செவ்வாய், 30 ஜனவரி, 2018

முத்தான 'மூன்று' நிலா! வானில் ஒரு அதிசயம்


முத்தான 'மூன்று' நிலா!  வானில் ஒரு அதிசயம்

சந்திரகிரகணத்து அன்று பெரிய நிலா, ரத்த நிலா, நீலநிற நிலா என மூன்றுவித நிலாவும் வானில் தோன்றும் அதிசயம்நாளை (ஜன., 31), அரங்கேற உள்ளது.ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சூப்பர் மூன்(பெரிய நிலா) ஏற்படுவது வழக்கம்.
நாளைய சிறப்பம்சம் என்னவெனில், சந்திரகிரகணத்துடன் ரத்த நிலா மற்றும் நீலநிற நிலாவும் தோன்ற உள்ளது.

சூப்பர் மூன்

பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான சராசரி தொலைவை விட, குறைவாக இருக்கும் போது 'சூப்பர் மூன்' தோன்றுகிறது. அப்போது சாதாரணமாக தெரியும் நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் தெரியும்.* பூமிக்கும் - நிலவுக்குமான சராசரி துாரம் 3,84,400 கி.மீ. 'சூப்பர் மூன்' அன்று, இதைவிட குறைவான துாரத்தில் நிலா இருக்கும்.* சூரியனை பூமி சுற்றி வர 365.26 நாட்கள் ஆகிறது. அதே போல நிலவு, பூமியைச் சுற்ற 29.32 நாள் ஆகும். இந்தக் கணக்கீட்டு முறையில் பூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது 'சூப்பர் மூன்' நிகழ்வு ஏற்படுகிறது.


சந்திர கிரகணம்

நிலவுக்கு தானாக ஒளி வெளியிடும் சக்தி கிடையாது. சூரிய ஒளியைத் தான் அது பிரதிபலிக்கிறது. சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும் போது ஏற்படுகிறது. இதனால் சூரிய ஒளி, நிலவில் படுவதை பூமி மறைத்து விடுகிறது. பூமியின் நிழல் தான், நிலவில் படுகிறது.


ரத்த நிலா

சந்திர கிரகணத்தன்று 'சூப்பர் மூன்' ஏற்படும் போது, நிலா, பூமிக்கு அருகில் வருகிறது. இதனால் சூரிய ஒளி, பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால், அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் 'ஆரஞ்சு' நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இது 'ரத்த நிலா' என அழைக்கப்படுகிறது.


நீலநிற நிலா

மாதம் தோறும் ஏற்படும் இரண்டாவது பவுர்ணமி, 'நீலநிற நிலா' என அழைக்கப்படுகிறது. இது நீல நிறத்தில் தெரிவதில்லை. அறிவியல் வரலாற்று ரீதியாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

32

சுமார் 152 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது என கூறப்படுகிறது. இது அமெரிக்காவுக்கு மட்டுமே பொருந்தும். உலகம் முழுவதற்குமானது அல்ல. ஆசியாவில் கடைசியாக இந்நிகழ்வு 1982 டிச., 30ல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 32 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது.எங்கு தெரியும்இந்தியாவில் நாளை(ஜன.31) மாலை 5 : 18 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. 6:21 முதல் இரவு 7:37 வரை முழு கிரகணம் இருக்கும்.இரவு 7:37 மணி முதல் நிழல் விலக ஆரம்பித்து 8: 41 மணிக்கு முழுமையாக விலகி விடும். இரவு 9:38 மணிக்குப்பின் நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.


எப்படி பார்ப்பது

இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அணியவேண்டிய அவசியம் இல்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்.
சந்திர கிரகணம் பரிகாரம் யாருக்கு
நாளை (ஜன., 31) சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி யார் யாருக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பஞ்சாங்கங்களில் சொல்லப்பட்டுள்ளது. கிரகணம் முடிந்த பின் பரிகார பூஜை செய்யப்பட்டு கோயில்களில் நடை திறக்கப்படும். நாளை மாலை 5:16 மணிக்கு ஏற்படும் இந்த கிரகணம் இரவு 8:40 மணி வரை நீடிக்கிறது. கிரகணம் முடிந்த பின் நீராடி சந்திரனை தரிசனம் செய்வது நன்மையளிக்கும்.புதன் கிழமையில் பிறந்தவர்களும், புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் பரிகார அர்ச்சனை செய்ய வேண்டும்.

150 ஆண்டுகளுக்கு பின் அடுத்த அதிசயம்..! "முழுசந்திர கிரகணம்"..! எப்படி தோன்றும் தெரியுமா ?


150 ஆண்டுகளுக்கு பின் அடுத்த அதிசயம்..!  "முழுசந்திர கிரகணம்"..! எப்படி தோன்றும் தெரியுமா ?

150 ஆண்டுகளுக்கு பின் அடுத்த அதிசயம்..! நாளை முழு சந்திர கிரகணம்..! எப்படி தோன்றும் தெரியுமா ?
150 ஆண்டுகளுக்கு பின் அடுத்த அதிசயம் நாளை நடை பெற உள்ளது அதாவது முழுசந்திர கிரகணம் நாளை ஏற்பட உள்ளது.
அதன்படி,
சந்திர கிரகணம்
‘சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்’ வரும் ஜனவரி 31ஆம் தேதி நிகழும்
ஆரம்பம் -மாலை 5.17
மத்திமம் -இரவு 6.59
முடிவு - இரவு 8.41
புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,அனுஷம்,கேட்டை,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் புதன் கிழமைகளில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது
கூடாதவை
பகல் போஜனம் கூடாது.
கர்ப்பிணி பெண்கள் பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரை சந்திர சாயை படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாலை 6.25 மணிக்குத் தொடங்கி 7.25 மணி வரை நீடிக்கும் இந்த அதிசய சந்திர கிரகணத்தை நம்மால் நேரிலேயே பார்க்க முடியும்.
புளூ மூன், ரெட் மூன் , சூப்பர் மூன் என மூன்று தோற்றங்களில் நிலாவைப் பார்க்கலாம்.

புளூ மூன்

பிளட் மூன்

சூப்பர் மூன்
நாளை இதுபோன்ற மூன்று தோற்றத்தில் தோன்ற உள்ள நிலாவை பார்க்க இந்த தலைமுறையினர் கொடுத்து வைத்துள்ளனர் என்றே கூறலாம். காரணம் 150 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் அதிசய சந்திர கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போதும் இருக்கும் தோற்றத்தை விட, 10 சதவீதம் பெரிய அளவில் தோற்றமளிக்கும் நிலா நாளைய தினத்தில்...
மேலும் இதனுடைய அடுத்த பதிவில் நாளை என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதை பார்க்கலாம்

செவ்வாய், 23 ஜனவரி, 2018

இந்திய ஐந்தாண்டு திட்டத்தின் பற்றிய சில தகவல்கள்:-


இந்திய ஐந்தாண்டு திட்டத்தின் பற்றிய சில தகவல்கள்:-

🍕 முதல் ஐந்தாண்டு திட்டம்1951 - 1956) ஹரார்டு டோமா மாதிரி திட்டம்
● முன்னுரிமை வேளாண்மை வளர்ச்சி (நீர்மின் திட்டம், நீர்ப்பாசன வசதிகளை பெருக்குதல்)
● திட்டம் வெற்றியடைந்தது சமுதாய முன்னேற்ற திட்டம், குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் 1952ல் தொடங்கப்பட்டது.

🍔 இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1956 - 1961) மஹலனோபிஸ் மாதிரி
● முன்னுரிமை, அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் வளர்ச்சி.
● பிலாய், துர்காபூர், ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.
● பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது

🍣   மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்: (1961 - 1966)
● முன்னுரிமை பெரும் இயந்திரங்களை நம் நாட்டிலேயே உருவாக்குதல்.
● வேளாண்மையில் சுய தேவையைப் பூர்த்தி செய்தல்.
● பாகிஸ்தான், சீனாவுடன் போர் மற்றும் பருவக்காற்று பொய்த்ததால் வறட்சி காரணமாக தோல்வி அடைந்து.
● தானியங்களை பாதுகாப்போம் என்ற திட்டம் தொடங்கப் பட்டது - 1965.
● பசுமை புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது (1965)

🍲  மூன்று ஓராண்டு திட்டங்கள் (1966 - 69)
● 1966 ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்தது
● விலைவாசி குறைந்தது

🍜 நான்காம் ஐந்தாண்டு திட்டம்: (1969 - 1974)
● தற்சார்பு அடைதல், ஏற்றுமதி அதிகரித்தல்
● நீதியுடன் கூடிய வளர்ச்சி
● விஜய நகரம், சேலம், விசாகப்பட்டினம் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது.

🍧 ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: (1974 - 1979)
● வறுமையை ஒழித்தல்
● ஓராண்டு முன்னதாகவே 1978ல் ஜனதா அரசால் நிறுத்தப்பட்டது.
● 20 அம்சத் திட்டம் (1975) அறிமுகப்படுத்தப்பட்டது
● தேசிய குறைந்தபட்சத் தேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
● உருளல் திட்டம் (1978 - 80) Rolling Plan
● TRYSEM - 1979 தேசிய கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது

🍩 ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: (1980 - 1985)
● ஏழ்மையை போக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
● தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
● ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் (1980)

🍦 ஏழாம் ஐந்தாண்டு திட்டம்: (1985 - 1990)
 ● வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல்
● ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (1989)
● வேலைக்கு உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது
● ஓராண்டு திட்டங்கள் (1990 - 1992)

🍰 எட்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1992 - 1997)
● நோக்கம்:
1. மனித வள முன்னேற்றம்
2. மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்
● மொத்த உள்நாட்டு உற்பத்தி, இலக்கை விட மிஞ்சியது
● தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட்டது.

🍞 ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: (1997 - 2002)
● சமுதாய நீதி மற்றும் சமத்துவத்துடன் ஆன வளர்ச்சி.
● மக்கள் பங்கு பெறும் அமைப்புகளை (மகளிர் சுய உதவிக் குழு, கூட்டுறவுச் சங்கங்கள்) முன்னேறச் செய்தல்

🍫  பத்தாவது ஐந்தாண்டு திட்டம்: (2002 - 2007)
● எட்டு சதவீதம் வளர்ச்சியை எட்டுதல்
● ஓராண்டுக்கு 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
● அனைவருக்கும் கல்வி அளித்தல்.
● புதுப்பிக்கப்பட்ட 20 அம்ச திட்டம் தொடங்கப்பட்டது.

🍤 பதினோறாவது ஐந்தாண்டு திட்டம்: (2007 - 2012)
● வேளாண்மை வளர்ச்சி விகிதத்தை 4% ஆக உயர்த்துதல்
● 70 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்குதல்
● குழந்தை இறப்பு விகிதம் 1/1000 மாக குறைத்தல்
● காடுகள் சதவீதம் 5% ஆக உயர்த்ததுல்
● அனைவருக்கும் சுத்தமான குடிநீர் அளித்தல்

புத்த சமயம் பற்றிய சில தகவல்கள்:-


புத்த சமயம் பற்றிய சில தகவல்கள்:-

🐝 புத்த சமயம் தோற்றுவித்தவர் - புத்தர்
🐝 புத்தரின் இயற்பெயர் - சித்தார்த்தர்
🐝 புத்தர் பிறந்த இடம் - கபிலவஸ்து (லும்பினி வனம்)
🐝 புத்தர் பிறந்த ஆண்டு - கி.மு. 567
🐝 புத்தர் தந்தை பெயர் - சுத்தோதனர்
🐝 சுத்தோதனர் சார்ந்த மரபு - சாக்கிய மரபு
🐝 புத்தரின் தாய் பெயர் - மாயாதேவி
🐝 புத்தரின் வளர்ப்பு தாய் பெயர் - மகா பிரஜாபதி கௌதமி
🐝 புத்தரின் மனைவி பெயர் - யசோதரா
🐝 புத்தரின் மகன் பெயர் - இராகுல்
🐝  புத்தரின் முதல் குரு - அரதகலமா
🐝 புத்தரின் இரண்டாவது குரு - ருத்ரகா
🐝 புத்தர் துறவறம் செல்லும் போது வயது - 29
🐝 புத்தர் உண்மையை தேடி அலைந்த ஆண்டுகள் - 7
🐝 புத்தர் தியான நிலையில் இருந்த ஆண்டுகள் - 12
🐝 சாக்கிய முனி என்று அழைக்கப்படுபவர் - புத்தர்
🐝 புத்தர் முதல் சொற்போழிவு நடத்திய இடம் - வாரனாசி அருகே சாரநாத்
🐝 புத்தர் இறந்த இடம் - குசிநகரம்
🐝 புத்தர் இறந்த ஆண்டு - கி.மு. 487
🐝 புத்தர் இறக்கும் போது வயது - 80
🐝 புத்தரின் சீடர்கள் - சரிபுட்டர், மொக்கலண்ணர், ஆனந்தர், கசபர், உபாலி
🐝 புத்த மத இரு பிரிவுகள் - ஹீனயானம், மகாயானம்
🐝 புத்தரின் போதனைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது - திரிபீடகங்கள்
1. சுத்த பீடகம்
2. வினய பீடகம்
3. அபிதம்ம பீடகம்
🐝 திரிபீடகங்கள் எழுதப்பட்ட மொழி - பாலி
🐝 புத்தரின் கொட்பாடுகளின் முக்கிய கருத்து - அறியாமை அகற்றுதல்
🐝 புத்தர் துயரங்களிலிருந்து விடுபட பின் பற்றிய முறை - எண்வழி பாதை
🐝 புத்த சமய மாநாடுகள்:-
1. இடம் - ராஜகிருஹம்
கூட்டியவர் - அஜாதசத்ரு
தலைமை - மகாகசபர்
2. இடம் - வைசாலி
கூட்டியவர் - காலசோகன் (காகவர்மன்)
3. இடம் - பாடலிபுத்திரம்
கூட்டியவர் - அசோகர்
தலைமை - மொக்காலிபுத்த திஸ்ஸா
4. இடம் - காஷ்மீர் (குந்தலவனம்)
கூட்டியவர் - கனிஷ்கர்
தலைமை - வசுமித்திரர், அசுவகோஷர்

திங்கள், 22 ஜனவரி, 2018

TNPSC பொது அறிவு முக்கிய வினாக்கள் :

TNPSC பொது அறிவு முக்கிய வினாக்கள் :

1. 1955 இந்து திருமண சட்டம் ,
பான்டுங் மாநாடு,

2.திண்டாமை ஒழிப்புச் சட்டம் 1983 ல்
திருத்தப்பட்டது

3. 1956 -
இந்து வாரிசு உரிமை சட்டம்,
இந்து இளவர் மற்றும்
காப்புரிமை சட்டம்

4. 1957 - தேசிய பண்டக கழகம் - Central Warehousing Corporation was established during 1957

5. தமிழ்நாடு மின்சார வாரியம் - 1957

6. 1958 - தேசிய
மலேரியா ஒழிப்புத் திட்டம்

7. NAFED-  National Agriculturar Co-
Operation marketing Federation

8. 1960 - பாரத
மின்னனு தொழிற்சாலை - BHEL - திருச்சி

9. 1960 - சிறார் நல வாரியம்

10. 1961 பெண் சிசுவதை தடைச் சட்டம்

11. அனிசேரா மாநாடு(பெல்கிரேடு) - NAM - 1961

12. அணுசீலன்சமிதி - தீவிரவாத இயக்கம் - 1902 - பரிந்திரகுமார் கோஷ் & பிரமோத்திர மித்திரா

13. வரதட்சனை ஒழிப்புச் சட்டம் -1984
T.N ல் திருத்தப்பட்டது)

14. 1961-62 மாநிலங்களில் நில
உச்ச வரம்பு சட்டம்

15. இந்தியாவின் முதல் தீவிரவாத இயக்கம் - மித்திரமேளா -1899 - வி.டி. சாவர்க்கர்

16. சென்னையில் வெளியான முதல் பத்திரிக்கை - மெட்ராஸ் கூரியர் - 1785- ரிச்சர்டு ஜான்ஸன்

17. இயல் ,இசை மற்றும் நாடகம்  துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் விருது-  கலைமாமனி விருது  - 1954

18. 1964 -பொதுவுடமை கட்சி பிளவு

19. கோத்தாரி தேசிய
கல்விக்குழு (ஒரே மாதிரி கல்விதிட்டம்) - 1966

20. பள்ளிகளில் National Service Scheme (NSS) - 1969

21. 1965-  பசுமைபுரட்சி திட்டம்

22. FCI -   Food Corporation of India - 1965

23. 1966 - Seed Act 1988 - the New Policy
of Seed Development

24. 1967-  முதல் ராக்கெட்
ரோகினி ,
திரைப்படம் ஆலம் ஆரா வெளியீடு

25. 1970 - தமிழ்
பயிற்று மொழி கல்லூரிகளில்

26. ஈ.வே.ரா பெரியார் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஆண்டு - 1920

27. வரதச்சனை ஒழிப்பு சட்டம் - 1961

28. மருத்துவரீதியாக
கரு கலைப்பு தடுப்புச் சட்டம் - The Indian abortion laws falls under the Medical Termination of Pregnancy (MTP) Act, which was enacted by the Indian Parliament in the year 1971 with the intention of reducing the incidence of illegal abortion and consequent maternal mortality and morbidity. The MTP Act came into effect from 1 April 1972 and was amended in the years 1975 and 2002.

29. Agriculture Price Commission - 1965

30. மிசா சட்டம் - 1971

31. 1972 - வ.உ.சி சிதம்பரம்
நினைவு தாபல்
தலைவெளியீடு, பின்
கோடு அறிமுகம்

32. MPEDA- Marine Products Exports
Development Authority - H.O. - 1972

33. முதல் கணக்கெடுப்பு - 1872
முதல் முறையான கணக்கெடுப்பு - 1881
15 வது கணக்கெடுப்பு - 2011

34. 1974 - முதல்
அணுகுண்டு சோதனை - பொக்ரான்

35. 1975 - முதல் வின்கலம்
அர்யப்பட்டா அனுப்பப்பட்டது

36. 1976 - சம ஊதிய சட்டம், கான்பூர்
செயற்கை உடல் உறுப்புகள்
தாயாரிப்பு நிறுவனம்

37. 1977-  குடும்ப நலத்திட்ட
வழிமுறைகள் பற்றிய
சிற்றுண்டி சாலை அணுகுமுறை(Cafertia
Apporoach)

38. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் குழு - 1990

39. முதல்
சோதனை குழந்தை பிறப்பு - Name - Durga-  she was born on the 1st day of Durga puja on October 3, 1978

40. சிப்கோ இயக்கம் - 1973 - ( காடுகள் மரங்கள் பாதுகாக்கும் நோக்கம் ) உத்தரப்பிரதேசத்தில் சுந்தர்லால் பகுகுணா என்பவரால் தொடங்கப்பட்டது.

41. 1979-  ஐ.நா சபை குழந்தைகள்ஆண்டாக
அறிவிப்பு

42. 1980 - மாவட்ட தொழில் மையம்

43. மெளன்பாட்டன் திட்டம் 1947 ஜூன் 3 வெளியிடப்பட்டு , பாராளுமன்றத்தில் 1947 ஜூலை 18 நிறைவேறியது.

44. 1983- கிரமபுற மக்களின்
நலச்சங்கம் (WARD)

45. 1984 Dec 4 கோபால்
விஷவாயு கசிவு (மெத்தில்
ஐசோசயனேட்)

46. 1985 - இந்திரா அவாஸ் யோஜனா

47. நாசிக் சதி வழக்கு -1909 - நாசிக் நீதிபதி ஜாக்சன் என்பவரை பீனாதாஸ் கொன்றார்.

48. 1986 புதிய கல்விக்
கொள்கை , செர்னோபில்
ரஷ்யா அணூ உலை கசிவு

49. 1989 ஜவகர்
வேலைவாய்ப்பு திட்டம்,
முத்துலெட்சுமி மகப்பேறு திட்டம்

50. ஓட்டு போடும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது யாருடைய காலம் ?  ராஜிவ் காந்தி பிரதமராக இருக்கும்  போது

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

TNPSC தமிழ் இலக்கிய வரலாற்று வினாவிடைகள்

TNPSC  தமிழ் இலக்கிய வரலாற்று வினாவிடைகள்


1.    குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?
   கந்தர் கலிவெண்பா

2.    குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது?
   இலக்கண விளக்கம்

3.    குட்டித் திருவாசகம் எனப்படுவது?
   திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி

3.    சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
       96

4.    ஓரடியில் நீதியை உரைக்கும் நூல்கள் எவை?
   ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, முதுமொழிக்காஞ்சி

5.    நறுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது?
   வெற்றிவேற்கை

6.    எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் - இவ்வரி இடம் பெறும் நூல் எது?
   வெற்றிவேற்கை

7.    வெற்றிவேற்கையின் ஆசிரியர் யார்? வெற்றிவேற்கையை எவ்வாறு அவர் குறிப்பிடுகிறார்?
   ஆதிவீரராம பாண்டியர்-நறுந்தொகை என குறிப்பிடுகிறார்

8.    வெற்றிவேற்கையில் இடம் பெறும் சிறப்பான வரிகள்கள் சில:
    “கல்விக்கு அழகு கசடற மொழிதல்”
    “செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்”
    “அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்”
    “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”
    “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை”
    “கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடு நன்றே”
    “வழியே ஏகுக வழியே மீளுக”

9.    உலகநீதியின் ஆசிரியர் யார்?
   உலகநாதர்

10.    உலகநீதியில் இடம் பெறும் சிறப்பான வரிகள்கள் சில:
    ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
    மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
    மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
    கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
    மூத்தோர் சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்

11.    நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர் யார்?
        குமரகுருபரர்

12.    சிறுவயதிலேயே இறையருள் பெற்ற அருட்கவி யார்?
        குமரகுருபரர்

13.    காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான தமிழ்ப்பாட்டு எது?
    நீதி நெறிவிளக்கத்தில் இடம் பெறும் “நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்.....” எனத்தொடங்கும்  பாடல். தமிழகம் வந்த போது காந்தியடிகள் இப்பாடலில் இடம் பெறும்

    “நீரில் எழுத்தாகும் யாக்கை” வரியை தன் கைப்பட எழுதி மோ.க.காந்தி என தமிழில் தன் கையொப்பம் இட்டு கொடுத்துள்ளார்.

14.    கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப்படுபவர் யார்?
        சிவப்பிரகாசர்

15.    நன்னெறியின் ஆசிரியர் யார்?
        கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர்

16.    அறநெறிச்சாரத்தின் ஆசிரியர் யார்?
        முனைப்பாடியார் (சமணர்)

17.    அருட்கலச்செப்பு எனும் நூலைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல் எது?
       அறநெறிச்சாரம்

18.    “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்” எனக்கூறியவர் யார்?
         நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்

19.    நட்டான் என்பதன் பொருள் என்ன?
        நண்பன்


20.    ஒளவையார் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் எவை?
         நீதிநூல்கள்: ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை (வாக்குண்டாம்) நல்வழி, கல்வியொழுக்கம்
         பக்தி  நூல் : விநாயகர் அகவல்
         தத்துவ நூல் : ஒளவைக்குறள்

21.    ஆத்திசூடி என்பதன் பொருள் என்ன?
        ஆத்திப்பூமாலையை சூடிய சிவபெருமான்

22.    ஆத்திசூடியில் ஒளவையார் கூறிய அமுத மொழிகள் சில...
         அறம் செய விரும்பு, ஆறுவது சினம், மனம் தடுமாறேல்,  துன்பத்திற்கு இடங்கொடேல், நுண்மை நுகரேல் (சிற்றுண்டிகளை எப்போதும்                                                 சாப்பிட்டுக்கொண்டே இருக்காதே)

23.    கொன்றைவேந்தனில் ஒளவையார் கூறிய அமுத மொழிகள் சில...
        அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்,
        தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
        தாயின் சிறந்த ஒரு கோயிலும் இல்லை,
        திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு
        இல்லறம் அல்லது நல்லறம் அன்று,
        மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்
        ஏவா மக்கள் மூவா மருந்து,
        உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு,
        பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
        குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

24.    வாக்குண்டாம் என அழைக்கப்படுவது?
         மூதுரை

25.    நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப்
         புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?
         மூதுரை

26.    “பாலும் தெளித்தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்”
         “சங்கத் தமிழ் மூன்றும்தா” எனக் கூறியவர்?
          ஒளவையார் (நல்வழி)

27.    “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய்” எனக்கூறியவர் யார்?
           நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்.

28.    கல்வியொழுக்கத்தின் ஆசிரியர் யார்?
         ஒளவையார்

29.    அஞ்சு வயதில் ஆதியை ஓது
         ஊமை என்பவர் ஓதாதவரே
        ஏழை யென்பவர் எழுத்தறியாவர்
        கண்ணில்லாதவன் கல்லாதவனே
        தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்

30.    கடல்கோளும் கரையானும் அழித்தது போக எஞ்சிய தமிழ்நூல்கள் எவை?
         சங்க நூல்கள்


வெள்ளி, 12 ஜனவரி, 2018

நம்ப முடியாத அதிசியம் ஆனால் உண்மை



நம்ப முடியாத அதிசியம் ஆனால் உண்மை

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்கு பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட

நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது.

ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை… இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன.

அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான்.

அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர்.

இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்குToy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?


புதன், 3 ஜனவரி, 2018

TNPSC-TET-VAO important questions answers 2018



TNPSC-TET-VAO important questions answers  2018


1.       ‘குப்தர் காலம் பொற்காலம்’ எனப்படுவதன் காரணம்? அக்காலத்தில் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் சிறந்து விளங்கியது

2.       கனிஷ்கர் ----- மதத்தை பின்பற்றினார்? புத்த மதம்

3.       வெற்றித் தூணை கட்டியவர்? ராணா கும்பா

4.       ‘ஹோஹார்’ முறை ----------- பெண்களிடம் காணப்படுகிறது. ராஜபுத்திர

5.       நாளந்தா பல்கலைகழகம் --- காலத்தில் சிறந்து விளங்கியது? ஹர்ஷவர்த்தனர்

6.       ஆலம்கீர் நாமாவை எழுதியவர்? மிர்சா முகமது காசிம்

7.       சாளுக்கிய வம்சத்தின் கடைசி அரசர் யார்? இரண்டாம் கீர்த்திவர்மன்

8.       மெகஸ்தனிஸ் என்பவர் யார்? தூதர்

9.       மௌரிய பேரரசை அழித்தவர்? புஷ்யமித்ர சுங்கர்

10.   அடிமை வம்ச அரசர்களில் சிறந்தவர்? பால்பன்.

* தூய்மையான நீரின் PH மதிப்பு -  7

* அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு

* இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்

*எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
*ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

*  வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4

*உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3


TNPSC NOTES 2018 EXAMINATION

1. இந்தியாவின் முதல் விமான பல்கலைக்கழகம் - உத்திரபிரதேசம்

2. இந்தியாவின் முதல் இரயில்வே பல்கலைக்கழகம் - வதோதரா, குஜராத்

3. இந்தியாவின் முதல் உலக அமைதி பல்கலைக்கழகம் - புனே

4. இந்தியாவின் முதல் சமாதான பல்கலைக்கழகம் - புனே

5. இந்தியாவின் முதல் தலீத்-களுக்கான பல்கலைக்கழகம் - ஹைதராபாத்

6. இந்தியாவின் முதல் உலக டிசைன் பல்கலைக்கழகம் - ஹரியானா

7. இந்தியாவின் முதல் அனைத்து ஆயுர்வேத பல்கலைக்கழகம் - டெல்லி

8. இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் - மணிப்பூர், ஜார்க்கண்ட்

9. இந்தியாவின் முதல் உலக தடய அறிவியல் பல்கலைக்கழகம் - குஜராத்

10.இந்தியாவின் முதல் பசுமை பல்கலைகழகம்(சுற்றுச்சூழல்) -WB(ஹுக்ளி)


TNUSRB TNPSC-TET-VAO important questions. 2018

1.       சிந்து சமவெளி மக்களின் முக்கிய கடவுள்? பசுபதி என்ற சிவன்

2.       புத்த சமய கொள்கைகளை கூறும் மறை நூல்? திரிபீடகம்

3.       இந்திய கோயில் கட்டிடக் கலையின் தொட்டில் எது? அய்ஹோல் நகரம்

4.       முகமது கஜினியின் சோமநாதபுரம் படையெடுப்பு நிகழ்ந்த ஆண்டு? கி.பி.1025

5.       ‘நீதி சங்கிலி மணி’ என்ற ஒரு புதிய நீதி வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்? ஜஹாங்கீர்

6.       யாருடைய ஆட்சிகாலம் ‘மொகலாயர்களின் பொற்காலம்’ என்று அழைக்கப்படுகிறது? ஷாஜகான்

7.       சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர்? குருநானக்

8.       ’வந்தே மாதரம்’ என்ற முழக்கத்தை எழுப்பியவர்? பக்கிம் சந்திர சட்டர்ஜி

9.       ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்ட மொகலாய மன்னர்? பகதூர் ஷா

10.   தஞ்சை நாயக்கர் ஆட்சியை தோற்றுவித்தவர் யார்? சேவப்ப நாயக்கர்


TNPSC EXAM TAMIL NOTES  2018

1.       வெற்றிலை நட்டான் என்பது எவ்வகை ஆகுபெயர்? சினையாகு பெயர்

2.       தொழிற்பெயரின் விகுதிகளே இல்லாமல் பகுதி மட்டும் வந்து தொழிலை உணர்த்துவது? முதனிலை தொழிற்பெயர்

3.       “படித்து தேறினான்” என்பதன் இலக்கணக்குறிப்பு? தெரிநிலை வினையெச்சம்

4.       தமிழ்நாட்டை சுற்றியுள்ள பிறபகுதிகளிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது? திசைச்சொல்

5.       ஈரெழுத்து சொல்லாக மட்டுமே வரும் குற்றியலுகரம்? நெடில் தொடர் குற்றியலுகரம்

6.       “பேறு” என்பதன் இலக்கணக்குறிப்பு? முதனிலை திரிந்த தொழிற்பெயர்

7.       “குகைப்புலி” எவ்வகையான வேற்றுமைத்தொகை? ஏழாம் வேற்றுமைத்தொகை

8.       ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்பது யாருடைய பாடல்வரிகள்? கண்ணதாசன்

9.       மாணிக்கவாசகர் கட்டிய கோயில் எங்குள்ளது? திருப்பெருந்துறை

10.   நந்திக்கலம்பகத்தின் ஆசிரியர்? பெயர் தெரியவில்லை


 TNPSC TNUSRB IMPORTANT NOTES

1.       சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது? பிரேசில்

2.       கார்பன்-டை-ஆக்சைடு நீரில் கரைந்து கிடைப்பது எது? கார்பானிக் அமிலம்

3.       ‘காந்தளூர் சாலை’ என அழைக்கப்படும் நகரம் எது? திருவனந்தபுரம்

4.       இங்கிலாந்து நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்யும் நான்காவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது? இந்தியா

5.       உலக இணைய பாதுகாப்பு பட்டியல் 2017 –ல் முதலிடம் பெற்றுள்ள நாடு எது? சிங்கப்பூர்

6.       2020 ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளது? டோக்கியோ

7.       நிமோனியா காய்ச்சல் மனிதனின் எந்த உறுப்பை பாதிக்கிறது? நுரையீரல்

8.       பெண் சிசுகொலையை தடுக்க உத்திரபிரதேச அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது? முக்பீர் யோஜனா

9.       ‘ஐக்கிய நாடுகளவையின் பொது சேவைகள் தினம் எந்நாளில் கடைபிடிக்கப்படுகிறது? ஜூன் 23

10.   நாடு முழுவதும் GST வரி எந்நாளில் இருந்து அமலுக்கு வந்தது? ஜூலை 1, 2017


TNPSC IMPORTANT NOTES

·         செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆகும்.

·         வெறும் கண்களால் செல்லைப் பார்க்க  முடியாது.

·         செல்லை நேரடியாக காண நுண்ணோக்கி (Microscope) எனும் அறிவியல் கருவி பயன்படுகிறது.

·         மனித உடல் மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களும் செல்களால் ஆனவைதான்.

·         முதன் முதலில் செல்லைப் பார்த்தவர் இராபர்ட் ஹூக்

·         செல்லுலா எனும் இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ஒரு சிறிய அறை என்று பெயர்.

·         அந்த சிறிய அறைக்கு இராபர்ட்ஹூக்,  செல் என்று கி.பி. 1665  பெயரிட்டார்.

·         செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் - இராபர்ட் பிரெளன்.

·         செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை இராபர்ட் பிரெளன் கண்டறிந்தார்.

·         பன்னிரண்டு அல்லது பதின்மூன்று உள்ளுறுப்பு உறுப்பினர்கள் சேர்ந்து இரகசியமாகப் பணியாற்றும் குட்டித் தொழிற்சாலை தான் செல்.

·         தாவர, விலங்கு இரண்டுக்கும் செல்கள் ஒரே மாதிரியாக இருக்காது.

·         பாக்டீரியா, சில பாசிகள் போன்றவை ஒரே செல்லினால் ஆனவை.

·         சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு இல்லாத உட்கரு மட்டுமே கொண்ட செல்லை புரோகேரியாட்டிக் செல் என்று அழைக்கப்படுகிறது.

·         புரோகேரியாட்டிக் செல்லுக்கு எடுத்துக்காட்டு – பாக்டீரியா

·         யூகேரியாட்டிக் செல் என்பது செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்.

·         யூகேரியாட்டிக் செல் ஒரு முழுமையான செல். தாவர, விலங்கு செல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.

·         விலங்கு செல்லைச் சுற்றியுள்ள படலம் - பிளாஸ்மா படலம்.

·         செல்லுக்கு வடிவம் கொடுப்பவை - பிளாஸ்மா படலம்.

·         பிளாஸமா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.

·         புரோட்டோபிளாசம் - சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியவை.

·         புரோட்டோபிளாசம் என்று பெயர் இட்டவர் - ஜே.இ. பர்கின்ஜி.

·         புரோட்டோ என்றால் முதன்மை.

·         பிளாசம் என்றால் கூழ்போன்ற அமைப்பு என்று பொருள்.

·         பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட பகுதி சைட்டோபிளாசம்.

·         சைட்டோபிளாசத்துக்குள் உட்கரு, இதர நுண்ணுறுப்புகள், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் காணப்படுகின்றன.

·         செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு(நியூக்ளியஸ்)

·         உட்கருவின் வடிவம் கோள வடிவம்.

·         உட்கருவில் காணப்படுபவை - உட்கருச்சாறு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி(நியூக்ளியோலஸ், குரோமேட்டின் வலைப்பின்னல் ஆகியவை காணப்படுகின்றன.

·         உட்கரு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்கிறது.

·         செல்லின் சுவாச உறுப்பு  மைட்டோகாண்ட்ரியா

·         செல்லின் ஆற்றல் மையம் (Power House of the Cell)  -  மைட்டோகாண்ட்ரியா.

·         கோல்கை உறுப்புகள் குழல் குழலாக  காணப்படும்.

·         உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவதும் - கோல்கை உறுப்புகள்.

·         உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும். உடலுக்கும் வலு சேர்ப்பது கோல்கை உறுப்புகள்.

·         செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.

·         ரிபோசோம்கள் புள்ளி புள்ளியாக காணப்படும்.

·         செல்லின் புரதத்தொழிற்சாலை – ரிபோசோம்கள்

·         புரதத்தை உற்பத்தி செய்வது ரிபோசோம்கள்.

·         லைசோசோம்கள் உருண்டையாக  மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

·         செல்லின் காவலர்கள் லைசோசோம்கள்.

·         செல்லின் தற்கொலைப் பைகள் - லைசோசோம்கள்.

·         செல்லின் உள்ளே செல்லும் நுண் கிருமிகளை கொல்லுவது - லைசோசோம்கள்.

·         விலங்கு செல்லில் மட்டுமே காணப்படுபவை - சென்ட்ரோசோம்

·         சென்ட்ரோசோம் உட்கருவிற்கு அருகில் நுண்ணிய குழல் மற்றும் குச்சி வடிவில் காணப்படும்.

·         சென்ட்ரோசோம் உள்ளே சென்ட்ரியோல்கள் உள்ளன.

·         செல் பிரிதல் அதாவது புதிய செல்களை உருவாக்குவது சென்ட்ரோசோம்.செல் பிரிதலுக்கு உதவுகிறது சென்ட்ரோசோம்.

·         வெளிர் நீலநிறத்தில் ஒரு குமிழ் மாதிரி காணப்படுபவை - நுண் குமிழ்கள்

·         செல்லின் உள்ளே அழுத்தத்தை ஒர் மாதிரி வைத்திருப்பதும், சத்துநீரைச் சேமிப்பதும் - நுண் குமிழ்கள்.

·         தாவர செல்லில் சென்ட்ரோசோம் எனும் நுண்ணுறுப்பு இல்லை.

·         விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம், தாவரங்களின் செல்சுவர் எனும் அமைப்பாகும்.

·         செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர்.

·         செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.

·         செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதும், செல்லுக்கு வடிவம் தருவதும் செல்சுவரின் பணி.

·         தாவர செல்லுக்கு செல்சுவர் உண்டு

·         விலங்கு செல்லுக்கு செல்சுவர் இல்லை.

·         தாவர செல்லுக்கு கணிகங்கள் உண்டு.

·         விலங்கு செல்லுக்கு கணிகங்கள் இல்லை.

·         தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை.

·         விலங்கு செல்லுக்கு சென்ட்ரோசோம் உண்டு.

·         தாவர செல்லின் நுண் குமிழ்கள் அளவில் பெரியவை.

·         விலங்கு செல்லின் நுண் குமிழ்கள் அளவில் சிறியவை.

·         கணிகங்கள் தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு ஆகும்..

·         தாவர ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது, மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணமளிப்பது கணிகங்களின் பணியாகும்.

·         குளோரோபிளாஸ்ட்டில் (பசுங்கணிகம்) காணப்படும் நிறமி - குளோரோஃபில் - பச்சை நிற நிறமி.

·         குளோரோபிளாஸ்ட் பணி - தண்டு, இலைகளுக்கு பச்சை வண்மம் தருதல்.

·         குரோமோபிளாஸ்ட்டில் காணப்படும் நிறமி கரோட்டின் - ஆரஞ்சு நிற நிறமி, சாந்தோஃபில் - மஞ்சள் நிற நிறமி.

·         குரோமோபிளாஸ்ட் பணி - பூக்கள், கணிகளுக்கு வண்ணம் தருதல்

·         லியூக்கோபிளாஸ்ட் பணி - தாவரத்தின் வேர்பகுதி மற்றும் தரைகீழ் தண்டுகளில் காணப்படுதல்.

·         நமது மூளையில் இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன.

·         மிகவும் நீளமான செல் நரம்புசெல்

·         நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் வெங்காயத்தோலின் செல்

·         விலங்கு செல்லில் மிக கடினமான செல் எலும்புசெல் .

·         விலங்கு செல்லில் மிக நீளமான செல் நரம்புசெல் ஆகும்.

·         இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக் (1675).

·         எலும்புகள் ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனவை.

·         மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை சுமார் 6,50,00,000 ஆகும்.


TNPSC-TET-VAO EXAMINATION 2018 IMPORTANT NOTES

சமண சமயத்தை தோற்றுவித்தவர்: மகாவீரர்

இயற்பெயர்: வர்த்தமானர்

மகாவீரர் பிறந்த இடம்: குந்த கிராமம் வைசாலி

பிறந்த வருடம் : கி.மு.539

தந்தை: சித்தார்த்தர்

தாய்: திரிசலா

குலம்: சத்திரிய குலம்

சமண சமயத்தில் இவர் 24 தீர்த்தங்கரர்.

மகாவீரர் ஜீனர் என்று அழைக்கப்பட்டார்.

ஜீனர் என்பதன் பொருள் – வென்றவர்.

மகாவீரர் என்பதன் பொருள் - சிறந்த வீரர்

மகாவீரர் தனது போதனையை பரப்பிய மொழி பிராகிருதம்.

சமண சமயம் வலியுறுத்திய கொள்கை கொல்லாமை.

மகாவீரர் போதித்த  அடிப்படை கருத்துக்கள் - திரிரத்தினங்கள்
1. நல்ல நம்பிக்கை
2. நல்ல அறிவு
3. நல்ல நடத்தை

மகாவீர் கைவல்யா என்று ஆன்மிக அறிவு பெறும் போது வயது - 42

மகாவீரர் இறந்த ஆண்டு - கி.மு.467

மகாவீரர் இறந்த இடம் - பவபுரி (ராஜகிருகம் அருகில்)

மகாவீரர் இறக்கும் போது வயது - 72

சமண சமயத்தின் இரு பிரிவுகள்

 1. திகம்பரர் -  திசையை ஆடையாக அணிந்தவர்கள்

2. ஸ்வேதாம்பரர் – வெள்ளை ஆடை அணிந்தவர்கள்

சமண சமய மாநாடுகள்

முதல் மாநாடு
இடம்
பாடலிபுத்திரம்
ஆண்டு
கி.மு. 3ம் நூற்றாண்டு
தலைவர்
ஸ்தூலபாகு
இரண்டாவது மாநாடு
இடம்
வல்லபி
ஆண்டு
கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு
தலைவர்
தேவரதி

சமண சமயத்தை பின் பற்றிய அரசர்கள் - பிம்பிசாரர், அஜாதசத்ரு, சந்திர குப்த மௌரியர்
சமண சமயத்தை பின் பற்றிய தென்னிந்திய அரசர்கள் - கூன்பாண்டியன், மகேந்திர வர்மன்.

மகாவீரர் போதித்த ஐந்து ஒழுக்கங்கள்:

ஊறு செய்யாமை, பொய்யாமை, களவாமை, உடைமை மறுத்தல், புலனடக்கம்.

தமிழ் இலக்கியத்திற்கு சமணர்களின் பங்கு:

சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, சூடாமணி ஆகிய காப்பியங்களையும்

யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி, நேமிநாதம், நன்னூல், அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம் போன்ற இலக்கண நூல்களையும்,

நிகண்டுகளையும், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, திணைமாலை நூற்றைம்பது முதலிய அறநூல்களையும் சமணர்கள் இயற்றியுள்ளனர்.

சமண சமயக் கோவில்கள்:

மவுண்ட் அபு, தில்வாரா கோவில், கஜுராஹோ, சித்தூர், ரனக்பூர், உதயகிரி, ஹதிகும்பா, கிர்னார், சிரவணபெலகொலா, கழுகுமலை .

TAMILNADU POLICE EXAMINATION 2018

1.       ‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ’ என்று பாராட்டப்பட்டவர்? சேக்கிழார்

2.       “துரைராசு” என்ற இயற்பெயரை கொண்ட கவிஞர் யார்? முடியரசன்

3.       “உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்? திரு.வி.க.காலியான சுந்தரனார்

4.       “திகழ்பா ஒரு நான்குஞ் செய்யுள் வரம்பாகப்” தமிழ் விடுதூது குறிப்பிடும் நான்கு வரம்புகள் யாவை? வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

5.       ‘ஆர்வலர்’ என்பதன் பொருள் என்ன? அன்புடையவர்

6.       கடும் வெப்பத்தை எதிர்கொள்ள கூடிய பறவை? பூ நாரை

7.       மனிதனின் இறப்பை நீக்கி காப்பாற்றும் மூலிகை எது? காயசித்தி

8.       எந்த போர் காண்பதற்கான மைதானமாக தமுக்கம் மைதானம் விளங்கியது? யானை

9.       மருதத் திணைக்குரிய பறை எது? மணமுழா

10.   தூது இலக்கிய வகையில் முதல் நூல் எது? நெஞ்சு விடு தூது.

2017 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் சில...



2017 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் சில...

🔵🔴2017-ஆம் ஆண்டின் பிரபலங்கள் மறைவு

ஜன. 1: பிரபல பாலிவுட் நடிகர் ஓம் புரி (66) மாரடைப்பால் காலமானார்.

*ஜன. 14: தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா (91) மறைவு.*

*பிப். 1: இந்திய தேசிய முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இ.அகமது (67) காலமானார். நாடாளுமன்றத்தில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.*

*பிப். 6: "யுனெஸ்கோ கூரியர்' தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர் மணவை முஸ்தஃபா (78) காலமானார்.*

*பிப். 19: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் (68) சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார்.*

*மார்ச் 6: சோசலிஷத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரபி ரே (91) காலமானார்.*

*மார்ச் 18: நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் (82) லண்டனில் மாரடைப்பால் உயிரிழந்தார்.*

*மார்ச் 23: பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் (85) மறைவு.*

*ஏப். 16: தமிழ் எழுத்தாளர் மா.அரங்கநாதன் (83) சென்னையில் காலமானார்.*

*ஏப். 27: பழம் பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கன்னா (70) காலமானார்.*

*மே 11: ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா மறைவு.*

*மே 18: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே (60) மாரடைப்பால் உயிரிழந்தார்.*

*மே 30: முன்னாள் மத்திய அமைச்சரும், தெலுங்கு திரைப்பட இயக்குநருமான தாசரி நாராயண ராவ் (75) உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் 125 படங்களை இயக்கிய கின்னஸ் சாதனையாளர் அவர்.*

*ஜூன் 6: திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மூத்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் (94) மறைவு.*

*ஜூன் 29: கந்த சஷ்டி கவசம் பாடல் புகழ் சூலமங்கலம் சகோதரிகளில் மூத்தவரான ஆர்.ஜெயலட்சுமி (80) காலமானார்.*

*ஜூலை 16: சிக்கிமில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்து சாதனை படைத்த நர் பகதூர் பண்டாரி (77) காலமானார்.*

*ஜூலை 24: இந்திய செயற்கைக்கோள் திட்டங்களின் தந்தை என்று போற்றப்பட்டும் உடுப்பி ராமச்சந்திர ராவ் (85) மறைவு.*

*ஜூலை 27: காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான தரம் சிங் (80) மாரடைப்பால் உயிரிழந்தார்.*

*செப். 19: ரூ.29,500 கோடி மதிப்புள்ள முருகப்பா குழுமத்தின் தலைவர் எம்.வி. முருகப்பா (81) காலமானார்.*

*அக். 24: அவளோட ராவுகள், தேவஸ்வரம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குநர் ஐ.வி.சசி (69) காலமானார்.*

*நவ. 7: தமிழறிஞரும், பெரியாரியவாதியுமான மா.நன்னன் (94) மறைவு.*

*நவ. 20: நீண்ட காலமாக கோமா நிலையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி (72) காலமானார்.*

*டிச. 4: பழம்பெரும் நடிகர் சசி கபூர் (79)உயிரிழந்தார்.*



🔵💥🔴2017-ஆம் ஆண்டின் விருதுகள்*


*🔵💥பிப். 13: சர்வதேச அளவில் இசைத் துறைக்கான உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது, அமெரிக்க செல்லோ இசைக் கலைஞர் யோயோ மா மற்றும் இந்திய தபேலா இசைக் கலைஞர் சந்தீப் தாஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.*

*மார்ச் 1: திருச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஜி.பூரணசந்திரனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. மனு ஜோசப் ஆங்கிலத்தில் எழுதிய "சீனியர் மேன்' என்ற நூலை "பொறுப்புமிக்க மனிதர்கள்' என்ற தலைப்பில் அவர் மொழிபெயர்த்திருந்தார்.*

*மார்ச் 25: சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த விமான நிலையம் என்ற விருது சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வழங்கப்பட்டது.*

*ஏப். 7: "ஜோக்கர்' திரைப்படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது பெற்றது. கவிஞர் வைரமுத்துவுக்கு 7-ஆவது முறையாக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சூர்யா நடித்த "24' படத்துக்கு இரு தேசிய விருதுகள்.*

*ஏப். 13: பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. சத்குரு ஜக்கி வாசுதேவ், பாடகர் கே.ஜே.ஜேசுதாஸூக்கு பத்ம விபூஷண் விருது. பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு மறைவுப் பின் பத்ம பூஷண் விருது.*

*ஏப். 19: எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொருபாகன்' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாதமி விருது.*

*ஏப். 24: பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு 48-ஆவது தாதாசாஹேப் பால்கே விருது.*

*மே 2: இந்திய மகளிர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட்ராமனுக்கு பெரியார் விருதை வழங்கினார் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி.*

*ஆக. 14: சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறை அதிகாரிக்கான குடியரசுத் தலைவர் விருது சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது.*

*ஆக. 15: தமிழகத்தைச் சேர்ந்த 19-வயதுக்குள்பட்ட மகளிர் அணி முன்னாள் வீராங்கனை பிரீத்தி சீனிவாசனுக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது. கை, கால்கள் செயல்படாத நிலையில் உள்ள இவர், தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்டு வருகிறார்.*

*அக். 2: அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி சி ஹால், மைக்கேல் ராஸ்பாஷ் மற்றும் மைக்கேல் டபிள்யூ யங் ஆகிய மரபியல் (ஜெனடிக்ஸ்) விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு.*

*அக். 4: அல்சைமர் என்ற மூளை பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்த ஜாக்குவஸ் டுபோஷே, ஜோசிம் ஃபிராங்க், ரிச்சட் ஹெண்டர்ஸன் ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு.*

*அக். 5: ஜப்பானில் பிறந்து பிரிட்டனில் குடியேறிய ஆங்கில எழுத்தாளர் கஸூவோ இஷிகுரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு."*

*அக். 6: அணு ஆயுத பரவலைத் தடுப்பதற்காக போராடி வரும் ஐ.சி.ஏ.என். தன்னார்வ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.*

*அக். 9: அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் தேலருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.*

*அக். 31: கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது.*

*டிச. 21: கவிஞர் இன்குலாபின் "காந்தள் நாட்கள்' கவிதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதெமி விருது.*


 🔵🔴2017-ஆம் ஆண்டின் விளையாட்டு

🔵ஜனவரி 2 பிசிசிஐ மறுசீரமைப்புக்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தத் தவறியதாக பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், செயலர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கம் செய்து தாக்குர், கான்வில்கர், சந்திரசூட் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. பிசிசிஐ-யின் 88 ஆண்டுகால வரலாற்றில் இவ்வாறு நடப்பது இது முதல் முறையாகும்.*

*7 இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தானி மட்டேக் சான்ட்ஸூடன் இணைந்து பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார். இது, அந்த சீசனில் அவரது முதல் பட்டமாகும்.*

*8 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி சாம்பியன் ஆனது. 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை ஓபனில் இந்திய ஆடவர் ஜோடி பட்டம் வென்றது இது முதல் முறையாகும்.*

*29 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது, அவரது 18-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். பிப்ரவரி 19 ஐபிஎல் கிரிக்கெட்டில் உள்ள ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக எம்.எஸ்.தோனி ஒப்புக்கொண்டதாக தெரிவித்த அணி நிர்வாகம், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை அந்தப் பொறுப்புக்கு நியமித்தது. மார்ச் 15 ஐசிசி தலைவர் பதவியை, பிசிசிஐ முன்னாள் தலைவரான சஷாங்க் மனோகர் ராஜிநாமா செய்தார். போட்டி விதிமுறைகளில் அவர் கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளை பிசிசிஐ எதிர்ப்பதாக கூறப்பட்ட நிலையில், சஷாங்க் மனோகர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். ஏப்ரல் 2 இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினை வீழ்த்தி பட்டம் வென்றார். இது, அவரது 2-ஆவது சூப்பர் சீரிஸ் பட்டமாகும்.*

*24 நியூஸிலாந்தில் நடைபெற்ற முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 101 வயது மூதாட்டியான மான் கெüர், 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு நிமிடம் 14 விநாடிகளில் பந்தய இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார். மே 21 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஜூன் 8 இந்தியாவின் ரோஹன் போபண்ணா, கனடா வீராங்கனை கேப்ரியேலா டப்ரெüஸ்கியுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார். இது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இந்த பட்டத்தை வென்ற 4-ஆவது இந்திய வீரர் போபண்ணா ஆவார்.*

*11 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். அத்துடன், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10 முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.*

*18 லண்டனில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது பாகிஸ்தான். இது அந்த அணியின் முதல் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாகும்.*

*20 இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்தார். கேப்டன் விராட் கோலி-கும்ப்ளே இடையே கருத்து மோதல் நிலவுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் இந்த முடிவை மேற்கொண்டார். ஜூலை 5 ஆசிய ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கஜ் அத்வானி, லக்ஷ்மன் ராவத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.*

*11 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், அணியின் இயக்குநராக இருந்தவருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.*

*12 மகளிருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற பெருமையை இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பெற்றார். இந்தச் சாதனையை, மகளிர் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது அவர் எட்டினார்.*

*15 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா, 7-5, 6-0 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ûஸ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.*

*16 விம்பிள்டன் டென்னிஸின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 6-3, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் விம்பிள்டனில் 8-ஆவது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்த அவர், மாடர்ன் எராவில் விம்பிள்டன் பட்டம் வென்ற வயதான வீரர் (35) என்ற பெருமையையும் பெற்றார்.*

*20 கடந்த 21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்று வந்த இந்தியாவின் ஒரே ஏடிபி போட்டியான "சென்னை ஓபன்' இனி, "மகாராஷ்டி ஓபன்' என்ற பெயரில் புணேவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.*

*23 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. ஆகஸ்ட் 7 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வீரர் ஸ்ரீசாந்த் மீது பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்திருந்த நிலையில், அவர் முதல்தர கிரிக்கெட்டில் பங்கேற்கும் வகையில் அந்தத் தடையை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.*

*26 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் வீழ்ந்து வெண்கலப் பதக்கம் வென்றார். செப்டம்பர் 3 இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தொடரை 5-0 என கைப்பற்றியது. இந்தத் தொடரின்போது கோலி ஒருநாள் போட்டியில் தனது 30-ஆவது சதத்தை எட்டி ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்தார். புவனேஸ்வர் குமார் முதல் முறையாக ஒரே ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.*

*17 கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை வீழ்த்தி பட்டம் வென்றார்.*

*21 கொல்கத்தாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இந்தச் சாதனையை புரிந்த 3-ஆவது இந்திய வீரர் குல்தீப் ஆவார். அக்டோபர் 13 டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ஆம் ஆண்டு தொடங்கும் என்று ஐசிசி அறிவித்தது. இப்போட்டியில் 9 அணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு 6 தொடங்களில் பங்கேற்கும். இதில் 3 தொடர்கள் சொந்த மண்ணிலும், 3 தொடர்கள் அந்நிய மண்ணிலும் நடைபெறும். முதல் இரு இடம் பிடிக்கும் அணிகளிடையே இறுதிப் போட்டி நடைபெறும்.*

*22 ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. நவம்பர் 1 தில்லியில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா.*

*5 மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா "சடன் டெத்' முறையில் சீனாவை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனது. அத்துடன், 2018 உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதிபெற்றது.*

*8 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மேரி கோம் தென் கொரியாவின் ஹியாங் மி கிம்மை வென்று சாம்பியன் ஆனார். இது, ஆசிய சாம்பியன்ஷிப்பில் அவரது 5-ஆவது பட்டமாகும்.*

*8 சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பின்ஷிப் போட்டியில் ஹெச்.எஸ்.பிரணாய் 21-15,16-21, 21-7 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தையும், சாய்னா நெவால் 21-17, 27-25 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்துவையும் வீழ்த்தி தங்களது பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர்.*

*10 இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தும் அதிகாரம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புக்கு (நாடா) இல்லை என்றும், தாங்கள் கடைப்பிடிக்கும் ஊக்கமருந்து தடுப்பு நடவடிக்கைகள் போதுமானவை என்றும் அந்த அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் பிசிசிஐ தெரிவித்தது.*

*13 கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இத்தாலி அணி இழந்தது.*

*20 கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் சதமடித்த கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50-ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் அதிவேகமாக 50-ஆவது சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 8-ஆவது இடத்தை தென் ஆப்பிரிக்காவின் ஹசீம் ஆம்லாவுடன் பகிர்ந்துகொண்டார் கோலி.*

*23 இந்தி கிரிக்கெட் வீரர் ஜாஹீர் கானுக்கும், நடிகை சகாரிகா கட்கேவுக்கு மும்பையில் திருமணம் நடைபெற்றது.*

*27 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பெற்றார். இந்த சாதனையை தனது 54-ஆவது போட்டியான, இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டின்போது அவர் எட்டினார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் லில்லீயின் 36 ஆண்டு சாதனையை அவர் முறியடித்தார். டிசம்பர் 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்ச இரட்டைச் சதம் (6) அடித்த கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றார். இதன்மூலம் பிரையன் லாராவின் சாதனையை (கேப்டனாக 5 இரட்டைச் சதம்) அவர் முறியடித்தார். இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இதனை எட்டிய கோலி, டெஸ்ட் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் (243) பதிவு செய்தார்.*

*7 போர்ச்சுகல் கால்பந்துவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரான்ஸ் விளையாட்டு பத்திரிகை சார்பில் வழங்கப்படும் "பேலன் தோர்' விருதை 5-ஆவது முறையாக வென்று, ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸியை சமன் செய்தார்.*

*10 உலக ஹாக்கி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனான ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.*

*11 இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி-பாலிவுட் நடிகை அனுஷ்கா திருமணம் இத்தாலியில் நடைபெற்றது.*

*13 இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம், ஒருநாள் போட்டியில் தனது 3-ஆவது இரட்டை சதத்தை பதிவு செய்தார் ரோஹித்.*

*17 துபை ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் அகானே யமாகுசியிடம் வீழ்ந்து வெள்ளி வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து.*

*17 காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் தங்கம் வென்றார்.*

*18 இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3 ஆட்டங்கள் முடிந்த நிலையில், அவை அனைத்திலும் வென்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.*

*22 இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, தொடரை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதமடித்து சாதனை புரிந்தார்.*


🔴2017-ஆம் ஆண்டின் தமிழகம்



ஜனவரி 3 புதுச்சேரி சட்டப் பேரவை முன்னாள் தலைவர் வி.எம்.சி.சிவகுமார் காரைக்கால் அருகே வெட்டிக் கொலை.

4 அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு.

6 அந்நிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை விதித்த ரூ. 28 கோடி அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

17 எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட எம்ஜிஆரின் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

23 தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக 1960-ஆம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

28 சென்னை எண்ணூர் கடல் பகுதியில் எரிவாயு கொண்டு சென்ற கப்பலும், டீசல் கொண்டு சென்ற கப்பலும் மோதிக் கொண்ட விபத்தில் கச்சா எண்ணெய் கலந்ததால் கடல் கடுமையாக மாசுபட்டது.

31 நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப் பேரவையில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 5 அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தமிழக சட்டப் பேரவை குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் முதல்வராகும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

8 சென்னை முகலிவாக்கத்தில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற வழக்கில் இளைஞர் தஷ்வந்த்தை போலீஸார் கைது செய்தனர்.

14 சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, அதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமியை ஆட்சி அமைக்குமாறு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார்.

16 தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமியுடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

18 சட்டப் பேரவையில் நடைபெற்ற நம் பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்களின் வாக்குகளைப் பெற்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெற்றி பெற்றார்.

18 சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தாக்கப்பட்டதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் மெரீனாவில் உண்ணாவிரதம் இருந்தனர்.

20 முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமி பணியின் முதல் நாளில் 500-க்கும் மேற்பட்ட மதுக் கடைகளை மூடுவது உள்ளிட்ட 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக கையெழுத்திட்டார்.

23 அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி, தினகரன் பொறுப்பேற்றார்.

24 எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தொடங்கினார். மார்ச் 11 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.

13 தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் விதமாக ரூ. 100 கோடியில் 30 மாவட்டங்களில் குடிமராமத்து திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். ஏப்ரல் 2 தருமபுரி காவல் நிலையத்தில்
உதவி ஆய்வாளராக  முதல் திருநங்கை பிரித்திகா யாசினி பணி அமர்த்தப்பட்டார்.

5 சொத்துக் குவிப்பு வழக்கில்,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் அவரை குற்றவாளி என பிரகடனம் செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்தது.

5 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இந்திரா பானர்ஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

7 ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் வீடு, நிறுவனங்கள் என 50 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

17.அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் வழங்கியதாக தினகரன் மீது தில்லி குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக தில்லியைச் சேர்ந்த இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

23 தில்லி ஜந்தர்மந்தரில் 41 நாள்களாகப் போராடிய விவசாயிகளை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து போராட்டத்தைக் கைவிட கோரிக்கை விடுத்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டம் தாற்காலிமாக கைவிடப்பட்டது.

24 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

25 தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், 4 நாள் விசாரணைக்குப் பிறகு அதிமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

மே 6 மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் மருத்துவ கவுன்சில் விதிப்படி அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கவுன்சில் விதிப்படி அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தர முடியாது. தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டார்.

10 பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட மாட்டாது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளால் ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவர் என்று மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.

14 சென்னையில் நேரு பார்க் முதல் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள திருமங்கலம் வரை சுரங்க ரயில் பாதையை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

31 சென்னை, தியாகராய நகரில் உள்ள பிரபல சென்னை சில்க்ஸ் துணிக் கடை யில் தீ விபத்து ஏற்பட்டு, 10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் அந்தத் துணிக்கடை முழுவதும் தீக்கிரையானது. ஜூன் 8 தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டியை அனைத்து இனங்களுக்கும் 9.6.2017 முதல் 33 சதவீதம் அளவுக்கு குறைத்து பத்திரப் பதிவுத் துறை அறிவிப்பு வெளியிட்டது.

16 அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமென்ட், அம்மா குடிநீர் போன்று பொது மக்களின் பயன்பாட்டுக்கு 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க் தொடங்கப்படும் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆர். காமராஜ் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்தார்.

25 பொது மக்கள் பயன்பாட்டுக்கு போரூர் மேம்பாலத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பாலத்துக்கு பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என பெயரிடப்பட்டது. ஜூலை 14 தஞ்சாவூர் அருகே பழுதாகி நின்ற சரக்கு ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியது. இதில் 9 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர்.

14 தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் உரிமைகள், பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் 2017- மசோதாவை சட்டப் பேரவையில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

16 சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரில் உள்ள பேக்கரியில் எரிவாயு உருளை வெடித்ததில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தாற்காலிகப் பணியிட மாறுதலில் வந்த ஏகராஜ் என்ற தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். இந்த விபத்தில் போலீஸ், பொதுமக்கள் என 47 பேர் காயமடைந்தனர்.

25 தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

27 முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

27 சிவகங்கை மாவட்டம், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 2 பொருள்கள் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டன. அதில், அப்பொருள்கள் 2, 160, 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா எழுத்துப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டார்.

ஆகஸ்ட்

16 நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு கோரும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர், சட்ட அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் அளித்தன.

17 மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் போராளி இரோம் ஷர்மிளாவுக்கும், பிரிட்டனைச் சேர்ந்த தேஸ்மந்த் கொட்டின்கோ என்பவருக்கும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது.

17 ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

21 கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு எதிராக தனி அணியாகச் செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம், , முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அணியுடன் இணைந்ததையடுத்து, அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

22 எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர்

கடிதம் அளித்தனர்.

24 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் சிகிச்சை பெற வசதியாக தமிழக அரசு நிபந்தனையுடன் கூடிய பரோல் அளித்தது.

30 ப்ளூவேல்' எனப்படும் நீலத்திமிங்கல இணையதள விளையாட்டுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் பலியானார். செப்டம்பர் 1

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

6 நிலஅபகரிப்பு வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அவரது 58 உறவினர்களை விடுவித்து அமர்வு நீதிமன்றம் பிறபித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

7 கோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் சாவு: பலத்த காயமடைந்த 19 பேருக்கு தீவிர சிகிச்சை.

12 சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலா நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

14 பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை விற்பனை செய்ததாக காவல் துணைக் கண்காணிப்பாளர் காதர் பாஷாவை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

18 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டார்.

24.கடன் பிரச்னை காரணமாக மதுரையில் ஒரே குடும்பத்தைச் 8 பேர் தற்கொலை செய்துகொள்வதற்காக விஷம் அருந்தினர். அதில் 5 பேர் உயிரிழந்தனர்.

30.தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். அக்டோபர் 4 தமிழகத்தின் தாவூத் இப்ராஹிம் என அழைக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டான் ஸ்ரீதர் தனபால் கம்போடியாவில் தற்கொலை.

20 நாகப்பட்டினம் மாவட்டம், பொறையாறில் பராமரிப்பு இல்லாத தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனைக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

23 கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி இசக்கிமுத்து (30), தனது மனைவி சுப்புலட்சுமி (28), மகள்கள் மதிசாருண்யா (4), அட்சயபரணிகா (2) ஆகியோருடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தார்.

24 உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட்அவுட் வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

27.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ. ஆறுமுகசாமி பொறுப்பேற்பு. நவம்பர் 1 ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு முதன்முறையாக யுனெஸ்கோ அமைப்பு விருது அறிவிப்பு.

2 சென்னையில் கடந்த 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் 300 மி.மீ. அளவுக்கு பலத்த மழை பெய்தது.

7 மக்கள் பிரச்னைகளை விவாதிக்க "மையம் விசில்' என்னும் செல்லிடப்பேசி செயலியை அறிமுகம் செய்தார் நடிகர் கமல்ஹாசன்.

17 வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனையிட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்திலும் சோதனை மேற்கொண்டனர்.

17 சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வி.கே.சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2010-இல் அளித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

23 அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.

30 ஒக்கி புயலால் கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் பேரிழப்பு. நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயம். டிசம்பர் 12 உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

13 சென்னையில் நகைகளைக் கொள்ளையடித்து விட்டு ராஜஸ்தானுக்கு தப்பிய கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

20 மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விடியோ பதிவை வெளியிட்டார் டிடிவி தினகரன் ஆதரவாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வெற்றிவேல்.

24 ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் திமுக வைப்புத்தொகையை இழந்தது.


2017-ஆம் ஆண்டின் தேசியம்*

🔵💥ஜனவரி 2 தேர்தலின்போது ஜாதி, மத ரீதியாக வாக்குகள் சேகரிப்பது முறைகேடான நடவடிக்கை என்று உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வெளியிட்டது.

2 ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் உணவருந்தும் வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் அந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

3 "ரோஸ்வேலி' நிதி நிறுவன முறைகேடு வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய கைது செய்யப்பட்டார். இதையடுத்து, மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக பிரதமர் மோடி பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

4 உச்ச நீதிமன்றத்தின் 44-ஆவது தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவியேற்றார். கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை அப்பொறுப்பில் அவர் இருந்தார்.

10 ராணுவத்தினருக்கு தரமற்ற உணவு வழங்குவதாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பிரதாப் சமூகவலைதளத்தில் விடியோ பதிவிட்டார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

15 முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

16 சமாஜவாதி கட்சியையும், சின்னத்தையும் அகிலேஷ் யாதவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இது அக்கட்சியின் நிறுவனரும், அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங்குக்கு பின்னடைவாக அமைந்தது.

17 உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நிகழ்ந்த இரு வேறு ரயில் விபத்துகளில் 151 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சதி இருந்தது கண்டறியப்பட்டது.

18 சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான் விடுவிக்கப்பட்டார்.

21 ஆந்திர மாநிலம், விஜயநகரம் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 39 பேர் பலியாகினர்; 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

26 காஷ்மீரின் குரேஸ் பகுதியில் நேர்ந்த பனிச்சரிவில் சிக்கி பாதுகாப்புப் படையினர் 20 பேர் பலியாகினர். பிப்ரவரி 2 ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகார முறைகேடு வழக்கில் மாறன் சகோதர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு சட்டவிரோதமாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியதாக நாடு முழுவதும் 156 வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

6 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விருதை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

13 மத்தியப் பிரதேசத் தேர்வு வாரியமான வியாபம் சார்பில் முறைகேடாக நடத்தப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும், மாணவர் சேர்க்கையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

13 தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திரத்திலும் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவை நடத்துவதற்கான சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

15 ஒரே செயற்கைக்கோளில் 104 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி உலக சாதனை படைத்தது இந்தியா. இஸ்ரோ வரலாற்றின் புதிய மைல் கல் சாதனையாக இது பதிவானது.

17 பிரபல தென்னிந்திய நடிகை பாவனா, தம்மை சிலர் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகப் புகார் அளித்தார். இதில் மலையாள நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

19 உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்த விவகாரத்தில் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்த நாகாலாந்து முதல்வர் டி.ஆர்.ஜீலியாங், தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

23 மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 10 மாநகராட்சிகளில் 8 மாநகராட்சிகளை அக்கட்சி கைப்பற்றியது.

24 ரூ.17,000 கோடி செலவில் அதிநவீன ஏவுகணையை ஒருங்கிணைந்து வடிவமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியா - இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்டது. மார்ச் 2 ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலைக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது.

6 போர் விமானங்களைத் தாங்கிச் செல்லும் ஐஎன்எஸ் விராட் கப்பல், கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றது.

8 இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கு ஆதாரை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

9 பணிக்குச் செல்லும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு காலத்தை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

10 எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாகக் கருதப்பட்ட சந்திராயன் 1 விண்கலம், இன்னமும் நிலவைச் சுற்றி வந்து கொண்டிருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

11 சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தாக்குதலில் 11 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர்.

11 உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக மகத்தான வெற்றி பெற்றது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. கோவா மற்றும் மணிப்பூரில் பெரும்பான்மை பலம் இல்லாததால் பிற கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சியமைத்தது பாஜக.

15 பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சரும், சமாஜவாதி மூத்த தலைவருமான காயத்ரி பிரஜாபதி கைது செய்யப்பட்டார்.

15 பீரேன் சிங் மணிப்பூர் முதல்வராகப் பதவியேற்றார்.

16 பஞ்சாப் முதல்வரானார் அமரீந்தர் சிங்.

18 பாஜகவின் திரிவேந்திர சிங் ராவத் உத்தரகண்ட் மாநில முதல்வராகப் பதவியேற்றார்.

19 உத்தரப் பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்பு.

22 ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பிளவுபட்டதால் கட்சியின் சின்னமான இரட்டை இலையை முடக்கியது தேர்தல் ஆணையம்.

23 ஏர் இந்தியா ஊழியரை சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் காலணியால் தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விமானத்தில் பயணிக்க அவருக்கு அனைத்து விமான நிறுவனங்களும் தடை விதித்தன.

27 அரசின் சமூக நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏப்ரல்

3 ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை.

3 வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த வழக்கில் ஹிமாசல் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் ரூ.27 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்.

4 விவசாயிகள் பெற்ற ரூ.36,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என உத்தரப் பிரதேச அரசு அறிவித்தது.

10 பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம்.

13 ஜம்மு - காஷ்மீரில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக ஸ்ரீநகர் இடைத் தேர்தலில் வெறும் 2 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகின.

17 நாரதா ரகசிய விடியோ வழக்கில் திரிணமூல் காங்கிரûஸச் சேர்ந்த 12 மூத்த தலைவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

18 கடன் ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை அந்நாட்டு போலீஸôர் கைது செய்தனர். ஆனால், அதற்கு அடுத்த சில மணி நேரத்திலேயே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

19 விஐபி கலாசாரத்தை ஒழிக்கும் விதமாக கார்களில் சிவப்பு சுழல் விளக்குப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்தது.

24 தில்லி மாநகாராட்சித் தேர்தலில் 50 வார்டுகளைக் கூட கைப்பற்ற இயலாமல் ஆளும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியடைந்தது. மே

5 வாராக் கடனை வசூலிக்க வங்கிகளுக்கு உத்தரவிடுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு பல்வேறு அதிகாரங்களை அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

5 நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளான 4 பேரின் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

7 தில்லியில் சுகாதாரத் துறை சத்யேந்திர ஜெயினிடம் இருந்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா குற்றச்சாட்டு.

7 கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,900 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்த 399 நிழல் நிறுவனங்களைக் கண்டுபிடித்தது சிபிஐ.

9 பாகிஸ்தானில் இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது சர்வதேச நீதிமன்றம்.

9 தொழில் அதிபர் விஜய் மல்லையாவை குற்றவாளியாக அறிவித்தது உச்ச நீதிமன்றம்.

10 சிபிஎஸ்இ நடத்திய நீட் நுழைவுத் தேர்வில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதிய தேர்வர்களுக்கு வெவ்வேறு வகையான கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டதாக எழுந்தப் புகாரால் சர்ச்சை.

12 சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய "நேஷனல் ஹெரால்டு' வழக்கில், வருமான வரித் துறை விசாரணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

16 மேற்கு வங்கத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை வங்க மொழி கட்டாயப் பாடமாக அறிவிப்பு.

22 மத்தியப் பிரதேசத்தில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக, முன்னாள் நிலக்கரித் துறைச் செயலர் ஹெச்.சி.குப்தா உள்ளிட்ட மூவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனா வழங்கப்பட்டது.

26 அஸ்ஸôம் மாநிலம், லோஹித் நதியின் குறுக்கே 9.15 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பபட்டுள்ள பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

26 நாடு முழுவதும் இறைச்சிக் கூடங்களுக்கு பசுக்களை விற்பனை செய்ய தடை விதித்தது மத்திய அரசு.

30 பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் பதிவு. ஜூன் 2 பிகாரில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மோசடி செய்து முதலிடம் பிடித்த மாணவன் கைது.

3 பிரிவினையைத் தூண்டுவதற்கு பாகிஸ்தானில் இருந்து நிதி கிடைப்பதாக வந்த புகாரை அடுத்து, தில்லி, ஹரியாணா, காஷ்மீர் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை.

5 இந்தியாவால் உருவாக்கப்பட்ட அதிக எடை கொண்ட "ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி-1' ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

5 உத்தரப் பிரதேசத்தில் லாரி மீது மோதிய அரசுப் பேருந்து தீப்பிடித்ததை அடுத்து 24 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

7 மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

8 கேரளத்தில் 3, 4 நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் மீண்டும் மது விற்பனைக்கு கேரள அரசு ஒப்புதல்.

10 வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 1- முதல் ஆதார் எண் கட்டாயம் என அரசு அறிவிப்பு.

13 லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர்.

14 மேற்கு வங்க பள்ளிகளில் வங்க மொழியை எதிர்த்து, கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் போராட்டம்.

16 மும்பையில் 1993-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அபு சலேம் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு.

17 கொச்சியில் மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி.

20 நீதிபதி சி.எஸ்.கர்ணன், கோவை அருகே கைது.

23 ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து 39 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

27 ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். ஜூலை 1 நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது.

4 தலைமை தேர்தல் ஆணையராக ஏ.கே.ஜோதி நியமனம்.

7 லாலு பிரசாத், அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 12 இடங்களில் சிபிஐ சோதனை.

7 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு கோரிய தமிழக அரசின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

10 ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை.

18 நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனக் கூறி மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் மாயாவதி.

20 குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி

21 காங்கிரஸ் கட்சியில் இருந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா விலகல்.

26 நிதீஷ் -லாலு கூட்டணி முறிவு; பாஜக கூட்டணியுடன் ஆட்சியமைக்க முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்.

31 சமையல் எரிவாயு மானியத்தை 2018-மார்ச்சில் இருந்து ரத்து செய்ய மத்திய அரசு முடிவு. ஆகஸ்ட் 4 மரணச் சான்றிதழ் பெறவும் அக்டோபர் 1 முதல் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு.

5 மத்திய கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக ராஜீவ் குமார் நியமனம்

9 பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஆந்திரத்தில் சார் ஆட்சியராக பொறுப்பேற்பு.

11 நாட்டின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு

பொறுப்பேற்பு.

11 உத்தரப் பிரேதசம், கோரக்பூர் மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 22 குழந்தைகள் உள்பட 30 பேர் சாவு.

12 பாஜகவுடனான கூட்டணியை எதிர்த்த சரத் யாதவின் மாநிலங்களவை ஜேடியு எம்.பி.க்கள் குழுத் தலைவர் பதவி பறிப்பு.

19 உத்தரப் பிரதேச மாநிலம், கதெüலி என்ற இடத்தில் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 23 பேர் உயிரிழப்பு, 400 பேர் காயம்.

23 மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில், ஓபிசி பிரிவினரின் வருமான உச்ச வரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக அதிகரிப்பு.

23 ஐஎன்எஸ் மீடியா முறைகேடாக வெளிநாட்டு நிதி பெற உதவியதாக, கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை.

24 அந்தரங்கம் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பு.

28 பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா தலைவர் குர்மீத் சிங் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

28 டோக்கா லாம் அருகே, இந்தியா, சீனா படைகளுக்கு இடையே 72 நாள்களாக நீடித்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.

28 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்பு. செப்டம்பர் 3 இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமினம். பொன்.ராதா கிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பாக நிதித் துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

5 கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மூத்த பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

7 மும்பையில் 1993-ஆம் ஆண்டில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் தாஹிர் மெர்ச்சென்ட், ஃபெரோஸ் கான் ஆகிய இருவருக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

8 விமானங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் பயணிகளுக்கு, விமானத்தில் பயணிக்க ஆயுள்கால தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

8 தில்லி அருகே குருகிராமில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டான். இச்சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

14 ஆமதாபாத் - மும்பை இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் தொடங்கி வைத்தனர்.

20 கேரள மாநில முதல் பெண் டிஜிபியாக ஆர்.ஸ்ரீலேகா நியமிக்கப்பட்டார்.

29 மும்பை எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர். அக்டோபர் 4 பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவராக ரஜ்னீஷ் குமார் நியமிக்கப்பட்டார்.

6 ஆயுர்வேத மருந்துகள் உள்பட 27 பொருள்களுக்கான சரக்கு, சேவை வரி குறைக்கப்பட்டது.

9 காற்று மாசுவை கட்டுப்படுத்த, தில்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தாற்காலிக தடை விதித்தது. தீபாவளி நேரத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

9 கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

23 ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதிகள் உள்பட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த, மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதியாக உளவுத் துறை முன்னாள் இயக்குநர் தினேஸ்வர் சர்மா நியமிக்கப்பட்டார்.

31 மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வியாபம் ஊழல் வழக்கில் 490 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

31 கர்நாடக மாநில முதல் பெண் டிஜிபியாக நீலாமணி என் ராஜூ பொறுப்பேற்றார். நவம்பர் 7 தலைநகர் தில்லியில் புகையுடன் பனியும் கலந்து மிக கடுமையான காற்று மாசு ஏற்பட்டது. கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் ஆகிய பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

10 மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் உள்பட 178 பொருள்களுக்கான சரக்கு சேவை வரி குறைக்கப்பட்டது.

15 நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான கேரள போக்குவரத்து துறை அமைச்சர் தாமஸ் சாண்டி பதவி விலகினார்.

17 பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அணியே, உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இது, மூத்த தலைவர் சரத் யாதவ் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

18 இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மானுஷி சில்லர், "உலக அழகி-2017' பட்டத்தை வென்றார். 17 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு இந்தப் பெருமை கிடைத்தது.

21 சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்தியாவின் தல்வீர் பண்டாரி (70) மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

28 ஹைதராபாதில் நடைபெற்ற சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவான்கா டிரம்ப் பங்கேற்றார். டிசம்பர் 7 இந்தியாவில் நடைபெறும் கும்ப மேளாவை, உலகிலேயே மதரீதியில் அதிக பக்தர்கள் பங்கேற்கும் விழாவாக யுனெஸ்கோ அங்கீகரித்தது.

8 நொய்டா அருகே நிதாரியில் சிறுமிகள், பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில், தொழிலதிபர் மொனீந்தர் சிங், அவரது உதவியாளர் சுரேந்தர் கோலி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

10 குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயல்வதாகவும், முன்னாள் பிரதமர் மன்மோகன் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாகிஸ்தானுடன் சதி ஆலோசனை நடத்தியதாகவும் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை, காங்கிரஸ் நிராகரித்தது.

14 எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

15 முத்தலாக் தடைச் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

15 நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது.

16 காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுபேற்றார்.

16 நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

18 குஜராத், ஹிமாசலப் பிரதேச பேரவைத் தேர்தல்கள் முடிவுகள் வெளியாகின. இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றது.

21 பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2 ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


🔴2017-ஆம் ஆண்டின் உலகம்

🔵💥ஜனவரி 1 ஐ.நா.வின் 9-ஆவது பொதுச் செயலராக ஆன்டோனியோ குட்டெரெஸ் பொறுப்பேற்றார்.

17 நைஜீரியாவை அச்சுறுத்தி வரும் போகோ ஹராம் பயங்கரவாத முகாம் என்று நினைத்து, பயங்கரவாதத்தால் புலம் பெயர்ந்த அகதிகள் முகாம் மீது அந்த நாட்டு விமானப் படை நிகழ்த்திய குண்டு வீச்சில் 100}க்கும் மேற்பட்ட அகதிகள் பலியாகினர்.

20 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டின் 45}ஆவது அதிபராகப் பொறுப்பேற்றார்.

27 பயங்கரவாத பாதிப்புகளுக்குள்ளான 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடுக்கும் சர்ச்சைக்குரிய உத்தரவை டொனால்ட் டிரம்ப் பிறப்பித்தார்.

30 பயங்கரவாதத்துக்கு உதவினால் பாகிஸ்தானிகளும் அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டியதைத் தொடர்ந்து, மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் தலைவர் ஹஃபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு வீட்டுக் காவலில் வைத்தது.

இந்தியர்களுக்கு பெருமளவில் பயனளித்து வந்த அமெரிக்காவின் ஹெச்1}பி விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் சட்ட மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பத்து அணுகுண்டுகளை ஒன்றாக ஏந்திச் சென்று, தனித் தனி இலக்குகளைத் தாக்குதல் நிகழ்த்தும் புதிய ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதித்தது. பிப்ரவரி 1 ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு அந்த நாட்டு எம்.பி.க்கள் ஒப்புதல் அளித்தனர்.

14 வட கொரிய அதிபர் கிம் ஜோங்}உன்னின் சகோதரர் கிம் ஜோங்}நாமை, மலேசிய விமான நிலையத்தில் இரு பெண்கள் விஷப் பொடியை நுகரச் செய்து படுகொலை செய்தனர். கிம் ஜோங்}உன்னின் தூண்டுதலில் பேரில் இந்த படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

21 படகு விபத்தில் பலியான 87 ஆப்பிரிக்க அகதிகளின் உடல்கள் லிபிய கடற்கரையில் கரையொதுங்கின.

22 சூரியனிலிருந்து 39 ஒளிவருட தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தை, பூமியையொத்த 7 கோள்கள் சுற்றி வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, பூமிக்கு வெளியும் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை எழுந்தது. மார்ச் 4 நிறவெறித் தாக்குதலில் இந்தியப் பொறியாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாள்களில், அமெரிக்காவில் 43 வயது கடை உரிமையாளர் ஹார்னிஷ் படேல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

10 ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தென் கொரிய அதிபர் பார்க் கியூன்}ஹை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அந்த நாட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்ட ஹிந்து திருமணச் சட்டம், பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 3 ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர். மற்றொரு குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

4 சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நிகழ்த்தப்பட்ட ரசாயன குண்டு வீச்சில் 11 சிறுவர்கள் உள்பட 58 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை சிரியா அரசு நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

7 ரஷியா ஆதரவளித்து வரும் சிரியா அரசுக்கு எதிராக அமெரிக்கா முதல் தாக்குதல் நிகழ்த்தியது. பொதுமக்கள் மீதான ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியா அரசு விமானப் படை தளத்தில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியது.

10 எகிப்தில் கிறித்துவ தேவாயலத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 43 பேரை படுகொலை செய்ததையடுத்து, அந்த நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

13 பாகிஸ்தானையொட்டிய ஆப்கன் பகுதியில், தலிபான் பயங்கரவாதி முகாம்கள் மீதுஅணுகுண்டுகளுக்கு அடுத்தபடியாக மிக சக்தி வாய்ந்த, "வெடிகுண்டுகளின் ராணி' என்றழைக்கப்படும் ஜிபியு}43 குண்டை வீசி அமெரிக்கா தாக்குல் நிகழ்த்தியது. இதில் 94 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

15 சிரியாவில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நோக்கிச் சென்று கொண்டிருந்த அகதிகள் பேருந்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 68 சிறுவர்கள் உள்பட 126 பேர் உயிரிழந்தனர்.

21 ஆப்கன் ராணுவ தளத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குலில் 100}க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் பலியாகினர்.

ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்க மருத்துவ சேவைப் படையின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி மருத்துவரான விவேக் மூர்த்தியை, டிரம்ப் நிர்வாகம் பதவியிலிருந்து நீக்கியது.

26 முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கபட்ட விமானம் தாங்கிக் கப்பலை சீனா அறிமுகப்படுத்தியது. மே 7 பிரான்ஸ் அதிபர் தேர்தலில், வர்த்தக வளர்ச்சிக்கு சாதகமான கொள்கைகளைக் கொண்ட இம்மானுவேல் மேக்ரன் வெற்றி பெற்றார்.

8 நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருந்த 84 பள்ளி மாணவிகள் விடுவிக்கப்பட்டனர்.

9 தென் கொரிய அதிபர் தேர்தலில் இடதுசாரி ஆதரவாளர் மூன் ஜே-இன் அமோக வெற்றியடைந்தார்.

அமெரிக்க உளவுத் துறையான எஃப்.பி.ஐ. தலைவர் ஜேம்ஸ் கோமி, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வற்புறுத்தலால் ராஜிநாமா செய்தார்.

14 இணையதளம் மூலம் பரவிய "ரான்சம்வேர்' தாக்குதலால் 150 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

20 ஈரானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிபர் ஹஸன் ரெüஹானி வெற்றியடைந்தார்.

22 பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் பலியாகினர்.

26 இலங்கையின் தெற்குப் பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக 91 பேர் உயிரிழந்தனர். ஜூன் 7 ஈரானில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்த நாட்டில் நடைபெற்ற தாக்குதலுக்கு, சன்னி பிரிவு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். பொறுப்பேற்றது அதுவே முதல் முறை.

13 வங்கதேசத்தில் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவுகளில் சிக்கி, ஏராளமான ராணுவத்தினர் உள்பட 105 பேர் உயிரிழந்தனர்.

14 பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 அடுக்கு குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.

25 பாகிஸ்தானில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த எண்ணெய் லாரியிலிருந்து, எரிபொருள் சேகரித்துக் கொண்டிருந்த 151 பேர், திடீரென ஏற்பட்ட தீ வெடிப்பால் உடல் கருகி உயிரிழந்தனர். ஜூலை 4 கண்டம் விட்டு கண்டம் பாயும் தனது முதல் ஏவுகணையை வட கொரியா வெற்றிகரமாக சோதித்தது.

9 ஒரு மாதமாக நீடித்த கடும் சண்டையைத் தொடர்ந்து, இராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது.

11 ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்}பாக்தாதி, தாக்குதலில் கொல்லப்பட்டதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிவித்தது.

28 பனாமா ஆவண ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, பாகிஸ்தான் பிரமதமர் நவாஸ் ஷெரீஃப் அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. ஆகஸ்ட் 17 ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா நகரில், கூட்டத்தினர் மீது வேன் மூலம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்; 120 பேர் காயமடைந்தனர்.

21 சரக்கு எண்ணெய்க் கப்பலுடன் அமெரிக்காவின் ஜான் எஸ். மெக்கெய்ன் போர்க் கப்பல் மோதியதில் 10 வீரர்கள் மாயமாகினர்; 5 பேர் காயமடைந்தனர்.

31 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃபை தலைமறைவுக் குற்றவாளியாக அறிவித்த அந்த நாட்டு நீதிமன்றம், அவரது சொத்துகளை முடக்க உத்தரவிட்டது. செப்டம்பர் 7 மெக்ஸிகோவில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.

12 ரஷியாவிடமிருந்து எஸ்}400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணை சாதனங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் துருக்கி கையெழுத்திட்டது.

19 மெக்ஸிகோவில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் 217 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஆரம்ப நிலைப் பள்ளி இடிந்து விழந்தில் பலியான 21 குழந்தைகளும் அடங்குவர்.

27 சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படும் என அந்த நாட்டு அரசு முதல் முறையாக அறிவித்தது.

28 அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான துப்பாக்கித் தாக்குதல் சம்பவமாக, லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 64 வயது அமெரிக்கர் நிகழ்த்திய துப்பாக்கித் தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்த மர்மம் இன்னமும் நீடித்து வருகிறது. அக்டோபர் 15 சோமாலியா தலைநகர் மொகதிஷுவில் நடத்தப்பட்ட மிகப் பயங்கர குண்டு வெடிப்புத் தாக்குதலில் 276 பேர் உயிரிழந்தனர்; 300 பேர் காயமடைந்தனர்.

27 ஸ்பெயினிலிருந்து விடுதலை பெறுவது குறித்த பொதுவாக்கெடுப்பு முடிவின் படி, காடலோனியா மாகாணம் தனி நாடாக தன்னை அறிவித்துக் கொண்டது. எனினும், இந்த பிரகடனத்தை ஸ்பெயின் நிராகரித்தது.

31 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத லாரி தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 5 உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்கள் மற்றும் நிறுவனங்களின் கடல் கடந்த ரகசிய வர்த்தக நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை சர்வதேச புலனாய்வுச் செய்தியாளர்கள் அமைப்பு (ஐசிஐஜே) வெளியிட்டது.

12 ஈரானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 500}க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

15 ஜிம்பாப்வேயின் நீண்ட கால அதிபர் ராபர்ட் முகாபேவிடமிருந்து ஆட்சியதிகாரத்தை அந்த நாட்டு ராணுவம் கைப்பற்றியது.

21 பொதுமக்களின் போராட்டம் மற்றும் ராணுவம் கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து, ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜிநாமா செய்தார்.

24 எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 235 பேர் உயிரிழந்தனர். டிசம்பர் 1 யேமனின் முன்னாள் அதிபரும், ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான உறவை முறித்துக் கொண்டவருமான அலி அப்துல்லா சலே, கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

6 இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வரும் சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கவிருப்பதாக அறிவித்து அதிர்ச்சியலையை ஏற்படுத்தினார்.

8 ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

9 ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமான சீன நிறுவனங்களிடம் ஒப்படைத்தது.

21 சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததை நிராகரிப்பதற்கான தீர்மானம், ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா உள்ளிட்ட 127 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

24. அமெரிக்காவைத் தொடர்ந்து மத்திய அமெக்க நாடான கௌதமாலாவும் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது.