சனி, 20 ஜூன், 2020

நிறம் மற்றும் நிறமிகள் பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகள்

நிறம் மற்றும் நிறமிகள் பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகள்


இயற்கையான மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட சூழலில் மனிதர்கள் ஒவ்வொரு நாளும் வண்ணத்தால் சூழப்பட்டிருக்கிறார்கள். சில நேரங்களில் வண்ணங்கள் தெளிவாக நிற்கலாம், மற்ற நேரங்களில் அவை பின்னணியில் மங்கக்கூடும். அதன் முழு தாக்கத்தைப் பற்றியும் அல்லது அது எவ்வாறு இயங்குகிறது என்பதையும் பற்றி அதிகம் சிந்திக்காமல், வண்ணத்தை எடுத்துக்கொள்வது எளிது.


எத்தனை வண்ணங்கள் உள்ளன என்று யாராவது உங்களிடம் கேட்டிருந்தால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? மனித கண் வழக்கமாக சுமார் 10 மில்லியன் வண்ணங்களைக் காண முடியும் என்று மாறிவிடும். கண்ணில் உள்ள மில்லியன் கணக்கான சிறப்பு கூம்புகள் இதற்குக் காரணம், அவை நிறமியைக் கண்டறிய முடிகிறது. சில நேரங்களில் சில கூம்புகள் செயலிழக்கக்கூடும், மேலும் இது வண்ண-குருட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது. மற்ற நேரங்களில், ஒரு நபருக்கு “டெட்ராக்ரோமசி” இருக்கலாம், அதாவது அவர்கள் கூடுதல் வகை கூம்பு மற்றும் 100 மில்லியன் வண்ணங்களைக் காணலாம். இருப்பினும், இந்த வண்ணங்கள் அனைத்தையும் நாம் காணக்கூடியதாக இருப்பதால், அவை அனைத்திற்கும் பெயர்கள் உள்ளன என்று அர்த்தமல்ல. பான்டோன் தற்போது கிராபிக்ஸ் வடிவமைப்பு சேகரிப்பில் 2,678 பெயரிடப்பட்ட வண்ணங்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் க்ரேயோலா 120 வெவ்வேறு க்ரேயன் வண்ணங்களைக் கொண்டுள்ளது. எந்த வழியில், அது இன்னும் நிறைய வண்ணங்கள்!

தெளிவாக, மனித கண்ணுக்கு வியக்க வைக்கும் வண்ணங்கள் உள்ளன. ஆனால் தெரியாத வண்ணங்களைப் பற்றி என்ன? "சாத்தியமற்றது" அல்லது "தடைசெய்யப்பட்ட" வண்ணங்கள் நீல-மஞ்சள் கலவையாகவும், மனித கண்களால் பார்க்க முடியாத சிவப்பு-பச்சை கலவையாகவும் கருதப்படுகின்றன. கண்ணில், சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தைப் பார்த்தவுடன் செயல்படுத்தப்படும் நியூரான்கள் உள்ளன. இருப்பினும், சிவப்பு அல்லது மஞ்சள் இல்லாதது பச்சை அல்லது நீலம் இருப்பதைக் குறிக்கிறது. ஒளி சுவிட்சைப் போலவே, அவை ஒரே நேரத்தில் இயக்கப்படலாம் மற்றும் அணைக்க முடியாது, எனவே சிவப்பு மற்றும் பச்சை, அல்லது நீலம் மற்றும் மஞ்சள் இரண்டையும் ஒரே இடத்தில் பார்க்க முடியாது. அடிப்படையில், சிவப்பு மற்றும் பச்சை ஒருவருக்கொருவர் ரத்துசெய்கின்றன, அதே நேரத்தில் நீலம் மற்றும் மஞ்சள் ஒருவருக்கொருவர் ரத்துசெய்கின்றன. 1983 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் ஹெவிட் கிரேன் மற்றும் தாமஸ் பியான்டானிடா ஆகியோர் சாத்தியமற்றதைச் செய்ய முயன்றனர், மேலும் இந்த தடைசெய்யப்பட்ட வண்ணங்களைக் காண ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். கண் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவர்கள் சிவப்பு / பச்சை (மற்றும் நீலம் / மஞ்சள்) கோடிட்ட காகிதத்தை தன்னார்வலர்களின் கண்களுக்கு முன்னால் வைத்திருந்தனர். வண்ணங்கள் ஒன்று, புதிய வண்ணமாக ஒன்றிணைந்ததால், ஒவ்வொரு வண்ணத்திற்கும் இடையிலான கோடுகள் மங்கத் தொடங்கியதாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர். வெளிப்படையாக, இந்த புதிய வண்ணங்கள் மிகவும் தனித்துவமானவை, தன்னார்வலர்களால் பெயரிடவோ விவரிக்கவோ முடியவில்லை.

பல சாயல்கள், நிறங்கள் மற்றும் நிழல்கள் இருந்தாலும், மக்கள் பொதுவாக அவற்றை வேறுபடுத்தி வகைப்படுத்தலாம். ஸ்கார்லெட் சிவப்பு நிற நிழல்; நீலம் மற்றும் பச்சை இரண்டும் குளிர் வண்ணங்கள். இருப்பினும், சில கலாச்சாரங்கள் வண்ணங்களை விவரிக்க வேறு வழிகளைக் கொண்டுள்ளன. 1970 களில், ஆராய்ச்சியாளர்கள் பால் கே மற்றும் ப்ரெண்ட் பெர்லின் ஆகியோர் கோடைகால மொழியியல் நிறுவனத்தின் மிஷனரிகளுடன் இணைந்து உலகெங்கிலும் வண்ண சொற்களஞ்சியம் குறித்த தரவுகளை சேகரித்தனர். இந்த மிஷனரிகள் பழங்குடி சமூகங்களில் உள்ளவர்களுக்கு வண்ண சில்லுகளைக் காண்பிப்பார்கள், மேலும் ஒவ்வொரு வண்ணத்தையும் விவரிக்கச் சொல்வார்கள். காண்டோஷி மொழி போன்ற சில சந்தர்ப்பங்களில், சமூக உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு வண்ணத்திற்கும் குறிப்பிட்ட பெயர்கள் இல்லை. அதற்கு பதிலாக, அவர்கள் ஒரு மஞ்சள் சிப்பை “ptsiyaro” என்று விவரிக்கலாம், இது மஞ்சள் நிற பறவையை குறிக்கிறது. இன்னும் சுவாரஸ்யமானது என்னவென்றால், அவை வெஸ்டர்ன் ராய் ஜி பி.ஐ.வி மாதிரியைப் போலவே வண்ணங்களையும் வேறுபடுத்தவில்லை. உதாரணமாக, பச்சை மற்றும் ஊதா நிறங்களுக்கிடையேயான அனைத்து வண்ணங்களையும் விவரிக்க அவர்கள் ஒரே வார்த்தையை (கவபனா) பயன்படுத்தினர். ஆங்கிலத்தில், பச்சை, நீலம் மற்றும் ஊதா ஆகியவை தனித்தனி வகைகளாகக் கருதப்படுகின்றன, ஒவ்வொன்றின் பல நிழல்களை விவரிக்க இன்னும் அதிகமான சொற்கள் உள்ளன..



திங்கள், 15 ஜூன், 2020

தமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்


தமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்

முன்னுரை

பயணம் மனித வாழ்வில் தவிர்க்க வியலாததொரு கூறு ஆகும். மனித வாழ்க்கை தொடங்கிய நாள் முதல் பயணம் செல்லுதலும் தொடங்கி விட்டது. "ஓரிடத்தில் இருந்து கிளம்பித் தாங்கள் சென்ற இடங்களில் தங்களின் அனுபவங்களைச் சுவைபட எடுத்தியம்புதல்" பயண இலக்கியங்கள் எனப்படும். "தாம் சென்று கண்ட இடங்களையும் அங்கு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் உரிய சித்திரம் முதலியவற்றால் ஒருவர் விளக்கி விரித்துரைப்பதே பயண இலக்கியங்கள் ஆகும்” என்று ஆக்ஸ்போர்டு பேரகராதி கூறுகிறது. பயண இலக்கியங்கள் பயணிகளின் அனுபவங்களைக் கூறுகின்றன. "பிறரது வாழ்க்கை அனுபவங்களை நாம் நம் வாழ்க்கைக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அனுபவம் என்பது ஓர் அருமையான பள்ளிக்கூடம்" என்று எம்.எஸ். உதயமூர்த்தி கூறுகிறார். பயண இலக்கியங்கள் வெறும் தகவல்களை மட்டும் வழக்காமல் பிற இடங்களும், பிற கலைகளும், மக்களின் பழக்கவழக்கங்களும் தம்முள்ளத்தை எப்படித் தொட்டன என்பதைக் கூறுகின்றன. வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் அங்குள்ள மக்களுடன் கலந்து உறவாடித் திரும்ப வேண்டும். "வெளிநாடுகளுக்குச் செல்லுகின்றவர்கள் அங்கு இருக்கும் தங்கள் நாட்டு மக்களோடு மட்டும் அறிவு கொண்டு விட்டுத் திரும்பினால் அவர்களின் உடல்கள் தாம் பயணம் செய்துவிட்டுத் திரும்பினால் அவர்களின் உடல்கள் தாம் பயணம் செய்துவிட்டு வந்தனவாகக் கருத முடியுமே ஒழிய அவர்கள் உள்ளங்களும் சென்று திரும்பின் எனக்கருதுதல் இயலாது" என்று அலைகடலுக்கு அப்பால்' என்னும் நூலில் அணிந்துரை கூறுகிறது.

பயண இலக்கியத்தின் பயன்கள்

"தாங்கள் மேற்கொண்ட பயணத்தில் கிளம்புதல் முதல் திரும்பி வருவது வரையில் தங்களின் அனுபவங்களைப் பிறர் உணர்ந்துகொள்ளும்படி எழுதுதல் பயண இலக்கியத்தின் முதன்மையான நோக்கமாகும்”. பயணம் மேற்கொண்டவரின் அனுபவங்கள் பிறருக்குப் பாடமாக அமைந்து அவர்களின் சிறந்த எண்ணங்களைப் புரிந்துகொண்டு உணர்ந்து மகிழ்ந்து படிப்போரும். அத்தகைய பயணங்களை மேற்கொள்ளத் தூண்டுதல் பயண இலக்கியத்தின் மற்றொரு நோக்கமாகும். பிறருக்குப் பயன்படும் வகையில் தன் பயண நினைவுகளைச் சொல்லுதல், எதிர் காலத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழிகாட்டியாக விளங்குதல், சமுதாயக் கல்விக்குத் துணைநிற்றல், மற்றவர்களின் வாழ்க்கை முறையை விளக்குதல், படிப்பவரின் பொது அறிவை வளர்த்தல், பிற நாடுகளின் பலவகை முன்னேற்றத்திற்குரிய அடிப்படைக் காரணிகளை விளக்குதல், பல்வகை எண்ணங்களுக்கு விளம்பரம் கொடுத்தல் போன்றவை பயன்களாகும்.

கருத்தலகுகள்

பயண இலக்கியங்களில் பயண இலக்கியக் கூறுகள், பயணக் கருத்துகள், பயண அறிவுரைகள், பயண அனுபவங்கள் போன்ற கூறுகளைக் காணமுடிகிறது. ஊர்களுக்குச் செல்லும் முறை, எவ்வாறு சென்றார்கள்? என்னவெல்லாம் கண்டு களித்தார்கள்? பயணம் செய்யும்பொழுது ஏற்பட்ட இடையூறுகள், அந்நாட்டு மக்களிடம் கண்ட புதுமைகள், அன்றாட வாழ்க்கை , பழக்கவழக்கங்கள், பழைய பயண அனுபவங்கள், நகைச் சுவையான பயண நிகழ்ச்சிகள், மக்களின் பண்பாடு, பண்பாட்டு மாற்றங்கள், போக்குவரத்துச் சாதனங்கள் பற்றிய கருத்துகள், இடங்களுக்குச் செல்லும் பாதைகள், பயணத் தொடர்பான அறிவுரைகள், பிற நாட்டு மக்களின் வளர்ச்சிக்கான அடிப்படைகள், புதிய அனுபவங்கள் பெறல், உடல் நலத்திற்கு உகந்தது போன்றவை பயண நூல்களில் இடம்பெற்றுள்ளன.

சான்றாக திரு.நெ.து. சுந்தர வடிவேலு அவர்களின் 'நான் கண்ட சோவியத்து ஒன்றியம்' என்னும் நூலில் கூறியுள்ள செய்திகளைக் காணலாம். "சோவியத் ஒன்றியம் இது பெரும் நாடு. சம தர்ம நாடு. பாட்டாளிகள் பொதுச் சொத்து : தொழிலாளர்களின் பொது உடைமை" என்று சோவியத் நாட்டின் தன்மையைக் கூறுகிறார். "எல்லோரும் வாழ்வோம், நன்றாக வாழ்வோம், ஒன்றாக வாழ்வோம் என்னும் நிலையை உருவாக்கியது சோவியத் ஒன்றியம். ஆமைகளாக இருந்த பாட்டாளிகளை ஆண்மையாளர்களாக நிமிர வைத்து, அவர்களுக்கு வேலையும், உணவும், உடையும், உறையுளும் தந்ததோடு பாட்டாளிகளையும் படிப்பாளிகளாகப் பெரும் பட்டதாரிகளாக ஆக்கி வாழும் நன்னாடு சோவியத் ஒன்றியம்" என்று மக்களின் வாழ்க்கையை விளக்குகிறார். "சோவியத் நாடு நமக்கு நட்பு நாடு. இந்தியாவின் வளத்திலும் வாழ்விலும் அக்கறையுடைய நாடு. நமக்கு இடுக்கண் நேரும்போதெல்லாம், நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் விரைந்து கைகொடுக்கும் நட்புறவு நாடு" என்று இந்திய நாட்டிற்கும் சோவியத் நாட்டிற்கும் உள்ள உறவை விளக்குகிறார். கல்வி நிலையங்கள், நூல் நிலையங்கள், கூட்டுப்பண்ணை , பாதாள இரயில்வே (மெட்ரோ) போன்ற இடங்களைக் கண்டதாகக் கூறுகிறார். "1961 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பதினைந்தாம் நாள் நான் (திரு.நெ.து. சுந்தர வடிவேலு) டாஸ்கண்ட் என்னும் நகருக்குப் போய்ச் சேர்ந்தேன். டாஸ்கண்டில் அதே பெயருடைய ஓட்டலில் தங்கியிருந்தேன்” என்று தான் போய்ச் சேர்ந்த நாளையும், தங்கிய இடத்தையும் குறிப்பிட்டுள்ளார். "விமானத்திற்குச் செல்லும்முன் சுங்கச் சோதனை நடந்தது. செல்கைச் சீட்டுச் சரியாக இருக்கிறதா? என்று தணிக்கை செய்யப் பெற்றது. இச்சோதனைக் கூடங்களைக் கடந்த பின் பயணிகள் தங்குமிடத்தில் காத்திருந்தோம்” என்று விமான நிலையச் சோதனையைப் பற்றிக் கூறுகிறார். "விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவுடன் பெல்டினால் கட்டினார்கள். பணிப்பெண்கள் நன்றாக உபசரித்தனர். உணவும் பானங்களும் அளித்தனர்” என்று விமானத்தில் சென்ற வகையைக் கூறுகிறார். "விமானத்தில் பயணிகள் வகுப்பு, முதல் வகுப்பு என்ற இருவகை வகுப்புகள் இருந்தன. பயணிகள் வகுப்பில் உட்காரும் நாற்காலியை ஓரளவு பின்னால் சாய்த்துக் கொண்டு பயணஞ் செய்ய வேண்டும். முதல் வகுப்பில் சாய்வு நாற்காலி போலப் பின்னால் சாய்ந்து கொள்வதோடு கால்களைக் கீழே தொங்கவிடாமல் உயர்த்தி நீட்டிக் கொள்ளவும் இடமுண்டு. முதல் வகுப்பிற்குக் கட்டணம் அதிகம்” என்று விமானத்தில் இருந்த இருவகை வகுப்புகளைப் பற்றிக் கூறியுள்ளார். பயண நூல்களில் ஒவ்வொருவரும் தாம் கண்டவற்றையும், தம் அனுபவத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.

அறிவுரைகள்

சில நூல்களில் பயணிகளுக்குத் தேவையான அறிவுரைகள் காணப்படுகின்றன.

வடநாட்டில் குளிர்காலத்தில் குளிர் அதிகம். எனவே மார்ச்சு அல்லது செப்டம்பர் மாதத்தில் அங்கு பயணம் செய்ய வேண்டும்.
நோயாளிகள் பயணம் மேற்கொள்ளக் கூடாது.
பயணம் செய்வோர் மிகமிகக் குறைந்த அளவுள்ள பொருள்களை எடுத்துச் செல்லவேண்டும்.
தன் உடலுக்குத் தேவையான மருந்துகளை உடன் எடுத்துச் செல்லவேண்டும். 5.நூறு ரூபாய் நோட்டுகளுடன் சில்லறையும் கொண்டு செய்வது நல்லது.
புனித இடங்களில் உள்ள பூசாரிகள் பயணிகளை ஏமாற்றுவார்.
திருடர்களிடமிருந்து பொருள்களைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
பயணத்தின் போது பழைய உணவுப் பண்டங்களையும், கெட்டுப்போன உணவுப் பண்டங்களையும் உண்ணக்கூடாது.
வடநாட்டுச் சிப்பந்திகள், வண்டிக்காரர்கள் போன்றோரிடம் நயமாகவும், மரியாதையாகவும் பேசவேண்டும்.
புதிய இடங்களில் வழிகாட்டியின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வடநாட்டில் வறட்சியுண்டு. அதற்காகத் தென்னாட்டவர்கள் பால், தயிர், தண்ணீர் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு புனித இடத்திற்கும் இறங்க வேண்டிய புகைவண்டி நிலையத்தைக் குறிப்பிட்டுள்ளனர். ஒரு கோயிலுக்கும் இன்னொரு கோயிலுக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.
நதிகள்

உற்பத்தியாகும் இடங்களையும், சுங்கவரி வசூலிக்கும் இடங்களையும் சுட்டியுள்ளனர். 14.ஒவ்வோர் இடத்திலும் தங்கும் இடங்கள், கிடைக்கும் உணவு வகைகள், குளிக்கும் இடங்கள், கிடைக்கும் வாகன வசதிகள், பயணத்தில் ஏற்படும் இடையூறுகள், தரகர் தரும் தொல்லைகள், குரங்குகள் தரும் தொல்லைகள், சென்றுவரக் கட்டணம் போன்றவற்றைத் தெளிவாக விளக்கியுள்ளனர். 15. பயணத்தை வெவ்வேறு இடங்களில் வைத்திருக்கவேண்டும். நம்மிடத்திலுள்ள பணமிவ்வளவு என்ற உண்மையை யாரிடமும் வெளியிக்கூடாது.

இலக்கிய வகைகள்
பயண இலக்கியங்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். டாக்டர் நவநீத கிருட்டிணனும் இப்பகுப்பை மேற்கொண்டுள்ளார்.

அரசியல் தொடர்பான பயணம்

திரு. சி. சுப்பிரமணியம் அரசியல் தொடர்பாக இங்கிலாந்து, சுவீடன் போன்ற நாடுகளுக்குச் சென்று, அந்த நாடுகளில் கண்டதை இந்தியாவில் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒப்பிட்டு விளக்கியுள்ளார். 'உலகம் சுற்றினேன்', 'நான் கண்ட நாடுகள்' என்னும் நூல்களை இயற்றியுள்ளார்.

கலை, பண்பாடு, மக்கள் இனித் தொடர்பான பயணம்

பிறநாட்டு மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை அறிய மேற்கொள்ளும் பயணம் அவ்வகைக்குள் அடங்கும் தாம் பெற்ற அனுபவத்தைப் பிறரும் வேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் அவ்வகை நூல்களை எழுதியுள்ளனர். திரு.ஏ.கே. செட்டியாரின் 'பிரயாணக் கட்டுரைகள்', டாக்டர் மு. வரதராசனாரின் 'யான் கண்ட இலங்கை' போன்றவற்றைச் சான்று கூறலாம்.

தெய்வத் தொடர்பான நூல்கள்

தெய்வத் தொடர்பான நூல்களில் முதலில் தோன்றியது திருமுருகாற்றுப் படையாகும். கோயில் குளங்களுக்குச் சென்று வந்தவர்கள் தாம் பெற்ற அனுபவத்தையும் அருள் செல்வத்தையும் மற்றவருக்கும் வெளிப்படுத்தும் பெருநோக்கோடு பல நூல்களை எழுதியுள்ளனர். சுவாமி ஆ.ஜோ. அடைக்கலம் எழுதிய 'பாலஸ்தீனப் பயணம்', திரு. அப்துற்றஹீம் கலைமான் இயற்றிய 'புனித ஹஜ் பயண நினைவுகள்', திரு. அவிநாசிலிங்கம் செட்டியாரின் 'திருக்கேதார யாத்திரை' போன்ற பெருந்தலைவர் யாரையேனும் காணும் நோக்கமுடைய பயணம்

பெருந்தலைவர்களையும், சமயச் சான்றோர்களையும், பண்பாளர்களையும் கண்டு வந்தமை பற்றி எழுதியுள்ளனர். பரணீதரனின் 'புனித பயணம்' அவ்வகைக்குள் அடங்கும் நூலாகும்.

கல்வி, தொழில் நுட்பம் தொடர்பான பயணம்

கல்வி, தொழில் நுட்பம் தொடர்பாகப் பயணம் மேற்கொண்டு பெற்ற அனுபவத்தை உரைக்கும் நூல்கள் அவ்வகைக்குள் அடங்கும் திரு. நெ.து. சுந்தர வடிவேலுவின் 'புதிய ஜெர்மனியில்' என்னும் நூலைச் சான்றாகக் கூறலாம்.

ஆற்றுப்படை நூல்கள்

ஆற்றுப்படை என்னும் சொல்லிற்கு 'வழிகாட்டி' என்பது பொருளாகும். முல்லைப்பாட்டில் வரும் 'ஆற்றுப்படுத்த' என்னும் சொல்லிற்கு 'வழியில் செலுத்துதல்' என்பது பொருளாகும். தான் கடந்து வந்த வழிப்பயண அனுபவத்தை உரைப்பது ஆற்றுப்படையாகும்.

"கூத்தராயினும் பாணராயினும் பொருநராயினும் விறலியராயினும் நெறியிடைக் காட்சிக் கண்ணே எதிர்த்தோர் உறழ்ச்சியால் தாம் பெற்ற பெருவளம் நுமக்கும் பெறலாகும் எனவும், சொன்ன பக்கமும்” என்று இளம்பூரணர் உரை எழுதியுள்ளார். “ஆடன் மாந்தரும், பாடற் பாணரும், கருவிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியும் என்னும் நாற்பாலாரும் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர் வந்த வறியோருக்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடு” என்று நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்.

ஓதல், தூது, பகை, பொருள் போன்ற பிரிவுகளைத் தொல்காப்பியம் இயம்புகிறது. சங்க இலக்கியங்களில் பொருள் வயிற் பயணமே மிகுதியாகக் காணப் பெறுகிறது. அன்றைய சமுதாயத்தில் பொருள் தேடுவது ஆடவனின் கடமையாகக்  கருதப்பெற்றது. பொருள் தேடுவதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆண்கள் பயணம் செய்தனர். 'முந்நீர் வழக்கம் மகடூ வோடில்லை' என்று தொல்காப்பியம் பகருகிறது. வினையே உயிராகக் கருதிய ஆடவர் திரைகடல் கடந்து பொருள் தேடச் செல்லும்பொழுது மகளிரை உடன் அழைத்துச் செல்லவில்லை. அதற்கு வழித்துன்பத்தைக் காரணமாகக் கூறலாம். அன்றைய நிலையில் கப்பலில் செல்லும்பொழுது பெண்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவது கடினமாக இருந்தது. கப்பல் கவிழும்பொழுது அவர்களைக் காப்பாற்றுவது சிரமமாக இருந்தது. பிற ஆடவரின் எதிரில் இருப்பதற்குப் பெண்கள் விரும்பவில்லை . வெளிநாடுகளில் பெண்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது சிரமமாக இருந்தது. நீண்ட தூரப் பயணத்தை ஏற்கும் நிலையில் பெண்களின் உடலமைப்பு அமையவில்லை எனலாம். உள்நாட்டுத் தரைப்பயணத்தில் இல்லறப் பெண்கள் இன்றியமையாத சில வேளைகளில் கணவனுடன் பயணம் மேற்கொண்டுள்ளனர். கோவலனும் கண்ணகியும் பூம்புகாரிலிருந்து மதுரைக்கு வந்துள்ளனர். கவுந்தியடிகள் போன்றோர் தம் சமயத்தைப் பரப்ப வெளியிடங்களுக்குச் சென்றுள்ளனர். ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் ஊர் சுற்றிவந்த பாணனுடன் பாடினியும் உடன் சென்றுள்ளான். இன்று பெண்கள் ஆடவருடன் சேர்ந்து உலகம் முழுவதும் சுற்றி வருகின்றனர். ஏன், சந்திர மண்டலத்திற்கும், வட துருவத்திற்கும் கூடச் சென்று வந்துள்ளனர்.

புறப்பொருள் வெண்பாமாலை
ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலை பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, புலவராற்றுப்படை என்னும் ஐந்தனுக்கும் விளக்கம் கொடுத்துள்ளது.

சேணோங்கிய வரையதரிற்பாண்மை ஆற்றுப்படுத்தன்று" என்பது கொளு. பரிசில் பெற்று வருகின்ற பாணன் மலையிடத்தே தன் எதிர்வரும் பாணனைப் பரிசில் பெறும் வழியிலே செலுத்தியது பாணாற்றுப்படை எனப்படும்.

‘ஏத்திச்சென்று இரவலன் கூத்தரை ஆற்றுப்படுத்தன்று” என்பது கொளு. ஒரு வல்ளல்பால் பரிசில் பெற்றுச் செல்வானொரு கூத்தன், தன்னெதிர் வந்த கூத்தரை அவ்வள்ளல்பால் செல்ல வழிப்படுத்துவது கூத்தராற்றுப்படை எனப்படும்.

"பெருநல்லான் உழையீரா கெனப் பொருளை ஆற்றுப்படுத்தன்று" என்பது கொளு. ஒரு பொருநன் மற்றொரு பொருநனை இன்ன வள்ளல்பால் செல்க என ஆற்றுப்படுத்துவது பொருநராற்றுப்படை என்னும் துறையாகும்.

"திறல் வேந்தன் புகழ்பாடு விறலியை ஆற்றுப்படுத்தன்று" விறலியாற்றுப்படையாகும்.

”இருங்கண் வானத் திமையோருழைப் பெரும்புலவனை ஆற்றுப்படுத்தன்று" என்பது கொளு. இறையருள் பெற்ற இறைவன்பால் செல்ல வழிப்படுத்து புலவர் ஆற்றுப்படை என்னும் துறையாகும். அக்கொளுக்களில் இருந்து

கலைஞர்கள் சென்ற வழியின் தன்மை,
ஆற்றுப்படுத்தும் தன்மை,
மன்னனின் புகழ்,
மன்னனின் கொடைச் சிறப்பு,
கொடைப் பொருள் போன்ற செய்திகளை அறிய முடிகிறது.
"வறுமையில் வாடும் புலவர், பாணர், பொருநர், விறலியர், கூத்தர் போன்றோர் வெயில் காலத்தில் கானகத்திடை செல்கின்றனர். அப்பொழுது பரிசில் பெற்று மீண்ட இரவலன் அவர்களைக் கானகத்திடை சந்தித்துப் புரவலனுடைய நாடு, கொடை, ஊர் முதலியவற்றைப் புகழ்ந்து, அக்கலைஞர்களையும் அவனிடத்தில் செல்லுமாறு வழி கூறி ஆற்றுப்படுத்துகிறான்.”

ஆசிரியப் பாவாற் புலவரையானும், பாணரையானும், பொருநரையானும் கூத்தரையானும் தம்முள் ஒருவன் ஆற்றுப்படுத்துவது; கூத்தர் முதலியவர்களுள் ஒருவன் கொடையாளியான ஒருவனிடத்துத் தாம் பெற்ற செல்வத்தை எதிர் வந்த இரப்போர்க்கு உணர்த்தி, அவரும் அந்தக் கொடையாளியினிடம் தாம் பெற்றுது போலவே பொருளைப் பெறுமாறு வழிப்படுத்துவது ஆற்றுப்படை எனப்படும்.

இசைக் கருவிகள்

ஆகுளி,
இசையோடு கூடிய மத்தளம்,
கடிகை,
குழல்,
கொம்பு,
சல்லி,
தூம்பு,
நெடுவங்கியம்,
பாண்டில்,
மாக்கிணை,
யாழ் என்னும்.
கருத்தலகுகள்

பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படைகளில் மொத்தம் 45 கருத்தலகுகள் காணப்படுகின்றன. டாக்டர் நவநீத கிருட்டிணன் அவர்கள் அவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

நவநீததல்,
ஆற்றெதிர்ப்படுதல்,
கேட்பாயாக,
யாழ் வருணனையும் பண்ணிசைக்கும் முறையும்,
இசைக் கருவிகள்,
பாடினி வருணனை,
வந்த வழியின் இயல்பு,
சுற்றத்தின் வறுமை,
உன்னைப் போலவே நானும் இருந்தேன்,
மன்னவனைக் காணும் முன்னும் கண்ட பின்னரும் இருந்த நிலை,
பெற்றவளம்,
ஆற்றுப்படுத்தல்,
மன்னர் ஊர் அருகிலுள்ளது,
முல்லை வழி,
முல்லை நில மக்களின் விருந்தோம்பல்,
மருத நில வருணனை,
உழவர் விருந்தோம்பல்,
நெய்தல் வழி,
நெய்தல் நில மக்களின் விருந்தோம்பல்,
பாலை வழி,
எயினர் விருந்தோம்பல்,
வழியில் தங்கிச் செல்லுங்கள்,
வழி எச்சரிக்கை முதலியன கூறி ஆற்றுப்படுத்துதல்,
தெய்வத்தை வணங்குங்கள்,
மன்னன் வாயிற் சிறப்பு,
நாளோலக்கம்,
தலைவன் தோற்றம்,
பிற மன்னர் கையுறை,
மன்னனைத் தொழவேண்டிய முறை,
மன்னன் உம்மை வரவேற்கும் முறை,
உடை நல்குவான்,
கள் தருவான்,
விருந்தோம்புவான்,
மன்னனின் பரிசில் நீட்டியாப் பண்புடைமை,
பெறும் பரிசில்,
மன்னனை நீவீர் வாழ்த்தவேண்டிய வகை,
மன்னன் பெருமை,
குடி நிலை,
மன்னன் பண்பு நலன்,
வீரம்,
கொடைச் சிறப்பு,
செங்கோல் சிறப்பு,
தலைநகர்ச் சிறப்பு,
மலைச் சிறப்பு,
நதி வருணனை.
பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள்
 

(புலவராற்றுப்படை), பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) என்னும் ஐந்தும் ஆற்றுப்படை நூல்களாகும்.

திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டிற்குக் கடவுள் வாழ்த்துப்போல் முதலில் அமைந்துள்ளது. அது 317 அடிகளை உடைய ஆசிரியப்பாவால் அமைந்த நூலாகும். அதனை இயற்றியவர் நக்கீரர் ஆவார். சைவர்கள் முருகன் திருவருளை வேண்டிய நாள்தோறும் பாராயணம் செய்யும் நூலாகும். அப்பாடல் அருளைப் பெற அவாவும் புலவன் ஒருவனை அப்பெருமான்பால் ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. அழியக்கூடிய பொருள்களைப் பரிசில்களாக வழங்கும் முடி மன்னர்கள், குறுநில மன்னர்களைப் பாடாது என்றும் அழியாப் பேரின்ப வீடுபேற்றைத் தரும் முருகளைப் பாடுவதாக அந்நூல் அமைந்துள்ளது.

பொருநராற்றுப்படை

இப்பாட்டு, பரிசில் பெற்ற பொருநன், பரிசில் பெறாத பொருநனைக் கரிகாற்சோழனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நூலைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் ஆவார். இந்நூல் 248 அடிகளை உடையது. இப்பாட்டில் வரும் பொருநன் போர்க்களம் பாடுபவன் ஆவான். அவன் கையில் தடாரி என்னும் பறை உள்ளது. வறிய பொருநனது யாழின் சிறப்பு, கரிகாலன் சிறப்பு, அவனுடன் சென்ற பாடினியின் வருணனை, கரிகாலன் ஆண்ட சோழநாட்டு வளம் முதலியன இதன்கண் பேசப்பட்டுள்ளன.

சிறுபாணாற்றுப்படை

இது சிறிய யாழ்ப்பாணன் ஒருவன் மற்றொரு யாழ்ப்பாணனை ஆற்றுப்படுத்துவதாக வருவதால் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது. அடி அளவு பற்றியும் சிறுபாணாற்றுப்படை என்பர். யாழ்வகை ஐந்தனுள் சிறிய யாழாகிய செங்கோட்டியாழை உடைய காரணத்தால் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயரைப் பெற்றது என்று கூறுவானரும் உளர். சிறிய யாழ் உடையவர் என்பதாலும், சில பண்களே அறிந்தவர் என்பதாலும் அவர்கள் சிறுபாணர்கள் என்று அழைக்கப் பெற்றனர். ஓய்மா நாட்டை ஆண்டு வந்த நல்லியக்கோடன் என்பவனிடம் பரிசில் பெற்று மீண்டு வந்த சிறுபாணன் ஒருவன், வறிய சிறுபாணனை வழியில் கண்டு, அவனை அவ்வள்ளல்பால் ஆற்றுப்படுத்துவதாகப் பாடப்பட்டுள்ளது. இந்நூலை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் பாடியுள்ளார். அது 269 அடிகளை உடையது.

பெரும்பாணாற்றுப்படை

பரிசில் பெற்ற பெரும்பாணன் ஒருவன், பரிசில் பெறாத மற்றொரு பாணனை வழிப்படுத்துவதாக வருவதால் அப்பெயர் பெற்றது. இப்பாட்டு பரிசில் பெற்ற பெரும்பாணன் ஒருவன் தன் வழியில் எதிர்பட்ட மற்றோர் இரவலனான பாணனைக் காஞ்சி மாநகரைக் கோநகராகக் கொண்டு செங்கோலாச்சிய இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தியதாக அமைந்துள்ளது. இதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடினார். இந்நூல் 500 அடிகளை உடையது. யாழின் வருணனை, இளந்திரையன் ஆட்சிச் சிறப்பு, உப்பு வணிகர் இயல்பு, நாட்டு வழிகளைக் காப்பவர் தன்மை, எயிற்றியர் செயல், கானவர் செயல், வீரக்குடி மக்கள் இயல்பு, முல்லை நில மக்களின் இயல்பு, உழவர் செயல்கள், பாலை நிலத்தார் இயல்புகள், அந்தணர் ஒழுக்கமுறை, காஞ்சி, மாமல்லையின் சிறப்பு, இளந்திரையனுடைய வீரம், கொடை முதலிய பண்புகள், பாணரும் விறலியரும் மன்னனிடம் சிறப்புப் பெறுதல் போன்றவை நூல் நுவலும் செய்திகளாகும்.

மலைபடுகடாம்

மலையை யானைகளாகவும், அதனிடத்து உண்டாகும் ஓசையை யானையிடத்துத் தோன்றும் முழக்கமாகவும் உருவகித்தால் இப்பாட்டு மலைபடுகடாம் என்னும் பெயர் பெற்றது.

என்னும் வரிகள் இப்பாட்டின் பெயர்க் காரணத்தைப் புலப்படுத்துகின்றன. இப்பாடல் பரிசில் பெற்ற கூந்தன் ஒருவன் பரிசில் பெறாத கூந்தன் ஒருவனைச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. இதைப் பாடியவர் பெருங்குன்றார் பெருங்கௌசிகனார் ஆவார். இந்நூல் 583 அடிகளை உடையது. மலைவளம், மலையடிவார ஊர்கள், அவர்கள் விருந்தோம்பும் முறை, நன்னனது கொடைத்திறன், சேயாற்றின் பெருமை போன்ற செய்திகள் காணப்படுகின்றன.

ஆற்றுப்படையும் பயண நூல்களும்

ஆற்றுப்படை நூல்களும், பயண நூல்களும் பழைய அநுபவத்தைக் கூறுகின்றன.

செல்லும் இடங்களுக்கு வழி கூறுதல் அவ்விரண்டு நூல்களில் காணப்பெறுகின்றன.

குழுவாகச் செல்லுதல் இரண்டிற்கும் பொதுவான செய்திகளாகும். சில சமயங்களில் பயண நூல்களில் பயணி தனியாகச் சென்ற அநுபவத்தையும் கூறுவதுண்டு.

இரண்டு நூல்களிலும் பெற்ற அநுபவங்கள் பேசப்படுகின்றன. ஆற்றுப்படை நூல்களில் பயணமும், அநுபவமும் பேசப்படுகின்றன. பயண நூல்களில் அநுபவச் செல்வம் பேசப்பெறுகின்றது.

"ஆற்றுப்படையில் எதிர்ப்படும் கலைஞர்களின் பெயர்கள் கட்டப்பெறுவதில்லை. பயண நூல்களில், காணப்பெறும் மக்கள் சமுதாயத்தை விளக்குவதுடன் குறிப்பிட்ட மனிதர்கள் அல்லது தலைவர்களின் பெயர்கள் சுட்டப்பெறும்.”

இரண்டு நூல்களிலும் கிடைக்கும் உணவு, தங்கும் இடங்கள் பேசப்பெறுகின்றன. உணவு விடுதி, சிற்றுண்டி வசதி போன்றவை இருபதாம் நூற்றாண்டில் காணப்பெறும் வசதிகளாகும்.

ஆற்றுப்படை நூல்களில் கலைஞர்கள் கால்நடையாகவே சென்றனர். செல்வம் படைத்தவர்கள் தேர், குதிரை, பாண்டில், யானை, சிவிகை, கோவேறு கழுதை போன்றவற்றைப் பயன்படுத்தினர். இருபதாம் நூற்றாண்டில் மோட்டார் கார், புகைவண்டி, வானூர்தி, கப்பல் போன்ற புதிய போக்குவரத்துச் சாதனங்கள் பயன்படுத்தப் பெறுகின்றன.

ஆற்றுப்படை நூல்களில் வறண்ட மலைப்பகுதிகள், பரற்கற்கள் நிரம்பிய பாலைவழிகள் காணப்பெறுகின்றன. பயண நூல்களில் வழித்துன்பங்கள் மிகுதியாகக் காணப் பெறவில்லை.

ஆற்றுப்படை நூல்கள் செய்யுள் வடிவில் காணப்பெறுகின்றன. பயண நூல்கள் உரை நடையில் அமைந்துள்ளன. இவ்வேறுபாடு கால வேறுபாட்டினால் ஏற்பட்டதாகும்.

ஆற்றுப்படை நூல்களில் பயணம் உள்நாட்டில் நடைபெறுகிறது. பயண நூல்களில் பயணம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெறுகிறது. இது போக்குவரத்துச் சாதனங்கள் பெருகியதால் ஏற்பட்ட மாற்றமாகும். டாக்டர் நவநீத கிருட்டிணனும் இக்கருத்துகளைக் கொண்டுள்ளார்.

ஆற்றுப்படையும் வழிநடைச் சிந்தும்

ஆற்றுப்படை ஒரு பயண நூலாகும். வழிநடைச் சிந்து பயணப் பாடலாகும். நடந்து பயணம் செல்பவர் களைப்புத் தோன்றாமல் இருப்பதற்காகப் பாடிச் செல்வது வழிநடைச் சிந்து ஆகும்.

காப்பியங்களில் ஆற்றுப்படை

காப்பியங்களில் வழிகளும் கூறுகளும், நாடு நகரங்களைக் கடந்து செல்லும் செயல்களும் காணப்பெறுகின்றன. கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகிய மூவரும் மதுரைக்குச் செல்லும் பொழுது மாங்காட்டு மறையோன் அவர்களுக்கு மதுரைக்குச் செல்லும் மூன்று வழிகளைக் கூறுவதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். சீவகசிந்தாமணியில் சீவகன் சுதஞ்சனிடம் நாடு காணும் ஆவலைக் கூறுகிறான். சில இடங்களில் வழிப்பயணம் பேசப்பெறுகிறது. பெருங்கதையில் உதயணன் வாசவ தத்தைக் கவர்ந்து சென்ற வழிப்பயணம் கூறப்பட்டுள்ளது. அந்நூலில் நாடு, நகர், நிலம் போன்றவற்றின் வருணனையைக் காணமுடிகிறது. கம்பராமாயணத்தில் தசரதனும், அவனுடைய தேவிமார்களும், படைகளும் மிதிலைக்குச் சென்ற முறை விளக்கப்பெற்றுள்ளது. இராமன் காட்டிற்குச் சென்ற வழியையும் கம்பர் கூறியுள்ளார். கிட்கிந்தா காண்டத்தில் சீதையைத் தேட வழிகூறும் பகுதி காணப்பெறுகிறது. பெரிய புராணத்தில் நாயன்மார் சென்ற வழித்தடங்களைச் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். அரிச்சந்திர புராணத்தில் சந்திரமதியின் சுயம்வரத்திற்கு அரிச்சந்திரன் செல்லும் பயணக் காட்சி, அவன் நாடுநகர் இழந்து காசி செல்லும் பயணம், அயோத்தி மீளும் பயணம் போன்ற பயணங்கள் காணப்பெறுகின்றன. இவ்வாறு காப்பியங்களில் ஆற்றுப்படை, வழிப்பயணம் போன்றவை காணப்பெறுகின்றன.

கையேடுகள்

சுற்றுலாச் செல்வோர் தாங்கள் செல்லும் நாடுகளிலே என்னென்ன இடங்களைப் பார்க்கலாம்? எங்கு தங்கலாம்? எவ்வகை உணவுகள் உண்பதற்குக் கிடைக்கும்? என்பன பற்றி விளக்கிக்கூறும் நூல்கள் கையேடுகள் எனப்பெறும். அக்கையேடுகள் 1.ஓரிடத்தைப் பற்றிய கையேடுகள், 2.பல இடங்களைப் பற்றிய கையேடுகள் என இரண்டு வகைப்படும். ஓரிடம் பற்றிய கையேட்டில் ஓரிடத்தின் தொடக்கம் முதல் இன்றுவரையுள்ள வளர்ச்சி பேசப்பெறும். 'மாமல்லை', 'மதுரை', 'பூம்புகார்', 'சென்னைப்பட்டினம்' போன்ற நூல்கள் அவ்வகைக்குள் அடங்கும்.

ஒரே கையேட்டில் பல இடங்களைப் பற்றிய புள்ளி விவரங்கள் காணப்பெறும். 'தமிழகச் சுற்றுலாக் கையேடு', 'இந்திய சுற்றுலாக் கையேடு' போன்ற நூல்களைச் சான்றாகக் கூறலாம். இந்நூல்கள் ஆங்கிலத்தில் மிகுதியாகக் காணப் பெறுகின்றன. ஆங்கில நூல்கள் வேற்று மொழியினருக்கு உறுதுணையாக இருக்கும். ஆங்கில நூல்களே மிகுதியாக விற்பனையாகின்றன.

கருத்தலகுகள்

பொதுவான முன்னுரை,
வரைபடம்,
தட்பவெப்பநிலை,
அந்த இடத்தைப் பற்றிய அறிமுகம்,
மாநில, மையச் சுற்றுலாச் செய்தித் தொடர்பு நிலையங்கள்,
பாதுகாக்கப் பெற்ற அல்லது தடை செய்யப்பெற்ற இடங்கள்,
வாகன வசதி,
வெளிநாட்டுக் கார் கிடைக்கும் இடங்கள்,
காரின் உதிரிப்பாகங்கள் கிடைக்கும் இடங்கள்,
கார் பழுது பார்க்கும் இடங்கள்,
சுற்றுலா நடத்துநர்களின் முகவரி,
பயண முகவர்களின் முகவரி,
வாங்கக் கூடாத பழம் பொருள்கள்,
கடைவீதி,
மதுவிலக்கு,
மதுபானக்கடைகள்,
விழாக்கள்,
பார்க்க வேண்டிய சுற்றுலா மையங்கள்,
அவற்றின்
வரலாறு,
தூரம்,
அங்குள்ள  உணவகங்கள்,
மருத்துவ மனைகள்,
மருத்துவர்கள்,
மருந்துக்கடைகள்,
வங்கிகள்,
வழிகாட்டிகள்,
அங்குள்ள கலைகள்,
கைவினைத் தொழில்கள்,
கைவினைப் பொருள்கள்,
கல்வி நிலையங்கள்,
பண்பாட்டு நிலையங்கள்,
திரைப்பட கொட்டகைகள்,
விடுதிகள்,
உணவகங்கள்,
புத்தகக் கடைகள்,
நூல் நிலையங்கள்,
பொழுதுபோக்குக் கூறுகள் போன்ற செய்திகள் கையேடுகளில் இடம் பெற்றுள்ளன.
பயண நூல்களும் கையேடுகளும் விளம்பரங்களாகப் பயன்படுகின்றன; மக்களைப் பயணம் செய்யத் தூண்டுகின்றன; பயணம் செய்பவர்களுக்குத் துணை புரிகின்றன; பயணிகளுக்குத் தெரியாத செய்திகளைத் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : இந்தியா சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

புதிய பெயர்களை கொண்ட தமிழ்நாடு வரைபடம்

புதிய பெயர்களை கொண்ட தமிழ்நாடு வரைபடம்.

ஓர் ஆண்டின் மிக நீண்ட நாள்.. தெரிந்து கொள்வோம்..!!

 

ஓர் ஆண்டின் மிக நீண்ட நாள்.. தெரிந்து கொள்வோம்..!!

தெரிந்து கொள்வோம்..!!
💢 மகாராஷ்டிராவின் தலைநகரம் மும்பை ஆகும்.

💢 மும்பை என்ற பெயர் மும்பா தேவி என்ற தெய்வத்தின் பெயரில் இருந்து உருவானது.

💢 1959ல், இந்தியாவில் முதன்முதலாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

💢 1960ல் மும்பை, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.

💢 டிசம்பர் 10ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

💢 இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளர் சுகுமார் சென் ஆவார்.

💢 உலகிலேயே மிகப்பழமையான உயிரியல் பூங்கா வியன்னாவில் உள்ள டைர்கார்டன் ஸ்கான்ப்ருன் (வுநைசபயசவநn ளுஉhழnடிசரnn) பூங்காவாகும்.

💢 உலகின் மிகப்பெரிய நூலகம் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ், வாஷிங்டன் டி.சி. ஆகும்.


💢 ஓர் ஆண்டின் மிக நீண்ட நாள் ஜூன் 21 ஆகும்.

💢 இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் ஓஸ்போர்ன் ஸ்மித் ஆவார்.

💢 பிஹு, அஸ்ஸாமின் நாட்டுப்புற நடனம் ஆகும்.

💢 நேரு கோப்பை ஹாக்கியுடன் தொடர்புடையது ஆகும்.

💢 இந்தியாவின் முதல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன் அஜித் வாடேகர் ஆவார்.

💢 இந்தியாவின் ஒரே கண்ணாடி மசூதி ஷில்லாங், மேகாலயாவில் அமைந்துள்ளது.

💢 அசாமில் அமைந்துள்ள கோரக்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் மிக நீண்ட ரயில் நிலையம் ஆகும்.

💢 வெளிநாட்டு கிளை திறந்த முதல் இந்திய வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகும்.

💢 இந்தியாவின் முதல் வண்ண திரைப்படமான 'கிசான் கன்யா" 1937ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

💢 சர் எட்வின் லான்ட்சிர் லுடியன்ஸ் என்பவரால் ராஷ்டிரபதி பவன் வடிவமைக்கப்பட்டது.

💢 இந்தியாவில் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு ஆவார்.

 

6th to 12 Text Books Download

6th to 12 Text Books Download

https://www.winmeen.com/new-samacheer-kalvi-books-pdf-download-online/

ஞாயிறு, 14 ஜூன், 2020

#காற்று #wind


#காற்று #wind

காற்று (wind) என்பது வளிமங்கள் பெருமளவில் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிக்கும். புவியைப் பொறுத்தவரை, வளிமண்டலத்தில் வளிமம் பெருமளவில் நகரும்போது காற்று எனப்படுகிறது. விண்வெளியில் சூரியனில் இருந்து வளிமங்கள் அல்லது மின்னேற்றம் அடைந்த துகள்கள் வெளியேறி வெளிக்குள் செல்வது சூரியக் காற்று (solar wind) எனவும், கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம் கோட்காற்று (planetary wind) எனவும் அழைக்கப்படுகின்றன.

பெயர்கள்

தமிழில் பொது வழக்கில் வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துவது உண்டு. எனினும் அறிவியலில் இவை வேறுவேறான பொருள் கொள்ளப்படுகின்றன.

தட்பவெப்பவியலில், காற்றுக்களை அவற்றின் வலு, எத்திசையில் இருந்து வீசுகிறது ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடுவது வழக்கம். குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று வன்காற்று (gust) எனப்படும். ஏறத்தாழ ஒரு நிமிட நேரம் போன்ற இடைத்தரக் கால அளவுக்கு வீசும் பலமான காற்று பாய்புயல் (squall) எனப்படுகின்றது. நீண்ட நேரத்துக்கு வீசும் பலமான காற்று பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. புயல், சூறாவளி போன்ற பெயர்கள் இவ்வாறான காற்றுக்களுக்கு வழங்கும் பெயர்கள் ஆகும்.

தமிழிலும் பண்டைக் காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுகளுக்குத் தனித்தனியான பெயர்கள் இட்டு அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

வாடை - வடக்கில் இருந்து வீசும் காற்று
சோழகம் - தெற்கில் இருந்து வீசும் காற்று
கொண்டல் - கிழக்கில் இருந்து வீசும் காற்று
கச்சான் (காற்று) - மேற்கில் இருந்து வீசும் காற்று
இந்த அடிப்படையில் தென்மேற்கில் இருந்து வீசும் காற்று சோழகக் கச்சான் என்றும், தென்கிழக்கில் இருந்து வீசும் காற்று சோழகக் கொண்டல் என்றும் பெயர் பெறுகின்றன. தெற்கில் இருந்து வீசும் மென்மையான காற்றைத் தென்றல் என்பர்.

காற்று உருவாதல் தொகு
காற்றுக்கள் பல்வேறு வகையாகப் பல்வேறு மட்டங்களில் உருவாகின்றன. நிலப்பகுதிகள் வேறுபட்ட அளவுகளில் சூடாவதன் காரணமாக சிறிய நிலப்படுதிகளில் வீசும் காற்று உருவாகின்றது. கடல், நிலம் என்பவற்றின் வேறுபாடான சூடாகும் தன்மை காரணமாகவும் கடலிலிருந்தும், நிலப் பகுதியிலிருந்தும் மாறிமாறிக் காற்று வீசுவதைக் காண முடியும். இத்தகைய காற்றுக்கள் சில மணி நேரங்களுக்கு வீசுகின்றன. புவியின் வேறுபட்ட தட்பவெப்ப வலயங்கள் வேறுபட்ட அளவில் சூரிய ஆற்றலை உறிஞ்சுவதன் காரணமாக உலகு தழுவிய அளவில் காற்றோட்டங்கள் ஏற்படுகின்றன. பெரிய அளவில் காற்றோட்டம் ஏற்படுவதற்கான காரணங்கள் இரண்டு. நிலநடுக்கோட்டுப் பகுதிகளும், துருவப் பகுதிகளும் சூரியனால் வேறுபாடான அளவில் சூடாக்கப்படுவது ஒரு காரணம். புவி சுழல்வதன் காரணமாக ஏற்படும் காற்றோட்டம் இன்னொன்று. இது கொரியோலியசின் விளைவினால் (Coriolis effect) ஏற்படுகின்றது. வெப்பவலயப் பகுதிகளில், தாழ் வெப்பம் (thermal low) காரணமாக சமநிலங்களும், மேட்டுநிலப் பகுதிகளும் பருவப்பெயர்ச்சிக் காற்றோட்டங்களை ஏற்படுத்தலாம். கடற்கரையோரப் பகுதிகளில் கடற்காற்று நிலக்காற்றுச் சுழற்சிகள் குறித்த பகுதிகளின் காற்றோட்ட நிலைமைகளுக்குக் காரணமாகின்றன. வெவ்வேறு விதமான தரையமைப்புக்களைக் கொண்ட பகுதிகளில் மலைக் காற்று, பள்ளத்தாக்குக் காற்று என்பன அப்பகுதிகளின் காற்றோட்டங்களைத் தீர்மானிக்கின்றன.

காற்று வேகமும் திசையும் தொகு
காற்று வீசும் வேகமும் அதன் திசையும் வானிலை எதிர்வுகூறல்களைப் பெறுவதில் முக்கியமுடையதாகும்.


காற்றுத் திசை

ஒருகாற்றுத் திசை காட்டி
காற்றுத் திசை எனப்படுவது அது எங்கிருந்து உருவாகுகின்றது என்பதாகும். எடுத்துக்காட்டாக வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக்காற்று வடகிழக்கிலிருந்து தென்மேற்காக வீசுகின்றது.[1] காற்றின் திசை காற்றுத்திசைகாட்டி மூலம் அறியப்படும். காற்று வீசும் திசையை அய்யிய காற்றுத் திசை காட்டிகள் பயன்படுகின்றன.[2]

காற்று வேகம் தொகு

கிண்ண அமைப்புக் கொண்ட காற்றுவேகமானி
காற்றின் வேகத்தை அளவிட காற்றுவேகமானிகள் பயன்படுகின்றன.சுழலும் கிண்ண அமைப்புக் கொண்ட காற்றுவேகமானிகளே பொதுவாகப் பயன்படுகின்றன. ஆய்வு நோக்கிலான பயன்பாடுகள் முதலான மிகத்துல்லியமான ஆயிடைகளில் அளவீடுகள் தேவைப்படுமிடத்து மீயொலி சமிக்கைகளை உருவாக்கும் வேகம் அல்லது வெப்பமாக்கப்பட்ட கம்பியின் தடையம் மீதான வளியோட்டத் தாக்கம் மூலம் காற்றுவேகம் கணிக்கப்படும்.[3]



காற்றின் பயன்கள் தொகு
காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்படுகிறது . காற்றாலைகள்  தமிழ்நாட்டில்  ஆரல்வாய்மொழி ,பல்லடம் , உடுமலை பேட்டை , கயத்தாறு போன்ற இடங்களில் உள்ளன . காற்றாலை மூலம்  மின் உற்பத்தி செய்வதில்  இந்தியாவில்  முதலிடம் வகிப்பது தமிழ் நாடு . அதுமட்டுமல்லாமல்  தமிழ்நாட்டில்  வடகிழக்கு,  தென்கிழக்கு  பருவ காற்றின்  மூலம்  மழை  பெறுகிறது
பயன்களும், தீய விளைவுகளும் தொகு

ஐ,என்.எசு. தரங்கினி, இந்தியக் கடற்படையின் காற்று வலுவால் இயங்கும் பாய்க்கப்பல் ஒன்று.
மனித நாகரிக வரலாற்றில், காற்று பல தொன்மங்கள் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. பல வரலாற்று நிகழ்வுகளின்மீதும், போக்குவரத்து, போர்முறைகள் என்பவற்றின் மீதும் காற்றின் செல்வாக்கைக் காண முடியும். இயந்திரங்களை இயக்கவும், காற்றுச் சுழலி மின்னுற்பத்திக்கும், ஆற்றல் மூலமாக விளங்கியுள்ளதுடன், பலவகையான பொழுதுபோக்குகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. ஒரு காலத்தில் உலகின் கடல்கடந்த பயணங்களுக்குக் காற்றின் வலுவினால் இயங்கிய கப்பல்களே பயன்பட்டன. குறும் பயணங்களுக்குப் பயன்படும் வெப்பவளி பலூன்கள் காற்றின் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. அதே வேளை காற்று கடுமையாக வீசும்போது மரங்கள் முதலிய இயற்கை அம்சங்களுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் முதலிய அமைப்புக்களுக்கும் கடும் சேதங்களை உண்டாக்குகின்றது. காற்றினால் ஏற்படும் சீரற்ற காலநிலை வானூர்திகளின் பறப்புக்கும் ஆபத்தான நிலைமைகளை உருவாக்குகின்றது.

காற்றுத்தாக்க வழிமுறைகள் மூலம் நில அமைப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வளமான மண் உருவாதலும் இவற்றில் ஒன்று. காற்று பெரிய பாலைவனப் பகுதிகளில் இருந்து தூசித் துகள்களை அது இருக்கும் இடத்திலிருந்து நீண்ட தொலைவு எடுத்துச் செல்கிறது. காற்றினால் காட்டுத்தீ விரைவாகப் பரவும் நிலையும் ஏற்படுகிறது. பல்வேறு தாவர வகைகளின் வித்துக்களை தொலை தூரங்களுக்கு எடுத்துச் சென்று பரப்புவதன் மூலம் அவ்வாறான தாவரங்கள் பெருகி வளர்வதற்கும் காற்றுத் துணை புரிகிறது. குளிரான வெப்பநிலைகள் இருக்கும்போது காற்று கால்நடைகள் மீது எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்குகின்றது. விலங்குகளின் உணவு சேமிப்பு, அவற்றின் வேட்டையாடல் முறை, தற்காத்துக்கொள்ளும் முறை என்பவற்றின் மீதும் காற்று தாக்கங்களை உண்டாக்குகிறது.

காற்று வேகங்களின்அடிப்படையில் வகைப்படுத்தல் தொகு
காற்று வீசுகின்ற வேகத்தின் அடிப்படையில் அதன் அளவு மற்றும் வேகம் கணக்கிடப்பட்டு வகைப்படுத்தப்படுகிறது காற்று வேகம் (km / hr)

கடல் மீது காற்று விளைவு

      0 <1  கி.மீ அமைதியாக ஒளி காற்று சிறிய அலை அலகுகள்
1 1-5 கி.மீ ஒளி காற்று ஒளி காற்று சிறிய அலை அலகுகள்

2 6-11 கி.மீ லைட் ப்ரீஸ் லைட் காற்று சிறிய அலைவரிசைகள்

3 12-19 கி.மீ ஜென்ட் ப்ரீஸ் ஜென்ட்-மிதமான பெரிய அலைகளுக்கு சிறிய அலைகளுக்கு

4 20-28 கி.மீ மிதமான காற்று சிறிய அலைகளுக்கு மென்மையான-மிதமான பெரிய அலைகளால்

5 29-38 கி.மீ புதிய காற்று புதிய காற்று மிதமான அலைகள், பல whitecaps

6 39-49 கி.மீ வலுவான வாயு வலுவான காற்று பெரிய அலைகள், பல வெள்ளைப் பட்டைகள்

7 50-61 கி.மீ புதிய காற்று வலுவான காற்று பெரிய அலைகள், பல வெள்ளைப் பட்டைகள்

8 62-74 கி.மீ புதிய கேல் கேல் ஹை அலைகள், நுரை கோடுகள்

9 75-88 கி.மீ ஸ்டோன் கேல் கேல் ஹை அலைகள், நுரை கோடுகள்

10 89-102 கி.மீ முழு பாதகம் முழு அலை மிகவும் அலைகள், உருட்டல் கடல்

11 103-117 கி.மீ புயல் முழு நீளமும் மிக அதிக அலைகள், உருட்டல் கடல்

12- 17> 117 கி.மீ புயல் மற்றும் நுரை கொண்ட சூறாவளி சூறாவளி கடல்

மேம்படுத்தப்பட்ட புஜித்தா ஒப்பளவு தொகு
கூறளவுகள் தொகு
கீழ்வரும் ஆறு வகைகளில், சேதங்கள் உயரும் வரிசையில், ஈஎப் ஒப்பளவு பட்டியலிடப்பட்டுள்ளது. காற்றின் வேகமும் சேதங்களின் ஒளிப்பட காட்டுகளும் இற்றைப்படுத்தப்பட்டபோதும் சேத விவரங்கள் புஜித்தா ஒப்பளவை ஒட்டியே கொடுக்கப்பட்டுள்ளன. உண்மையான ஈஎப் ஒப்பளவு மதிபீட்டில் சேதக் குறியீடுகள் (எந்த வகையான கட்டமைப்பு சேதப்படுத்தப்பட்டுள்ளது) முக்கிய பங்காற்றுகின்றன என்பது விளக்கப்பட்டுள்ளது..

உலக காற்று தினம் ஜூன் 15:



உலக காற்று தினம் ஜூன் 15: 

#காற்று
 
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையே இந்தப் புவி என்றனர் நம் முன்னோர்கள்.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையே இந்தப் புவி என்றனர் நம் முன்னோர்கள்.

இந்தப் பூமியை வளிக்கோளம், நீர்க்கோளம், நிலக்கோளம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

‘வளிக்கோளம்’ என்பது வாயு நிலையில் உள்ள பொருள். ‘நீர்க்கோளம்’ என்பது திரவப்பொருள். ‘நிலக்கோளம்’ என்பது திடப்பொருள்.

பொருள்கள் எல்லாவற்றிற்கும் மூன்று நிலைகள் உள்ளன என்பதை நாள்தோறும் நமக்கு உணர்த்தும் உருமாதிரிகள் இந்த மூன்று பிரிவுகள் என்றும் சொல்லலாம்.

காற்றில் ஒரு சில வாயுக்களின் செறிவு நிலை மாறாமல் இருக்கும். உலகமெங்கும் இவைகளின் அளவு ஒரே விதத்தில் இருக்கும்.

வளிக்கோளத்தில் அடங்கியுள்ள காற்றுகள் நைட்ரஜன், ஆக்சிஜன், ஆர்கான், கரியமில வாயு, நியான், ஹீலியம், கிரிப்டான், செனான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் முதலியன.

இவற்றில் நைட்ரஜன் கன அளவில் 78 சதவீதம்; ஆக்சிஜன் 21 சதவீதம். மற்ற காற்றுகள் எல்லாம் சேர்ந்து ஒரு சதவீதம் மட்டுமே உள்ளன.

காற்று மண்டலத்தில் அடங்கியுள்ள முக்கியமான காற்று, நைட்ரஜன். இது எந்தவித வினைச்செயல்களிலும் ஈடுபடாமல் தனித்து இயங்கக்கூடியது. இதற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. ஆக்சிஜன் எளிதில் தீப்பற்றக் கூடியது. வெடிக்கக் கூடியது. காற்றில் நைட்ரஜன் இல்லாவிட்டால் என்ன ஆகும்? அடுப்புப் பற்ற வைக்க ஒரு தீக்குச்சியைக் கிழித்தாலே ஆக்சிஜன் பற்றி எரியத் தொடங்கும். மிகவும் கடுமையாக வெடித்து பலத்த சேதங்களை ஏற்படுத்தி விடும். ஆக்சிஜனின் அத்தகைய தன்மையை அடக்கி ஒடுக்கி ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நைட்ரஜன் தான்.

காற்றுகளின் சேர்க்கைதான் வளிக்கோளம். பூமியில் காற்று (வாயு) மண்டலம் எப்படி உண்டானது? பூமி தோன்றிய தொடக்கத்தில் இது ஒரு நெருப்புக் கோளமாய் இருந்தது. பின்னர் சிறிது சிறிதாகக் குளிர்வடையத் தொடங்கியது. மேற்பகுதி குளிர்ந்து திடத்தன்மை பெற்ற போதிலும் உட்புறம் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. அப்போது பூமியின் உட்பகுதியில் இருந்து நெருப்பைக் கக்கியவாறு எரிமலைகள் தோன்றி வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன. இவற்றில் இருந்து ஏராளமான வாயுக்களும் வெளியேறின. இது பல கோடிக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்ததால் இந்த வாயுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பூமியைச் சூழ்ந்தவாறு வாயு மண்டலத்தை உருவாக்கின.

வளி, காற்று என்னும் இரண்டு வார்த்தைகளையும் தமிழில் பொது வழக்கில் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம். இருந்தபோதிலும் அறிவியலில் இவை வெவ்வேறான பொருள் கொள்ளப்படுகின்றன.

‘வளி’ என்றால் ‘நிலைத்து நிற்கும் காற்று’. வளி அசையும்போது அது ‘காற்று’ என்றாகி விடுகிறது.

வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்குத் தனித் தனியான பெயர்களைச் சூட்டி அழைக்கும் வழக்கம் பண்டைக் காலத்தில் இருந்தே இருந்துள்ளது.

வடக்கில் இருந்து வீசும் காற்று, வாடை; தெற்கில் இருந்து வீசும் காற்று, தென்றல்;

கிழக்கில் இருந்து வீசும் காற்று, கொண்டல்; மேற்கில் இருந்து வீசும் காற்று, கோடை.

காற்று இல்லாத இடமே இல்லை. அது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

காற்றை நம்மால் உணர முடிகிறதே தவிர பார்க்க முடியாது. காற்றுக்கு எடையும் உண்டு. காற்றில் எப்போதும் ஈரம் உண்டு. இதற்குக் காரணம் அதில் உள்ள நீராவிதான்.

நாம் உயிர் வாழ ஆக்சிஜன் ஆதாரமாக உள்ளது. மனிதன், விலங்குகள் சுவாசிப்பது ஆக்சிஜனைத்தான். ஆக்சிஜன் இல்லாவிட்டால் உயிரினங்கள் இருக்காது. மனிதர்கள் ஆக்சிஜனை சுவாசித்து கரியமில வாயுவை வெளியிடுகிறார்கள். இதைத் தாவரங்கள் சுவாசித்து, அதற்குப் பதிலாக ஆக்சிஜனை வெளியிட்டு காற்று மண்டலத்தில் கலக்கச் செய்கின்றன.

மனிதன் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் காற்றைச் சுவாசிக்கிறான். சராசரியாக 2.5 லிட்டர் நீரைப் பருகுகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் நாள்தோறும் 1.5 கிலோ உணவு தேவை.

உணவின்றி 5 வாரம் உயிர் வாழ முடியும். நீரில்லாமல் 5 நாள் உயிர் வாழலாம். ஆனால் காற்று இல்லாமல் 5 நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது.

காற்று- இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ள துணை புரியும் அற்புத சான்றாகும்.

“நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும்-பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்தபின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் ஒவ்வொரு விதமான உயிரினத்தையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும்-விளங்கும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன” (திருக்குர்ஆன் 2:164) என்றும்,

“இரவு-பகல் மாறி மாறி வருவதிலும், வானத்தில் இருந்தும் அருள் மழையை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன” (45:5) என்றும் இறைவன் கூறுகின்றான்.

எந்தக் காற்றினால் இந்த உலகம் உயிர் வாழ்கிறதோ அதே காற்றினால் உலகத்திற்கு பேரழிவும் ஏற்படுவதுண்டு. புயல், சூறாவளி போன்றவற்றைக் காணும்போது இறைவனின் ஆற்றலை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

தமிழில் உள்ள ஊர் பெயர்களை அப்புடியே ஆங்கிலத்தில் மாத்துறாங்களாம்.


தமிழில் உள்ள ஊர் பெயர்களை
அப்புடியே ஆங்கிலத்தில் மாத்துறாங்களாம்.

யய்யா எடப்பாடி
பல ஊர் பேர் தமிழே கிடையாதுன்னு தெரியுமா?

எடப்பாடி அல்ல
இடையர்பாடி

மதுரை அல்ல
மருதத்துறை.

மானாமதுரை அல்ல
வானவன் மருதத்துறை

காளையார் கோவில் அல்ல
கானப்பேரெயில்

சிவகங்கை அல்ல
செவ்வேங்கை

திருவாரூர் அல்ல
ஆரூர்

பொள்ளாச்சி அல்ல
பொழில் ஆட்சி

சிதம்பரம் அல்ல
திண்டிவனம் போல்
அது தில்லைவனம்

கான்சாபுரம் அல்ல
கான்சாகிபு புரம்
(மருதநாயகம் நினைவாக வைத்த பெயர்)

வத்ராயிருப்பு அல்ல.
வற்றாத ஆறு இருப்பு.

தனுஸ்கோடி அல்ல
வில்முனை

இராமேஸ்வரம் அல்ல
சேதுக்கரை

இராமநாதபுரம் அல்ல
முகவை

காஞ்சிபுரம் அல்ல
கஞ்சிவரம்

செங்கல்பட்டு அல்ல
செங்கழுநீர்பட்டு

சேர்மாதேவி அல்ல
சேரன்மகாதேவி

விருத்தாசலம் அல்ல
முதுகுன்றம்

வேளாங்கண்ணி அல்ல
வேலற்கன்னி

சைதாப்பேட்டை அல்ல
சையது பேட்டை

தேனாம்பேட்டை அல்ல
தெய்வநாயகம் பேட்டை

கொசப்பேட்டை அல்ல
குயவர்பேட்டை

குரோம் என்ற லெதர் கம்பெனியை காயிதே மில்லத் உருவாக்கியதால் குரோம்பேட்டை
ஆனால் அது தோல் பேட்டை தான்.

புரசைவாக்கம் அல்ல
புரசைப்பாக்கம்

பெரம்பூர் அல்ல
பிரம்பூர்

சேத்துப்பட்டு அல்ல
சேற்றுப்பேடு

அரும்பாக்கம் அல்ல
அருகன்பாக்கம்

சிந்தாதரிப்பேட்டை அல்ல
சின்னத்தறிப்பேட்டை

உடுமலைபேட்டை அல்ல
ஊடுமலைப்பேட்டை

பல்லாவரம் அல்ல
பல்லவபுரம்

தாராசுரம் அல்ல
ராராசுரம்

ஈரோடு அல்ல
ஈர ஓடு

ஒகனேக்கல் அல்ல
புகைக்கல்

தர்மபுரி அல்ல
தகடூர்

பழனி அல்ல
பொதினி

கும்பகோணம் அல்ல
குடந்தை

தரங்கம்பாடி அல்ல
அலைகள்பாடி

காவிரிபூம்பட்டினம் அல்ல
காவிரிபுகும்பட்டினம்

பூம்புகார் அல்ல
புகும்புகார்

ஸ்ரீரங்கம் அல்ல
அரங்கம்

திருவையாறு அல்ல
ஐயாறு

சீர்காழி அல்ல
சீகாழி

வேதாரண்யம் அல்ல
திருமறைக்காடு

கல்பாக்கம் அல்ல
கயல்பாக்கம்

சேலம் அல்ல
சேரளம்

திருத்தணி அல்ல
திருத்தணிகை

கீழ-மேல என்பதெல்லாம் அல்ல.
கிழக்கு-மேற்கு தான்.
இது தாழ்வு-உயர்வு என்ற பொருளில் கலவரமே நடக்குது.

திருவண்ணாமலை அல்ல
அண்ணாந்துமலை.

அ என்ற எழுத்துக்குப் பதிலாக
வ என்ற எழுத்து சேர்த்துள்ள ஊரெல்லாம் மாற்றப்பட வேண்டும்.

இன்னும் ஏராளமாய் இருக்கு.
தமிழகத்தில் உள்ள ஊர்கள்
தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.
பிறமொழிச் சொற்களை நீக்க வேண்டும்.

கொரோனா விவகாரத்தை திசை திருப்ப இந்தச் சோலி பார்த்துள்ளதாக சொல்கிறார்கள்.
கண்ணாடியைத் திருப்புனா
ஆட்டோ ஓடுமா யுவர் ஆனர்.

இதுல இன்னொரு கூத்து நடக்கும்
இதே பதிவு இன்னும் கொஞ்ச நேரத்துல
உங்களுக்குத் தெரியுமான்னு
எனக்கே வாட்சப்புல வரும்.
அத நெனச்சாத்தான் 
மனசைப் போட்டு பிராண்டுது.

வியாழன், 11 ஜூன், 2020

முக்கிய வினாக்களும் பதில்களும்


 முக்கிய வினாக்களும் பதில்களும்
சமூக அறிவியல் 

1. இந்தியாவின் மிக உயரமான சிகரம் எது?
- காட்வின் ஆஸ்டின்

2. தென்னிந்தியாவில் உயரமான சிகரம் எது?
- ஆனைமுடி

3. தமிழகத்தில் உயரமான சிகரம் எது?
- தொட்டபெட்டா

4. உலகின் உயரமான சிகரம் எது?
- எவரெஸ்ட்

5. உலகின் மிக ஆழமான அகழி எது?
- மரியானா அகழி

6. உலகின் மிக நீளமான மலை தொடர் எது?
- ஆன்டீஸ்

7. உலகின் மிக அகலமான நதி எது?
- அமேசான்

8. உலகின் மிக பெரிய கண்டம் எது?
- ஆசியா

9. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?
- கங்கை

10. இந்தியாவின் மிக பெரிய ஏரி எது?
- சிலிகா

11. புத்தர் பிறந்த ஊர் எது?
- லும்பினிவனம் (நேபாளம்)

12. புத்தரின் இயற்பெயர் என்ன?
- சித்தார்த்தர்

13. புத்தரின் தந்தை பெயர் என்ன?
- சுத்தோத்தனார்

14. புத்தரின் தயார் பெயர் என்ன?
- மாயாதேவி

15. புத்தரின் வளர்ப்பு அன்னை பெயர் என்ன?
- மகா பிரஜாபதி கௌதமி

16. புத்தரின் மனைவி பெயர் என்ன?
- யசோதா

17. புத்தரின் மகன் பெயர் என்ன?
- ராகுலன்

18. புத்தரின் மூன்று போதனைகள்  எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
- திரிபீடகங்கள்

19. புத்தர் துறவறம் பூண்ட வயது என்னை?
- 29 வயது

20. புத்தர் இறந்த இடம்?
- குஷிநகர்

அறிவியல் 

 1. பாலை பதப்படுத்தும் முறைய கண்டறிந்தவர் யார்?
- லூயி பாஸ்டர்

2. பாலை பதப்படுத்தும் முறைக்கு என்ன பெயர்?
- பாஸ்டரைஷேஷன்

3. பாலை தயிராக்கும் பாக்டீரியா பெயர் என்ன?
- லெப்டோஸ்பிரோசிஸ்

4. பாலின் தரத்தை அறிய உதவும் கருவி பெயர்?
- லேக்டோமீட்டர்

5. எந்த விலங்கின் பாலை தயிராக முடியாது?
- ஒட்டகம்

6. பாலின் pH மதிப்பு என்ன?
- 6.30

7. பாலில் உள்ள அமிலம்?
- லாக்டிக் அமிலம்

8. பாலின் வகைகள் எத்தனை? (இலக்கணம் ரீதியாக)
- 2 (ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின்)

9. பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
- 70

10. அதிக பால் தரும் பசு வகை எது?
- ஜெர்சி

1 1. வறட்சியான பகுதியில் வளரும் தாவரங்கள் எது?
- சப்பாத்தி கள்ளி

12. இருவித்திலைத் தாவரங்கள் என்ன வகையான வேர் காணப்படும்?
- ஆணி வேர்

13. தொற்று தாவரம் என்று அழைக்கப்படுவது எது?
- வாண்டா

14. தூண் வேர் தாவரம் எது?
- ஆலமரம்

15. கரும்பில் செவ்வழுகல் நோய் வர காரணமான உயிரி?
- பூஞ்சை

16. பாசிகள் எந்த வகை தாவரம்?
- பூவாதாவரம் (தாலோபைட்டா)

17. உருளையில் வரும் பூஞ்சை நோய் எது?
- வளையழுகல்

18. ஒரு பண்பு கலப்பின் சோதனை கலப்பு விகிதம் என்ன?
- 1:1

19. பசுமை புரட்சி என்ற சொல்லை உருவாக்கியர் யார்?
- வில்லியம் S காய்ட்

20. வெள்ளி புரட்சி எந்த உற்பத்தி பெருக்கத்திற்கு உருவாக்கப்பட்டது?
- முட்டை

தமிழ் 

 1. இன்னொரு தேசிய கீதம் நூல் ஆசிரியர் யார்?
- வைரமுத்து

2. கீதாஞ்சலி நூல் ஆசிரியர் யார்?
- ரவீந்திரநாத் தாகூர்

3. ஓர் இரவு நூல் ஆசிரியர் யார்?
- அண்ணாதுரை

4. நன்னூல் நூல் ஆசிரியர் யார்?
- பவணந்தி முனிவர்

5. கறுப்பு மலர்கள் நூல் ஆசிரியர் யார்?
- நா. காமராசன்

6. தமிழ் விருந்து நூல் ஆசிரியர் யார்?
- ரா.பி.சேதுப்பிள்ளை

7. மயிலைக்காளை நூல் ஆசிரியர் யார்?
- கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி

8. திருவாசகம் நூல் ஆசிரியர் யார்?
- மாணிக்கவாசகர்

9. சேரதாண்டவம் நூல் ஆசிரியர் யார்?
- பாரதிதாசன்

10. நீதி தேவன் மயக்கம் நூல் ஆசிரியர் யார்?
- அண்ணாதுரை

11. பஞ்சும் பசியும் நூல் ஆசிரியர் யார்?
- ரகுநாதன்

12. பாண்டியன் பரிசு நூல் ஆசிரியர் யார்?
- பாரதிதாசன்

13. தசாவதாரம் நூல் ஆசிரியர் யார்?
- அண்ணாதுரை

14. பரமார்த்த குரு கதைகள் நூல் ஆசிரியர் யார்?
- வீரமாமுனிவர்

15. நாலடியார் நூல் ஆசிரியர் யார்?
- சமண முனிவர்கள்

16. அக்னிச் சிறகுகள் நூல் ஆசிரியர் யார்?
- ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

17. சிவகாமி சபதம் நூல் ஆசிரியர் யார்?
- கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

18. திருப்புகழ் நூல் ஆசிரியர் யார்?
- அருணகிரி நாதர்

19. உத்திர காண்டம் நூல் ஆசிரியர் யார்?
- ஒட்டக்கூத்தர்

20. (War & Peace) நூல் ஆசிரியர் யார்?
- லியோ டால்ஸ்டாய்

திங்கள், 8 ஜூன், 2020

அறிந்திடாத தகவல்களை... ஒரு வரியில் அறிந்து கொள்வோம்..!!



அறிந்திடாத தகவல்களை... ஒரு வரியில் அறிந்து கொள்வோம்..!!

நீங்கள் அறிந்திடாத தகவல்கள்..!!
🌟 இந்தியாவின் முதல் செல்பேசி சேவை 1995ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் துவக்கப்பட்டது. 

🌟 மனிதனின் கண்ணீரில் சோடியம் குளோரைடு என்னும் உப்பு உள்ளது.

🌟 ஒரு நட்சத்திரத்தின் மொத்த ஆயுட்காலம் 10 பில்லியன் ஆண்டுகள் ஆகும்.

🌟 அழிப்பானிற்கு முன்பு, எழுதுகோலின் அடையாளக்குறியை அழிக்க ரொட்டி துண்டு பயன்படுத்தப்பட்டது.

🌟 ஹவாய் முதலில் சாண்ட்விச் தீவுகள் என்று அழைக்கப்பட்டது.

🌟 அட்லாண்டிக் கடல், பசிபிக் பெருங்கடலை விட உப்பாக உள்ளது.

🌟 எறும்புகளை சுற்றி சுண்ணாம்பு வரி வரையப்பட்டால் அதை தாண்டி அவைகள் செல்லாது.

🌟 திருமண மோதிரங்கள் இடது மோதிர விரலில் அணியப்படுகிறது, ஏனெனில் அது நேரடியாக இதயத்துடன் இணைக்கும் நரம்பை கொண்டிருக்கும் விரல் ஆகும்.

🌟 ஆந்தைகளுக்கு கருவிழிகள் இல்லை.

🌟 சிலந்தியின் ஒற்றை அடுக்கு பட்டு, மனித முடியை விட மெலிதாக உள்ளது.

🌟 சலார் தே யுனினி, தென்மேற்கு பொலிவியாவில் அமைந்துள்ள ஒரு உப்புப் படுகையாகும்.

🌟 அணிலால் ஏப்பம் அல்லது வாந்தி எடுக்க முடியாது.

🌟 ஊhயரடிரயெபரபெயஅயரப என்ற ஒரு ஏரி அமெரிக்காவில், வெப்ஸ்டர், மாசச்சூசெட்ஸ் அருகே அமைந்துள்ளது.

🌟 மேற்கத்திய தாழ்நில மனிதக் குரங்கின் அறிவியல் பெயர் புழசடைடய பழசடைடய பழசடைடய.

🌟 குழந்தைகள் கை விரலை உறிஞ்சுவது போல, யானைக்குட்டிகள் தனது துதிக்கையை உறிஞ்சும்.

🌟 பூமியானது, சூரிய மண்டலத்தில் அடர்த்தியான கிரகம் ஆகும்.

🌟 மனித எலும்புகள் இரும்பு பட்டையை விட ஐந்து மடங்கு வலிமையானவை. ஆனால், அது உடையக்கூடியது.

ஞாயிறு, 7 ஜூன், 2020

தெரிந்து கொள்வோம்..!!

தெரிந்து கொள்வோம்..!!

🌟 சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தின் சில பகுதிகளில் மழை எப்போதும் பொழிந்ததில்லை.

🌟 கொசுக்கள் வேறு எந்த நிறத்தை காட்டிலும் நீல நிற வண்ணத்தால் ஈர்க்கப்படுகின்றன.

🌟 கோலா கரடிகளுக்கு, மனிதனை போலவே கைரேகைகள் இருக்கும்.

🌟 தூக்கமின்மை, உணவின்மையை விட மிக வேகமாக மனிதனை கொன்றுவிடும்.

🌟 உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,00,000 கண்டறியக்கூடிய பூகம்பங்கள் ஏற்படுகின்றன.

🌟 கரப்பான்பூச்சிகள், டைனோசர்களுக்கு 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.

🌟 போலார் கரடிகள் அகச்சிவப்பு புகைப்படத்தின் கீழ் தெரியாது.

🌟 இரட்டைக் குழந்தைகள் பிறக்க இடையே எடுத்துக் கொண்ட அதிகபட்ச நீண்ட காலம் 87 நாட்கள் ஆகும்.

🌟 நெதர்லாந்தில், கீத்தோர்ன் கிராமத்தின் பழைய பகுதியில் சாலைகள் கிடையாது. அனைத்து போக்குவரத்துகளும் கால்வாய்களின் மீது தண்ணீரால் செய்யப்பட்டன.

🌟 கடினமாக வேகவைத்த முட்டை சுழலும். ஆனால், லேசாக வேகவைத்த முட்டை சுழலாது.

🌟 ஜப்பானில், கோணலான பற்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் கருதப்படுகின்றன.

🌟 ஹவாயில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி சில நேரங்களில் கீழே இறங்காமல் மேலே செல்கிறது.

🌟 வீட்டில் உள்ள பெரும்பாலான தூசி, துகள்கள் இறந்த சருமத்திலிருந்து உருவாகின்றன.

🌟 பிறந்த குழந்தைகளுக்கு 300 எலும்புகள் இருக்கும்.

🌟 மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் ஆன்ட்ரோ போபியா.

🌟 பிறப்பு முதல் இறப்பு வரை தூங்காத பிராணி எறும்பு.

சனி, 6 ஜூன், 2020

செம்மொழி (Classical language)


#செம்மொழி #Classical_language

செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்1 (ஜோர்ஜ் எல்.ஹார்ட்).

உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர்.

செம்மொழித் தகுதி

ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும் செம்மொழி என்பதற்கு அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் தேவையாய் இருக்கிறது.

இலக்கியப் படைப்புகள்
கலைப் படைப்புகள்
இந்த இரு படைப்புகளைக் கொண்டே அந்த மொழி செம்மொழிகளாக அறிவிக்கப்படுகின்றன.

இலக்கியப் படைப்புகள்

ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும். ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான் அறிய முடிகிறது.

கலைப் படைப்புகள்

ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டிடக் கலை , சிற்பக் கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும்.

உலகச் செம்மொழிகள் தொகு
இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் பல மொழிகளில் சில:

திராவிட மொழிகள்:
தமிழ்
தெலுங்கு
கன்னடம்
மலையாளம்
இந்தோ-ஐரோப்பிய மொழிகள்:
கிரேக்க மொழி
சமசுகிருதம்
இலத்தீன்
பாரசீக மொழி
ஆபிரிக்க-ஆசிய மொழிகள்:
அரபு மொழி
எபிரேயம்
சினோ-திபெத்திய மொழிகள்:
சீன மொழி

தமிழ்

இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 6000 ஆண்டுகள் மேற்பட்ட இலக்கியப் பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம், இலத்தீன் மொழிகள் போல் தற்போதைய இந்திய வரலாற்றை அன்றைய சேர, சோழ, பாண்டியர்கள், போன்ற வரலாற்றை அறிய தமிழ், மொழிகள் தேவையாக உள்ளன. தமிழின் செம்மொழித் தகுதிக்கு திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்ற பல நூல்கள் உள்ளன.

கிரேக்கம்

கிரேக்க மொழி மிகப் பழமையான பாரம்பரியம் வாய்ந்த ஒரு மொழியாகும். கிரேக்க இலக்கியத்தில் ஹோமர் எனும் மகாகவியின் காப்பியங்களான இலியது, ஒடிசி ஆகியன கி.மு.700 ல் வரி வடிவத்தை அடைந்திருந்தாலும் அதற்கு முன்பாகச் செவி வழிச் செய்திகளாக பல நூற்றாண்டுகள் இருந்திருக்கக் கூடும் என்கிறார்கள். கி.மு 500 ஆம் ஆண்டு முதல் கி.மு.310 ஆம் ஆண்டு காலத்தில் பல இலக்கியங்கள் இம்மொழியில் படைக்கப்பட்டுள்ளன. ஹிரொடோட்டஸ் என்பவரின் வரலாற்றுப் பதிவுகள், டுமாஸ் தனிசின் சொற்பொழிவுகள் , பிளேட்டோ , அரிஸ்டாட்டில் போன்றவர்களின் தத்துவ நூல்கள் போன்றவை இன்றும் கிரேக்க மொழியின் இலக்கிய வளத்திற்குப் பெருமை சேர்ப்பனவாக உள்ளன.

இலத்தீன்

ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலத்தீன் மொழியில் வர்ஜில் என்பவர் படைத்த இனீட் எனும் காவியம் சிறப்புடையது. மேலும் இம்மொழி அறிஞர்களான சிசிரோ, சேலஸ்ட், டேசிட்டஸ், செனகா போன்றவர்களின் சொற்பொழிவுகள் , தத்துவங்கள் இலத்தீன் மொழிக்கு வளம் சேர்க்கின்றன. கி.மு.70 முதல் கி.பி. 18 வரையிலான காலப் பகுதிகளில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. 1900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் இத்தாலிய நாட்டு கோலோசியம் எனும் மாபெரும் திறந்தவெளி அரங்கம் பழங்கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

அரபு மொழி

அரேபிய மொழியில் எழுத்து வடிவம் கி.மு.328 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தினரின் இறுதிச் சடங்கில் பொறிக்கப்பட்டது என்கிறார்கள். அரேபிய மொழியில் குர் ஆன் சிறந்த இலக்கியமாக கருதப்படுகிறது. அரேபியப் பழமொழிகள் , கவிதைகள் போன்றவை ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன.

சீனம்

சீன இலக்கியம் மிகப் பழமை வாய்ந்த ஒன்றாகும். சீன இலக்கிய வரலாற்றில் கி.மு. 600 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் வாழ்ந்த கன்ஃபூசியஸ் , லாவுட்ஸ் என்பவர்கள்தான். கன்ஃபூசியஸ் சீன மொழியில் கி.மு.3000 ஆண்டு முதல் கி.மு. 600 ஆம் ஆண்டு வரையுள்ள இலக்கியங்களை நான்கு தொகுதிகளாகத் தொகுத்தளித்திருக்கிறார். ஐந்தாவதாக அவருடைய படைப்பான தென்றலும் வாடையும் தந்திருக்கிறார். லாவுட்ஸ் “தாவ்” எனும் நெறியை வழங்கியிருக்கிறார். இவர்கள் வழங்கிய இலக்கியம் இன்னும் உலகம் முழுவதும் எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் கட்டிடக் கலைக்கு அங்குள்ள 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் ஒன்றே போதுமானது.

ஹீப்ரூ

ஹீப்ரு மொழிக்கு கி.மு. 12 ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் பழைய ஏற்பாடு எழுதப்பட்டது. இது விவிலியக் காலம் எனப்படுகிறது. மோசஸ் என்பவரால் யூதர்களின் நீதிநெறிகள் , சட்டங்கள் ஆகியவை கி.பி. 200 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டது. இது மிஷனா காலம் எனப்படுகிறது. இத்தொகுப்பிற்கு பல தலைமுறை அறிஞர்கள் எழுதிய விளக்கம் கெமாரா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது. மிஷ்னா மற்றும் கெமாரா ஆகிய இரண்டின் தொகுப்புதான் யூதர்களின் முக்கிய நூலாக இருக்கும் டாலமுட் எனப்படுகிறது. மூன்றாவதாக கி.பி 6 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இடைக்காலம். அடுத்ததாக நவீன ஹீப்ரு காலம். அரசர் எரோது என்பவர் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஜெருசலேம் பகுதியில் எழுப்பிய சாலமன் ஆலயம் இம்மொழியின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

பாரசீகம்

ஈரான் நாட்டின் ஆட்சி மொழியான பாரசீகம் அரேபிய வரி வடிவத்தில்தான் எழுதப்படுகிறது. இன்றைய உலக நாகரீகங்கள், அறிவியல் முதலியவற்றை உலகிற்கு வழங்கியது முந்தைய பாரசீகம்தான். இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் எண்கள் பாரசீகம் வழங்கியதுதான். உமர் கய்யாம் எனும் கவிஞரின் கவிதைகள் உலகம் போற்றக் கூடிய ஒன்றாகும். பாரசீகத்தின் பழமையை 2500 பழமை வாய்ந்த கட்டிடக் கலையான பெரிசிபோலிசு என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமஸ்கிருதம்

இந்தியாவில் வடமொழி என்று அழைக்கப்பட்ட சமஸ்கிருதம் கி.மு., 1500 முதல் கி.மு 200 வரை வேதகால இலக்கியமாகவும், அதற்கடுத்து கி.மு. 500 முதல் கி.பி. 1000 ஆண்டுகளில் இராமாயணம் , மகாபாரதம் போன்ற காப்பியங்கள் செம்மொழிக்கான நிலையைப் பெற்றது. சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவில் 1784 -ல் ஆசியக் கல்விச் சங்கம் எனும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனம் மூலம் மார்க்ஸ் முல்லர், கேல் புரூக் போன்றோர் வடமொழி நூல்களை ஆங்கிலம் , ஜெர்மன் , பிரெஞ்ச் போன்ற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்கள். கீழை உலகின் புனித நூல்கள் என்ற வரிசையில் மார்க்ஸ் முல்லர் பதிப்பித்த 50 தொகுதிகளில் பெரும்பாலானவை வடமொழி நூல்களாகும். இலக்கியம் , தத்துவம் , அரசியல் போன்ற துறைகளில் பெரும்பான்மையாக கிரேக்க, ரோமானியப் பங்களிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்களுக்கு வேதம் , உபநிடதம் , இதிகாசங்கள் , காப்பியங்கள் , நாடகங்கள் , தத்துவ நூல்கள், நீதி நூல்கள் போன்றவை வடமொழி இலக்கியத்தைச் செம்மொழியாகக் கருதச் செய்தன.

இந்தியாவில் செம்மொழிக்கான தகுதி

ஒரு மொழியானது 1,500 முதல் 2,000 ஆண்டுகள் வரையிலான வரலாறு மற்றும் பழைமையான இலக்கியங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். அல்லது அம்மொழியின் துவக்ககால இலக்கியங்கள் உயர் தரத்தில் இருத்தல் வேண்டும். மேலும் அந்த மொழியின் இலக்கிய மரபு தொடக்கத்திலிருந்தே அம்மொழிக்கு உரிமையானதாக இருத்தல் வேண்டும். மற்ற மொழிகளின் இலக்கிய மரபுகளிலிருந்து பெறப்பட்டதாக இருக்கக் கூடாது. அதன் அடிப்படையிலே ஒரு மொழிக்கு செம்மொழி தகுதியை இந்திய அரசு வழங்கி வருகிறது. இந்தியாவில் தமிழ், சமசுகிருதம் கன்னடம், மற்றும் ஒடியா மொழிகள் செம்மொழிகளாக தகுதி பெற்றுள்ளது.