞ்சலையம்மாள், நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு பல ஆண்டு சிறையில் வாடினார்.
மேலும் அவர் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் இருந்துள்ளார். வேலூர்ச் சிறையில் இருந்தபோது, கருவுற்றநிலையில் இருந்த அவரை ஆங்கிலேய அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
காந்தியடிகள் அஞ்சலையம்மாளைத் தென்னாட்டின் ஜான்சிராணி என்றழைத்தார்.

அம்புஜத்தம்மாள்

அம்புஜத்தம்மாள் வசதியான குடும்பத்தில் 1899ஆம் ஆண்டு சனவரித் திங்கள் எட்டாம் நாள் பிறந்தார்.
அன்னை கஸ்தூரிபாயின் எளிமையான தோற்றத்தினால் ஈர்க்கப்பட்டு, எளிமையாக வாழ்ந்தார். பட்டு, பகட்டு, ஆங்கிலமோகம் அனைத்தையும் துறந்தார். பல்வேறு கட்டுப்பாடுகள் மிகுந்த குடும்பத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டார் .
வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அம்புஜத்தம்மாள் அழைக்கப்பட்டார்.
தந்தையின் பெயரோடு, காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் சீனிவாச காந்தி நிலையம் என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தார்.
அம்புஜத்தம்மாள் தம் எழுபதாண்டு நினைவாக, நான் கண்ட பாரதம் என்னும் அரிய நூலை எழுதியுள்ளார்.

முக்கிய பகுதிகள் பெயர் மாற்றம் பற்றிய சில.

முக்கிய பகுதிகள் பெயர் மாற்றம் பற்றிய சில தகவல்கள்:-

🌹 ஐக்கிய மாகாணம் - உத்திரப்பிரதேசம் (1950)
🌹 மதராஸ் மாகாணம் - தமிழ்நாடு (1969)
🌹 மைசூர் மாகாணாம் - கர்நாடகா (1973)
🌹 டெல்லி - டெல்லி தேசிய தலைநகர் (1992)
🌹மெட்ராஸ் - சென்னை (1996)
🌹பம்பாய் - மும்பை (1996)
🌹 உத்தாஞ்சல் - உத்திரகண்ட் (2007)
🌹ஒரிசா - ஒடிசா (2011) 96வது ச.தி. படி
🌹 பாண்டிச்சேரி - புதுச்சேரி (2011)

பின்கோடு

பின்கோடு

பின்கோடு என்று அழைக்கப்படும் அஞ்சல் குறியீட்டு எண்கள் அல்லது அஞ்சலகச் சுட்டு எண் (PIN - Postal Index Number) இந்தியாவின் அஞ்சல் சேவைக்காக இந்திய அஞ்சல்துறையினால் ஆகஸ்ட் 15 , 1972 அன்று ஆறு இலக்கங்கள் கொண்ட எண் முறையை ஏற்படுத்தியது.

இந்தியா ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, எட்டு மண்டலங்கள் நிலப்பரப்பு தொடர்பாகவும் ஒன்று செயல்பாடு தொடர்பாகவும் எண்கள் கொடுக்கப்பட்டன. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் எந்த மண்டலத்தில் அஞ்சலகம் அமைந்துள்ளது என்பதையும், இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும் மற்றும் மூன்றாவது எண் வகைப்படுத்தும் மாவட்டத்தையும் குறிக்கிறது இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை அடையாளப்படுத்துகிறது.

இந்தியாவின் மாநிலங்களையும் ஆட்சிப்பகுதிகளையும் உள்ளடக்கிய ஒன்பது பின்கோடு மண்டலங்கள்:

1 - டில்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஸ்மீர்(பாகிஸ்தான்-ஆளுமை கீழுள்ள காஸ்மீர் உட்பட), சண்டிகார்
2 - உத்திரப் பிரதேசம், உத்தராகண்டம்
3 - இராஜஸ்த்தான், குஜராத், டாமன் டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
4 - மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்
5 - ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம்
6 - தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி
7 - ஒடிசா, மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்
8 - பீகார், ஜார்க்கண்ட்
9 - இராணுவ அஞ்சலகம்(APO) மற்றும் கள அஞ்சலகம் (FPO) 📩📩📩📩📩

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதிகள்

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதிகள் பற்றிய சில தகவல்கள்:-

📚 விதி 370 - ஜம்மு காஷ்மீர்
📚 விதி 371 - மகாராஷ்டிர, குஜராத்
📚 விதி 371A - நாகலாந்து
📚 விதி 371B - அசாமின்
📚 விதி 371C - மணிப்பூர்
📚 விதி 371D - ஆந்திரப்பிரதேசம்
📚 விதி 371E - ஆந்திரப்பிரதேசம் மத்திய பல்கலைக்கழகம் அமைத்தல்
📚 விதி 371F - சிக்கிம்
📚 விதி 371G - மிசோரம்
📚 விதி 371H - அருணாசல பிரதேசம்
📚 விதி 371 I - கர்நாடகா

தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள்...

📚 தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள் :

ண, ன பொருள் வேறுபாடு
அணல் - தாடி, கழுத்து
அனல் - நெருப்பு
அணி - அழகு
அனி - நெற்பொறி
அணு - நுண்மை
அனு - தாடை, அற்பம்
அணுக்கம் - அண்டை, அண்மை.
அனுக்கம் - வருத்தம், அச்சம்
அணை - படுக்கை, அணைத்துக்
கொள்ளுதல்
அனை - அன்னை, மீன்
அணைய - சேர, அடைய
அனைய - அத்தகைய
அண்மை - அருகில்
அன்மை - தீமை, அல்ல
அங்கண் - அவ்விடம்
அங்கன் - மகன்
அண்ணம் - மேல்வாய்
அன்னம் - சோறு, அன்னப்பறவை
அண்ணன் - தமையன்
அன்னன் - அத்தகையவன்
அவண் - அவ்வாறு
அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
ஆணகம் - சுரை
ஆனகம் - துந்துபி
ஆணம் - பற்றுக்கோடு
ஆனம் - தெப்பம், கள்
ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
ஆணேறு -ஆண்மகன்
ஆனேறு - காளை, எருது
ஆண் - ஆடவன்
ஆன் - பசு
ஆணை - கட்டளை, ஆட்சி
ஆனை - யானை
இணை - துணை, இரட்டை
இனை - இன்ன, வருத்தம்
இணைத்து - சேர்த்து
இனைத்து - இத்தன்மையது
இவண் - இவ்வாறு
இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)
ஈணவள் - ஈன்றவள்
ஈனவள் - இழிந்தவள்
உண் - உண்பாயாக
உன் - உன்னுடைய
உண்ணல் - உண்ணுதல்
உன்னல் - நினைத்தல்
உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
உன்னி - நினைத்து, குதிரை
ஊண் - உணவு
ஊன் - மாமிசம்
எண்ண - நினைக்க
என்ன - போல, வினாச்சொல்
எண்ணல் - எண்ணுதல்
என்னல் - என்று சொல்லுதல்
எண்கு - கரடி
என்கு - என்று சொல்லுதல்
ஏண் - வலிமை
ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
ஏணை - தொட்டில்
ஏனை - மற்றது
ஐவணம் - ஐந்து வண்ணம்
ஐவனம் - மலை நெல்
ஓணம் - ஒரு பண்டிகை
ஓனம் – எழுத்துச்சாரியை
கணகம் - ஒரு படைப்பிரிவு
கனகம் - பொன்
கணப்பு - குளிர்காயும் தீ
கனப்பு - பாரம், அழுத்தம்
கணி - கணித்தல்
கனி - பழம், சுரங்கம், சாரம்
கணம் - கூட்டம்
கனம் -பாரம்
கண்ணன் - கிருஷ்ணன்
கன்னன் - கர்ணன்
கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு
ராசி
கணை - அம்பு
கனை - ஒலி, கனைத்தல்
கண் - ஓர் உறுப்பு
கன் - கல், செம்பு, உறுதி
கண்று - அம்பு
கன்று - அற்பம், இளமரம், குட்டி,
கைவளை
கண்ணல் - கருதல்
கன்னல் - கரும்பு, கற்கண்டு
காண் - பார்
கான் - காடு, வனம்
காணம் - பொன், கொள்
கானம் - காடு, வனம், தேர், இசை
காணல் - பார்த்தல்
கானல் - பாலை
கிணி - கைத்தாளம்
கினி - பீடை
கிண்ணம் - வட்டில், கிண்ணி
கின்னம் - கிளை, துன்பம்
குணி - வில், ஊமை
குனி - குனிதல், வளை
குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
குனித்தல் - வளைதல்
குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
குனிப்பு - வளைப்பு, ஆடல்
கேணம் - செழிப்பு, மிகுதி
கேனம் - பைத்தியம், பித்து
கேணி - கிணறு
கேனி - பித்துப் பிடித்தவர்
கோண் - கோணல், மாறுபாடு
கோன் - அரசன்
சாணம் - சாணைக்கல், சாணி
சானம் - அம்மி, பெருங்காயம்
சுணை - கூர்மை, கரணை
சுனை - நீரூற்று
சுண்ணம் - வாசனைப்பொடி
சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
சேணம் - மெத்தை
சேனம் - பருந்து
சேணை - அறிவு
சேனை - படை
சோணம் - பொன், சிவப்பு, தீ,
சோணகிரி
சோனம் - மேகம்
சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
சோனை - மழைச்சாரல், மேகம்
தண் - குளிர்ச்சி
தன் - தன்னுடைய
தணி - தணித்தல்
தனி - தனிமை
தாணி - தான்றிமரம்
தானி - இருப்பிடம், பண்டசாலை,
தாணு - சிவன், தூண், நிலைப்பேறு
தானு - காற்று
திணை - ஒழுக்கம், குலம்
தினை - தானியம், ஒருவகைப்
புன்செய்ப்பயிர்
திண்மை - உறுதி
தின்மை - தீமை
திண் - வலிமை
தின் - உண்
துணி - துணிதல், கந்தை
துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல்
தெண் - தெளிவு
தென் - தெற்கு, அழகு
நண்பகல் - நடுப்பகல்
நன்பகல் - நல்லபகல்
நணி - அணி (அழகு)
நனி - மிகுதி
நாண் - வெட்கம், கயிறு
நான் - தன்மைப் பெயர்
நாணம் - வெட்கம்
நானம் - புனுகு, கவரிமான்
பணி - வேலை, கட்டளையிடு
பனி - துன்பம், குளிர், சொல், நோய்
பணை - முரசு, உயரம், பரந்த
பனை - ஒருவகை மரம்
பண் - இசை
பன் - அரிவாள், பல
பண்ணை - தோட்டம்
பன்னை - கீரைச்செடி
பண்ணுதல் - செய்தல்
பன்னுதல் - நெருங்குதல்
பண்ணி - செய்து
பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல்
பண்மை - தகுதி
பன்மை - பல
பணித்தல் - கட்டளையிடுதல்
பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த
பட்டணம் - நகரம்
பட்டினம் - கடற்கரை நகர்
பாணம் - நீருணவு
பானம் - அம்பு
புணை - தெப்பம்
புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை
புண் - காயம்
புன் - கீழான
பேணம் - பேணுதல்
பேனம் - நுரை
பேண் - போற்று, உபசரி
பேன் - ஓர் உயிரி
மணம் - வாசனை, திருமணம்
மனம் - உள்ளம், இந்துப்பு
மணை - மரப்பலகை, மணவறை
மனை - இடம், வீடு
மண் - தரை, மண்வகை
மன் - மன்னன், பெருமை
மண்ணை - இளமை, கொடி வகை
மன்னை - தொண்டை, கோபம்
மாணி - அழகு, பிரம்மசாரி
மானி - மானம் உடையவர்
மாண் - மாட்சிமை
மான் - ஒரு விலங்கு
முணை - வெறுப்பு, மிகுதி
முனை - முன்பகுதி, துணிவு,
முதன்மை
வணம் - ஓசை
வனம் - காடு, துளசி
வண்மை - வளப்பம், கொடை
வன்மை - உறுதி, வலிமை
வண்ணம் - நிறம், குணம், அழகு
வன்னம் - எழுத்து, நிறம்
வாணகம் - அக்கினி, பசுமடி
வானகம் - மேலுலகம்
வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு
வானம் - ஆகாயம், மழை
வாணி - கலைமகள், சரஸ்வதி
வானி - துகிற்கொடி
ல, ழ, ள பொருள் வேறுபாடு
அலகு - பறவையின் மூக்கு, அளவு,
ஆண்பனை
அழகு - வனப்பு
அளகு - சேவல், பெண்கூகை
அலகம் - திப்பிலி
அளகம் - வெள்ளெருக்கு, நீர்
அலகை - கற்றாழை, பேய்
அளகை - அளகாபுரி, பெண்
அழம் - பிணம்
அலம் - கலப்பை
அளம் - உப்பு
அலத்தல் - அலட்டல், அலைதல்
அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
அலவன் - ஆண்நண்டு
அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்
அழி - அழித்துவிடு
அலி - பேடி, காகம், விருச்சிகராசி
அளி - கருணை, கள், வண்டு
அல்லல் - துன்பம்
அள்ளல் - வாரி எடுத்தல்
அழை - கூப்பிடு
அலை - கடல், நீரலை, அலைதல்
அளை - தயிர், நண்டு, புற்று
அவல் - பள்ளம், உணவுப் பொருள்
அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)
அல் - இரவு
அள் - அள்ளி எடு, நெருக்கம்
உலவு - நட
உளவு - ஒற்று
உழவு - கலப்பையால் உழுதல்
உழி - இடம், பொழுது
உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
உலு - தானியப் பதர்
உழு - நிலத்தை உழு
உளு - உளுத்துப் போதல்
உலை - கொல்லன் உலை, நீருலை
உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
உளை - பிடரி மயிர், சேறு, தலை
உழுவை - புலி
உளுவை - மீன்வகை
எல் - கல், மாலை, சூரியன்
எள் - எண்ணெய்வித்து, நிந்தை
எலு - கரடி
எழு - எழுந்திரு, தூண்
ஒலி - சப்தம், நாதம், காற்று
ஒழி - அழி, தவிர், கொல், துற
ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)
ஒல் - ஒலிக்குறிப்பு
ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி
கலகம் - போர், அமளி, இரைச்சல்
கழகம் - சங்கம், கூட்டமைப்பு
கழங்கம் - கழங்கு, விளையாட்டுக்
கருவி
களங்கம் - குற்றம், அழுக்கு
கலி - கலியுகம், பாவகை, சனி
கழி - கோல், மிகுதி, உப்பளம்
களி - மகிழ்வு, இன்பம்
கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
கழை - மூங்கில், கரும்பு,
புனர்பூசம்
களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
கல் - மலை, பாறை, சிறுகல்
கள் - மது, தேன்
கலம் - கப்பல், பாத்திரம்
களம் - இடம், போர்க்களம், இருள்
காலி - ஒன்றுமில்லாதது,
வெற்றிடம்
காளி - துர்க்கை, மாயை
காழி - சீர்காழி (ஊர்)
காலை - பொழுது,
விடியற்பொழுது
காளை - காளைமாடு, இளைஞன்
காலம் - பொழுது, நேரம்
காளம் - எட்டிமரம், சூலம்
கிலி - அச்சம், பயம்
கிழி - கிழித்துவிடு, முடிப்பு
(பொன்)
கிளி - பறவை, வெட்டுக்கிளி
கிழவி - முதியவள், மூதாட்டி
கிளவி - சொல், மொழி
குலி - மனைவி
குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச்
சதுரம், வயிறு
குளி -நீராடு
குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம்,
குடி
குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி
குலை - கொத்து, மனம்
தடுமாறுதல்
குழை - குண்டலம், குழைந்துபோதல்
குலவி - மகிழ்ந்திருத்தல்
குழவி - குழந்தை, இளமை, யானைக்
கன்று அம்மிக்கல்
குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி
குலிகம் -சிவப்பு, இலுப்பை
குளிகம் -மருந்து, மாத்திரை
குவலை -துளசி, கஞ்சா
குவளை - குவளை மலர், சொம்பு,
ஒரு பேரெண்
கூலம் - தானியம், கடைத்தெரு
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி(யார்) - பேய், காளை, வீரர்,
படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
கொலு - அரசசபை, திருவோலக்கம்
(தெய்வசபை), உல்லாசமாக
வீற்றிருத்தல்
கொழு - மழு, கலப்பையில் மாட்டும்
பெரிய இரும்பு, கொழு கொழுத்து
இருத்தல்
கொளு - புறப்பொருள்
வெண்பாமாலைத் துறை,
பொருந்துவாய்
கொலை - கொல்லுதல்
கொளை - கோட்பாடு, பயன்,
இசைப்பாட்டு, தாளம்
கொல்லாமை - கொலை செய்யாமை
கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை,
அடங்காமை
கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு
மலை
கொள்ளி - கொள்ளிக்கட்டை
கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
கொள்ளை - திருடுதல், மிகுதி
கோலம் - அழகு, அலங்காரம்
கோளம் - உருண்டை, வட்டம்
கோலை - மிளகு
கோழை - வீரமற்றவன், கபம்
கோளை - குவளை, எலி
கோல் - மரக்கொம்பு, அம்பு,
குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
கோள் - கிரகம்
கோலி - இலந்தை, விளையாடும்
குண்டு
கோழி - உறையூர், விட்டில், பறவை
கோளி - பூவாது காய்க்கும் மரம்,
ஆத்தி, ஆலம்
சலம் - நீர், சிறுநீர், குளிர்
சளம் - பொய், துன்பம், வஞ்சனை
சாலை - பாடசாலை, பொது
மண்டபம், அறக்கூடம்
சாளை - கடல்மீன்
சாழை - குடிசை, குச்சு
சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
சுளித்தல் - முறித்தல், சினத்தல்
சூலை - வயிற்று நோய்
சூளை - செங்கல் சூளை
சூல் - கர்ப்பம்
சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
சூள் - சபதம்
சேல் - மீன்
சேள் - மேலிடம்
சோலி - ரவிக்கை, காரியம்
சோழி - பலகரை
சோளி - கூடைவகை
தவளை - ஓர் உயிரி
தவலை - பாத்திரம்
தலம் - இடம், பூமி
தழம் - தைலம்
தளம் - மேடை, மாடி வீட்டின்
அடுக்கு
தழை - தாவர உறுப்பு
தலை - மண்டை
தளை - விலங்கு
தாலம் - உலகம், தேன்
தாளம் - இசைக்கருவி, ஜதி
தாலி - மங்கலநாண்
தாழி - கடல், குடம், பரணி
பெரியபாண்டம்
தாளி - தாளித்தல், பனைதால் -
நாக்கு, தாலாட்டு
தாழ் - தாழ்தல், குனிதல்
தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி,
காகிதம்.
துலக்கம் - ஒளி, தெளிவு
துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம்,
ஒளி
துலம் - கோரை, கனம்
துளம் - மாதுளை, மயிலிறகு
துலி - பெண் ஆமை
துழி - பள்ளம்
துளி - மழைத்துளி, திவலை,
சிறிய அளவு
துலை - ஒப்பு, கனம்
துளை - துவாரம், வாயில்
தூலி - எழுதுகோல், எழுத்தாணி
தூளி - புழுதி, குதிரை
தெழித்தல் - கோபித்தல், முழங்குதல்,
அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல்,
விதைத்தல்
தெல் - அஞ்சுதல்
தெள் - தெளிவான
தோலன் - அற்பன்
தோழன் - நண்பன்
தோலி - பிசின், ஒருவகை மீன்
தோழி - பாங்கி, நட்பால்
நெருக்கமானவள்
தோளி - அவுரி (ஒருவகை
குத்துச்செடி), அரக்கு
தோல் - சருமம், வனப்பு, விதையின்
மேல்பகுதி
தோள் - புயம், வீரம்
நலன் - நலம், அழகு, புகழ், இன்பம்,
நன்மை, குணம்,
நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
நலி - நோய்
நளி - குளிர்ச்சி, பெருமை
நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்
நல் - நல்ல
நள் - இரவு, நடு, நள்ளிரவு
நாலம் - பூவின் காம்பு
நாழம் - இழிவுரை, வசவு
நாளம் - பூந்தண்டு, உட்துளை,
ரத்தநாளம்
நாலி - முத்து, கந்தை ஆடை
நாழி - உள்தொளையுள்ள பொருள்,
ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா,
பூரட்டாதி
நாளி - கல், நாய்
நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
நாழிகை - வட்டம், கடிகாரம்
நால் - நான்கு
நாழ் - குற்றம், செருக்கு
நாள் - காலம், திதி
நீலம் - ஒரு நிறம், கருங்குவளை,
இருள்
நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்
நீல் - நீலம், காற்று
நீள் - நீளம், ஒளி
பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி,
சேனை, வன்மை, உறுதி, எடை
பழம் - கனி, முதுமை
பல்லி - சிற்றூர், இடையர் ஊர்,
உழுகருவி, ஓர் உயிரி,
வண்டியுறுப்பு
பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில்,
குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை,
பள்ளிக்கூடம்
பலி - பலியிடுதல், பலியுயிர்
பழி - குற்றம்
பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
பாழ் - வீண், வெறுமை
பீழை - துன்பம்
பீளை - கண் அழுக்கு
புலி - காட்டு விலங்கு
புளி - புளியமரம், புளியங்காய்
புலை - புலால், ஊன், கீழ்மை
புழை - துளை, வாயில், நரகம்
புகல் - அடைக்கலம்
புகழ் - பெருமை
புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
புள் - பறவை
பூலம் - புற்கட்டு
பூளம் - பூவரசு
பூழை - துவாரம், கோபுரவாயில்
பூளை - பூளைச்செடி, இலவம்
பஞ்சு
பாலி - தானியக் குவியல், தூற்றாத
தானியம்
பாழி - கொடுத்தல், ஈதல்
பாளி - வரப்பு, எல்லை
பாலிவு - அழகு, நிறைவு
பாழிவு - பொழிதல், மேன்மை
போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
போளி - இனிப்புப் பண்டம்
பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
பொழிதல் - ஈதல், கொடுத்தல்,
சொரிதல், பெய்தல், நிறைதல்
மலம் - அழுக்கு, பாவம்
மழம் - இளமை, குழந்தை
மலை - குன்று, பொருப்பு,
வெற்பு,சிகரம்
மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்
மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
மழைத்தல் - மழை பெய்திருத்தல்,
குளிர்ந்திருத்தல்
மல்லிகை - மாலை, கழுத்தணி,
வரிசை
மாளிகை - அரண்மனை, கோயில்
மாலை - அந்திப்பொழுது,
பூமாலை
மாழை - மயக்கம், இளமை, அழகு
மாளை - புளியம்பட்டை
மால் - திருமால், மயக்கம், அருகன்,
இந்திரன், பெருமை, மேகம்
மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)
முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
முழை - குகை
முளை - முளைத்தல், தறி, ஆப்பு,
அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
முழி - விழி (விழித்தல்)
முளி - மரக்கணு, விரல்முளி,
வாட்டம்
மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை,
கோணம்
மூலை - இரு கோடுகள் சந்திக்கும்
இடம்
மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர்
உறுப்பு(முதன்மைப் பகுதி)
மெல்ல - மென்று தின்பது
மெள்ள - மெதுவாக
மாலி - மொளலி கிரீடம்
மாழி - மேழி, கலப்பை
மாளி - துணிமூட்டை
வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
வளம் - வளமை, அழகு
வலவன் - திருமால்
வளவன் - சோழன், வேளாளன்
வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
வளன் - செழுமை, வளப்பன்
வழப்பம் - வழக்கம், இயல்பு
வளப்பம் - வளமை, செழிப்பு
வலி - நோய், வலிமை, துன்பம்
வழி - நெறி, பாதை, தடம், உபாயம்
வளி - காற்று
வலை - மீன் முதலியன பிடிக்கும்
ஒரு கருவி
வழை - சுரபுன்னை, புதுமை,
இளமை
வளை - கை வளையல், எலி வளை
வல் - வலிமை, விரைவு, திறமை
வள் - ஒலிக்குறிப்புச் சொல்
வல்லம் - வாழை, ஓர் ஊர்
வள்ளம் - மரக்கலம், படகு, அளவு,
தொன்னை
வல்லி - பூமி, பெண், பிரிதல், படர்
கொடி
வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம்,
சந்திரன்
வலு - வலிமை, பலம், பற்று
வழு - குற்றம், தவறு, பழிப்புரை,
கேடு
வளு - இளமை, இளைய
வாலி - கிஷ்கிந்தை அரசன்
(இராமாயணம்)
வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)
வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு
காதணி
வாலை - இளம்பெண், திராவகம்
வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
வாழை - வாழைமரம்
வாளை - வாளை மீன்
வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு
வாழ் - வாழ்வாயாக (என்று
வாழ்த்துதல்)
வாள் - போர்வாள், நீண்டகத்தி
விலா - விலா எலும்பு
விழா - திருவிழா, கொண்டாட்டம்
விளா - இளமை, வெண்மை, நிணம்
விழி - கண், கருவிழி
விளி - கூப்பிடு, அழை,
ஏழிசையில் ஒன்று
விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்
விழை - விரும்பு, ஆசைப்படு
விளை - ஒரு மீன்வகை, விளைவி
(விளைச்சல்)
விலக்கு - விலக்கி விடு, தவிர்
விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்
விலங்கு - பூட்டு, கை, கைகளைப்
பிணிக்கும் கருவி, மிருகம்
விளங்கு - திகழ் (திகழ்தல்),
சிற்றரத்தை (மூலிகை வகை)
வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி
வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு
வேலம் - வேலமரம், தோட்டம்
வேழம் - யானை, கரும்பு, மூங்கில்
வேல் - வேலாயுதம்
வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன்,
ஆசை
வேலை - பணி, கடல்
வேளை - பொழுது, நேரம்,
ஒருவகைக் கீரை
ர, ற பொருள் வேறுபாடு
அர - பாம்பு
அற - தெளிய, முற்றுமாக
அரவு - பாம்பு
அறவு - அறுதல், தொலைதல்
அரம் - ஒரு கருவி
அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம்,
கடமை, அறநூல், துறவறம்
அரி - திருமால், அரிசி, அழகு,
அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு,
சிவன்
அறி - அறிந்துகொள்
அரிய - கிடைத்தற்கு அரிதான,
கஷ்டமான
அறிய - அறிந்துகொள்ள,
தெரிந்துகொள்ள
அரன் - சிவன்
அறன் - தர்மம், அறக்கடவுள்
அரிவை - பெண் (7 பருவத்துள் ஒன்று.
18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட
பெண்)
அறிவை - அறிவாய்
அருகு - புல்வகை (அருகம்புல்),
அண்மை
அறுகு - குறைந்து போதல்
அக்கரை - அந்தக் கரை
அக்கறை - ஈடுபாடு
அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு
மரம்
அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி,
ஒலி, பாசறை, சொல், குகை,
வஞ்சனை, மாளிகை
அரைதல் - தேய்தல்
அறைதல் - அடித்தல், சொல்லுதல்
அப்புரம் - அந்தப் பக்கம்
அப்புறம் - பிறகு
அர்ப்பணம் - உரித்தாக்குதல்
அற்பணம் - காணிக்கை செலுத்துதல்
அரு - உருவமற்றது
அறு - துண்டித்துவிடு,
அறுத்துவிடு
அருமை - சிறப்பு, அன்பு, இன்மை,
சுலபத்தில் கிடைக்காதது
அறுமை - நிலையின்மை, ஆறு
ஆரு - குடம், நண்டு
ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை,
நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
ஆர - நிறைய, அனுபவிக்க
ஆற - சூடு ஆற (குறைய)
ஆரல் - ஒருவகை மீன்
ஆறல் - சூடு குறைதல்
இரத்தல் - யாசித்தல்
இறத்தல் - இறந்துபோதல், சாதல்
இரகு - சூரியன்
இறகு - சிறகு
இரக்கம் - கருணை
இறக்கம் - சரிவு, மரணம்
இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழிறங்கி வா
இரவம் - இரவு
இறவம் - இறால் மீன்
இரவி - சூரியன், எருக்கு, மலை,
வாணிகத்தொழில்
இறவி - இறத்தல்
இரவு - இரவு நேரம், யாசித்தல்
இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி,
தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
இரை -ஒலி, உணவு
இறை - கடவுள், அணு, அரசன், ரேகை,
சந்து, கடமை, தலைமை, விடை,
உயரம், மூலை
இரு - இரண்டு, பெரிய, உட்கார்,
அமர்ந்துகொள்
இறு - ஒடி, கெடு, சொல்லு
இரும்பு - கடிவாளம், கிம்புரி,
ஆயுதம், ஓர் உலோகம்
இறும்பு - வண்டு, சிறுமலை
இருப்பு - கையிருப்பு, இருப்பிடம்,
ஆசனம், நிலை, பொருள், முதல்
இறுப்பு - வடிப்பு
இருத்தல் - அமர்ந்திருத்தல்,
காத்திருத்தல்
இறுத்தல் - வடித்தல், செலுத்தல்,
எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல்,
முடித்தல், முறித்தல்
இருக்கு - மந்திரம், ரிக் வேதம்
இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு
இரைத்தல் - ஒலித்தல்,
மூச்சுவாங்குதல்
இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு
உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி,
ஞானம், விடம்
உறவு - நட்பு, சுற்றம், எறும்பு
உரவோர் - அறிஞர், முனிவர்
உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்
உரி - தோல், மரப்பட்டை,
அரைப்படியளவு,
உரிச்சொல்,கொத்துமல்லி
உறி - உறிவெண்ணெய், தூக்கு
உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம்,
நிறம், அச்சம், பெருமை, மேன்மை
உறு - மிகுதி
உருக்குதல் - இளக்குதல், மெலியச்
செய்தல்
உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்
உரை - புகழ், விளக்கவுரை, நூல்,
பொன்மாற்று, அறிவுரை, சொல்
உறை - இடம், பண்டம், பொருள்,
மருந்து, பாலில் இடும் பிரை, துளி,
மழை, ஆடை, துன்பம், பாம்பின்
விஷப்பை
உரைப்பு - தங்குதல், தோய்தல்
உறைப்பு - காரம், கொடுமை
உரையல் - சொல்லல்
உறையல் - மாறுபாடு, பிணக்கு
உரிய - உரிமையான
உறிய - உறிஞ்ச
ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப்
பறவை
ஊறல் - தினவு, ஊற்று, சாறு,
வருவாய், ஊறுதல், களிப்பு
ஊரு - அச்சம், தொடை
ஊறு - இடையூறு, துன்பம், காயம்
உறுதல், தீண்டல், குற்றம், புண்,
கொலை
எரி - தீ, கார்த்திகை, பிரபை,
இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை,
கந்தகம்
எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக்
கூறுதல்
ஏர - ஓர் உவமஉருபு
ஏற - மிகுதி, உயர (ஏறுதல்)
ஏரி - நீர்நிலை, குளம்
ஏறி - உயர்ந்த, மேலே ஏறி
ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு
ஒறு - தண்டி, அழி, இகழ்
ஒருத்தல் - ஆண் விலங்குகளின்
பொதுப்பெயர்
ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல்,
வருத்துதல், வெறுத்தல், கடிதல்,
இகழ்தல், குறைத்தல்
ஒருவு - நீங்கு
ஒறுவு - வருத்தம், துன்பம்
கரடு - மரக்கணு, மணிக்கட்டு,
முருடு, வளர்ச்சியற்றது
கறடு - தரமற்ற முத்து
கரம் - கிரணம், விஷம், செயல், கை,
கழுதை
கறம் - கொடுமை, வன்செய்கை
சிகரம் - மலை  உச்சி.