ஞாயிறு, 30 ஜூன், 2019

340 இனங்களில் மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்கப்பட்ட `தமிழ் மறவன்’!




340 இனங்களில் மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்கப்பட்ட `தமிழ் மறவன்’!

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் தமிழ் இயோமென் எனப்படும் [தமிழ் மறவன்] தமிழ் நாட்டின் மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் தமிழ் இயோமென் எனப்படும் [தமிழ் மறவன் ] தமிழ் நாட்டின்  மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மறவன்

மாநில பறவை, மாநில விலங்கு, மாநில மரம், மாநில பூ, பட்டியலில் தற்போது தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப்பூச்சியும் இடம் பெற்றுள்ளது. அழிந்துவரும் வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பாதுகாக்கும் வகையிலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தமிழகத்திற்கென தனியாக மாநில வண்ணத்துப்பூச்சி தேர்வுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.


வண்ணத்துப்பூச்சி

காட்டுயிர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல்வேறு வகை அரிய உயிரினங்கள் வாழ்கின்றன.மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் 340 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் மாநில வண்ணத்துப்பூச்சியைத் தேர்வுசெய்ய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வந்தனர். வண்ணத்துப்பூச்சியைத் தேர்வுசெய்யும் முயற்சி, கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. ஆரம்பத்தில், தமிழ் லேஸ்விங்  Tamil Lacewing (Cethosia nietneri), எனப்படும் வண்ணத்துப்பூச்சி தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இது அபூர்வ வகை என்பதால் எளிதில் காண்பது கடினம். இதனைத் தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் தமிழ் இயோமென் (தமிழ்  மறவன்)  Tamil Yeoman (Cirrochroa thais),என்ற வண்ணத்துப்பூச்சி, தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப் பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையும் பிறப்பித்துள்ளது. இந்த வண்ணத்துப்பூச்சி, அடர்  ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமான நீலகிரியில், குன்னூர், கூடலூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் காண முடியும்.

இதுகுறித்து  ஆக்ட் ஃபார் பட்டர்ஃபிளைஸ் இயக்கத்தின் நிறுவனர் மோகன் பிரசாத் கூறுகையில், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டிற்கென மாநில வண்ணத்துப்பூச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் மாநில வண்ணத்துப்பூச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 5 -வது மாநிலமாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 340 வகை வண்ணத்துப்பூச்சிகளில், 'தமிழ் மறவன்' எனும் இந்த வண்ணத்துப்பூச்சியைப் பரிந்துரைசெய்தோம். அரசும் இதனை ஏற்று, மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவித்துள்ளது.மேலும், இந்த வகை வண்ணத்துப்பூச்சியை மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காண முடியும். அதே சமயம், இவை உண்ணும் தாவரமும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும்'' என்றார். 
நன்றி விகடன்.

தமிழகத்தின் வண்ணத்துப்பூச்சியாக 'தமிழ் மறவன்' தேர்வு: அரசு அறிவிப்பு


தமிழகத்தின் வண்ணத்துப்பூச்சியாக 'தமிழ் மறவன்' தேர்வு: அரசு அறிவிப்பு

தமிழகத்தின் மாநில வண்ணத்துப்பூச்சியாக ''தமிழ் மறவன்'' வகையை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் அடையாளங்களாக சிலவற்றை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. அதன்படி, மாநில விலங்காக வரையாடும், பறவையாக மரகதப் புறாவும், மலராக செங்காந்தளும், மரமாக பனை மரமும் உள்ளன. அந்த வரிசையில் தற்போது மாநில வண்ணத்துப்பூச்சியாக "தமிழ் மறவன்' (ற்ஹம்ண்ப் ஹ்ங்ர்ம்ஹய்) என்ற வகை வண்ணத்துப்பூச்சியை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.


தமிழகம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணியாக விளங்குவது வண்ணத்துப்பூச்சிகளாகும். காய், கனிகள் மற்றும் விதைகள் உருவாவதற்கும், அதிக மகசூல் பெறுவதற்கும் முக்கியக் காரணியாக விளங்குவது மகரந்த சேர்க்கையாகும். இந்த மகரந்த சேர்க்கைக்கு உறுதுணையாக விளங்குவது வண்ணத்துப்பூச்சிகள்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஆங்கிலேயர்கள் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பை நடத்தினர். இதில் 324 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாக அட்டவணைப்படுத்தியுள்ளனர். இதில் 311 வகை வண்ணத்துப்பூச்சி வகைகளை, வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் தற்போது கண்டறிந்து அதனை வகைப்படுத்தியுள்ளனர். மேலும், 13 வகை வண்ணத்துப்பூச்சிகளைத் தேடி வருகின்றனர்.

இந்தியாவில் பல மாநிலங்கள், தங்கள் மாநிலத்தை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வரும் வண்ணத்துப்பூச்சியை தங்களது மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவித்துள்ளன. அதேபோன்று, தமிழக விவசாயிகளின் நண்பனாக விளங்கும் வண்ணத்துப்பூச்சியை தமிழக அரசின் பட்டாம் பூச்சியாக அறிவிக்க வேண்டும் என வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து, மாநில வண்ணத்துப்பூச்சியைத் தேர்வு செய்ய வனத் துறையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. "தமிழ் மறவன்' மற்றும் ''தமிழ் லேஸ்விங்'' ஆகிய வண்ணத்துப்பூச்சிகள் இறுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், "தமிழ் மறவன்' வகையை மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்க தமிழக அரசுக்கு முதன்மை தலைமை வனப் பாதுகாலவர் பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று, வனத் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் ''தமிழ் மறவன்'' வகையை மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளார். இதனால் வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வரவேற்புக்குரியது: இதுகுறித்து வண்ணத்துப்பூச்சிகள் கையேட்டின் ஆசிரியர் ஆர்.பானுமதி கூறுகையில், ''சிர்ரோசாரா தாய்ஸ்'' என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த வண்ணத்துப்பூச்சி தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீரோடைகள், ஈரமான பகுதிகளில் வாழும். குறிப்பாக மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு, சிறுவாணி பகுதிகளில் இவற்றை அதிகமாக காணலாம்.


பழுப்பு ஆரஞ்ச் நிறத்தில் கருப்பு புள்ளிகள் கொண்ட இவை மரவொட்டி என்ற தாவரத்தில் முட்டையிட்டு, வளரும் தன்மை கொண்டதாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வகையில் அதிக அளவில் இவற்றைக் காணலாம். 60 மி.மீ. முதல் 75 மி.மீ. வரை இதன் உடல் அளவும், ஒரு வாரம் முதல் 3 மாதங்கள் வரை இதன் ஆயுள்காலமும் இருக்கும். தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வண்ணத்துப்பூச்சிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்' என்றார்.

கோவையைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சி ஆர்வலர் அ.பாவேந்தன் தெரிவித்தாவது:

வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் எங்குள்ளதோ, அந்த வனப்பகுதி செழுமையாக உள்ளது என்று அர்த்தம். அந்த வகையில் கோவையில் கல்லாறு, தேனியில் கல்லாறு மற்றும் மேகமலை, விருதுநகர் அருகே செண்பகத்தோப்பு, திருச்சி அருகே பச்சமலை உள்ளிட்ட 20 இடங்களில் அரியவகை பட்டாம் பூச்சிகள் உள்ளன.

தமிழக அரசின் வண்ணத்துப்பூச்சியாக '''தமிழ் மறவன்'' (தமிழ் யாமோன்) அறிவித்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி. மேலும், வனத்துறை சார்பில் திருச்சியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைத்து அவற்றை பாதுகாத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல் வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவு உள்ள வனப் பகுதியை பட்டாம் பூச்சி வனச் சரணாலயப் பகுதியாக அறிவித்து அதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நன்றி தினமணி

தமிழ்நாடு அரசின் சின்னமானது ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி....


தமிழ்நாடு அரசின் சின்னமானது ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி.. தமிழகத்துக்கு மேலும் ஒரு சிறப்பு பட்டாம்பூச்சி..

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசித்து வரும் 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சி இனம் தமிழ்நாடு அரசின் சின்னம் அந்தஸ்தை பெற்றுள்ளது.


தமிழக அரசின் சின்னங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா ஆகியவை உள்ளன.இந்நிலையில் பட்டாம்பூச்சிகளுக்கு தமிழக அரசின் சின்னம் அந்தஸ்து கொடுப்பது தொடர்பாக பல்வேறு பட்டாம்பூச்சிகளை 10 பேர் குழு ஆய்வு செய்தது.

 tn govt order, tamil yeoman as state butterfly of tamil nadu
இந்த குழு இறுதியில் தமிழ் மறவன் மற்றும் தமிழ் லேஸ்விங் ஆகிய பட்டாம்பூச்சிகளை தேர்வு செய்தது. இறுதியில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சிக்கு சினனம் அந்தஸ்து வழங்க வனத்துறை தேர்வு செய்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசிக்கும் 32 பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்று தான் 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சி கூட்டமாக வசிக்கும் இநத் பட்டாம்பூச்சி ஒரு சில இடங்களில் மட்டுமே வசித்து வருகிறது. கூட்டமாகத் தான் வேறு இடங்களுக்குச் செல்லும். இந்த பட்டாம்பூச்சி அடர் பழுப்பு நிற வெளிப்புற இறகுகள் மற்றும் ஆரஞ்சு வண்ணத்தை கொண்டவை ஆகும். இந்த தமிழ் மறவன் பட்டாம்பூச்சிக்கு அர்த்தம் போர் வீரன் என்பதாகும்.

இது தொடர்பாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆகியோர் தமிழக வனத்துறைமற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையை ஏற்று 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சிக்கு தமிழக அரசு சின்னம் அந்தஸ்து வழஙக அரசாணை வெளியிட்டுள்ளது-

இந்திய அளவில் பட்டாம்பூச்சிக்கு மாநில அளவிலான அங்கீகரிக்கும் 5வது மாநிலம் தமிழ்நாடு என்ற சிறப்பை பெற்றுள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா(ப்ளூ மோர்மன்), உத்தரகாண்ட்(காமன் பீகாக்), கர்நாடகா(சதர்ன் பேர்டு விங்ஸ்), கேரளா(மலபார் பேண்டட் பீகாக்) ஆகிய மாநிலங்கள் பட்டாம்பூச்சிகளுக்கு மாநில அந்தஸ்து வழங்கி உள்ளன.

சனி, 29 ஜூன், 2019

இந்திய நாடாளுமன்றம்


இந்திய நாடாளுமன்றம்

அறிமுகம்
இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், இரு சட்ட அவைகளை கொண்டுள்ளது. அவை மாநிலங்களவை (Rajya Sabha) மற்றும் மக்களவை (Lok Sabha) ஆகும்.

இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.

மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.

செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.

பாராளுமன்ற விதிகளும் நடைமுறையும்
பாராளுமன்ற மேலவையிலோ (மாநிலங்களவை) கீழவையிலோ (மக்களவை) பேசும் பாராளுமன்ற உறுப்பினர், ஆங்கிலம், இந்தி, எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம். இந்தி, ஆங்கிலம் அல்லாது எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியில் பேச விரும்புவோர், அரை மணி நேரம் முன்கூட்டியே பேச விரும்பும் மொழியை குறிப்பிட வேண்டும். உறுப்பினர் பேசுவதை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறுவர். மொழிபெயர்ப்பு வசதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, சமசுகிருதம், பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மொழிகளுக்கு மட்டும் உள்ளது.

இந்திய நாடாளுமன்ற மக்களவை
மக்களவை

மக்களவை அல்லது லோக் சபா இந்திய பாராளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552 ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினரகளான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும்.
ஆங்கிலோ இந்தியரை பொறுத்தவரை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும் இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் மூலம் இந்தவை நாட்டின் 15 வது மக்களவையை துவக்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான சார்பாளர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசரநிலைப்பிரகடன காலத்தின் இதன் செயல்பாடுகளை குறிப்பிட்டகாலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீட்டித்து முடக்கலாம். மக்களவையை தலைமையேற்று வழிநடத்துபவராக மக்களவைத் தலைவர் செயல்படுகின்றார். இவரின் வழிகாட்டுதலின்படி மக்களவை உறுப்பினர்கள் மக்களவையில் செயல்படுகின்றனர்.
தற்பொழுது 15 வது மக்களவை நடைபெறுகின்றது. மக்களவைத் தொகுதிக்கான எல்லைகள் மற்றும் சீரமைவுகள் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதும் அல்லது தேர்தல் ஆணையத்தினராலும் மேற்கொள்ளப்படும். இருப்பினும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை இந்த சீரமைவுகள் பாதிக்காது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதின்படி அந்த மக்களவையின் ஆயுள் முழுவதும் தொடர்வார்.
மாநிலங்களவை

மாநிலங்களவை அல்லது ”ராஜ்ய சபா” இந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் உள்ளிட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். இதன் கட்டமைவு இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்பட்டுள்ளதின்படி அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார்.
மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறுவதாகும் சபை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளை இரு அவைகளின் கூட்டு கூட்ட அமருவின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டு கூட்டங்களில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) தடை (வீட்டோ) அதிகாரங்களை கொண்டதாக கூட்டு கூட்டங்களில் கருதப்படுகின்றது.
மாநிலங்களவையின் தற்பொழுதய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு அமீத் அன்சாரி பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்லைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர்.
மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது.
நாடாளுமன்ற கட்டடம்
நாடாளுமன்றம் அல்லது இந்தியில் சன்சத் பவன் என்ப்படும் இம்மண்டபம் வட்டவடிவ அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதை வடிவமைத்து நிர்மானித்தவர்கள் சர் எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சர் எர்பர்ட் பேக்கர். பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுநரான இவர்கள் 1912-1913 ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டு இதன் கட்டுமானம். 1921 இல் துவக்கப்பட்டு பின் 1927 இல் மாநிலங்களவைக்காகவும் (home of the concil of state), மைய சட்டமன்றத்திறகாகவும் மற்றும் இளவரசர்களின் மாளிகைக்காகவும் (Chamber of Princes) திறக்கப்பட்டது. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சவ்சாத் யோகினி கோவிலின் தோற்றமே இந்திய நாடாளுமன்றத்தின் முன்மாதிரி என்றும் கூறப்படுகின்றது.

இதன் வெளி கட்டுமான சுவர் 144 பளிங்குத்தூண்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அவைகள் மைய மண்டபமான ஜன்பத் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதனின்று செல்வதற்கு ஏதுவாக குடியரசுத்தலைவர் மாளிகைக்கு இணைக்கும் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தை இந்திய கேட் பகுதியில் இருந்தும் பார்க்கமுடியும்.

வெள்ளி, 28 ஜூன், 2019

சிவஸ்தலத் தொகுதிகள்


சிவஸ்தலத் தொகுதிகள்

       வீரச் செயல்கள் புரிந்த தலங்கள் 

1.  அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்
           
1. திருக்கண்டியூர்      ---- பிரமன் சிரம் கொய்தது
2. திருக்கோவலூர்......  அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை             ---- திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர்          ---  தக்கன் சிரங்கொய்தது
5. திருவிற்குடி            ----  சலந்தராசுரனைச் சங்கரிதத்து
6. வழுவூர் (வைப்புத்தலம்) --- யானையை உரித்தது
7. திருக்குறுக்கை         --- காமனை எரித்தது
8. திருக்கடவூர்           ---- யமனை உதைத்தது

2.  பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள் 🌹 🌿

1. கேதாரம் (இமயம்)         ---- கேதாரேஸ்வர்ர்
2. சோமநாதம் (குஜராத்)      ---- சோமநாதேஸ்வரர்
3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) ---- மகாகாளேஸ்வரர்
4. விசுவநாதமே (காசி)       ---- விஸ்வநாதேசுவரர்
5. வைத்தியநாதம்  (மகாராஷ்டிரம்)  ---- வைத்திநாதேசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்)       ---- பீமநாதேசுவரர்
7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்)   ---- நாகநாதேசுவர்ர்
8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) -- ஓங்காரேசுவரர்
9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்)           --- த்ரயம்பகேசுவரர்
10. குசமேசம் (மகாராஷ்டிரம்)          ---- குஸ்ருணேச்சுவர்ர்
11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்
12. இராமநாதம் (அராமேஸ்வரம்)        ---- இராமநாதேஸ்வரர்

            முக்தி அளிக்கும் ஸ்தலங்கள் 🌹 🌿

1. திரு ஆரூர்          ---- பிறக்க முக்தி தருவது
2. சிதம்பரம்           ----- தரிசிக்க முக்தி தருவது
3. திருவண்ணாமலை  ---- நினைக்க முக்தி தருவது
4. காசி                ---- இறக்க முக்தி தருவது

                 பஞ்சபூத ஸ்தலங்கள் 🌹 🌿

1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம்    ---- பிருதிவி (நிலம்)
2. திரு ஆனைக்கா                   ----- அப்பு (நீர்)
3. திருவண்ணாமலை                ----- தேயு (தீ)
4. திருக்காளத்தி                      ----- வாயு (வளி)
5. சிதம்பரம்                          ---- ஆகாயம் (விசும்பு)

               நடராஜருக்கான பஞ்ச சபைகள் 🌹🌿

1. திருவாலங்காடு     --- இரத்தின சபை
2. சிதம்பரம்           --- கனகசபை (பொன்னம்பலம்)
3. மதுரை             --- ரஜதசபை (வெள்ளியம்பலம்)
4, திருநெல்வேலி      --- தாமிர சபை
5, திருக்குற்றாலம்     --- சித்திர சபை

               (வியாக்ரபாதர் வழிபட்டவை) 🌹 🌿

 புலியூர்கள் 🌿🌹

1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர்
5. பெரும்புலியூர்

               சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள் 🌹 🌿

முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களைநிறுவிய தலங்கள்.

இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்டநடனங்களை யாடுவார்கள்.

1. திருஆரூர்  -- வீதிலிடங்கள் --- அசபா நடனம்
2. திருநள்ளாறு -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்
3. திருநாகைக்ரோணம் --- சுந்தரவிடங்கர் --- வீசி நடனம்
4. திருக்காறாயில் --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்
5. திருக்கோளிலி  -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்
6. திருவாய்மூர்   ---- நீலவிடங்கர்  --- கமல நடனம்
7. திருமறைக்காடு --- புவனிலிடங்கர் --- கம்சபாத

          சிறப்புத் தாண்டவத் ஸ்தலங்கள் 🌹 🌿

1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர்  ---- ஆனந்த தாண்டவம்
2. திரு ஆரூர்                       ---- அசபா தாண்டவம்
3. மதுரை                           ---- ஞானசுந்தர தாண்டவம்
4. புக்கொளியூர்                     ----. ஊர்த்துவ தாண்டவம்
5. திருமுருகன் பூண்டி              ---- பிரம தாண்டவம்

                சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்🌹🌿

1. கச்சி ஏகம்பம்
2. திருக்காளத்திங
3. கோகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
5. திருவைகாவூர்

                 காசிக்கு ஈடான ஸ்தலங்கள்🌹🌿

1. திருவெண்காடு
2. திருவையாறு
3. மயிலாடுதுறை
4. திருவிடை மருதூர்
5. திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சியம்

                       நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்🌿🌹

1.            நந்தி சங்கம தலம்             - கூடலையாற்றூர் திருநணா (பவாநிகூடல்)
2.            நந்தி விலகியிருந்த தலங்கள்  ---- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக),திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).
3.            நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் --- திருவெண்பாக்கம்
4.            நந்திதேவர் நின்ற திருக்கோலம் --- திருமாற்பேறு
5.            நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் --- திருமழபாடி
6.            திருக்கீழ்வேளூர் – ஒரு பக்தையின் பொருட்டு
7.            திருநள்ளாறு – ஒரு இடையனுக்காக

         
   சப்த ஸ்தான (ஏழூர் விழா)  தலங்கள் 🌿🌹

1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்
திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.

             திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள் 🌿🌹

1. திருவோத்தூர்    --- ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம்    ---- நிலாத்துண்டப் பெருமாள்
3. கொடிமாடச் செங்குன்றூர் --- ஆதிகேசப் பெருமாள்
4. சிதம்பரம்       --- கோவிந்தராஜப் பெருமாள்
5. திருநணா       --- ஆதிகேசவப் பெருமாள்
6. சிக்கல்          --- கோலவாமனப் பெருமாள்
7. திருநாவலூர்    --- வரதராஜப் பெருமாள்
8. திருநெல்வேலி  --- நெல்லை கோவிந்தர்
9. திருப்பழனம்    --- கோவிந்தர்
10.பாண்டிக் கொடுமுடி --- அரங்கநாதர்
11. திருப்பத்தூர்     --- அரங்கநாதர்
12. திருவக்கரை     --- அரங்கநாதர்

        ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற கோயில்கள்🌿🌹

                               

1. திருவாரூர் அரநெறி                 ----   திருவாரூர்
2. திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்       ---    திருப்புகலூர்
3. மீயச்சூர் இளங்கோயில்             ----  மீயச்சூர்

               காயாரோகணத் தலங்கள் 🌿🌹

1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
2. சூடந்தைக் காரோணம்
3. நாகைக் காரோணம்

              மயானத் தலங்கள்🌿🌹

1. கச்சி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்

              கைலாயத் தலங்கள்
தெட்சண கைலாசம் 🌿🌹

1. திருக்காளத்தி
2. திருச்சிராப்பள்ளி
3. திரிகோணமலை (இலங்கை)

             பூலோக கைலாசம் 🌿🌹

1. திருவையாறு
2. திருக்குற்றாலம்
3. சிதம்பரம்

       அழகிற் சிறந்த கோயில்கள் 🌿 🌹

1. தேரழகு     ---    திருவாரூர்
2. வீதி அழகு  ---    திருஇடை மருதூர்
3. மதிலழகு   ---    திருவிரிஞ்சை
4. விளக்கழகு  ---    வேதாரண்யம்
5. கோபுரமழகு --    திருக்குடந்தை
6. கோயிலழகு – காஞ்சி

        பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு 🌿🌹

1. திருக்குற்றாலம்  -- திருவனந்தல் சிறப்பு
2. இராமேச்சுரம்    --- காலை பூசை சிறப்பு
3. திருஆனைக்கா  --- மத்தியான பூசை சிறப்பு
4. திரு ஆரூர்     --- சாயுங்கால பூசை சிறப்பு
5. மதுரை         --- இராக்கால பூசை சிறப்பு
6. சிதம்பரம்       --- அர்த்தசாம பூசை சிறப்பு

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள் 🌹🌿

குங்கிலியக்கலயர், முருகர், குலச்சிறை, அப்பூதி, நீலநக்கர்,சிறுத்தொண்டர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசி,திருநீலகண்டயாழ்பாணர்.

நடராசர் அபிஷேக நாட்கள் 6  🌿🌹

மார்கழி = ஆதிரை , சித்திரை = ஓணம், ஆனி = உத்திரம் மாசி = ஆவணி
புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை.  ஏனையமூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.

ஆயிரங்கால்  மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்🌿🌹

மதுரை, சிதம்பரம், இராமேஸ்வரம்.

ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் அமைந்து காணப்பெறும்ஒரே தேவாரத் திருத்தலம் 🌹🌿

திருநல்லூர்த் திருத்தலம்.

அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம் 🌿🌹

“திருகண்டியூர் வீரட்டம்” என்னும் திருத்தலத்தில் மட்டுமேஅமையப்பெற்றுள்ளது.

திருஞான சம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள் இரண்டு. 🌿🌹

திருப்பட்டீச்சரம், திருப்பூந்துருத்தி.

சிவன் சிறப்புத் தேவாரத் தாண்டவத் தேவாரத்தலங்கள் ஆறு 🌿🌹

1.            மயூர தாண்டவம்  - மயிலாடுதுரை
2.            அஞ்சிதபாத கரண தாண்டவம்- செங்காட்டங்குடி
3.            கடிசம தாண்டவம்- திருவக்கரை
4.            சதுர தாண்டவம்- திருநல்நூர்
5.            சுந்தரத் தாண்டவம்- கீழ்வேளூர்
6.            லதா விருச்சிக தாண்டவம்- திருமழபாடி

அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர். 🌹🌿

சம்பந்தர், நாவுக்கரசர், திருமூலர், நின்றசீர் நெடுமாறன், அப்பூதி,சோமாசிமாறர், மங்கையர்கரசி, நீலகண்டயாழ்பாணர், மிழலைக்குறும்பர்,கணநாதர், குலச்சிறை என 11 பேர் ஆவார்.

              பெரிய கோபுரத் தலங்கள் 🌿 🌹

திருவண்ணாமலை
மதுரை
தில்லை
திருமுதுகுன்றம்
திருச்செந்தூர்
இராமேஸ்வரம்
குடந்தை
காளையார் கோவில்
தென்காசி

மண்டபங்கள் சிறப்பு 🌿🌹

வேலூர் - கல்யாண மண்டபம்
கிருஷ்ணாபுரம் - சபா மண்டபம்
பேரூர் -  கனக சபை
தாரமங்கலம் – குதிரை மண்டபம்
புகழ் பெற்றவை மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்குசிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.

யானை ஏறாத மாடக் கோயில்கள் சில 🌿🌹

1.     திருவானைக்காவல்
2.    ஆக்கூர்
3.    திருத்தேவூர்
4.    திருக்கீழ்வேளூர்
5.    சிக்கல்
6.    வலிவலம்
7.   அம்பர்மகாளம்
8.   தண்டலை நீள் நெறி
9.   திருநறையூர்
10. பழையாரை
11. திருமருகல்
12. வைகல்மாடக் கோயில்
13. நன்னிலம்(மதுவனம்)
14. குடவாசல்
15. புள்ளமங்கை
16. திருத்தலைச்சங்காடு
17. நல்லூர்
18. திருநாலூர்
19. திருச்சாய்க்காடு
20. திருவக்கரை
21. திருநாங்கூர்
22. திருப்ராய்த்துறை
23. ஆவுர்
24. திருவெள்ளாறை
25. திருவழுந்தூர்
26. நாகப்பட்டினம்
27. பெருவேளூர்
28. கைச்சின்னம்
29. சேங்கனூர் இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….

                    பெரிய லிங்கம் 🌿🌹

 கங்கை கொண்ட சோழபுரம் – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்குஇலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும்பரிவட்டம் வேண்டும்.
திருப்புனவாயில் – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்கவடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம்பரிவட்டமும் தேவை “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒருசுற்று ”என்பது பழமொழி.
         

                       பெரிய நந்தி 🌿🌹

தஞ்சை நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது லேபாட்சிவீரபத்திரர் சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.

                   புகழ்பெற்ற கோயில்கள் 🌿 🌹

             கோயில் – சிதம்பரம்
             பெரியகோயில்- தஞ்சை
             பூங்கோயில் – திருவாரூர்
             திருவெள்ளடை- திருக்குருகாவூர்
             ஏழிருக்கை-சாட்டியக்குடி
             ஆலக்கோயில்-திருக்கச்சூர்
             கரக்கோயில்- திருக்கடம்பூர்
             கொகுடிக் கோயில்- திருப்பறியலூர்
             மணிமாடம்- திருநறையூர்
             தூங்கானைமாடம்- திருப்பெண்ணாடகம்
             அயவந்தீச்சரம்-திருச்சாத்தமங்கை
             சித்தீச் சுரம்- திருநறையூர்

நால்வர் இறையருளில் கலந்த
தலங்கள் 🌿 🌹

1.            திருஞானசம்பந்தர் - ஆச்சாள் புரம்
2.            திருநாவுக்கரசர் - திருப்புகலூர்
3.            சுந்தரர் - திருவஞ்சைக்களம்
4.            மாணிக்கவாசகர் – தில்லை

சந்தானக்குரவர் அவதரித்த தலங்கள்🌿🌹

1.            மெய்கண்டார்- திருப்பெண்ணாடகம்
2.            அருள் நந்திதேவ நாயனார் – திருத்துறையூர்
3.            மறைஞானசம்பந்தர்- பெண்ணாடகம்
4.            உமாபதி சிவம்- சிதம்பரம்.

சந்தானக்குரவர் முக்தி அடைந்த
தலங்கள்🌿🌹

1.            மெய்கண்டார்- திருவண்ணாமலை
2.            அருள் நந்திதேவ நாயனார் – சிர்காழி
3.            மறைஞானசம்பந்தர்- சிதம்பரம்
4.            உமாபதி சிவம்- சிதம்பரம்

       பக்தர்கள் பொருட்டு 🌿🌹

திருவிரிஞ்சியுரம்- பக்தனுக்காக இறைவன் தன் முடியை சாயத்துஅபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.

திருப்பனந்தாள் – பக்தைக்காக இறைவன் தன் முடியை சாய்த்துபூமாலையை ஏற்றிக் கொண்டருளினார்.

                    பெருங்கோயில் 🌿🌹
தேவாரம் போற்றும் பெருங்கோயில்கள் 🌿🌹

1.            அம்பர் பெருந்திருக்கோயில்
2.            நன்னிலத்துப் பெருந்திருக்கோயில்
3.            கீழ்வேளூர் பெருந்திருக்கோயில்
                   அதிசய நடராஜர்

பத்துத் திருக்கரங்களுடன் நடராஜர் நடனம் ஆடும் காட்சி🌿🌹

மதுரையிலுள்ள வெள்ளியம்பலம் தவிர வேறு எங்கும் காண இயலாது.

               திருக்கயிலாய பரம்பரை🌿🌹

சிவபெருமானிடமிருந்து நந்தி தேவர் உபதேசம் பெற்றார்.
நந்தி  தேவரிடமிருந்து சணற்குமாரர் உபதேசம் பெற்றார்
சணற் குமாரரிடமிருந்து சத்ய ஞானதரிசினிகள் உபதேசம் பெற்றார்
சத்தியஞானதரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியார் உபதேசம் பெற்றார்
பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டார் உபதேசம் பெற்றார்
இப்படி வழி வழியாக உபதேசம் பெற்ற குரு பரம்பரையே திருக்கயிலாயபரம்பரை என அழைக்கப்படுகிறது.

விஷ்னு கோயில்களில் சிவன்🌹🌿

1.திருங்குறுங்குடி
2.திருக்கோஷ்டியூர்
3.உத்தமர் கோயில்
4.கம்பம்

ஓரிஜினல் ருத்ராக்ஷம் தண்ணீர்ல் போட்டவுடன் மூழ்கும்.

பஞ்ச பாசுரத் ஸ்தலங்கள் 🌹 🌿

1.            தேவாரம்
2.            திருவாசம்
3.            திருப்பல்லாண்டு
4.            திருவிசைப்பா
5.            பெரியபுராணம்

இவ்வைந்தாலும் பாடல்பெற்ற ஸ்தலம் 2 🌿🌹

1.திருவாரூர் 2. சிதம்பரம்.

கும்பமேளா தீர்த்தங்கள் 🌿🌹

1.            ஹரித்துவார் – உத்திரபிரதேசம்
2.            அலகாபாத் -  உத்திரபிரதேசம்
3.            உஜ்ஜயினி  - மத்தியப் பிரதேசம்
4.            நாசிக் – மஹாராஷ்டிரம்

சிவ தேவார திருத்தலங்கள் - 274🌿🌹

காவிரிக்கு வடகரையிலுள்ள திருவூர்கள் - 63

காவிரிக்கு தென்கரையிலுள்ள திருவூர்கள் - 127

ஈழநாட்டிலுள்ள திருவூர்கள் - 2

பாண்டிநாட்டிலுள்ள திருவூர்கள் - 14

மலைநாட்டிலுள்ள திருவூர்கள் - 1

கொங்கு நாட்டிலுள்ள திருவூர்கள் - 7

நடுநாட்டிலுள்ள திருவூர்கள் - 22
தொண்டை நாட்டிலுள்ள திருவூர்கள் - 32

துளுவ நாட்டிலுள்ள திருவூர்கள் - 1

வட நாட்டிலுள்ள திருவூர்கள் - 5

காவிரிக்கு வடகரையிலுள்ள திருவூர்கள் - 63

01. சிதம்பரம்
02. திருவேட்களம்
03. திருநெல்வாயில்
04. திருக்கழிப்பாலை
05. திருநல்லூர்ப் பெருமணம்
06. திருமயேந்திரப்பள்ளி
07. தென்திருமுல்லைவாயில்
08. திருகலிக்காமூர்
09. திருச்சாய்க்காடு
10. திருபல்லவனீச்சரம்
11. திருவெண்காடு
12. கீழைத்திருக்காட்டுப் பள்ளி
13. திருக்குருகாவூர் வெள்ளடை
14. சீர்காழி
15. திருக்கோலக்கா
16. திருபுள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)
17. திருக்கண்ணார் கோயில்
18. திருக்கடை முடி
19. திருநின்றியூர்
20. திருப்புன்கூர்
21. திரு நீடூர்
22. திரு அன்னியூர்
23. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்
24. திருவெதிர்கொள்பாடி

#உலகநாடாளுமன்றம்தினம்ஜூன்30.

இந்திய பாராளுமன்றம் முழு தொகுப்பு மற்றும் கேள்வி பதில்கள்

இந்தியாவின் சட்டசபையாக இந்தியா பார்லிமெண்ட் திகழ்கின்றது. இந்தியா போன்ற பெரிய மக்களாட்சி நாட்டில் பார்லிமெண்ட் குறித்து குறைந்த பட்சம் என்ன தெரியும் பட்ஜெட் கூடுவார்கள் தெரியும், சண்டை போடுவார்கள் அத்தோடு அது இந்திய சட்ட சபையென்று தெரியும். இந்திய பார்லிமெண்ட் சட்டஇயற்றும் வேலையை மட்டும் செய்யாமல் நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், அர்களின் நிர்வாகத்தேவையை பூத்தி செய்யவும், நாட்டின் பாதுகாப்பு என அனைத்து பொறுப்புகளை கொண்டு செயல்படும் கட்டமைப்பே இந்திய பார்லிமெண்ட் ஆகும். பார்லிமெண்ட்    இந்திய பார்லிமெண்ட் குறித்து போட்டி தேர்வகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றன. அது குறித்து அதிகமாக கேள்விகள் கேட்க்கப்பட்டுள்ளன. பாராளுமன்றம் குறித்து கேள்விகள் நிச்சயம் கேட்கப்படும். பாராளுமன்றம் குறித்து உங்களது பார்வைக்கு ஒரு கண்ணோட்டமும் அது குறித்து கேள்விகளும் படிப்போம். தேர்வை வெல்வோம். பார்லிமெண்ட் மக்களவை : இந்தியாவில் பார்லிமெண்ட் இந்தியாவின் சட்ட சபையாகும். இந்தியா போன்ற மிகபெரிய ஜனநாயக நாட்டில் நாட்டு மக்களுக்கு நல்ல அரசு நிர்வாகம் கொடுக்கும் பொறுப்பு கொண்டது பார்லிமெண்ட். பார்லிமெண்ட் இந்திய குடியரசு தலைவர், லோக்சபா, ராஜ்யசபாவின் அங்கம் ஆகும். பார்லிமெண்ட் 1858 ஆம் ஆண்டின் கவுன்சில் சட்டம் கீழ் கொண்டு வரப்பட்ட கவுன்சில் ஆகும். இந்திய குடியரசு தலைவர் மசோதா: பாராளுமன்றத்தின் செயல் தலைவராக அழைக்கப்படுபவர் இந்திய குடியரசு தலைவர் ஆவார். நாட்டில் கொண்டு வரப்படும் சட்டங்கள் அனைத்து அவரது பெயரால் கொண்டு வரப்படுகின்றது எனினும் அவர் கையெப்பமிட்டு ஏற்றுக்கொண்ட மசோதாக்கள் மட்டுமே சட்டமாகும். அவ்வாறு கையெழுத்திடாமல் திருப்பி அனுப்ப அவருக்கு முழு அதிகாரம் உண்டு. குடியரசு தலைவர் நாட்டின் முதல் குடிமகன் எனவும் அழைக்கப்படுகின்றார். நாட்டில் அதிகம் தொகை சம்பாதிப்பவரும் இவரே ஆவார். தற்பொழுதைய மதிப்பு படி ரூபாய் 5 லட்சம் இவருடைய சம்பளம் ஆகும் இந்திய குடியரசு தலைவர்: இந்திய பாராளுமன்றத்தில் அங்கமான குடியரசு தலைவர் தேர்தல் கல்லுரி எனப்படும் எல்க்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் அதாவது மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மாநில உறுப்பினர்கள் அடங்கிய குழுவே தேர்தல் கல்லுரின்னு அழைக்கப்படுகிறது. பாராளுமன்றத்தின் செயல் தலைவராக அழைக்கப்படுபவர் இந்திய குடியரசு தலைவர் ஆவார். நாட்டில் கொண்டு வரப்படும் சட்டங்கள் அனைத்து அவரது பெயரால் கொண்டு வரப்படுகின்றது. அதாவது அவர் கையெப்பமிட்டு ஏற்றுக்கொண்ட மசோதாக்கள் மட்டுமே சட்டமாகும். குடியரசு தலைவர் பெயருக்குத்தான் பெரிய பதவி ஆனால் அனைத்து அதிகாரங்களுக் கொண்ட தலைவராக இருப்பவர் இந்திய பிரதமர் ஆவார். பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர்ப் பணி : பாராளுமன்றத்தில் இந்திய குடியரசுத்தலைவர் பணி சிறந்த ஒன்றாகும். நாட்டின் பிரதமர் , மற்ற உறுப்பினர்களுக்கு பதிவி பிரமானம் செய்துவைத்தல் இவருடைய பணியாகும். ஒவ்வொரு தேர்தல் முடிவிலும் புதிதாக பாராளுமன்றத்தை கூட்டி உரையாற்றுவார். மசோதாக்களிடையே இரு அவைகளுக்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளை கலைந்து கூட்டு கூட்டத்தை கூட்டுவது இவருடைய பணியாகும். Get your 811 account instantly, without any paperwork. உலகின் சிறந்த உணவு மூலம் 1 மாதத்தில் 28 கிலோ குறைத்த நபர்! பிடித்த உணவை தவிர்க்காமல் 30 நாளில் 28 கிலோ எடை குறைக்கலாம் பாராளுமன்ற அவைகள்: பாரளுமன்றம் லோக் சபா, ராஜ்ய சபா என்ற இரு அவைகளை கொண்ட அவையாகும். லோக் சபா உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். லோக்சபா தேர்தலானது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடக்கும். லோக் சபா கீழ் அவை என அழைக்கப்படும். லோக் சபா பதவிகாலம் ஐந்தாண்டுகள் ஆகும். லோக் சபா மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 550+ 2 ஆகும். மாநில உறுப்பினர்கள் 530 யூனியன் ஸ்டேட்டில் இருந்து 20 உறுப்பினர்கள் தேர்ந்தெருக்கப்படுகின்றனர். சட்டவிதி 331இன் படி ஆங்கிலோ இந்தியர்கள் இருவரை நியமனம் செய்யும் பணியை குடியரசுதலைவரால் நியமிக்கப்படுகின்றனர். மாநிலங்கள் நில அடிப்படையில் தொகுதிகளாக பிரிக்கப்பட்டு மக்கள் விகிதசாராம் சரியாக அளந்து தொகுதிகள் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. லோக் சபா மக்களவை என அழைக்கப்படுகின்றன. லோக் சபாவின் தலைவர் சபாநாயகர் என அழைக்கப்படுவார். சபாநாயகர் பணி மக்களவை பிரதிநிதியாகவும் சிறந்து விளங்குகின்றார். சபாநாயகர் : லோக் சபா மக்களவை என அழைக்கப்படுகின்றன. லோக் சபாவின் தலைவர் சபாநாயகர் என அழைக்கப்படுவார். சபாநாயகர் பணியுடன் மக்களவை பிரதிநிதியாகவும் சிறந்து விளங்குகின்றார். மக்களவை உறுப்பினர்களின் அதிகாரம் அத்துடன் சிறப்புரிமைகள் மற்றும் ஒட்டுமொத்த அவை உறுப்பினர்களின் அதிகாரம் அனைத்திற்கும் பாதுகாவலராக இருந்தார். அவையின் பொறுப்பாளராக சபாநாயகர் திகழ்வார், சபையின் தலைமை பேச்சாளராக இருந்து சபை நடவடிக்கைகளுக்கு சபாநாயகரின் முடிவே இறுதியானதாக இருக்கும். சபாநாயகர் என்பவர் அவையில் விவாதம் வாக்கெடுப்பு நடக்கும் பொழுது அவையில் ஒரு கருத்துக்கு சமமான வாக்குகள் இருக்கும் பொழுது தனது வாக்குரிமையை பயன்படுத்துவார். ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என முடிவெடுத்து அனுமதி வழங்கும் உரிமை அவருக்கே உண்டு. சபாநாயகர் மக்களவை உறுப்பினர்களில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அவரை போன்று துணை சபாநாயகரும் சபா உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றார். சபாநாயகர் தேர்வுக்குப்பின்பு துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிரதமர்: லோக்சபாவின் தலைவராக மக்காளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபையின் பெருமாண்மை உறுப்பினர்களுள் ஒருவரான பிரதமர் ஆவார். மாநிலங்களவையின் தலைவரை பிரதமர் நியமிப்பார். பிரதமர் பாராளுமன்றத்தில் நேரடி தலைவராக இருந்து உறுப்பினராகவும் செயல்படுகின்றார். நாட்டின் முக்கிய முடிவுகளை அவ்வப்போது குடியரசு தலைவருக்கு அறிவிப்பது இவரது பணியாகும். அமைச்சரவை : இந்திய பாராளுமன்றத்தில் அமைச்சரவை மூன்று வகையான அமைச்சரவைகளை கொண்டது. கேபினெட் அமைச்சர்கள் தனிபொறுப்பு வகிக்கும் மாநில அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் மக்களவை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கலைந்து போகும். மாநிலங்களவை நிரந்தரமானது ஆகும். குடியரசு தலைவர் விரும்பும் போது அல்லது தானாகவே அமைச்சரவையை கலைந்துபோகும். அமைச்சரவை பெரும்பாணை உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரையில்தான் அமைச்சரவை பதவியில் நீடிக்கும். எதிர்கட்சி தலைவர்: பாராளுமன்றத்தில் ஒவ்வொரு அவையும் ஒரு எதிர்க்கட்சி தலைவரை கொண்டிருக்கும். 1/10 பங்கு உறுப்பினர்களை கொண்ட பெரிய கட்சியே எதிர்கட்சியாக அங்கிகரிக்கப்படுகின்றது. எதிர்க்கட்சி தலைவர் ஊதியம் மற்றும் படிகள் கொண்ட கேபினெட் பதவிக்கு இணையானது ஆகும். மதிப்பீட்டு குழூ: அமைச்சரவையில் மதிப்பீட்டு குழுவில் மொத்தம் 30 உறுப்பினர்களை கொண்டுள்ளனர். மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு ஆண்டும் லோக் சபாவில் இருந்துதான தேர்வு செய்யப்படுவார்கள். மதிப்பீட்டுக்குழு அரசின் செலவுகளை கட்டுப்படுத்தும். அரசின் கொள்கைகளுக்கு ஆலோசனைகள் வழங்கும். நிர்வாக மேம்பாடு, அரசின் நிதி அறிக்கையை ஆய்ந்து தெளிவான ஆலோசனைகள் வழங்கும் பணியை செய்கின்றது. மதிப்பீட்டுகூட்டு குழுவுக்கான தலைவரை மொத்த உறுப்பினர்களிலிருந்து ஒருவரை சபாநாயகர் நியமிக்கின்றார். ஒரு அமைச்சர் இக்குழுவின் உறுப்பினராக செயலாற்ற முடியாது. மதிப்பீட்டு குழுவின் பதவிகாலம் ஓராண்டு ஆகும். பொது கணக்கு குழு : பொதுக்கணக்கு குழு மிகப்பழமையானது இக்குழுவுக்கு மொத்த 22 உறுப்பினர்கள் லோக் சபாவிலிருந்தும் 15 உறுப்பினர்கள் இராஜ்ய சபாவிலிருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகின்றனர். பொது கணக்கு குழுவுக்கு மரபு அடிப்படையில் எதிர்க்கட்சி உறுப்பினரே தலைவராக இருந்து செயல்படுகின்றார். பொது கணக்கு குழு பொது செலவுகளின் கணக்குகளை ஆராய்கின்றது. மேலும் இந்திய தணிக்கை அழுவலரின் அறிக்கை குறித்து ஆராய்கின்றது. பாராளுமன்றத்தில் சக்திவாய்ந்த அவையாக இருப்பது லோக்சபா ஆகும். லோக் சபா பண மசோதாவை தாக்கல் செய்யும் உரிமையுடையது. மக்களவை சட்டமியற்றும் அதிகாரம், நிர்வாக அதிகார்ம் , நீதுத்துறை அதிகாரங்களை கொண்டுள்ளது. மக்களவை குளிர்கால கூட்டத்தொடர், கோடைகால கூட்டதொடர், மழைக்கால கூட்டத்தொடர் என மூன்று மமுறை கூட்டப்படும். மக்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 25 வயது முடிந்திருக்க வேண்டும். பணமசோதா மக்களவையில் மட்டும்தான விவாதிக்க முடியும். ஆனால் மாநிலங்கள் அவையில் 14 நாட்களுக்குள் விவாதித்து முடிவு சொல்ல வேண்டும். இல்லையெனில் மாநிலங்களவையில் ஏற்றுக்கொள்ளதாக கருதப்பட்டு அவை சட்டமாக்கப்படும். மாநிலங்களவை : மாநிலங்களவை அல்லது ராஜ்யசபா என அழைக்கப்படுகின்றது. ராஜ்ய சபா மொத்தம் 250 உறுப்பினர்கள் கொண்ட அவையாகும். இந்த அவையின் உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 12 பேர் இந்திய குடியரசு தலைவரால் மக்களவைக்கு நியமிக்கப்படுகின்றனர். மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் பதவிக்காலம் ஆறாண்டு ஆகும். மக்களவை போல் மாநிலங்கள் கலைக்கப்படுவது இல்லை ஆனால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முடிவடையும். மக்களவை கூட்டங்களை போல் மாநிலங்கள் அவை கூட்ட்ங்கள் நடககது இது தொடர்ச்சியாக நடைபெறும். இரு அவைகளிலும் ஒரு சட்டம் மசோதா தொடர்பான முடிவுகள் எடுக்க கூட்டுகூட்டம் அமைக்கப்படும். . மாநிலங்கள் அவைக்கு மறுப்பு அதிகாரங்களை கொண்டதாக கருதப்படுகின்றது. மாங்கிலங்கள் அவையின் தலைவரக துணை குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். மாநிலங்களின் முதல் கூட்டம் மே 13, 1952இல் தொடங்கப்பட்டது. கேள்விகள் பாராளுமன்றம் குறித்து போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் அறிவோம் தேர்வுகளை வெல்வோம். 1. பாராளுமன்றத்தின் அங்கங்கள் யாவை? 2. பாரளுமன்றத்தின் எத்தனை அவைகள் உள்ளன? 3. லோக் சபாவில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? 4. சபாநாயகர் என்பவர் யார்? 5. மாநிலங்கள் அவையின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்? 6. பண மசோதா என்பதை உறுதி செய்யும் அவை எது ? 7. மக்களவைக்கு குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை ? 8. மாநிலங்கள் அவையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள் 9. மக்களவை எத்தனை அமைச்சர்கள் உள்ளனர்? 10. பொது கணக்கு குழு என்பது யாது? 

அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட தரமற்ற கல்லூரிகளின் பட்டியல்

அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட  தரமற்ற கல்லூரிகளின் பட்டியல்

1. திருநெல்வேலி ஏ.ஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4937
2. ஈரோடு ஐஸ்வர்யா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2332
3. வேலூர், அன்னை மீரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1137
4. சென்னை அன்னை வேளாங்கண்ணி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1133
5. கன்னியாகுமரி, அன்னை வேளாங்கண்ணி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4999
6. காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி TNEA code 1201
7. திருவண்ணாமலை அருள்மிகு மீனாட்சி அம்மன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1503
8. திருவள்ளூர் பஜரங் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1102
9. கோவை , கேப்பிடல் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2370
10. திருச்சி, கேர் குரூப் ஆப் இன்ஸ்ட்டியூசன்ஸ் TNEA code 3841
11. தூத்துக்குடி சாண்டி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4931
12. நாமக்கல் சிஎம்எஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2635
13. நாமக்கல், டாக்டர் நாகரத்தினம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2662
14. கோவை ஈசா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2749
15. திருநெல்வேலி ஐன்ஸ்டீன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4980
16. நாமக்கல் எக்சல் பிசினஸ் ஸ்கூல்
17. நாமக்கல் எக்சல் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2664
18. வேலூர் ஜி.ஜி.ஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1506
19. காஞ்சிபுரம் ஜிகேஎம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1407
20. ராமநாதபுரம் கணபதி செட்டியார் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5924
21. சேலம் கணேஷ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2341
22. தூத்துக்குடி ஹோலிகிராஸ் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 4934
23.கன்னியாகுமரி இமானுவேல் அரசர் ஜே ஜே காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4932
24. திருவள்ளூர் இந்திரா இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1229
25. தூத்துக்குடி இன்பேன்ட் ஜீசஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4976
26. காஞ்சிபுரம் ஜே இஐ மாதாஜி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1235
27. கன்னியாகுமரி ஜேம்ஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4987
28. சென்னை ஜவஹர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 1153
29. திருவள்ளூர் ஜெயா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1221
30. தர்மபுரி ஜெயலட்சுமி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 2640
31. விருதுநகர் காமராஜ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4959
32. காஞ்சிபுரம் காஞ்சி பல்லவன் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1208
33. சிவகங்கை காரைக்குடி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் காரைக்குடி இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் TNEA code 5533
34. நாமக்கல் கிங் காலேஜ் ஆப் டெக்னாலஜி TNEA code 2631
35. காஞ்சிபுரம் லார்ட் வெங்கடேஸ்வரா இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1205
36. காஞ்சிபுரம் மாதா இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1243
37. திருநெல்வேலி மகாகவி பாரதியார் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4998
38. வேலூர் எம்எம்இஎஸ் அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர்
39. ராமநாதபுரம் முகமமது சதக் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 5907
40. சென்னை முகம்மது சதக் ஏ ஜே அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 1400
41. காஞ்சிபுரம் முகம்மது சதக் ஏ ஜே அகாடமி ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1301
42. புதுக்கோட்டை மதர் தெரசா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3846
43. கோவை என் ஆர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2351
44. கன்னியாகுமரி நாராயணகுரு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4977
45. அரியலூர் நெல்லியாண்டவர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 3466
46. காஞ்சிபுரம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1431
47. திருவண்ணாமலை ஆக்ஸ்போர்டு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1529
48. மதுரை பிடிஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5911
49. காஞ்சிபுரம் பல்லவன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1209
50. தஞ்சை, பரிசுத்தம் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் TNEA code 3833
51. கோவை , பார்க் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2716
52. கோவை, பார்க் காலேஜ் ஆப் டெக்னாலஜி TNEA code 2768
53. திருச்சி, பாவேந்தர் பாரதிதாசன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3815
54. காஞ்சிபுரம் பெரி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1452
55. திருச்சி, பிரைம் நெஸ்ட் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் TNEA code 3446
56. திருச்சி ஆர்விஎஸ் கேவிகே ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2778
57. கோவை ஆர்விஎஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2731
58. திண்டுக்கல் ஆர்விஎஸ் எஜூகேசனல் டிரஸ்ட் TNEA code 5862
59. வேலூர் ராணிப்பேட்டை இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1511
60. திண்டுக்கல் ரத்னவேல் சுப்பிரமணியம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5913
61. கோவை எஸ்விஎஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2654
62. காஞ்சிபுரம் சக்திமாரியம்மன் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1214
63. தர்மபுரி சப்தகிரி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2616
64. வேலூர் சரஸ்வதி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1515
65. திருநெல்வேலி சர்தார் ராஜா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 5968
66.கோவை சசூரி அகாடமி ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2738
67. திருப்பூர் சசூரி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2717
68. திண்டுக்கல் எஸ்பிஎம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5930
69. சென்னை ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் செயின்ட் பீ்ட்டர்ஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1127
70. சேலம் ஸ்ரீசத்யம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2346
71. ஈரோடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 2747
72. காஞ்சிபுரம் ஸ்ரீ ஆண்டாள் அழகர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1417
73. காஞ்சிபுரம் எஸ்எம்கே போர்மா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1313
74. தஞ்சாவூர், எஸ்எம்ஆர் ஈஸ்ட் கோஸ்ட் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3451
75. மதுரை சோலையம்மாள் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 5914
76. வேலூர் ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1438
77. வேலூர் ஸ்ரீ நந்தனம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1514
78. சிவகங்கை ஸ்ரீராஜராஜன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5502
79. சிவகங்கை செயின்ட் மிக்கேல் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5919
80. ஈரோடு சூர்யா இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 2748
81. விழுப்புரம் சூர்யா குரூப் ஆப் இன்ஸ்ட்டியூசன்ஸ் TNEA code 1434
82. கோவை, தமிழ்நாடு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2721
83. கோவை தமிழ்நாடு ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2728
84. திருச்சி, திருச்சி இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 3820
85. மதுரை அல்ட்ரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பார் உமன் TNEA code 5942
86. விருதுநகர் விபிஎம்எம் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் பார் உமன் TNEA code 4679
87. விருதுநகர் விபி முத்தையா பிள்ளை மீனாட்சி அம்மாள் இஞ்ஜினியரிங் காலேஜ் பார் உமன் TNEA code 4979
88. விழுப்புரம் வேதாந்தா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1136
89 திண்டுக்கல் வீரம்மாள் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 5851
தரமற்ற கல்லூரிகள் என்று வகைப்படுத்தப்பட்ட 89 இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் 12 கல்லூரிகள் காஞ்சிபுரத்திலும், 7 கல்லூரிகள் கோவையிலும் உள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த கல்லூரிகளை கவுன்சிலிங்கின் போது தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தரமற்ற கல்லூரிகள் மீது 25 முதல் 100 சதவீத மாணவர் சேர்க்கையை நிறுத்தும் அளவிலான நடவடிக்கைகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 16 ஜூன், 2019

60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?


60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?


நம் மாணவர்கள் மத்தியில், எப்போதுமே இந்த சதவீதம்தான் அதிகம் எனலாம். ஆனாலும், முதல் ரேங்க், கோல்ட் மெடலிஸ்ட் இவர்களையெல்லாம்விட, 60% முதல் 80% வரை மதிப்பெண்கள் வாங்கியவர்கள், பிற்காலத்தில், வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட உண்மை. காரணம், இவர்கள் பாடத்தைத் தாண்டி, கலை, விளையாட்டு என பிற விஷயங்களிலும் ஈடுபாடு உடையவர்களாக, முழுமையான பர்சனாலிட்டியாக இருப்பதுதான்.

+2 முடித்தவுடன் இவர்கள் என்ன மாதிரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று பார்க்கும்போது, எவர்கிரீன் படிப்புகளான மெடிக்கல், இன்ஜினியரிங் தாண்டி, ஏராளமான வித்தியாசமான தேர்வுகள் உள்ளன என்றாலும், பாப்புலரான இந்த இரண்டு வகைகளையும் நாம் போகிற போக்கில் விட்டுவிட முடியாது. எனவே, முதலில், இவை இரண்டையும் பார்த்துவிட்டு, பிறகு மற்றவற்றைப் பட்டியலிடுவோம்.

இன்ஜினியரிங் படிப்பைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், விண்ணப்பித்த அனைவருக்குமே சீட் கொடுத்தும், மீதம் காலியாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

எனவே, இன்ஜினியரிங் சீட் வாங்குவதைவிட, அப்படிப்பை வெற்றிகரமாக முடிப்பதுதான் இன்றைக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது. எனவே, இன்ஜினியரிங் படிப்பை சிறப்பாக வெற்றிகரமாக முடிக்கக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதை தெளிவாக ஆராய்ந்து, பிறகு முடிவெடுப்பது சிறப்பாக இருக்கும்.

மெடிக்கல் படிப்பை பொறுத்தவரை, தமிழகத்தில் குறைந்தளவு கல்லூரிகளே இருப்பதால், மிக அதிகளவு மதிப்பெண் வாங்கியவர்களுக்கான படிப்பாக மட்டுமே அது இருந்து வருகிறது. எனினும், MBBS என்கிற ஒரேயொரு படிப்பிற்கு மட்டும், நாம் முயற்சி செய்வதைத் தாண்டி, மருத்துவத்தில் உள்ள மற்ற படிப்புகளிலும் கவனம் செலுத்தினால், சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்றே அதிகரிக்கும். MBBS போலவே, அதே காலஅளவில் உள்ள மாற்று மருத்துவம் சார்ந்த சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி ஆகியவற்றின் மருத்துவப் பட்டப் படிப்புகளும் சமீப ஆண்டுகளில் புகழ்பெற்று வருகின்றன.

தவிர, BDS எனப்படும் பல் மருத்துவப் படிப்பு, MBBS சொல்லித்தரப்படுகிற கல்லூரிகளைவிட, சற்று அதிகமான கல்லூரிகளில், தமிழகத்தில் உள்ளதால், இவற்றில் சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்றே அதிகம். கூடவே, B.Pharm எனப்படும் மருந்தியல், B.Sc(Nursing), B.P.T எனப்படும் பிசியோதெரபி, கண் மருத்துவம் சார்ந்த ஆப்டோமெட்ரி ஆகியவையும், மருத்துவம் சார்ந்த நாம் கவனிக்க வேண்டிய படிப்புகளாகும்.

மருத்துவத்தில், மனிதர்களுக்கான மருத்துவம் தாண்டி, கால்நடைகளுக்கான மருத்துவம், காலம்காலமாக புகழ்பெற்ற ஒன்றாகும். B.V.Sc. எனப்படும் வெர்ட்னரி சயின்ஸ் படிப்பு, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியிலும், இந்தப் பல்கலையின் கீழ் இயங்கும் நாமக்கல் கல்லூரியிலும் சொல்லித் தரப்படுகிறது. தவிர, B.F.Sc. எனப்படுகிற மீன்வளம் சார்ந்த விஷயங்களை பட்டப் படிப்பாக சொல்லித் தருவதற்கென, தூத்துக்குடியில் அரசு மீன்வளக் கல்லூரி ஒன்றும் உள்ளது. இந்தக் கல்லூரியும், கால்நடை மருத்துவப் பல்கலையின் கீழ்தான் செயல்படுகிறது. இது, சமீப ஆண்டுகளில் வரவேற்பை பெற்றுவரும் இன்னொரு புதிய படிப்பாகும்.

வேளாண் துறை சார்ந்த படிப்பான B.Sc. (Agriculture), எப்போதுமே வரவேற்புள்ள ஒரு படிப்பாகும். கோவையிலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ், கோவையில் மட்டுமல்லாது, திருச்சி, பெரியகுளம் என பல்வேறு இடங்களில் உள்ள உறுப்புக் கல்லூரிகளிலும், இந்தப் படிப்பு சொல்லித் தரப்படுகிறது. வேளாண் கல்லூரிகளில், சமீப ஆண்டுகளில் அதிகம் நாடப்படும் இன்னொரு படிப்பு, Horticulture எனப்படும் தோட்டக்கலை சார்ந்த படிப்பாகும்.

தவிர, கோவை வேளாண் பல்கலையில், ஒருசில சிறப்பு இன்ஜினியரிங் பட்டப் படிப்புகளும் சொல்லித் தரப்படுகின்றன என்பது பலர் அறியாத செய்தி. B.Tech(BioTechnology), Food Process Engineering, Agricultural IT போன்ற இந்த இன்ஜினியரிங் படிப்புகளுக்கு, நீங்கள் நேரடியாக கோவை வேளாண் பல்கலைக்கு, தனியாக ஒரு விண்ணப்பம் போட வேண்டும்.

ஒரு காலத்தில், அரசியலில் நுழைய வேண்டுமானால், அதற்கு சட்டக் கல்லூரியில் சேர்வதானது, பாஸ்போர்ட் எடுப்பது போன்றது என்ற கருத்து இருந்து வந்தது. ஆனால், இடையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு, மீண்டும் சமீப ஆண்டுகளில் சட்டப் படிப்பிற்கான மவுசு கூடிவருகிறது. சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களிலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு சட்டப் படிப்பில் சேர +2வில் நீங்கள் எந்த குரூப் எடுத்திருந்தாலும் போதுமானது.

இப்படியான தொழிற் படிப்புகளுக்கான கல்லூரிகள் ஒருபுறம் இருந்தாலும், B.A., B.Sc., B.Com. போன்ற படிப்புகளை வழங்கும் கலை அறிவியல் கல்லூரிகளும், நூற்றுக்கணக்கில் புகழ்பெற்று விளங்குகின்றன. எனினும், இந்தக் கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு காலத்திலிருந்த வழக்கமான படிப்புகளிலிருந்து மாறுபட்டு, இன்று நிறைய புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. சொல்லப்போனால், இன்ஜினியரிங் கல்லூரியிலுள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோடெக்னாலஜி போன்றவை, B.Sc. படிப்புகளாக, கலை அறிவியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தவிர, சயின்ஸ் பாடங்களில்கூட, சிறப்புத் துறைகளாக மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பிளான்ட் பயாலஜி என சிறப்பு பட்டங்கள் தரப்படுகின்றன. சத்துணவு, இந்திய சுற்றுலா, ஹோம் சயின்ஸ், உளவியல் என பெண்களை மையப்படுத்தி, நிறைய சிறப்பு பட்டப் படிப்புகள், குறிப்பாக, மகளிர் கல்லூரிகளில் சொல்லித்தரப்படுகின்றன.

கலை, அறிவியல் கல்லூரிகளில் மிகவும் பிரபலமான இன்னொரு படிப்பு B.Com. என்றாலும், அதோடு சேர்ந்த படிக்க வேண்டிய இன்னும் சில கோர்ஸ்களை நம் மாணவர்கள் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அதாவதாக, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் எனப்படும் CA, காஸ்ட் அக்கவுன்டன்ட் எனப்படும் ICWAI மற்றும் கம்பெனி செக்ரட்டரி எனப்படும் ACS ஆகிய மூன்றும்தான் அவை.

ஒருகாலத்தில், பட்டப் படிப்பை முடித்தப் பிறகுதான், இவற்றை முயற்சி செய்யவே முடியும். ஆனால் இன்று, +2 முடித்து பட்டப் படிப்பில் சேர்ந்தவுடனேயே இவற்றுக்கான தொடக்கநிலைத் தேர்வுகளை எழுத முடியும் என்பதால், பட்டப் படிப்பை படித்துக்கொண்டே ஒரே நேரத்தில், இந்தத் தேர்வுகளையும் எழுதுவதால், மூன்றாண்டு காலம், விரயமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதை, ஒரு காலத்தில், பல வீடுகளில் அனுமதிக்கவே மாட்டார்கள். ஆனால் இன்று, திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அத்தனைப் படிப்புகளும், தொலைக்காட்சித் துறைக்கும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதால், அந்த எதிர்ப்பு நிலை மாறியுள்ளது. சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு சொல்லித் தரப்படுகிறது. அதேபோல், சென்னை அடையாறில் உள்ள அரசு இசைக் கல்லூரியில், இசை மற்றும் நடனம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் படிப்புகள் சொல்லித் தரப்படுவதோடு, இன்று பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் அரசு இசைக் கல்லூரிகள் உள்ளன.

உங்களின் ஓவியத் திறமையை மட்டுமே வைத்து பட்டப் படிப்பில் நுழையும் வாய்ப்பு உள்ளது தெரியுமா? சென்னை எழும்பூரிலுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு ஓவிய நுண்கலைக் கல்லூரியிலும், கும்பகோணத்திலுள்ள இதே அரசுக் கல்லூரியிலும் BFA எனப்படும் Fine Arts பட்டப் படிப்பு, பல்வேறு சிறப்பு பிரிவுகளில் சொல்லித் தரப்படுகிறது. இதில் சேர, உங்களது ஓவியத் திறமையைப் பரிசோதிக்கும் நுழைவுத்தேர்வு ஒன்று நடத்தப்பட்டு, அதன்மூலம் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள். இரண்டுமே அரசுக் கல்லூரிகள்  என்பதால், கல்விக் கட்டணமும் மிகக் குறைவுதான். இன்று தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் பல்வேறு ஆர்ட் டைரக்டர்களும் இக்கல்லூரிகளின் மாணவர்களே!

சமீப ஆண்டுகளில் பலரது கவனத்தையும் ஈர்த்துவரும் படிப்புகளில், முக்கியமான இன்னொரு படிப்பு பேஷன் டெக்னாலஜி. சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக் கல்லூரியான NIFT எனப்படும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு கல்வி நிறுவனமாகும். இங்கு பல்வேறு பிரிவுகளில் ஆடை வடிவமைப்பு, ஆடை உற்பத்தி போன்ற டிசைனிங் கோர்ஸ்கள், பட்டப் படிப்புகளாக சொல்லித் தரப்படுகின்றன.

சமையல் சார்ந்த படிப்பான கேட்டரிங் டெக்னாலஜி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பும், எப்போதுமே நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் படிப்புகளாகும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கப்பல், விமானம் என உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து வேலைபார்க்கும்  வாய்ப்பை கேட்டரிங் படிப்புகள் தருவதால், அதுசார்ந்த ரசனை உள்ளவர்கள் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். அதேபோல், பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் விளம்பரம் என, ஊடகத்துறை வளர்ச்சி, இன்று சிறப்பாகவே இருந்து வருவதால், மீடியா படிப்புகளான B.Sc. Visual Communication, Mass Communication, Public Relations, Journalism, Electronic Media போன்ற பட்டப் படிப்புகளும், நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய படிப்புகளாகும்.

எனவே, காலங்காலமாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரேமாதிரியான படிப்புகளையே தேர்ந்தெடுக்காமல், உங்கள் ரசனை மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, வித்தியாசமான ஒரு பட்டப் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பதே சிறப்பான அமையும்.

வெள்ளி, 14 ஜூன், 2019

குரூப் 4 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!-6000%2B காலிப்பணியிடங்கள்!!!



குரூப் 4 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!-6000%2B காலிப்பணியிடங்கள்!!!


நீங்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் இத்தேர்வினை எழுதலாம்.

English-ல TNPSC நுஒயஅ எழுதுபவர;கள் நித்ரா TNPSC English CCSE IV யுpp-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
CCSE IV தேர்வில் வெற்றி பெற்றால் என்னென்ன பணிகள் கிடைக்கும்?

வி.ஏ.ஒ (VAO-Village Administrative Officer), Junior Assistant, Bill Collector, Grade-I, Field Surveyor, Typist, Steno-Typist (Grade-III) உள்ளிட்ட பணிகள் உங்களுக்காக காத்திருக்கிறது.

எவ்ளோ காலிப்பணியிடங்கள் இருக்கு?

VAO-397, Junior Assistant-2,792, Bill Collector, Grade-I-34, Field Surveyor-509, Draftsman-74, Typist-1,901, Steno-Typist (Grade-III)-784இ மொத்தமாக 6,491 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்ளோ சம்பளம்?

VAO, Junior Assistant, Bill Collector, Grade-I, Field Surveyor, Draftsman, Typist-Rs.19,500-62,000/-, Steno-Typist (Grade-III)-Rs.20,600-65,500/-

வியாழன், 13 ஜூன், 2019

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) Post Graduate Assistants(PG Assistants) / Physical Education Directors Grade - I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) Post Graduate Assistants(PG Assistants) / Physical Education Directors Grade - I  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

%26சூஒ1கு4யு0;தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

%26சூஒ1கு4யு0;இந்த தேர்விற்கு June 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

%26சூஒ1கு4யு0;இதற்கான தேர்வு தேதி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

%26சூஒ1கு4யு0;பணியின் பெயர் : Post Graduate Assistants(PG Assistants) / Physical Education Directors Grade - I

%26சூஒ1கு4யு0;வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

முக்கிய தகவல்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள் - 24.06.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 15.07.2019

CBT தேர்வு தேதி - விரைவில் அறிவிக்கப்படும்

கல்வித்தகுதி:

%26சூஒ1கு4யு0;PG Assistant: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் %26 இளங்கலை கல்வித் துறையில் (பி.இ.டி.) / பி.ஏ.இ.டி. / பி.சி.இ.சி. பெற்றிருக்க வேண்டும்.

%26சூஒ1கு4யு0;Physical Education Directors: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் (டீ.P.நுன/டீPநு/டீயஉhநடழச ழக ளுஉநைnஉந (டீ.ளுஉ) in ர்நயடவா யனெ Phலளiஉயட நுனரஉயவழைn %26 னுநபசநந in ளுpழசவள றiவா யவ டநயளவ 55% அயசமள) பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பு%2Bர்வ இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

%26சூஒ1கு4யு0;பாடவாரியாக நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையும் TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 2144

ஊதிய விவரம்: (Rs.36900 - 116600) (Level - 18) in வாந அiniஅரஅ pயல ழக Rs.36900.

தேர்வு கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் : %26. 500 /-

SC, SC, ST மற்றும் PwD விண்ணப்பதாரர்கள் - %26. 250 /-

கட்டண முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

அதிகாரப்பு%2Bர்வ அறிவிப்பு , ஆன்லைன் விண்ணப்பங்கள் போன்ற TRB பற்றிய தகவல்களை அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்


ஞாயிறு, 9 ஜூன், 2019

TNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள். :


TNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள். :

1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும்

திருமணமாகி இருந்தால் துணையின் பெயர், விலாசம் போன்றவற்றை நிரந்தர பதிவு மற்றும்

விண்ணப்பத்தில் சரியாகக் குறிப்பிடுங்கள்.

2. பிறந்த தேதி, ஜாதி பிரிவு, ஜாதி உள் பிரிவு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாதம், வருடம் போன்றவை கவனமாக பதிவிட வேண்டியது மிகவும் முக்கியம்.

தவறாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் இவற்றால்

திருத்தங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்காது.

3. எப்போதும் அறிவிப்பு வந்த உடன் விண்ணப்பம் செய்ய வேண்டாம். இரு நாட்கள் கழித்து விண்ணப்பம் செய்வது நலம். ஏனெனில், கணினி சர்வர் பிரச்சினை, ஆன் லைன் பணப்பரிவர்த்தனை சம்பந்தமாக சில

பிரச்சினைகள் வரலாம்.

4. அதே சமயம்,மாதம் முழுவதும் விண்ணப்பிக்காமல் இருந்து விட்டு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் கடைசி இரு நாட்களில் விண்ணப்பிப்பதை தவிர்க்கவும். ஒட்டு மொத்தமாக அனைவரும் இறுதி கட்டத்தில் விண்ணப்பிப்பதனால் கணினி சர்வரின் செயல்பாடு பாதிக்கப்பட்டு உங்களால் விண்ணப்பிக்க இயலாமல் போகலாம்.

6. கூடுமானவரை மொபைலில் விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும். வீட்டில் கணினி இருந்தால் பயன்படுத்தவும், அல்லது ஏதுனும் கணினி மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும். மொபைலில் விண்ணப்பிக்கும் பொழுது, உங்களுக்கே தெரியாமல் ஏதேனும் எண்கள் அல்லது எழுத்துக்கள் கூடுதலாக அச்சாகி விடலாம்அல்லது தவறுகளை கண்டுபிடிப்பது கடினம்.

7. விண்ணப்பத்தில் மின்-அஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களை பதிவு செய்யும் பொழுது உங்களுக்கு சொந்தமான மின் அஞ்சல் மற்றும், நீங்கள் தற்போது பயன்படுத்தி வரும் அலைபேசி எண்களைக் கொடுக்க வேண்டும். உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களின் எண்களை, மின் அஞ்சலைக் கொடுக்க வேண்டாம்.

அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில், நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெறும் வேளையில் உங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற தகவல்களை - அழைப்புகளை உங்களால் பெற முடியாமல் போகலாம்.

8. தேர்விற்கு தேர்வு கட்டணம் கட்டுவது என்பது மிகவும் முக்கியம். SC, ST பிரிவுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள், மற்றும் மாற்று திறனாளிகளின் குறைபாட்டு சதவீதம் நாற்பது மற்றும் அதற்க்கு திறனாளிகளின் குறைபாட்டு சதவீதம் நாற்பது மற்றும் அதற்க்கு அதிகமான குறைபாடு உடையார்க்கு மட்டும் நிரந்தர கட்டண விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

எனவே உங்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த சந்தேகம் இருப்பின் கட்டணத்தை கட்டிவிடுவது மிகவும் நன்று.

9. மூன்று முறைக்கு மேல் கட்டண சலுகையை பயன்படுத்தி இருந்தால் சான்றிதழ் சரிபார்ப்பில் பொது போட்டியில் இருந்து விலக்கப் படுவீர்கள்.

10. சான்றிதழ் எண்கள் மற்றும் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதிகளை நன்கு கவனித்து பதிவு செய்ய வேண்டும்.

*Mathi Academy*

11. உங்களது விண்ணப்பித்தினை நீங்கள் பூர்த்தி செய்வது நன்று. கணினி மையங்கள் மற்றும் உங்களது நண்பர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பின் நீங்கள் அருகில் இருக்க வேண்டும்.

உங்களது சான்றிதழ் எண், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதி போன்றவற்றை பதிவு செய்யும் பொழுது சிறிது தவறு நேரிட்டாலும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாவது நீங்கள்தானே தவிர விண்ணப்பிக்க உதவியர்கள் அல்ல.

தற்போது TNPSC -விண்ணப்பத்தில் எடிட்டிங் வாய்ப்பையும் கொடுப்பது அரிதாகி வருகிறது. சில தகவல்களை மாற்ற முடியாமல் செய்து விடுகிறார்கள்.

12. நீங்கள் நிரந்தர பதிவில் சில தவறுகள் ஏற்கனவே செய்து இருந்தாலும், விண்ணப்பத்தில் சரியாகக் கொடுக்க முயற்சியுங்கள்.

TNPSC-ல் எந்த ஒரு தேர்விற்கும், அதற்க்காக விண்ணப்பிக்க பட்ட விண்ணப்பத்தின் தகவல்களிலே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதனை நினைவில் கொள்க.

13. எந்த தேர்விற்கு விண்ணப்பித்தாலும், அந்த தேர்விற்க்கென்று கொடுக்கப்பட்டு இருக்கும் அறிவுரைகளை நன்கு படித்துப் பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும். படிக்காமல் விண்ணப்பிப்பது தவறு.

14. தமிழ் வழியில் படித்து இருப்பின் அதனை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்து இருந்தால் நீங்கள் குரூப் -4 மற்றும் VAO தேர்வுகளுக்கு மற்றும் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்.

இளநிலை தமிழ் வழியில் படித்து இருந்தால் குரூப் -1, குரூப் -2 மற்றும் குரூப் -2A போன்ற தேர்வுகளுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு பெற தகுதியானவர். இந்த தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தமிழ் வழி சான்றிதழை பயன்படுத்த கூடாது.

15. புகைப்படம் அண்மையில் எடுத்த புகைப்படத்தைப் பயன்படுத்துதல் நலம்.

16. கட்டண தேர்வினை Credit Card/ Debit Card போன்றவற்றின் மூலம் செலுத்துதல் நலம். உங்களுக்கு விரைவாக கட்டணம் அவர்களிடம்

(TNPSC) சென்று விட்டதற்கான ஒப்புதல் கிடைக்கும்.

17. தபால் அலுவலகம் மூலம் கட்டண சலுகை செலுத்துபவர்கள் இறுதி நாட்களில் விண்ணப்பம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

தபால் மூலம் கட்டணம் செலுத்தும் பொழுது உங்களது பணம் அவர்களிடம் சென்றடைய மூன்று வேலை நாட்கள் ஆகும்.

18. விண்ணப்பித்து முடிந்த உடன் வரும் உங்கள் விண்ணப்பத்தின் கோப்பினை, உங்கள் மின் அஞ்சலில் சேமித்து வைத்துக் கொள்வது நலம். பின்னாளைய தேடுதல்களுக்கு உதவும்.

19. தமிழ் வழி, மாற்று திறனாளி, முன்னாள் ராணுவ வீரர், ஆதரவற்ற விதவை, ஏற்கனவே அரசு ஊழியர் போன்ற தகவல்களை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.

இவற்றை குறிப்பிட தவறி விட்டு, பின்னாளில் அதற்கான அத்தாட்சியைக் கொண்டு சென்றால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நீங்கள் அதற்கு உண்டான சலுகையை இழக்க நேரிடும்.

20. ஒவ்வொரு தேர்விற்கும் உரிய கல்வி தகுதி மற்றும் தொழில் நுட்பத் தகுதியினை அறிவிப்பு வந்த தேதிக்கு முன்னாள் முடித்து இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் சான்றிதழ் சரி பார்ப்பில் நீக்கப் படுவீர்கள்.

சனி, 8 ஜூன், 2019

TET தேர்வு எழுதுவோரின் கவனத்திற்கு !!


TET தேர்வு எழுதுவோரின் கவனத்திற்கு !!

📝 ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 தாள் 2-க்கான தேர்வு இன்று நடைபெறுகிறது.

📝 தேர்வு அறைக்கு அரைமணி நேரம் முன்னதாகவே செல்ல வேண்டும். ஹhல் டிக்கெட்டை மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும்.

📝 தேர்வு மையத்தில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்கு இன்னொரு புகைப்படத்தை கொடுக்க வேண்டும்.

📝 மேலும் அரசின் அடையாள அட்டைகளான ஆதார், பான், பாஸ்போர்ட் ஆகியவற்றையும் எடுத்து வர வேண்டும்.

📝 தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

📝 மொபைல் போன் உட்பட மின்னணு பொருட்களை தேர்வறைக்குள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

📝 தேர்வு மேற்பார்வை பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுகின்றனர்.

📝 வினாத்தாளை கையில் வாங்கிய உடன் அதை நன்றாக, நிதானமாக வாசித்துப் பாருங்கள். ஒரு முறைக்கு இரு முறை கேள்வியை வாசித்துப் பதில் அளித்தாலே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

📝 தெரிந்த கேள்விகளுக்கு முதலிலேயே பதில் எழுதி விடுங்கள். தேர்வு எழுதிக் கொண்டே இருக்கும் போது ஏதாவது ஒன்று தெரியவில்லை என்றால் அதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்து நேரத்தை வீண் செய்யக் கூடாது.

📝 தெரியாத கேள்விகளை விட்டுவிட்டு நன்றாக தெரிந்த மற்ற கேள்விகளுக்கு முதலில் விடையளிக்க வேண்டும். பின்பு தெரியாத மற்ற கேள்விகளுக்கு கேள்வியை நன்கு வாசித்துப் பார்த்து அதனுடைய தொடர்புடைய பதிலைத் தேர்வு செய்து விடையளிக்க வேண்டும்.

📝 ரிலாக்சாக தேர்வு எழுதுங்கள். தன்னம்பிக்கையோடு தைரியத்தோடு தேர்வை எதிர் கொள்ளுங்கள்.

TET தேர்வில் வெற்றி பெற MBM ACADEMY ன் வாழ்த்துக்கள்..!!




TET Exam 2019 உளவியல் வினா விடைகள்


TET Exam 2019
உளவியல் வினா விடைகள்

1. ஒப்புடைமை விதி என்பது - குழுவாக எண்ணுதல்

2. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை? - ஐந்து

3. உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்

4. சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் - மெக்லீலாண்ட்

5. வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஓர் வகை - வினாவரிசை முறை

6. தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - ஏழு

7. புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது? - சு%2Bழ்நிலை

8. அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே

9. 'குழந்தைகளை நல்ல சு%2Bழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது" எனக் கூறியவர் - லிப்டன்

10. தன்னெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தலை பிரபலப்படுத்தியவர் - கார்ல்ரோஜர்ஸ்

11. வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி

12. மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது

13. வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக

14. பகற்கனவு என்பது ஒருவகை - தற்காப்பு நடத்தை

15. ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - எரஸ்மஸ்


TET - 2019 முந்தைய ஆண்டின் Original வினாத்தாள்


TET - 2019
முந்தைய ஆண்டின் Original வினாத்தாள் 

1. நெறிபிறழ் நடத்தைக் கோட்பாட்டை வழங்கியவர் - ஹூட்டன்

2. மிக நல்ல மதிப்பெண் பெற்ற இனியாவின் பொறியியல், மருத்துவம் இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது (இரண்டுக்கும் ஊக்கப்படுத்தப்பட்ட நிலையில்) என்ற மனப்போராட்டத்தின் வகை ---------- மனப்போராட்டம்

அ) விலகுதல் - அணுகுதல்
ஆ) அணுகுதல் - விலகுதல்
இ) அணுகுதல் - அணுகுதல்
ஈ) விலகுதல் - விலகுதல்

விடை : இ

3. ஒரு நபர் தன்னுடைய தனிப்பட்ட எல்லா சு%2Bழ்நிலைகளிலும் சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு திறம்பட ஒத்துப்போக உதவுவதே அறிவுரை வழங்குதல் என்று கூறியவர் - ராபின்ஸன்

4. கீழ்கண்டவற்றில் எது படித்தல் திறன் உத்தியோடு தொடர்புடையது அல்ல.

அ) சு%2Bழ்நிலைத் தயார்படுத்துதல்
ஆ) குறிக்கோள் மையம்
இ) பகல் கனவு காணுதல்
ஈ) மனதைத் தூண்டுதல்

விடை : இ

5. அறிவுரை பகர்தல் வகைகளின் எண்ணிக்கை - 3

6. குமரப்பருவத்தினரது வளர்ச்சி சார் செயல்களைத் தீர்மானிப்பது

அ) அவர்கள் வாழும் கலாச்சார அமைப்பு
ஆ) அவர்களின் உடல் உறுப்புகளின் முதிர்ச்சி
இ) தனிநபரின் விழுமிய அமைப்பு
ஈ) இவை அனைத்தும்

விடை : ஈ

7. குழந்தைகளுக்கான கற்பித்தலில் ஆசிரியர் அதிகளவு படங்களை பயன்படுத்துவதன் காரணம் - புலனீடான சாயல்களை வளர்க்க

8. நுண்ணறிவு ஈவு 120 - 140 கொண்ட குழந்தைகள் - மிக உயர்வானவர்கள்

9. மொழி அல்லது வார்த்தை தேவையற்றது

அ) கற்பனைச் சிந்தனைக்கு
ஆ) கருத்துருவாக்கச் சிந்தனைக்கு
இ) இணைப்புச் சிந்தனைக்கு
ஈ) புலனறிவுச் சிந்தனைக்கு

விடை : ஈ

10. மனவெழுச்சியை உருவாக்கும் தூண்டுதல் ---------- விளைவு உடையது. - திரள்

TET தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு !!


TET தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு !!

📝 மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது அவசியம். தமிழகத்தில் இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது.

📝 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப் படிப்புடன், இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

📝 இந்த ஆண்டு ஆசிரியர; தகுதித் தேர;வு தாள் 2-க்கான தேர்வில் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

📝 மேலும் தேர்விற்குத் தேவையான ஹhல்டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம் போன்றவற்றை தேர்விற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

📝 தேர்வுக்கு முந்தைய நாள் புதுப் பாடங்களைப் படிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் தேவையில்லாத பதட்டம் வருவதைத் தவிர்க்க முடியும்.

📝 தேர்வு எழுதும் போது படித்தவற்றை நிதானமாகச் சிந்தித்து விடையளிக்க வேண்டும். பதட்டம் இல்லாமல் நிதானமாகச் சிந்திக்கும் போது உங்களுக்கு எளிதாக படித்தவைகள் நினைவுக்கு வரும்.

📝 ஒரு வினாவிற்கான விடை நினைவில் வராமல் போனால் அதையே நினைத்துக் கொண்டு அதனுடனே போராடிக் கொண்டிருக்கக் கூடாது. அந்த நேரத்தில் அதைவிட்டு விட்டு மற்ற விடைகளை எழுத வேண்டும். கடைசியாக அந்த கேள்விக்கு யோசித்து விடையளிக்க வேண்டும்.

👉 எதிர் நிற்பது இறுதி வாய்ப்பு என நினைத்து முயலுங்கள் ....
முயலும் எந்த ஆமையும் இங்கு தோற்பதில்லை 👈


TET - 2019 வரலாறு வினா விடைகள்


TET  - 2019
வரலாறு வினா விடைகள்

1. அகில பாரதீய தலித் வர்க்க சபையை ஏற்படுத்தியவர் - அம்பேத்கார்

2. நெல்கட்டும் செவல் பகுதியை ஆட்சிபுரிந்தவர் - புலித்தேவர்

3. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு - 1799

4. கட்டபொம்மன் காலத்தில் இருந்த கலெக்டர் ஜாக்சன் எந்த மாவட்டத்தில் பணியிலிருந்தார்? - திருநெல்வேலி

5. இந்திய விடுதலைக்கு தமிழர்களே முன்னோடிகளாக திகழ்ந்தனர் என கூறியவர் யார்? - என். சஞ்சீவி

6. வேலு}ர்க் கலகமே இந்திய பெரும்புரட்சிக்கு வழிவகுத்தது எனக் கூறியவர் - கே.கே. பிள்ளை

7. 1857ல் நடைபெற்ற பெருங்கலகத்தை முதல் இந்திய விடுதலைப்போர் என குறிப்பிட்டவர் - வீர சவார்க்கர்

8. பாரக்பு%2Bரில் மங்கள் பாண்டே தன் அதிகாரியை சுட்டுக்கொல்லக் காரணம் - கொழுப்பு தடவிய தோட்டாக்களை பயன்படுத்த கூறியதால்

9. பாரக்பு%2Bரில் தன் அதிகாரியை சுட்டுக்கொன்றவர் யார்? - மங்கள் பாண்டே

10. நாட்டுமொழி செய்தித்தாள்கள் சட்டம் மற்றும் ஆயுதங்கள் சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டன? - 1878

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. திரு.வி.க எந்த இதழ்களின் வாயிலாக தொழிலாளர் முன்னேற்றம் பெறப் பாடுபட்டார்?
தேசபக்தன், நவசக்தி

2. திரு.வி.க உடல் தளர்ந்த பொழுது எழுதிய நு}ல் எது? யார் உதவியுடன் வெளியிட்டார்? - படுக்கைப் பிதற்றல், மு. வரதராசனார் உதவியுடன் வெளியிட்டார்

3. திரு.வி.க-வின் மனைவியின் பெயர் என்ன? - கமலாம்பிகை அம்மையார்

4. மனைவியை இழந்த திரு.வி.க. என்னக் கூறினார்? - 'நான் தனியாக வாழவில்லை, தமிNழாடு வாழ்கிறேன்" என்றார்

5. 'பேசுத் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும் நாட்டையும் பழித்த வனாவான்" எனக் கூறியவர் யார்? - திரு.வி.க

6. வழாநிலை என்றால் என்ன? -இலக்கண முறைப்படி எழுதுவதும், பேசுவதும் வழாநிலை எனப்படும்

7. வழாநிலை எத்தனை வகைப்படும்? அவை யாவை? -ஆறு வகைப்படும்
1. திணை வழாநிலை
2. பால் வழாநிலை
3. இட வழாநிலை
4. கால வழாநிலை
5. வினா வழாநிலை
6. விடை வழாநிலை

8. வழு என்றால் என்ன? - இலக்கண முறையின்றிப் பேசுவதும், எழுதுவதும் ஆகும்

9. வழுவமைதி என்றால் என்ன? - இலக்கண முறைப்படி தவறு என்றாலும் ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதாகும்

10. தேசிக விநாயகம் பிள்ளை எங்கு பிறந்தார;? - கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூர;.


TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET - 2019
அறிவியல் வினா விடைகள்

1. DNA-வின் செயல்பாடுகளை புரதச்சேர்க்கை மற்றும் எதன் உருவாக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது? - RNA

2. DNA மூலக்கூறின் விட்டம் - 20A°

3. ரைபோ நியு%2Bக்ளிக் அமிலம் ---------- என அழைக்கப்படுகிறது - RNA

4. நியு%2Bக்ளியோடைடுகள் எத்தனை வகைப்படும்? - 4

5. பயிர்ப் பெருக்க முறைகளில் இம்முறையானது ------------ என அழைக்கப்படுகிறது - புரோட்டோபிளாச இணைவு

6. பருத்தியில் மகுட கழலையை (Crown gall) ஏற்படுத்துவது - பாக்டீரியா

7. ரெஸ்ரிக்‌ஷன் நொதியைக் கொண்டு DNA மூலக்கூறை எந்த இடத்தில் துண்டிக்காலம்? - நியு%2Bக்ளியோடைடு வரிசையில்

8. அயல் ஜீனை பெற்ற இருவித்திலைத் தாவரம்

A) நெல்
B) மக்காச்சோளம்
C) கோதுமை
D) சு%2Bரியகாந்தி

விடை : D) சு%2Bரியகாந்தி

9. ஒளிச்சேர்க்கையின் போது வெளியாகும் வாயு - ழு2

10. ஒளிசுவாசம் எவ்வாறு அழைக்கப்படுகிறது - ஊ2 சுழற்சி


ஆசிரியர் தகுதி தேர்வு முக்கிய வினாக்களும் பதில்களும்

 ஆசிரியர் தகுதி தேர்வு- முக்கிய வினாக்களும் பதில்களும்...

MBM Academy : 8ஆம் வகுப்பு - வரலாறு 

1. அக்பரது அரசவையில் வருவாய் துறை அமைச்சராக இருந்தவர் - இராஜதோடர்மால்

2. ஜஹhங்கீரால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜூன்சிங்

3. குருதேஜ்பகதூர் யாரால் தூக்கிலிடப்பட்டார் - ஒளரங்கசீப்

4. கால்சா என்ற இராணு அமைப்பை உருவாக்கிய சீக்கிய குரு - குருகோவிந்த் சிங்

5. கொரில்லா போர் முறையை நன்கறிந்தவர்கள் - மராத்தியர்கள்

6. மலை எலி என்றழைக்கப்பட்டவர்? - சிவாஜி

7. சிவாஜி சத்ரபதி என்ற பட்டத்தை எப்போது சு ட்டிக்கொண்டார் - 1674

8. அஷ்டப்பிரதான் என்றழைக்கப்பட்ட எட்டு அமைச்சர்கள் யார் அரசவையில் இருந்தனர்? - சிவாஜி

9. மூன்றாம் பானிப்பட்ட போர் எப்போது நடைபெற்றது? - 1761

10. சிவாஜியின் காப்பாளர் யார்? - தாதாஜி கொண்ட தேவ்

11. சிவாஜியை கொல்வதற்கு பிஜப்பு ர் சுல்தானால் அனுப்பப்பட்ட நபர் - அப்சல்கான்

12. சிவாஜி காலத்தில் சவுத் மற்றும் சர்தேஷ் முகி என்பன - வரிகள்

13. ஆட்டோ மானிய துருக்கியர் காண்ஸ்டாண்டி நோபிளை எப்போது கைப்பற்றினார்கள்? - 1453 

14. இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்த முதல் ஐரோப்பிய நாடு - போர்த்துகீசிய நாடு

15. இந்தியாவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் - வாஸ்கோடகாமா
[08/06, 8:08 PM] MBM:

 *உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு*

*ஜனவரி*
01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.
05 - உலக டீசல் எந்திர தினம்
06 - உலக வாக்காளர் தினம்
08 - உலக நாய்கள் தினம்
09 - உலக இரும்பு தினம்
12-தேசிய இளைஞர் தினம் 
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
27 - World Fuckers Day
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம் 

*பிப்ரவரி*
01 - உலக கைப்பேசி தினம்
03 - உலக வங்கிகள் தினம்
14 - உலக காதலர் தினம்
15 - உலக யானைக்கால் நோய் தினம்
19 - உலக தலைக்கவச தினம்
24 - தேசிய காலால் வரி தினம் 
25 - உலக வேலையற்றோர் தினம்
26 - உலக மதுபான தினம்
28- தேசிய அறிவியல் தினம்

*மார்ச்*
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
29 - உலக கப்பல் தினம்

*ஏப்ரல்*
01 - உலக முட்டாள்கள் தினம்
02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள்  தினம்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம் 
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
15 - உலக பசும்பால் தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

*மே*
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
09 - உலக கணிப்பொறி தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம் 
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
18 - உலக டெலஸ்கோப் தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
27 - உலக சகோதரர்கள் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
30 - உலக முதிர்கன்னிகள் தினம்
31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்

*ஜீன்*
01 - உலக டயலசிஸ் தினம்
02 - உலக ஆப்பிள் தினம் (Apple Sys)
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
10 - உலக அலிகள் தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
25 - உலக புகையிலை தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

*ஜீலை*
01 - உலக மருத்துவர்கள் தினம்
08 - உலக யானைகள் தினம்
10 - உலக வானூர்தி தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
14 - உலக மஞ்சள் தினம் (Turmeric)
16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)

*ஆகஸ்ட்*
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம் 
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம் 
19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம் 
29 - உலக தேசிய விளையாட்டு தினம் 
30 - மாநில விளையாட்டு தினம்

*செப்டம்பர்*
05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம் 
06 - ஹிந்தி தினம்
07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)
08 - உலக எழுத்தறிவு தினம்
10 - உலக பேனா தினம்
12 - உலக மின்சார தினம்
13 - உலக மாலைக்கண் நோய் தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
20 - உலக எழுத்தாளர்கள் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
25 - உலக எரிசக்தி தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
28 - உலக எரிமலை தினம்
29 - உலக குதிரைகள் தினம்

*அக்டோபர்*
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம் 
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

*நவம்பர்*
14-குழந்தைகள் தினம் 
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
27 - உலக காவலர்கள் தினம்
28 - உலக நீதித்துறை தினம்

*டிசம்பர்*
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
15 - உலக சைக்கிள் தினம்
23 - விவசாயிகள் தினம்
25 - திருச்சபை தினம்
[08/06, 8:08 PM] MBM: 8ஆம் வகுப்பு - அறிவியல் 

1. கதிரியக்கத் தன்மையுள்ள வாயு - ரேடான்

2. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் - மெர்குரி

3. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் - புரோமின்

4. அண்டம் மற்றும் விண்மீன்களில் உள்ள முக்கியமான தனிமங்கள் - ஹைட்ரஜன், ஹீலியம்

5. அதிக உருகுநிலை கொண்ட உலோகம் - டங்ஸ்டன்

6. ஒரு சராசரி மனிதனின் உடலில் உள்ள உப்பின் அளவு - 250 கிராம்

7. கிருமி நாசினியாக பயன்படும் வேதி பொருள் - சலவைத்தூள்

8. மனித உடலில் அதிகளவில் உள்ள தனிமம் - ஆக்ஸிஜன்

9. பலு}ன்களில் நிரப்பப்படும் வாயு - ஹீலியம்

10. ஒளிரும் விளக்குகளில் பயன்படும் வாயு - கிரிப்டான்

11. விளம்பரங்களில் பயன்படும் ஒளிரும் விளக்குகளில் பயன்படும் வாயு - நியான்

12. டங்ஸ்டன் விளக்குகளில் பயன்படும் வாயு - ஆர்கான்

13. அதிக ஒளிரக்கூடிய விளக்குகளில் பயன்படும் வாயு - செனான்

14. பற்பசையில் பயன்படுத்தப்படும் வாயு - புளூரின்

15. நீச்சல் குளத்தை சுத்தமாக வைத்திருக்க பயன்படும் வாயு - குளோரின்
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019: கால்சா என்ற இராணு அமைப்பை உருவாக்கியவர் யார்?
ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Pயிநச-2)

8ஆம் வகுப்பு - வரலாறு 

1. அக்பரது அரசவையில் வருவாய் துறை அமைச்சராக இருந்தவர் - இராஜதோடர்மால்

2. ஜஹhங்கீரால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜூன்சிங்

3. குருதேஜ்பகதூர் யாரால் தூக்கிலிடப்பட்டார் - ஒளரங்கசீப்

4. கால்சா என்ற இராணு அமைப்பை உருவாக்கிய சீக்கிய குரு - குருகோவிந்த் சிங்

5. கொரில்லா போர் முறையை நன்கறிந்தவர்கள் - மராத்தியர்கள்

6. மலை எலி என்றழைக்கப்பட்டவர்? - சிவாஜி

7. சிவாஜி சத்ரபதி என்ற பட்டத்தை எப்போது சு ட்டிக்கொண்டார் - 1674

8. அஷ்டப்பிரதான் என்றழைக்கப்பட்ட எட்டு அமைச்சர்கள் யார் அரசவையில் இருந்தனர்? - சிவாஜி

9. மூன்றாம் பானிப்பட்ட போர் எப்போது நடைபெற்றது? - 1761

10. சிவாஜியின் காப்பாளர் யார்? - தாதாஜி கொண்ட தேவ்

11. சிவாஜியை கொல்வதற்கு பிஜப்பு ர் சுல்தானால் அனுப்பப்பட்ட நபர் - அப்சல்கான்

12. சிவாஜி காலத்தில் சவுத் மற்றும் சர்தேஷ் முகி என்பன - வரிகள்

13. ஆட்டோ மானிய துருக்கியர் காண்ஸ்டாண்டி நோபிளை எப்போது கைப்பற்றினார்கள்? - 1453 

14. இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்த முதல் ஐரோப்பிய நாடு - போர்த்துகீசிய நாடு

15. இந்தியாவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் - வாஸ்கோடகாமா
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019:

பொதுத்தமிழ்

நு}லும் நு}லாசிரியரும் அறியும் திறன்:-

1. மருமக்கள் வழி மான்மியம் எனும் நு}லின் ஆசிரியர் யார்? - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

2. பாண்டியன் பரிசு எனும் நு}லின் ஆசிரியர் யார்? - பாரதிதாசன்

3. ஆத்திசு டி எனும் நு}லின் ஆசிரியர் யார்? - ஒளவையார்

4. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் எனும் நு}லின் ஆசிரியர் யார்? - பாரதிதாசன்

5. நல்வழி எனும் நு}லின் ஆசிரியர் யார்? - ஒளவையார்

6. கொன்றைவேந்தன் எனும் நு}லின் ஆசிரியர் யார்? - ஒளவையார்

7. நறுந்தொகை எனும் நு}லின் ஆசிரியர் யார்? - அதிவீரராம பாண்டியர்

8. மனோன்மணீயம் எனும் நு}லின் ஆசிரியர் யார்? - சுந்தரனார் 

9. மலரும், மாலையும் எனும் நு}லின் ஆசிரியர் யார்? - தேசிக விநாயகம் பிள்ளை

10. ஆசியஜோதி எனும் நு}லின் ஆசிரியர் யார்? - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

11. குயில் பாட்டு எனும் நு}லின் ஆசிரியர் யார்? - பாரதியார்

12. உமர் கய்யாம் பாடல்கள் எனும் நு}லின் ஆசிரியர் யார்? - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

13. நீதிநெறி விளக்கம் எனும் நு}லின் ஆசிரியர் யார்? - குமரகுருபரர்

14. இருண்ட வீடு எனும் நு}லின் ஆசிரியர் யார்? - பாரதிதாசன்

15. என் கதை எனும் நு}லின் ஆசிரியர் யார்? - நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019 : கல்வி உளவியல் வினா விடைகள்...!!

ஆளுமையும் அளவிடுதலும்

1. ஆளுமையைத் தீர்மானிக்கும் உயிரியல் காரணி எது? - நரம்பு மண்டலம்

2. தர்க்கரீதியான சிந்தனையுடன் தொடர்புடையது - விரி சிந்தனை

3. ஒல்லியாக ஒட்டிய மார்பும், குறுகிய தோள்களும் உடையவர் (யுநளவாநniஉ) கொண்டிருக்கும் ஆளுமை - ஷிஸோனதம்

4. செந்தரச் சோதனை மூலம் மாணவனின் ----------- ஐ அளவிடலாம் - ஆளுமை, மனப்பான்மை, ஆர்வம்

5. கீழ்க்கண்டவற்றில் எது ஆளுமையின் பண்பு?
யு) ஆளுமை தனித்தன்மை கொண்டது
டீ) ஆளுமையை அளவிடலாம்
ஊ) மரபு சு ழலால் ஆளுமை விளைகிறது. 
னு) இவை அனைத்தும் சரி
விடை : னு) இவை அனைத்தும் சரி

6. சமூகக் கற்றல் கொள்கைகளுக்கு அடிப்படையாக அமைந்த கருத்துக்களைக் கூறியவர் - ஸ்கின்னர்

7. ரோர்ஷாக் என்பவரின் மைத்தடச் சோதனை எதனை அளவிட உதவுகிறது?- ஆளுமை

8. சுக விருப்பமுள்ள ஆளுமை (ஏளைஉநசழவயnயை) எனும் ஆளுமையைப் பற்றிக் குறிப்பிடும் அறிஞர் - ஷெல்டன்

9. ஆக்கத்திறன் கீழ்கண்ட எந்த ஒன்றுடன் தொடர்புடையது?
யு) அடைகாத்தல்
டீ) தயாரித்தல்
ஊ) முடிவெடுத்தல்
னு) ஊக்குவித்தல்
விடை : ஊ) முடிவெடுத்தல்

10. உளப் பண்புகள் - கூறுகள்(வுசயவை யுppசழயஉh) மூலம் அளவிடப்படுவது - ஆளுமை

11. மைத்தடம் சோதனையை பயன்படுத்தி அறிவது - ஆளுமையை

12. ஆளுமையைக் குறிக்கும் பர்சனாலிடி என்ற சொல் ------------ மொழியிலிருந்து வந்தது - இலத்தீன்

13. தடையில்லா இணைத்தற் சோதனையை (குயுவு) உருவாக்கியவர் - யு ங்

14. ரோர்ஷாக் (சுழசளஉhயஉh) என்பவரின் மைத்தடச் சோதனை மிகவும் எதற்கு பிரிசித்தமானது? - ஆளுமை

15. ரோர்ஷாக் (சுழசளஉhயஉh) என்பவரின் மைத்தடம் சோதனையில் எது அடங்காது? - தனித்தன்மை
[08/06, 8:08 PM] MBM: TET Exam 

8ஆம் வகுப்பு - வரலாறு 

1. தக்கர்களை அடக்க யார் தலைமையில் பெரும் படையொன்று வில்லியம் பெண்டிங் அமைத்தார் - மேஜர் ஸ்லீமென்

2. நரபலி கொடுக்கும் வழக்கம் எப்பகுதி மக்கள் கொண்டிருந்தனர்? - ஒரிசாவில் வாழ்ந்து வந்த மலைவாழ் மக்கள்

3. வாரிசு இழப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் - டல்ஹெளசி

4. டல்ஹெளசி காலத்தின் கோடைக்கால தலைநகராக செயல்பட்ட இடம் - சிம்லா

5. வாரிசு இழப்புக் கொள்கையின்படி இணைக்கப்பட்ட முதல் நாடு - சதாரா

6. இருப்புப்பாதை முதன்முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? -1853

7. நாட்டின் முதல் இருப்புப்பாதை அறிமுகப்படுத்தப்பட்ட பகுதி - பம்பாய் - தானே

8. இந்திய இருப்புப் பாதையின் தந்தை எனப்படுபவர் - டல்ஹெளசி

9. நாடு முழுவதும் தபால் மற்றும் தந்தி அலுவலகங்கள் யாருடைய ஆட்சியின் போது அமைக்கப்பட்டது? - டல்ஹெளசி பிரபு

10. சார்லஸ் உட்ஸ் கல்விக்குழு எப்போது அமைக்கப்பட்டது? - 1854

11. விதவைகள் மறுமணச்சட்டம் எப்போது இயற்றப்பட்டது? - 1856

12. நவீன இந்தியாவை உருவாக்கியவர் - டல்ஹெளசி பிரபு

13. சென்னை - அரக்கோணம் இருப்புப்பாதை எப்போது அமைக்கப்பட்டது? - 1856

14. இந்தியாவில் அஞ்சல் வில்லையை அறிமுகப்படுத்தியவர் - டல்ஹெளசி

15. முதல் இந்திய சுதந்திர போர் என்றழைக்கப்படும் பெரும்புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1857
[08/06, 8:08 PM] MBM: 8ஆம் வகுப்பு - வரலாறு 

1. அக்பரது அரசவையில் வருவாய் துறை அமைச்சராக இருந்தவர் - இராஜதோடர்மால்

2. ஜஹhங்கீரால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜூன்சிங்

3. குருதேஜ்பகதூர் யாரால் தூக்கிலிடப்பட்டார் - ஒளரங்கசீப்

4. கால்சா என்ற இராணு அமைப்பை உருவாக்கிய சீக்கிய குரு - குருகோவிந்த் சிங்

5. கொரில்லா போர் முறையை நன்கறிந்தவர்கள் - மராத்தியர்கள்

6. மலை எலி என்றழைக்கப்பட்டவர்? - சிவாஜி

7. சிவாஜி சத்ரபதி என்ற பட்டத்தை எப்போது சு ட்டிக்கொண்டார் - 1674

8. அஷ்டப்பிரதான் என்றழைக்கப்பட்ட எட்டு அமைச்சர்கள் யார் அரசவையில் இருந்தனர்? - சிவாஜி

9. மூன்றாம் பானிப்பட்ட போர் எப்போது நடைபெற்றது? - 1761

10. சிவாஜியின் காப்பாளர் யார்? - தாதாஜி கொண்ட தேவ்

11. சிவாஜியை கொல்வதற்கு பிஜப்பு ர் சுல்தானால் அனுப்பப்பட்ட நபர் - அப்சல்கான்

12. சிவாஜி காலத்தில் சவுத் மற்றும் சர்தேஷ் முகி என்பன - வரிகள்

13. ஆட்டோ மானிய துருக்கியர் காண்ஸ்டாண்டி நோபிளை எப்போது கைப்பற்றினார்கள்? - 1453 

14. இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்த முதல் ஐரோப்பிய நாடு - போர்த்துகீசிய நாடு

15. இந்தியாவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் - வாஸ்கோடகாமா
[08/06, 8:08 PM] MBM: TET தேர்வுக்குரிய முக்கிய தமிழ் வினா விடைகள்...!

சிறப்பான பாடலடிகளைப் பாடியோர்

1. 'கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று பாடியவர் - பாரதியார்

2. 'கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் எண்ணில் கலந்தே இருக்கின்றான்" என்று பாடிய புலவர் யார்? - இராமலிங்க அடிகளார்

3. 'மழையே மழையே வா - நல்ல வானப் புயலே வா வா" என்று பாடியவர் - பாவேந்தர் பாரதிதாசன்

4. 'வைதோரைக் கூட வையாதே - இந்த வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே" என்று பாடியவர் - கடுவெளிச்சித்தர்

5. 'அன்பிலார் எல்லாந் தமக்குரியர்" என்று பாடியவர் - திருவள்ளுவர்

6. 'நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்" என்று பாடிய புலவர் - சமண முனிவர்

7. 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாடிய புலவர் - மகாகவி பாரதியார்

8. 'அன்பின் வழியது உயர்நிலை" என்று கூறியவர் - திருவள்ளுவர்

9. 'ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை" எனப் பாடியவர் - முன்னுறை அரையனார்

10. 'செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என்ற கவிஞர்? - பாரதியார்

11. 'புண்ணியனார் மண்சுமந்தார் என்றுருகுவார்" என்று பாடிய புலவர் - குமரகுருபரர்

12. 'ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை" என்று பாடியவர்? - மருதகாசி

13. 'ஓடும் சுழி சுத்தம் உண்டாக்கும் துன்னலரைச் சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும்" என்ற பாலடியைப் பாடியவர் - காளமேகப் புலவர்

14. 'கேடில் விழுச்செல்வம் கல்வி" என்று கூறியவர் - திருவள்ளுவர்

15. 'தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும் சாலை வாய்க்கன்னல் ஆலை உடைக்கும்" என்று பாடியவர் - என்னயினாப்புலவர்
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019: அறிவியல் வினா விடைகள் !!

7 ஆம் வகுப்பு - அறிவியல்

1. ஹைட்ராங்கியா மேக்ரோபைலா தாவரம் காரத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது அதன் மலரின் நிறம் - ஊதா

2. பொதுவாக நிறங்காட்டியாக ஆய்வகத்தில் பயன்படும் லிட்மஸ் எதிலிருந்து பெறப்படுகிறது - லிச்சன்ஸ் தாவரம்

3. அமிலம் லிட்மஸ் தாளுடன் வினைபுரிந்து எத்தகைய நிறமாற்றம் ஏற்படும் - நீலம் சிவப்பாக

4. காரத்தின் சுவை - கசப்பு

5. காரத்துடன் லிட்மஸ் தாளின் நிறமாற்றம் - சிவப்பு நீலமாக மாறும்

6. திரவ பெட்ரோலிய வாயு எதன் கலவையாகும்? - பியு ப்டேன், புரோப்பேன்

7. டுPபு வாயு கசிவைக் கண்டறிய சேர்க்கப்படும் பொருள் - எத்தில் மெர்காப்டன்

8. இயற்கை வாயு எதன் கலவை? - மீத்தேன், ஈத்தேன்

9. கோபர் வாயு எனப்படுவது - சாண எரிவாயு

10. முற்றுப் பெறா எரிதல் மூலம் வெளியாகும் வாயு - கார்பன்- டை - ஆக்ஸைடு

11. 1 ஏக்கர் என்பது - 4000மீ2 

12. 1 ஹெக்டேர் என்பது - 2.47 ஏக்கர்

13. அணைக்கட்டுகளில் அல்லது நீர்த் தேக்கங்களில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவை எவ்வாறு குறிப்பிடுகின்றார்கள் - ஆயிரம் மில்லியன் கனஅடி

14. தனி ஊசலின் அலைவு நேரம் எதைப் பொறுத்து அமையும்? - நீளம் 

15. ஒரு வானியில் அலகு என்பது - 1.496 ழூ 108 கி.மீ
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019:

பொதுத்தமிழ் வினா விடைகள்

சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நு}ல்கள்:

1. ′உலகப்பொதுமறை′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - திருக்குறள்

2. ′நாலடி நு}னு}று′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - நாலடியார்

3. ′தமிழ் மூவாயிரம்′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - திருமந்திரம்

4. ′அறவுரைக்கோவை′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - முதுமொழிக்காஞ்சி

5. ′இராமவதாரம்′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - கம்பராமாயணம்

6. ′புறம்′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - புறநானு}று

7. ′மணநு}ல்′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - சீவக சிந்தாமணி

8. ′கிறித்தவக் கலைக் களஞ்சியம்′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - தேம்பாவணி

9. ′வாயுரை வாழ்த்து′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - திருக்குறள்

10. ′உரையிடையிட்ட′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - சிலப்பதிகாரம்

11. ′சேந்தன்திவாகரம்′ என்றழைக்கப்படும் நு}ல் எது? - திவாகரம்

12. ′பஞ்ச சிறுகாப்பியம்′ என்ற சிறப்பிற்குரிய நு}ல் எது? - ஐஞ்சிறு காப்பியம்

13. ′திருவள்ளுவப்பயன்′ என்றழைக்கப்பட்ட நு}ல் எது? - திருக்குறள்

14. ′ஆண்டாள் திருமொழி′ என்ற சிறப்பிற்குரிய நு}ல் எது? - திருப்பாவை

15. ′முத்தமிழ் காப்பியம்′ என்று போற்றப்பட்ட நு}ல் எது? - சிலம்பு
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019 : 

7 ஆம் வகுப்பு - அறிவியல்

1. ஒரு ஒளியாண்டு என்பது - 9.46ஒ1012 கி.மீ

2. வானியல் அலகு என்பது - புவிக்கும், சு ரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு

3. ஒளி ஆண்டு என்பது - ஒளி ஒரு ஆண்டில் கடக்கும் தொலைவு

4. ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்தில் பு மியை சுற்றினால் ஒரு வினாடியில் சுற்றுக்களின் எண்ணிக்கை - 7(1ஃ2)

5. முதலாவது ஊசல் கடிகாரம் யாரால் வடிவமைக்கப்பட்டது? - கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்

6. வேகத்தின் அலகு - அஃள

7. வாகனம் செல்லும் வேகத்தை அளவிடும் கருவி - வேகமானி

8. வாகனம் கடந்த மொத்த தொலைவை அளவிடும் கருவி - ஓடோ மீட்டர்

9. காற்றின் வேகத்தை அளவிடும் கருவி - அனிமோ மீட்டர்

10. தமிழ்நாட்டில் விளையாட்டு விழா எப்போது நடைபெறும்? - ஆகஸ்ட் - செப்டம்பர்

11. விளையாட்டு விழா தமிழ்நாட்டில் எங்கு நடைபெறும்? - ஏலகிரி மலை

12. தமிழ்நாட்டில் காற்றாலைகள் அமைந்துள்ள இடம் - கயத்தாறு, ஆரல்வாய் மொழி, பல்லடம்

13. மின்கலம் முதன்முதலாக யாரால் வடிவமைக்கப்பட்டது? - லு}யி கால்வானி

14. மின்சாரத்தை உருவாக்கும் மீன் - மின் விலாங்கு மீன்

15. மின் விலாங்கு மீன் எங்கு அதிகம் வாழ்கிறது? - அமேசான், ஓரினோக்கொ நதி
[08/06, 8:08 PM] MBM: TET தேர்வுக்குரிய Psychology வினா விடைகள்..!

1. கீழ்க்கண்டவற்றில் எது ஆக்கத்திறனுடன் தொடர்பற்ற செயல்பாடு? 

யு) ஓவியம் தீட்டுதல்
டீ) இசையமைத்தல்
ஊ) சிற்பம் வடித்தல்
னு) ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வது
விடை : னு) ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வது

2. அறிஞர் கெல்லகர் குறிப்பிடும் ஆக்கத்திறனுக்கான வழிமுறை என்பது - சிறந்த திறன்மிக்க ஆசிரியரின் சேவைகள்

3. ஒரு துண்டு ஓட்டினை அளித்து அதைக்கொண்டு புதுமையாகச் செய்ய வேண்டியதைப் பற்றிக் குறிப்பிடும் சோதனை எது? - பயன் சோதனை

4. ஆக்கத்திறன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது - நெகிழ்ச்சியற்ற பாடங்கள், தேர்வுக்கு முக்கியத்துவம், எளிய வேலைகளில் உயர் தரத்தை வலியுறுத்தல்

5. மூளைத்தாக்கு (டீசயin ளவழசஅiபெ) என்பதுடன் தொடர்புடையது - ஆக்கத்திறன்

6. மூளைத்தாக்கு அல்லது கருத்துப் பொழிவு (டீசயin ளவழசஅiபெ) என்பதில் உள்ள விதிகள் மொத்தம் - 4

7. பிரச்சினைக்குரிய தீர்வை மனமே திடீரென எடுத்துக் கூறுவது ------- - உட்காட்சி கற்றல்

8. அட்டையிலான வெட்டுருவாக்களைக் கொண்டு பல புதிய உருவங்களைத் தயாரித்தல் என்பது - மொழியில்லாச் சோதனை

9. ஆக்கச் சிந்தனையின் விளைவு என்பது - புதுமை

10. மொழி, நரம்பு மண்டலம், நுண்ணறிவு ஆகிய ஆளுமைக் காரணிகளின் வரிசை - சமூகக்காரணி, உயிரியல் காரணி, உளவியல் காரணி

11. கீழ்கண்டவற்றுள் எந்தக் கருத்தை தர்ஸ்டன் ஆதரித்தார்? 

யு) பல காரணிக் கொள்கை
டீ) இரு காரணிக் கொள்கை
ஊ) குழுக் காரணிக் கொள்கை
னு) முடியாட்சிக் கொள்கை
விடை : ஊ) குழுக் காரணிக் கொள்கை

12. கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தைக் குறிப்பது - முழுவதும்

13. சராசரி நுண்ணறிவு ஈவு - 90-109

14. நுண்ணறிவுக் கோட்பாட்டின் குழுக் காரணிக் கொள்கைகளைக் கண்டுபிடித்தவர் யார்? - தர்ஸ்டன்

15. நுண்ணறிவு செயற்சோதனைகளின் (Pநசகழசஅயnஉந வநளவ ழக iவெநடடபைநnஉந) குறைபாடு - தேவைப்படும் பொருட்களின் விலை அதிகம், பயிற்சி பெற்ற சோதனையாளர்களால் மட்டுமே நன்கு பயன்படுத்த முடியும்
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019: உளவியல் பாடத்தில் உள்ள குறிப்புகள் !!

குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

தானே தொடங்கும் திறமும், குற்ற உணர்வும் (4 - 6 ஆண்டுகள்) :-

குழந்தை ஒரளவு வளர்ச்சி அடைந்ததும் ஒரு வேலையைத் தானே குழந்தை தொடங்கி செய்ய முயற்சி செய்கிறது.

குழந்தைகளின் இந்த முயற்சிக்கு பெற்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் - குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு ஊக்கம் கொடுக்கிறார்களா அல்லது ஏளனம் செய்கிறார்களா என்பதனைப் பொறுத்து குழந்தையின் தன் அடையாளம் உருவாகின்றது. குழந்தையின் சுதந்திர உணர்வை ஊக்கப்படுத்தும் போது அதனுடைய தன்னம்பிக்கை உயருகின்றது. 

அதனால் ஒரு வேலையைத் தொடங்கவும், தொடர்ந்து செய்யவும் முற்படுகிறது. ஏளனம் செய்யும்போது குழந்தை குற்ற உணர்வுகளால் பாதிக்கப்படுகின்றது.

செயல் திறனும் தாழ்வுணர்வும் (6ஆண்டுகள் முதல் குமரப்பருவம் தொடங்கும் வரை):-

குழந்தையின் உலகம் தன் வீட்டிலிருந்து அண்டை வீடு, தெரு, பள்ளி என்று விரிவடையும் போது உடல், உள்ள, சமூக திறமைகளைக் கொண்டு எந்த குழந்தை திறம்பட செயல்படுகிறதோ அக்குழந்தை பிறருக்கும் தனக்கும் பயனுள்ளதாகவும் (Pசழனரஉவiஎந) அதனால் மற்றவர்கள் மதிக்க தக்கதாகவும் வளர்கின்றது.

தொடக்க வளர்ச்சி நிலைகளில் சு ழ்நிலைகளை திறமையாக சமாளித்து இருந்தால் அக்குழந்தைக்கு தான் ஒரு செயல்திறன் மிக்க திறமைசாலி என்னும் உணர்வு கிடைக்கிறது.

திறமையற்ற குழந்தைகள் தங்களால் வெற்றி பெற முடியவில்லையே என்று உணரும்போது அவர்கள் செயல்படுபவர்களாக இல்லாமல் பார்வையாளர்களாக மட்டும் இருந்துவிடுகின்றனர். அல்லது எப்பொழுதும் தோல்வியை தழுவுபவர்களாக இருந்துவிடுகின்றனர். இதனால் அவர்கள் தாழ்வு மனப்பான்மையை அடைந்துவிடுகின்றனர்.

தொடக்கப் பள்ளிக்கு வரும் குழந்தை எந்த தன்னடையாள உணர்வுடனும் வரலாம். உடன்பாட்டு தன்னடையாள உணர்வைப் பெற்று நல்ல மன நலத்துடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளில் மனநலம் பாதிக்கப்படாமல் அதைப் பேணிக்காக்கவும் எதிர்மறை தன்னடையாளம் பெற்று மனநல குறைவுடன் வரும் குழந்தைகளுக்குப் பள்ளியில் நல்ல அனுபவங்களை ஏற்படுத்தி அவர்களிடம் உடன்பாடான தன்னடையாள உணர்வினை ஏற்படுத்தவும் ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும்.
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019:
சு ழ்நிலையியல் - நான்காம் வகுப்பு

1. இந்திய தேசிய கீதம் --------------- நொடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும் - 52

2. இந்திய தேசிய கீதத்தில் மொத்தம் --------------- வரிகள் உள்ளன - 14

3. மூங்கில் 24 மணி நேரத்தில் --------------- அடி உயரம் வரை வளரக் கூடியது - 3 அடி

4. --------------- மலர் இந்தியாவின் தேசிய மலர் ஆகும் - தாமரை

5. இந்திய தேசியக் கொடியிலுள்ள சக்கரத்தில் --------------- ஆரங்கள் உள்ளன - 24

6. இந்திய தேசிய மரமான ஆலமரம் --------------- உணர்த்துகிறது - ஒற்றுமை

7. --------------- இந்தியாவின் தேசியப் பழம் ஆகும் - மாம்பழம்

8. --------------- மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும் - பனைமரம்

9. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் --------------- ஆகும் - தஞ்சாவு ர்

10. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரம் எது? - உதகமண்டலம்

11. மலைகளின் அரசி என்று அழைக்கப்படுவது --------------- ஆகும் - ஊட்டி

12. --------------- காலத்தில் நெருப்பு கண்டு பிடிக்கப்பட்டது - பழைய கற்காலம்

13. --------------- ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமைத்த கருவி ஏர் ஆகும் - 8000

14. முதன் முதலில் ஏர் உபயோகப்படுத்திய மாநிலம் --------------- தமிழ்நாடு 

15. சக்கரம் --------------- காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது - புதிய கற்காலம்
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019: பொதுத்தமிழ் வினா விடைகள் !!

பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிதல் திறன்:

1. பட்டாசு என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - சீனவெடி

2. கலாட்டா என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - கலவரம்

3. நகல் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - ஒத்தபடி

4. யஜமான் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - முதலாளி

5. சர்க்கார் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - அரசு

6. தஸ்தாபேஜ் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - ஆவணம்

7. கெடு என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - தவணை

8. ஒண்டி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - தனிமை 

9. மெத்தை என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - மேல்வீடு

10. சவால் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - வினா

11. கிஸ்தி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - வரி

12. தாதா என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - பாட்டன்

13. பேரம் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - விற்பனை

14. திகில் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - பயம் 

15. மதகு என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - நீர் பாயும் மடை
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019: பொதுத்தமிழ் - பாடல்வரி நூலறிதல் வினா விடைகள் !!

1) 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" - எனும் அடிகளோடு தொடர்புடைய நு}ல் எது? - பாரதியார் பாடல்கள்

2) 'தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு" - எனும் அடிகளோடு தொடர்புடைய நு}ல் எது? - கவிமணி பாடல்கள்

3) 'இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி" - எனும் அடிகளோடு தொடர்புடைய நு}ல் எது? - நல்வழி

4) 'நோக்கக் குழையும் விருந்து" - எனும் அடிகளோடு தொடர்புடைய நு}ல் எது? - திருக்குறள்

5) 'இனிமைத் தமிழ்மொழி எமது- எமக்கு இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது" - எனும் அடிகளோடு தொடர்புடைய நு}ல் எது? - பாரதிதாசன் பாடல்கள்

6) 'எனைத்தானும் நல்லவை கேட்க" - எனும் அடிகளோடு தொடர்புடைய நு}ல் எது? - திருக்குறள்

7) 'கொச்சி மஞ்சள் பு ச வா
கொஞ்சி விளையாட வா" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - பச்சைக் கிளியே

8) 'மலை மேலே ஏறிநீ
வருவாய் என்றே எண்ணினோம்" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - விரைவில் வருவோம் உன்னிடம்

9) 'அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்" - எனும் அடிகளோடு தொடர்புடைய நு}ல் எது? - உலகநீதி

10) 'நல்ல நல்ல நு}ல்களை
நாடி நாமும் பயிலுவோம்" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - நாடிப் பயில்வோம்

11) 'கத்திக் கப்பல் செய்து வைத்தேன்
கால்வாய் கூடத் தோண்டி வைத்தேன்" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - வா மழையே வா

12) 'காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - ஓடி விளையாடு பாப்பா

13) 'கூரை மீது நடந்து குனிந்து நிமிர்ந்து பார்க்குது" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - சேவல் கூவுது

14) 'நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - மூதுரை

15) 'அல்லும் பகலும் அலைந்து வந்தேன் - எங்கள்
ஆழி இறைவனைக் காணவந்தேன்" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - நீண்டவழி போக வேண்டும்.
[08/06, 8:08 PM] MBM: அறிவியல் வினா விடைகள்

1. மின்னோட்டத்தின் காந்த விளைவை கண்டறிந்தவர் - கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்

2. பல வண்ணங்களின் தொகுப்பு என்ன நிறமாக இருக்கும்? - வெண்மை

3. காவலு}ர் எங்குள்ளது? - வேலு}ர் மாவட்டம்

4. ஆசியாவிலேயே பெரிய எதிரொளிப்பு தொலை நோக்கிகளில் ஒன்று தமிழ் நாட்டில் எங்குள்ளது? - காவலு}ர் வைனுபாபு ஆய்வு நிலையம்

5. நிறப்பிரிகையின் போது வெள்ள ஒளி எத்தனை நிறங்களாக பிரியும்? - 7

6. வாகனங்களின் பின்புறத்தில் உள்ள வற்றை வாகன ஓட்டுநர் எதன்மூலம் காண்பார் - குவி ஆடி

7. பல் மற்றும் கண் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஆடி - குழி ஆடி

8. தனிச்சுழி வெப்பநிலை என்பது? - (-273°ஊ) 

9. நீரின் மூலக்கூறுகள் எந்த வெப்ப நிலையில் ஓய்வு நிலையை அடைகிறது? - (-273°ஊ)

10. தாவரத்தின் வேர்ப்பகுதியில் நேரடியாக நீரைப்பாய்ச்சும் பாசனமுறைக்கு என்ன பெயர் கூறப்படுகிறது? - சொட்டுநீர் பாசனம்

11. தாவரத்தின் மீது நீரை தௌpக்கும் நீர்ப்பாசனம் என்பது? - தௌpப்பு நீர் பாசனம்

12. தமிழ்நாட்டில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுவது - பொங்கல் 

13. காரா கால்வாய் எந்த நாட்டில் உள்ளது? - துர்க்மேனிஸ்தான்

14. இந்தியாவில் மிக நீளமான பாசனக் கால்வாய் - இந்திராகாந்தி கால்வாய்

15. நைக்ரோம் எதன் கலவை? - நிக்கல்   குரோமியம
[08/06, 8:08 PM] MBM: TET தேர்வுக்குரிய பொதுத்தமிழ் வினா விடைகள்..!

பொதுத்தமிழ் - சிறப்பான பாடலடிகளைப் பாடியோர் 

1. 'நீயன்றி மண்ணுண்டோ விண்ணுண்யே ஒளியுண்டோ நிலவு முண்டோ" எனக் கேட்பவர் - ந.பிச்சமூர்த்தி

2. 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" என்று பாடியவர் - ஒளவையார்

3. 'எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு" எனப் பாடியவர்? - திருவள்ளுவர்

4. 'தோல்வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும் தூஉயம் என்பார் தொழில்" எனப் பாடியவர் - நல்லாதனார்

5. 'குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே" என்று கூறுபவர் - பு தஞ்சேந்தனார்

6. 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்று பாடியவர் - திருமூலர்

7. 'தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்" - என்று கூறுபவர் - கபிலர்

8. 'நகைசெய் தன்மையினம் பெழீ இத்தாய்துகள் பகைசெய் நெஞ்சமும் பற்றலு மொன்றுற" எனும் வரிகளைப் பாடிய புலவர் - வீரமாமுனிவர்

9. 'மலையின் மகள்கண் மணியை அனைய மதலை வருக வருகவே" என்று பாடுபவர் - குமரகுருபரர்

10. 'நு}ல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிட வேண்டும்" என்றவர் - க.சச்சிதானந்தன்

11. 'வாலெங்கே? நீண்டு எழுந்த வல்லுகிரெங்கே? நாறு காலெங்கே? ஊன்வடிந்த கண்ணெங்கே" என்று பாடியவர்? - கவி காளமேகம்

12. 'காவலரைத் தன்சேடி காட்டக் கண்டு ஈரிருவர் தேவர் நளன் உருவாச் சென்றிருந்தார்" எனப் பாடியவர்? - புகழேந்தி

13. 'முகநக நட்பது நட்பன்று" என்று உரைத்தவர் - திருவள்ளுவர்

14. 'நீலவான் மறைக்கும் ஆல்தாள் ஒற்றைக்கால் நெடிய பந்தல்" என்று பாடுபவர்? - பாரதிதாசன்

15. 'தன்நெஞ்சு அறிவது பொய்யற்க" - என்றவர் யார்? - திருவள்ளுவர்
[08/06, 8:08 PM] MBM: TET பொதுத்தமிழ

பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி

பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிதல் திறன்:

1. கேட் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழசொல் எது? - கதவு

2. பாரம் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது? - சுமை

3. டயாபெடிக் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நீரிழிவு

4. சோலி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - வேலை

5. ரீதி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - ஒழுங்கு

6. அங்கிள் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது?- மாமன்

7. ஆஸ்தி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - செல்வம்

8. குட்டை என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - சிறுதுணி

9. ஜதை என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - இரட்டை

10. அண்டா என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - பெரியபாத்திரம்

11. லாவணி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - ஒருவகைப்பாடல்

12. அசல் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - முதல்

13. சாவி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - திறவுகோல் 

14. காஜி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - நடுவர் 

15. சிபாரிசு என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - பரிந்துரை
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019 : வில்லியம் கோட்டை எங்கு உள்ளது?
ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Pயிநச-2)

8ஆம் வகுப்பு - வரலாறு 

1. வாஸ்கோடகாமா இந்தியாவின் கள்ளிக் கோட்டை வந்தடைந்த ஆண்டு - 1498

2. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு - 1600

3. ஜஹhங்கீர் அரசவைக்கு முதலில் வந்த ஆங்கிலேயர் - வில்லியம் ஹhக்கின்ஸ்

4. நீலநீர் அல்லது நீலக்கடல் கொள்கையை கொண்டு வந்த போர்த்துகீசிய ஆளுநர் - பிரான்சிஸ்கோ - டி - அல்மெய்டா

5. அம்பாய்னா படுகொலை நிகழ்ந்த ஆண்டு -1623

6. சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை எப்போது கட்டப்பட்டது? - 1640

7. வில்லியம் கோட்டை எங்குள்ளது? - கல்கத்தா

8. முதல் கர்நாடகப் போர் நடைபெற்ற ஆண்டு? -1746 - 1748

9. புனித டேவிட்கோட்டை எங்குள்ளது? - கடலு}ர்

10. பிளாசிப்போர் எப்போது நடைபெற்றது? -1757

11. பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு? - 1764

12. இருட்டறை (அ) கருந்துளை துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு -1756

13. ஆற்காட்டின் வீரர் எனப்படுபவர் - இராபர்ட் கிளைவ்

14. பிளாசிப்போருடன் தொடர்புடையவர் - சிராஜ் உத் தௌலா

15. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தவர் - சர் எலிஜா
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019:

சு ழ்நிலையியல் - நான்காம் வகுப்பு

1. கணிப்பொறியை கண்டுபிடித்தவர் ---------------- ஆவார். - சார்லஸ் பாபேஜ்

2. வலிப்பு நோய்க்கான மருந்தை கண்டுபிடித்தவர் ---------------- ஆவார். - ஆஸிமா சாட்டாஜி

3. ---------------- என்பவர் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். - ஜேம்ஸ்வாட்

4. வானொலியை கண்டுபிடித்தவர் ---------------- ஆவார். - மார்க்கோணி

5. ---------------- வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிற்சாலையிலோ அல்லது கடைகளிலோ பணியில் அமர்த்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. - 14

6. நவீன கால பெண் சிலையை ---------------- என்பவர் கண்டுபிடித்தார். - என்.ஜே. கண்டோ

7. இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ----------------. -2009

8. ---------------- நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை ஆகும். - உரிமை மற்றும் கடமை

9. ---------------- முன்பு அனைவரும் சமம். - சட்டத்தின்

10. நாம் அனைவரும் ---------------- நாளில் சுதந்திரத் தினத்தை கொண்டாடுகிறோம். - ஆகஸ்ட் 15

11. குடியரசு தினத்தன்று ---------------- தேசியக் கொடியை ஏற்றுவார். - குடியரசுத் தலைவர்

12. சுதந்திர தின நாளில் பிரதம மந்திரி தேசியக் கொடியினை ---------------- ஏற்றுவார். - செங்கோட்டையில் 

13. தீபாவளித் திருநாள் யாரைக் கொன்றதற்காக கொண்டாடப்படுகிறது? - நரகாசு ரன்

14. இரம்ஜான் பண்டிகை -------------- முக்கிய திருநாளாகும். - இஸ்லாமியர்களின்

15. புத்தரின் பிறந்தநாளை -------- தமிழ் மாத பௌர்ணமி நாளில் கொண்டாடுகின்றனர். - வைகாசி
[08/06, 8:08 PM] MBM: உளவியல் வினா விடைகள்

1. அறிஞர் கில்ஃபோர்ட் கண்டறிந்த ஆக்கத்திறன் சோதனை - தலைப்புத் தரும் சோதனை

2. ஆக்கத்திறனைக் கண்டறியும் சிக்கல் தீர்வு முறையைக் கண்டறிந்தவர் - ஆஸ்போர்ன்

3. ஆக்கத்திறனுடன் தொடர்புடையது - விரிசிந்தனை

4. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடையை நோக்கி குவிந்து செல்வது ------------- எனப்படும் - குவி சிந்தனை

5. றுயுஐளு எனப்படுவது - றுநஉhளடநசள யுனரடவ ஐவெநடடபைநnஉந ளுஉயடந

6. சைக்கோ அனாலிஸிஸ் என்ற துறையில் முன்னோடி - சிக்மண்ட் பிராய்டு

7. 'கவனித்தல் (யுவவநவெழைn) என்பது தன்னலம் சாராமல் நம் முழு வாழ்க்கையும் பார்ப்பது" என்பதனைக் கூறியவர் - ஜே. கிருஷ்ணமூர்த்தி 

8. 'அறிவாற்றலின் திறவு வாயில்கள்" - எனப்படுவன - ஐம்புலன்கள்

9. முயன்று தவறிக் கற்றல் எனும் கோட்பாட்டை முதலில் உணர்த்தியவர் - தார்ண்டைக்

10. நடத்தைக் கோட்பாட்டின் அடிப்படை - தூண்டல் - துலங்கல் தொடர்பு

11. தன் வினை (ளுநடக யஉவiஎவைல) உண்டாக்கல் (ஊசநயவiஎநநௌள) மற்றும் சமுதாயப் பங்கேற்பு ஆகியவை கீழ்க்கண்ட ஒன்றின் அம்சங்களாகும்

யு) ப்ளேவே (Pடயலறயல) முறை

டீ) டால்டன் திட்டம்

ஊ) ஹியு ரிஸ்டிக் அணுகுமுறை

னு) கிண்டர்கார்டன்

விடை : னு) கிண்டர்கார்டன்

12. சாதாரண நுண்ணறிவுக் கொண்டோரின் அறிவு விகிதம் - 90 - 110

13. றுயுஐளு-ன் வாய்மொழி அளவுகோல் (ஏநசடியட ளஉயடந ழக றுயுஐளு) கொண்டிருப்பது - 6 சோதனைகள்

14. வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில் உள்ள மொத்த சொல் சோதனைகள் (ஏநசடியட வுநளவள) - 6

15. விரிசிந்தனையைத் தூண்டும் செயல் எது? - கண்டறியும் முறை, ஒப்படைப்பு வினாக்கள், செயல்திட்ட முறை