திங்கள், 25 நவம்பர், 2019

‘254 பேனா நிப்’புகளால் எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்ட புத்தகம்


‘254 பேனா நிப்’புகளால் எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்ட புத்தகம்

நமக்காக நாமே உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததும் இதே நாளில்தான். 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ல் நடைமுறைக்கு வந்தது. இந்த அரசியலமைப்பு சட்டம் குறித்து சிறு வயது முதல் சில தகவல்களை நாம் பள்ளி, கல்லூரிகளில் படித்திருப்போம்.             

‘இதுதான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன’ என்பவை அவற்றுள் அடிப்படையானவை. அதேபோல், இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 26இல் அரசியல் நிர்ணய சபையால் அரசியலமைப்பு வரைவுக் குழு உருவாக்குவதில் தொடங்கியது. இக்குழு அளித்த அறிக்கை, 1949 நவம்பர் 26-ல் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றதுடன் பணிகள் முழுமை பெற்றது.

       அரசியலமைப்பு வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள் யார் யார்?

அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்பு வரைவுக் குழுவில் மொத்தம் 8 பேர் இடம் பெற்றிருந்தனர். இதில் இடம்பெற்ற ஒவ்வொருவரும் சட்ட ரீதியான பின்புலம் கொண்டவர்கள். மும்பை நீதிமன்றத்தில் சட்டம் பயில்வதற்காக 500 கிடைக்காமல் சிரமப்பட்டு, பின்னர் சிலரின் உதவியால் படிப்பை முடித்தவர் அம்பேத்கர். அவர்தான் அரசிலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்.

1. டாக்டர் அம்பேத்கர்
2. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
3. கே.எம்.முன்ஷி
4. கோவிந்த் பல்லாப் பண்ட்
5. தேபி பிரசாத் கேத்தான்
6. சர் சையது முகமது சாதுல்லா
7. கோபல சுவாமி அய்யங்கார்
8. பிஎல் மிட்டர்

      இனி, அரசியலமைப்பு சட்ட புத்தகம் குறித்த சுவரஸ்யமான சில தகவல்களை பார்க்கலாம்.

நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தை பிரேம் பெகாரி ரெய்ஜாடா என்பவர் எழுதினார். இதற்கு அவர் சுமார் 6 மாதங்கள் எடுத்துக் கொண்டார். இதனை எழுத 254 வகையான விதவிதமான பேனா நிப்புகளை அவர் பயன்படுத்தினார்.

          அரசிலயமைப்பின் எழுத்துப்பூர்வமான பிரதி இந்திய ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, அது பல்வேறு பிரதிநிதிகள் நகல் எடுக்கப்பட்டது. இன்றும் சில கையெழுத்து பிரதிகள் சந்தையில் கிடைக்கின்றன.

          நம்முடைய அரசியலமைப்பு சட்ட புத்தகம் மிகவும் அழகான ஆவணம். அதோடு, மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒன்று. அதில், மொஹஞ்சாதாரோ முதல் வேத காலம் வரையிலான வரலாற்றை பிரதிபலிக்கும் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. மௌரியா மற்றும் குப்தர் கால சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன.     

முன் பக்கங்கள் ஒன்றில் நடராஜரின் சிற்ப வடிவ ஓவியமும் இடம்பெற்றிருந்தது. அதேபோல், காந்தி தண்டி யாத்திரை சென்றதை குறிக்கும் படமும் இருந்தது.

          முஸ்லிம் காலம் முதல் பிரிட்டீஷ் ஆட்சி வரையில் திப்பு சுல்தான், ரானி லஷ்மி பாய் மற்றும் அக்பர் படங்கள் இடம்பெற்றுள்ளன.

           இறுதியாக, சுதந்திரத்திற்காக படை அமைத்து போராடிய நேதாஜி சுபாய் சந்திர போஸும் இடம்பெற்றுள்ளார்.

           அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தின் முகப்பில் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் மற்றும் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கையெழுத்தும் இடம்பெற்றிருந்தது.
 நன்றி புதிய தலை முறை.

#டாக்டர்_ அம்பேத்கர் #அரசியலமைப்புச்சட்டதினம் #November_26
Dr_Ambedkar
Constitution of India constitution day 2
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

இந்திய அரசியலமைப்பு ( Constitution of India )


இந்திய அரசியலமைப்பு ( Constitution of India ) 

இந்திய அரசியலமைப்பு ( Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 103 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள்(Articles) மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26 ஜனவரி 1930, முழு தன்னாட்சி சாற்றல் நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 என்னும் சட்டத்திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது.

இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி (federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'கூட்டாட்சி' (கூட்டரசு - federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக 'ஒன்றியம்' (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை(preamble)யில், " இறையாண்மை உடைய மக்களாட்சி, சமதர்ம, சுதந்திரக் குடியரசு" என்றும் " இந்திய ஒன்றியம் என்றும் இந்தியா7 பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் முழுப் புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் 'அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.

இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, 'கடன்களின் பொதி' என்பர். 'கூட்டாட்சி முறையை' கனடாவில் இருந்தும், 'அடிப்படை உரிமைகள்' அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையை தென்னாப்பிரிக்கா இருந்தும், மாநிலங்களவை நியமன எம்.பி.,க்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது.

இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு தொகு
இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த காலத்தில் வெளிநாட்டு ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது. 1934-ல் இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய மன்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936-இலும் 1939-இலும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, அரசியல் நிர்ணய மன்றத்தை உருவாக்கலாம் என கிரிப்ஸ் தூதுக்குழு மார்ச்-1942-ல் பரிந்துரைத்தது. பின்னர் வந்த அமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946) அரசியல் நிர்ணய மன்றம் ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய மன்றத்திற்கான தேர்தல், ஜூலை 1946-ல் நடைபெற்றது. டிசம்பர் 1946-ல் அரசியல் நிர்ணய மன்றம் கூடியது. அம்மன்றத்தின் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்ஹா டிசம்பர் 09 தேர்வுசெய்யப்பட்டார். பிறகு நிர்ணய மன்றத்தின் நிரந்தர தலைவராக டிசம்பர்-11, 1946-ல் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947,ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய இந்தியாவானது இந்திய மாகாணம், பாக்கிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய மன்றம் செய்ய வேண்டியதாயிற்று.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் தொகு
முதன்மைக் கட்டுரை: இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்
ஒன்றிய மற்றும் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. ஜவகர்லால் நேரு, சி ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர். தாழ்த்தபட்ட வகுப்புகளை சேர்ந்த 30 மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தன. பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை ஹெச்பி மோடி பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிரிஸ்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர ஊமர் முகெர்ஜீ என்ற புகழ்பெற்ற கிரிஸ்துவர் இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார். அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், பி ஆர் அம்பேத்கர், பெனகல் நர்சிங் ராவ் மற்றும் கி.மீ. முன்ஷி, கணேஷ் மவ்லன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அரசமைப்பு மன்றத்தின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்ஹா ​​இருந்ததார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு மன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.

அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு தொகு
1947, ஆகஸ்ட் 29 -ல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.

பீ. இரா. அம்பேத்கர்
கோபால்சாமி ஐயங்கார்
அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
கே. எம். முன்ஷி
சையது முகமது சாதுல்லா
மாதவராவ்
V.T.கிருஷ்ணமாச்சாரி
ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது. நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய மன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று 1949 நவம்பர் 26-ல் அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930,ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நினைவாக ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய மன்ற முடிவு செய்தது. "இந்திய அரசியலமைச் சட்டம்-1950" இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது.

இது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து அதன் விடுதலைக்கு பிறகு இந்திய அரசின் நில சட்டத்தின் ஸ்தாபக கொள்கைகளைக் கொண்டிருந்தது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, இந்தியா பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து நீக்கப்பட்டது.

வரைவு தொகு
சட்டமன்றத்தின் 14 ஆகஸ்ட் 1947 கூட்டத்தில், பல்வேறு குழுக்களை உருவாக்கும் திட்டம் வழங்கப்பட்டது. அத்தகைய குழுக்களில் அடிப்படை உரிமைகள், ஒன்றியத்துக்கான அதிகாரக் குழு மற்றும் ஒன்றிய அரசியல் குழு அடங்கியிருந்தன. 29 ஆகஸ்ட் 1947 அன்று, வரைவு குழு, தலைவரை டாக்டர் அம்பேத்கராக கொண்டு, ஆறு உறுப்பினர்களுடன் நியமிக்கப்பட்டது. அரசியலமைப்பின் வரைவு தயாரிக்கப்பட்டு 4 நவம்பர், 1947 அன்று சட்டமன்ற குழுவிடம் சமர்பித்தது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், பல வெளிப்புற ஆதாரங்களை தழுவினாலும், மிக அதிக அளவில் பிரிட்டிஷ் முறையான பாராளுமன்ற மக்களாட்சியினால் ஈர்க்கப்பட்டனர். கூடுதலாக பல கொள்கைகள் அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் முக்கிய கிளைகள் மத்தியில் அதிகார பிரிப்பு, உச்ச நீதிமன்ற நடைமுறை, மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பு ஆகிய கொள்கைகள் அடங்கும். சட்டமன்ற அரசியலமைப்பு தத்தெடுக்கும் முன்னதாக 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் முழுவதும் கொண்ட மொத்தம் 166 நாட்கள், பொது திறந்த அமர்வுகளில் சந்தித்தது. சில மாற்றங்களுக்கு பிறகு, சட்டமன்றத்தின் 308 உறுப்பினர்களும் இரண்டு ஒப்பந்ததிலும் (இந்தி மற்றும் ஆங்கிலம்)24 ஜனவரி,1950 அன்று கையெழுத்து இட்டனர். இந்தியாவின் உண்மையான அரசியலமைப்பு பிரேம் பிஹாரி நரேன் ரைஜடா என்பவர் கையால் எழுதப்பட்டு, பியூகார் ராம்மனோஹர் சின்ஹா ​​மற்றும் மற்றவர்கள் உட்பட சாந்திநிகேதன் கலைஞர்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பின்னர், 26 ஜனவரி 1950 அன்று, இந்திய அரசியலமைப்பு அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் ஒன்றியப் பகுதிகளுக்குமான சட்டமானது.

அரசியலமைப்பு அதன் அரங்கேற்றம் முதல் பல திருத்தங்களை பெற்றுவிட்டது.

பிறநாட்டு அரசியலமைப்பின் தாக்கங்கள் தொகு
Learn more
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.


டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்குழு இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பொருட்டு அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய நடைமுறைக்கு பொருத்தும் சட்டக்கூறுகளை இந்திய அரசியலமைப்பு வரைவில் சேர்த்தது. இவற்றில், 1935ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்திய அரசாங்க சட்டம் 1935 -உம் அடக்கம்.
இங்கிலாந்து
பாராளுமன்ற முறையிலான அரசாங்கம்
ஒற்றைக்குடியுரிமை
'சட்டத்தின் ஆட்சி' கருத்தியல்
அவைத்தலைவர் முறைமை மற்றும் அவரது பணிகள்
சட்டமியற்றும் முறை
Procedure established by Law
ஐக்கிய அமெரிக்கா

அடிப்படை உரிமைகளுக்கான சாசனம்
கூட்டாட்சி முறை அரசாங்கம்
வாக்களர் மன்றம்
நீதித்துறையின் தன்னாட்சி மற்றும் அரசாங்கத்தின் மூன்று அங்கங்களுக்கிடையேயான அதிகாரப் பகிர்வு
நீதித்துறையின் புலனாய்வு
முப்படைகளின் தலைவராக குடியரசுத்தலைவர்
சட்டத்தின் சம பாதுகாப்பு
அயர்லாந்து

அரசின் நெறிமுறை கோட்பாடுகள்
ஆஸ்திரேலியா
Freedom of trade and commerce within the country and between the states
Power of the national legislature to make laws for implementing treaties, even on matters outside normal Federal jurisdiction
பொதுப்பட்டியல்
முகவுரையின் வாசகங்கள்
பிரான்சு

சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவ கருத்தாக்கங்கள்
கனடா

பலமிக்க நடுவண் அரசாங்கமுறை அமையப்பெற்ற அரைகுறை-கூட்டாட்சி முறை
மைய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப்பகிர்வு முறை
எஞ்சிய அதிகாரங்கள் மைய அரசாங்கம் வசம்.
சோவியத் யூனியன்

அடிப்படை கடமைகள்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிகளை முன்னெடுத்துச்செல்ல திட்டக்குழு
பிற சட்ட மூலங்கள்
அவசரநிலை பிரகடனம் (வெய்மர் அரசியல் சாசனம் - ஜெர்மனி)
அரசியல் சாசனத்தை திருத்தும் முறை - தென் ஆப்ரிக்கா.
அமைப்பு தொகு
அரசியலமைப்பு அதன் தற்போதைய வடிவத்தில் (மார்ச்,2011), ஒரு முன்னுரை, 450 கட்டுரைகள், 12 அட்டவணை, 2 பின் இணைப்பு மற்றும் 114 திருத்தங்களை இன்றுவரை கொண்டு மொத்தம் 24 பகுதிகளைக் கொண்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவம் கொண்டது என்றாலும், ஒரு வலுவான ஒற்றைச் சார்பு கொண்டிருக்கிறது.

முகவுரை தொகு
இந்திய அரசியலமைப்பின் முகப்புரை என்பது இந்தியஅரசியலமைப்பின் அறிமுகப்பகுதியாகும்.


நாம், இந்திய மக்கள், உறுதிக் கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசாக கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும்

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி
எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை;
படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட;
மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட.

இந்த 1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய மன்றத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்கு தருகிறோம்.


பகுதிகள் தொகு
பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய ஒன்றியம் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.

பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்.(1976 ஆம் ஆண்டு 42வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது)

பகுதி 5 (உட்பிரிவு 52- 151) ஒன்றிய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர்,துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு.

பகுதி 6 ( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, ஆளுநர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.

பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.

பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 9A ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG) நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 10 (உட்பிரிவு 244) பட்டியல் சாதிகள்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.

பகுதி 11 (உட்பிரிவு 245-263) ஒன்றிய மற்றும் மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.

பகுதி 13 ( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.

பகுதி 14 ( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்

பகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி) ஒன்றிய அரசின் தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள், தேர்தல் ஆணையம்.

பகுதி 16 (உட்பிரிவு 330-342) - பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள் பற்றி.

பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி, வட்டார மொழி,நீதி மன்றங்களில் மொழி.

பகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர நிலைக்கானது பிரகடனம் (எமெர்ஜென்சி)

பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், ஆளுநர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.

பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்

பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.

அட்டவணைகள் தொகு
முதலாம் அட்டவணை (Articles 1 and 4)
இரண்டாம் அட்டவணை (Articles 59(3), 65(3), 75(6), 97, 125, 148(3), 158(3), 164(5), 186 and 221)
மூன்றாம் அட்டவணை (Articles 75(4), 99, 124(6)
நான்காம் அட்டவணை (Articles 4(1) and 80(2))
ஐந்தாம் அட்டவணை (Article 244(1))
ஆறாம் அட்டவணை (Articles 244(2) and 275(1))
ஏழாம் அட்டவணை (Article 246)
எட்டாம் அட்டவணை (Articles 344(1) and 351)
ஒன்பதாம் அட்டவணை (Article 31-B)
பத்தாம் அட்டவணை (Articles 102(2) and 191(2))
பதினோராம் அட்டவணை (Article 243-G)
பனிரெண்டாம் அட்டவணை (Article 243-W)
இந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் தொகு
இந்திய அரசியலமைப்பில் 22 அத்தியாயங்களும்(Chapters) 12 அட்டவணைகளும் (Schedules) (முதலில் 8 அட்டவணைகளே இருந்தன; 1951-ல் 9-ஆவது அட்டவணை சேர்க்கப்பட்டது) 22 அத்தியாயங்களும் 395 பிரிவு (Article) களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள், ஒன்றிய அரசின் நிர்வாகக்குழு, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் ஆகியன பற்றி சொல்லப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு கீழ்கண்ட முகப்புரையுடன் தொடங்குகிறது:

இந்தியாவின் மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு சுதந்திரமான, சமுதாயநலம்நாடும், சமயச்சார்பற்ற, சமஉரிமைக் குடியரசு நாடாக அமைக்க மனமார்ந்து முடிவுசெய்து,
அதன் குடிமக்கள் எல்லோருக்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நியாயமும், எண்ணத்தில், வெளிப்பாடுகளில், நம்பிக்கையில், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரமும், சமூகநிலையில் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமும் கிடைக்கச் செய்யவும், ஒவ்வொரு மனிதனின் மதிப்பையும் நாட்டின் ஒருமையையும் முழுமையையும் காக்கும்வண்ணம் அவர்கள் அனைவரிடமும் உடன்பிறப்புணர்வை ஊக்குவிக்கவும் நம் அரசியல் அமைப்பு உருவாக்கும் அவையில் இந்த 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளில் இங்ஙனம் இந்த அரசாங்க சாசனத்தை இயற்றி, எங்களுக்கே தந்து, ஏற்றுக்கொள்கிறோம்.


அடிப்படை உரிமைகள் தொகு
இந்திய அரசியலமைப்பின் முதல் அத்தியாயத்தில் நாட்டின் பெயர், ஆட்சிப்பரப்பு ஆகியனவும், இரண்டாவது அத்தியாயத்தில் குடிமை(Citizenship) பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. 12-ஆவது பிரிவு முதல் 35-ஆவது பிரிவு வரை உள்ள மூன்றாவது அத்தியாயத்தில் இந்தியரின் அடிப்படை உரிமைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள்:

இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு (பிரிவு-14)
வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் (பிரிவு-15)
பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு (பிரிவு-16)
தீண்டாமை ஒழிப்பு (பிரிவு-17)
பட்டங்கள் ஒழிப்பு (பிரிவு-18)
ஏழு சுதந்திரங்கள் (பிரிவு-19 முதல் 22)
சமய உரிமை (பிரிவு 25-28)
சிறுபான்மையினரின் பண்பாட்டு,கல்வி உரிமை (பிரிவு 29-30)
இவ்வுரிமைகளைக் காத்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32)
ஆகியன முக்கியமானவையாகும். நெருக்கடி நிலையின் போது தற்காலிகமாக அடிப்படை உரிமைகள் நீக்கப்படும். ஆனால் நெருக்கடி நிலை ரத்தானதும் அடிப்படை உரிமைகள் தானாக அமலாகிவிடும்.

அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் தொகு
இந்தியாவிலுள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மக்களைப் பாதுகாத்து நல்வழிப்படுத்த, எந்தக் கோட்பாடுகளை உள்ளடக்கி சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பதே அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Directive Principles) ஆகும். இது பற்றி நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லோருக்கும் போதுமான வாழ்க்கை வசதிகள், வயதுக்கும் வேலைக்கு ஏற்ற பொருத்தமான வேலை, தொழில் செய்ய ஏற்ற சூழ்நிலை, வேலைக்கு ஏற்ற வயது வரை இலவச கட்டாயக் கல்வி, பொது சுகாதாரம், மது விலக்கு, வேளாண்மை வளர்ச்சி, வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகியன அக்கோட்பாடுகளுள் சிலவாகும்.

இக்கோட்பாடுகள் யாவும் அறிவுரைகளே; இவற்றைச் செயல்படுத்தக் கோரி அரசுகள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது.

கூட்டாட்சி அமைப்பு தொகு
அரசியலமைப்பு ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்து வழங்குகிறது. இது பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களை மூன்று பட்டியல்,அதாவது ஒன்றிய அரசுப் பட்டியல், மாநில பட்டியல் மற்றும் உடன்நிகழ்கிற பட்டியல் என பிரிக்கிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாணய வழங்கல் போன்ற விடயங்கள் ஒன்றியப் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது ஒழுங்கு, உள்ளூர் அரசாங்கங்கள், சில வரிகள் ஆகியவை மாநிலப் பட்டியல் உள்ளன. பாராளுமன்றம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, அந்த சட்டங்களை இயற்ற எந்த சக்தியும் கிடையாது.கல்வி, போக்குவரத்து, குற்றவியல் சட்டம் ஆகிய உடன்நிகழ்கிற பட்டியலில் உள்ள பாடங்களில் மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .எஞ்சியுள்ள அதிகாரங்கள் ஒன்றியத்தின் வசம் உள்ளது.மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் மேல்சபையான மாநிலங்களவையில்,மேல் கூட கூட்டாட்சி அரசாங்கம் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

பாராளுமன்ற மக்களாட்சி தொகு
Learn more

இந்திய குடியரசு தலைவர், பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர்.நேரடியாக மக்களால் கிடையாது. பாராளுமன்றத்தில் இயற்றப்படும் நிர்வாகம் மற்றும் சட்டங்கள் அனைத்தும் அவர் பெயரில் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இந்த அதிகாரங்கள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன, குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படி தான் செயல்பட வேண்டும். இதே போன்ற ஒரு அமைப்பு, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் தங்கள் கட்டுப்பாட்டை செலுத்தும் முறை தற்போது மாநிலங்களில் உள்ளது.

சுதந்திரமான நீதித்துறை தொகு
இந்திய நீதித்துறை, நிர்வாகிகள் முதல் பாராளுமன்றம் வரை அதன் கட்டுப்பாட்டை செலுத்த முடியும். நீதித்துறை அரசியல் பொருள் விளக்குபவராக செயல்படுகிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலோ,ஒரு மாநிலத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலோ ஏற்படும் பிரச்சினைகளில் நடுநிலையாளராக செயல்படும். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இயற்றப்பட்ட சட்டம் நீதிமுறை மேலாய்வுக்கு உட்பட்டது. அந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்று நினைத்தால் நீதித்துறை அரசியலமைப்பில் அல்லாததாக அறிவிக்க முடியும்.

சட்டங்களின் நீதிமுறை மேலாய்வு தொகு
நீதிமுறை மேலாய்வை அமெரிக்காவின் அரசியலமைப்பிலிருந்து இந்திய அரசியலமைப்பு பயன்படுத்திக்கொண்டது. நீதிமன்ற உறுப்புரை 13 கீழ் நீதிமுறை மேலாய்வு செயல்படுகிறது. நீதிமன்ற அரசியலமைப்பு நாட்டின் உச்ச சக்தி மற்றும் அனைத்து சட்டங்களும் அதன் மேலாதிக்கத்தின் கீழ் என்பதை குறிக்கிறது. உறுப்புரை 13 கூறுவதாவது,

1. அனைத்து முன் அரசியலமைப்பு சட்டங்களும் பின்னர் அரசியலமைப்பு சட்ட விதிகளுடன் மோதல்கள் ஏற்பட்டால், அரசியலமைப்பின் விதிகள் அதற்கு ஏற்றதாக மாற்றப்படும் வரை செயல்படுத்த படாமல் இருக்கும்.இது டாற்றின் ஆப் எலிப்ஸ் கொள்கை என்று அழைக்கப்படுகிறது. 2. இதே முறையில், அரசமைப்பு மன்றத்தால் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டதிலிருந்து இயற்றபடும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு இணக்கத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், இல்லையெனில் சட்டங்கள் மற்றும் திருத்தங்களை வய்டு-அ பி- இனிடியோ வேண்டும் என கருதப்படுகிறது.

ஒன்றிய அரசு நிர்வாகக் குழு தொகு
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், ஒன்றிய அமைச்சரவை, பாராளுமன்றம் ஆகியவற்றைக் கொண்டதாக ஒன்றிய அரசு நிர்வாகக் குழு அமையும்.

குடியரசுத் தலைவர் (President of India) தொகு
இந்தியக் குடியரசுத் தலைவர்என்பவர் இந்தியக் குடியரசு எனப்பட்ட "இந்திய அரசின் தலைவர்" ஆவார். ஒன்றிய அரசு நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். 'இந்தியாவின் முதல் குடிமகன்' என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார்.

குடியரசுத் துணைத் தலைவர் தொகு
இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்க‌ளவை வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் வாக்குகள் சமநிலையில் இருக்கும் போது இவர் வாக்களிக்கலாம்.

ஒன்றிய அமைச்சரவை தொகு
பாராளுமன்றம் தொகு
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ளதைப்போல் இந்தியாவிலும் பாராளுமன்றம் ஈரவை கொண்ட அமைப்பாக விளங்குகிறது. முதலாம் மன்றம் அல்லது கீழவை அல்லது மக்களவை (First Chamber or Lower House or House of the People) என்ற அவை மக்களை பிரதிநித்துவப்படுதுகிறது. இரண்டாம் மன்றம் அல்லது மேலவை அல்லது மாநிலங்களவை (Second Chamber or Upper House or Council of the States) என அழைக்கப்படும் இரண்டாவது அவை இந்திய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள மாநிலங்களையும் மற்றும் ஒன்றிய அரசின் ஆளுகைப்பகுதிகளையும் பிரதிநித்துவப்படுத்துகிறது. இது தவிர குடியரசுத்தலைவர் இந்தியப் பாராளுமன்றத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறார்.

மாநிலங்களவை தொகு
முதன்மைக் கட்டுரை: மாநிலங்களவை
மாநிலங்களவையின் 238 உறுப்பினர்கள் மாநில-யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மக்களவை தொகு
முதன்மைக் கட்டுரை: இந்திய மக்களவை
மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.

முன்பு நிலவிய சட்டங்கள் தொகு
1935 முன்பான பிரித்தானிய நாடாளுமன்றத்தின் சட்டங்கள் தொகு
அச்சட்டம் மேலும் இங்கிலாந்தில் இந்திய மாநில செயலாளர் அலுவலகத்தை நிறுவி நாடாளுமன்றம், அதன் மூலம் ஆட்சி செய்தது. அதே போல் இந்திய அரச பிரதிநிதி அலுவலகத்தை நிறுவியது. நிர்வாக மன்றம் மற்றும் அல்லாத அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் கொண்ட சட்ட மன்றங்கள் இந்திய சபைகள் சட்டம், 1861 வழங்கியது. இந்திய சபைகள் சட்டம், 1892 மாகாண சட்டமன்றங்களை நிறுவியது. சட்ட சபையின் அதிகாரங்களை அதிகரித்தது. இந்த சட்டங்களால் அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்த போதிலும், அவர்களின் அதிகாரம் குறைவாகத் தான் இருந்தது. இந்திய சபைகள் சட்டம், 1909 மற்றும் இந்திய அரசுச் சட்டம், 1919 ஆகியவற்றால் இந்தியர்களின் பங்கு மேலும் விரிவடைந்தது.

இந்திய அரசுச் சட்டம் 1935 தொகு
முதன்மைக் கட்டுரை: இந்திய அரசுச் சட்டம், 1935
இந்திய அரசு சட்டம் 1935 யின் விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை, எனினும் இந்திய அரசியலமைப்பில் பெரும் தாக்கத்தை ஏர்படுத்தியது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பின் பல முக்கிய அம்சங்கள் நேரடியாக இந்த சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டன. கூட்டாட்சி அரசாங்கம் அமைப்பு, மாகாண சுயாட்சி, கூட்டாட்சி சட்டமன்றம் மற்றும் சட்ட அதிகாரங்களை மத்தியிலும் மாகாணங்களின் இடையிலும் பிரித்தல் ஆகியவற்றை தற்போது இந்திய அரசியலமைப்பு அவை சட்டத்தின் விதிகளில் இருந்து எடுத்துக்கொண்டது.

கேபினெட்டு மிஷன் திட்டம் தொகு
முதன்மைக் கட்டுரை: இந்திய 1946 கேபினெட் மிஷன்
1946 இல், பிரித்தானியப் பிரதமர் கிளெமென்ட் அட்லி அதிகாரத்தை பிரித்தானிய இந்தியாவிடமிருந்து இந்திய தலைமைக்கு மாற்ற விவாதித்து முடிவு செய்யவும், காமன்வெல்த்து நாடுகளின் ஒரு அங்கமாக இந்தியாவை மேலாட்சி அரசுமுறையின் கீழ் சுதந்திரம் வழங்க ஒரு அமைச்சரவைக் குழுவை உருவாக்கினார். இக்குழு கேபினட்டு மிஷன் என அழைக்கப்பட்டது.

பிரித்தானிய இந்திய மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருந்த 296 இடங்களுக்கான தேர்தல் ஆகத்து 1946 இல் நிறைவு பெற்றது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் திசம்பர் 9, 1946 அன்று முதல் கூடி புதிய அரசமைப்பை உருவாக்கும் வேலையைத் தொடங்கியது.

இந்திய சுதந்திர சட்டம் 1947 தொகு
முதன்மைக் கட்டுரை: இந்திய சுதந்திர சட்டம், 1947
சூலை 18, 1947 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்திய விடுதலை (சுதந்திர)ச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது இரண்டு புதிய சுதந்திர மேலாட்சி நாடுகளான - இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என்று பிரித்தானிய இந்தியாவைப் பிரித்து, அவர்கள் தங்களுக்கான புதிய அரசியலமைப்பு சட்டம் எழுதப்படும் வரை, காமன்வெல்த் நாடுகள் கீழ் இருக்க வேண்டும் என்றது. தனி மாநிலங்களுக்காக அரசமைப்பு மன்றம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு புதிய சட்டமன்றத்திற்கும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரங்கள் வழங்கப்பட்டது. இந்த சட்டம் மன்னர்கள் ஆளும் மற்ற மாநிலங்களை ஏதாவது ஒன்றின் அடியே இணையச் சொன்னது. இந்திய அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு சனவரி 26 அன்று வழக்குக்கு வந்த போது இந்திய விடுதலைச் சட்டம் நீக்கப்பட்டது. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுப்பட்டு இறையாண்மை கொண்ட மக்களாட்சிக் குடியரசாக மாறியது. 26 நவம்பர், 1949 தேசிய சட்ட தினம் என்று அறியப்படுகின்றது.

அரசாங்கத்தின் அமைப்பு தொகு
பின்வருமாறு ஒன்றிய அரசு அடிப்படை வடிவம் எதிர்நோக்குகிறது

"ஒரு மக்களாட்சி நிர்வாகம் மூன்று நிலைகளை தீர்க்க வேண்டும்: 1. ஒரு நிலையான நிர்வாகம் இருக்க வேண்டும் 2. ஒரு பொறுப்பான நிர்வாகம் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அது சம அளவு இரண்டு நிலைமைகளையும் உறுதி செய்ய ஒரு முறையை திட்டமிடுவது இதுவரை சாத்தியமே இல்லை. ..... அமெரிக்க முறையில் இல்லாத தினசரி பொறுப்பு மதிப்பீடு குறித்த காலத்து மதிப்பீட்டை விட மிகவும் பயனுள்ளதக இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் பயனுள்ளதாக அமையும். வரைவு அரசியமைப்பு நிலைத்தன்மையைவிட பொறுப்புக்கு விருப்பமாக பாராளுமன்ற அமைப்புக்கு பரிந்துரைத்துள்ளது.”

அரசியலமைப்பை மாற்ற
கட்டுரை 368 அமைக்கப்பட்டுள்ள செயல்முறை படி, அரசியல் சட்ட திருத்தங்களை பாராளுமன்றம் மாற்றம் செய்யலாம். ஒரு திருத்த மசோதா மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் வாக்கெடுப்பால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற வேண்டும். மேலும் கூட்டாட்சி அரசியலமைப்பு தொடர்புடையதான சில திருத்தங்களை மாநில சட்டமன்றங்கள் பெரும்பான்மை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். செப்டம்பர் 2010 வரை, பாராளுமன்றம் முன் செலுத்தப்பட்ட 108 திருத்த மசோதாக்களில் 94 திருத்தம் சட்டமாக நிறைவேறி உள்ளது. எனினும், அரசியலமைப்பு அரசாங்க அதிகாரங்களை மிகவும் கவனிப்பதால் இந்த பிரச்சினைகளில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். இதன் விளைவாக, ஆவணம் ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு முறை திருத்தப்பட்டு உள்ளது.

Thanks Wikipedia.
#டாக்டர்_ அம்பேத்கர் #அரசியலமைப்புச்சட்டதினம் #November_26
Dr_Ambedkar
Constitution of India constitution day 2
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் - நவம்பர் 26.

இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் - நவம்பர் 26.


இந்திய அரசியலமைப்பு ஷரத்துகள்

#CONTENTS
#நோக்கம்
#அரசியல் நிர்ணய சபை குறிப்புகள்
#இந்திய அரசியலமைப்பின் மூலங்கள்
#இந்தியக் குடியரசுத் தலைவர்
#தகுதிகள்
#தேர்ந்தெடுக்கப்படும் முறை
#குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்
#இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர்
#நாடாளுமன்றம்
#குடியரசுத் தலைவர்
#மாநிலங்களவை:
#நாடளுமன்ற உறுப்பினர்களின் தகுதிகள்
#பண மசோதா
#கட்சித்தாவல் தடைச்சட்டம்
#உச்சநீதிமன்றம்
#உச்சநீதிமன்ற அதிகாரமும் நீதிவரம்பும்
#உயர்நீதிமன்றம்
#உயர்நீதிமன்றத்தின் நீதிவரம்பு மற்றும் #அதிகாரங்கள்
#ஆட்சிமொழி

#நோக்கம்

ஒரு நாட்டு மக்களை ஆட்சி புரியும் அடிப்படையான அரசியல் முறையைக் கூறுவதே அந்நாட்டின் அரசியலமைப்பு ஆகும். அரசின் தலையாய அங்கங்களாகிய சட்டமியற்றும் சபை, நீதித்துறை ஆகியவற்றைத் தோற்றுவித்து, அவற்றின் அதிகாரங்களை வரையறுத்து பொறுப்புகளைப் பகுத்து, பரஸ்பரம் அவைகளை வரையறுத்து, இடையேயும், அவற்றுடன் மக்களுக்கும் உள்ள உறவுகளை நெறிப்படுத்துவதே அரசியலமைப்பு ஆகும்.

#அரசியல் நிர்ணய சபை குறிப்புகள்

1922 மகாத்மா காந்தி இந்தியர்களுக்கென அரசியல் சட்டம் உருவாக்க வேண்டுமென கருதினார்.
மே 16 1946 - அமைச்சரவைத் தூதுக்குழு, அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது.
9 டிசம்பர் 1946 - டாக்டர். சச்சிதானந்த் சின்ஹா இந்திய அரசியல் தற்காலிக நிர்யண சபையின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார்.
11 டிசம்பர் 1946 – டாக்டர் இராசேந்திர பிரசாத், நிர்ணய மன்றத்தின் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தோராயமான வரைவு வி.என். ராவ் அவர்களால் தயாரிக்கப்பட்டது.
அரசியலமைப்பு முன்னுதாரணங்கள் தலைப்பில் மூன்று வரிசைகளில் தரப்பட்ட அந்தப் பின்னணி விவரங்களில் சுமார் அறுபது நாடுகளின் அரசியல் சட்டங்களின் சிறப்புக் கூறுகள் தொகுத்துத் தரப்பட்டிருந்தன. டாக்டர். பி.ஆர். அம்பெத்கர் தலைமையில் அரசியல் சட்ட வரைவுக்குழு ஒன்று 1947 ஆகஸ்ட் 29ஆம் தெதி நியமிக்கப்பட்டது.
வரைவுக்குழு 7 உறுப்பினர்களை கொண்டது.
தலைவர்: பி.ஆர். அம்பேத்கர்

#மற்ற உறுப்பினர்கள்:

கோபாலஸ்வாமி ஐய்யங்கார், கிருஷ்ணஸ்வாமி ஐயர், கே.எம். முன்சி, முகமது சாதுல்லா, என். மாதவராவ், டி. பி. கைதான்.

1949 நவம்பர் 26ஆம் தேதி வாயிலாக இந்திய இறையாண்மை மக்களாட்சிக் குடியரசின் அரசியலமைப்பை இந்திய மக்கள் இயற்றி ஏற்று கொண்டு தமக்குத் அளித்துக் கொண்டனர். அரசியலமைப்பை உருவாக்கும் இமலாயப் பணியை மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே அரசியல் நிர்ணயசபை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டது.
1950 ஜனவரி 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.

#இந்திய அரசியலமைப்பின் மூலங்கள்
மூலங்கள்

கடைபிடிக்கப்பட்ட விதிகள்

1935ம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டம்

ஆட்சி அமைப்பின் அடிப்படை, மாநில உறவுகளை நெறிப்படுத்துவது, அவசர நிலை பிரகடனம்.

ஐரிஷ் அரசியல் அமைப்பு

நெறிமுறை கோட்பாடுகள். குடியரசு தலைவர் தேர்வர், ராஜ்ய சபையின் நியமன உறுப்பினர்கள் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவது.

கனடா அரசியல் அமைப்பு

கூட்டரசு அமைப்பு, ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு, அதிகாரப் பகிர்வு

ஆஸ்திரேலிய அரசியல் அமைப்பு

ஒன்றிய-மாநிலப் பொதுப்பட்டியல், ஒன்றிய-மாநில உறவு, வாணிகம், நாடாளுமன்ற உரிமைகள்

ஜெர்மன் அரசியல் அமைப்பு

அவசர நிலை பிரகடனத்தின் போது அடிப்படை உரிமைகளை நீக்குவது

யு.எஸ்.எ. அரசியல் அமைப்பு

கூட்டாட்சி, நீதித்துறையின் தனியுரிமை, நீதித்துறையின் மறுபரிசீலனை, அடிப்படை உரிமைகள், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது குறித்து

பிரிட்டிஷ் அரசியல் அமைப்பு

ஒற்றைக்குடியுரிமை, சட்டத்தின் ஆட்சி, சட்டம் இயற்றும் முறை.

#முகப்புரை

பொருள்:

முகப்புரை எனப்படுவது, இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும். மேலும் அச்சட்டத்தின் கொள்கைகளை புரிந்து கொள்ளவும், சட்டமன்றத்தின் கருத்தை அறிந்து கொள்ளவும் சட்டத்தின் முகப்புரை பெரிதும் உதவுகிறது.

1976ம் ஆண்டில் 42வது அரசியல் திருத்தம் செய்யப்பட்டது. இத்திருத்தம் முகப்புரையில் மூன்று சொற்களை புகுத்தி உள்ளது. அதாவது சமதர்மநெறி, சமயச் சார்பின்மை, மற்றும் ஒருமைப்பாடு.

இந்தியா மற்றும் அதன் எல்லைகள்: பகுதி 1 (ஷரத்து ஒன்றிலிருந்து நான்கு வரை)
குடியுரிமை - பகுதி 2 (ஷரத்து ஐந்த முதல் பதினொன்று வரை)
அடிப்படை உரிமைகளின் வகைப்பாடு:

#சமத்துவ உரிமை
சுதந்திர உரிமை
கலாச்சார உ ரிமைகள்
அரசியலமைப்பு தீர்வழிகள் பெற உரிமை
மேற்படி அடிப்படை உரிமையில் சொத்துரிமை நீக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் அமைக்கப்பட்டதன் நோக்கமே சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான்.
சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமைகளின் மற்றொரு நோக்கமாகும். அரசு மற்றும் அரசு சம்பந்தப்பட்ட துறைகள் தலையிடும்போதுதான், அடிப்படை உரிமைகளின் தேவைப்பாடு எழும். அதாவது அடிப்படை உரிமைகளை அரசுக்கு எதிராகத் தான் எழுப்ப முடியும். தனி மனித செயல்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகளைக் கோர முடியாது.
இந்திய அரசியலமைப்பில், நீதிமுறை மறுசீராய்வு அதிகாரம் பற்றி 13, 32, 226 போன்ற ஷரத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷரத்து 14 - சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் சட்டங்களின் மூலம் நீ சமத்துவம்’ என்பதில் ‘சம பாதுகாப்பு’ என்ற இரு சொற்றொடர்கள் ஆட்சியையும் சமநீதியையும் குறிக்கின்றன.
ஷரத்து 15 சாதி, சமய, இன, வேறுபாடுகளினால் பாரபட்சம் காட்டாமை. ஷரத்து 16 சாதி, சமய, இன, பால், வம்சாவழி, பிறப்பிட, இருப்பிட வேறுபாடுகளினால் மட்டும் அரசு வேலையைப் பெறத் தகுதி இல்லை என்று எந்தக் குடிமகனுக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது.
1992ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி டல் கமிஷன் பரிந்துரையின்படி சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தங்கிய பிரிவினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.
ஷரத்து 17 தீண்டாமை ஒழிப்பு - தீண்டாமைச் சட்டம் 1955, பின்னர் இதனையே ‘சிவில் உரிமைகள் / பாதுகாப்புச் சட்டம் என 1976ல் மாற்றப்பட்டது.
ஷரத்து 18 பட்டங்கள் ஒழிப்பு’ - ராணுவத்திலும் கல்வித் துறையிலும் சாதனை புரிவோருக்குப் பட்டங்கள் வழங்குவதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஷரத்து 19 சுதந்திர உரிமை

பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம்
ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாகக் கூட்டம் கூடுவதற்குச் சுதந்திரம்
சங்கங்கள் அமைப்பதற்குச் சுதந்திரம்
இந்திய ஆட்சிப்பகுதிக்குள் எல்லா இளுத்தம் வருவதற்கான சுதந்திரம்
இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிக்கவும் குடியிருப்பதற்கும் சுதந்திரம்
எந்தத் தொழிலையோ, வாணிகத்தையோ மேற்கொள்வதற்கான சுதந்திரம்
1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 44வது அரசியல் சட்ட திருத்தத்திற்கு முன்பு சொத்துரிமையானது ஷரத்து 31ன் கீழ் ஒரு அடிப்படை உரிமையாக இருந்தது. பின்னர் 300ன் கீழ் சாதாரண உரிமையாக்கப்பட்டது. ஷரத்து 31 நீக்கம் செய்யப்பட்டது.
குற்றங்களுக்குத் தண்டனையளிப்பது குறித்த பாதுகாப்பு ஷரத்து 20 - இந்தப் பிரிவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவசர நிலையின் போதும்கூட ஓர் ஆணை மூலம் இந்த உரிமையை நிறுத்திவைக்க முடியாது என்று அரசியலமைப்பின் 42வது திருத்தச் சட்டம் கூறுகிறது.
ஷரத்து 21 - உயிருக்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு: சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள முறைப்படி அல்லாமல் எந்த ஒரு நபரின் உயிரையும் தனிச் சுதந்திரத்தையும் பறிக்க முடியாது என்று அரசியலமைப்பின் 21ஆவது பிரிவு உத்தரவாதமளிக்கிறது. இதுவும் அவசர நிலையின்போதும்கூட பிரிவு 359ன்படி ஓர் ஆணை மூலம் இந்த உரிமையை நிறுத்திவைக்க முடியாது.
ஷரத்து 22 கைது செய்யப்படுவதற்கும், காவலில் வைக்கப்படுவதற்கும் எதிரான பாதுகாப்பு.
ஷரத்து 22 (1) தடுப்புக்காவல் சட்டம். ஆலோசனைக்குழு போதுமான காரணம் இருப்பதாகக் கூறினால் ஒழிய எந்தச் சட்டத்தின் படியும் தடுப்பு மூன்று மாதங்களுக்கு மேல் போக அனுமதிக்கக்கூடாது. அத்துடன், எவ்வளவு காலத்திற்குத் தடுப்புக் காவல் என்பதையும் கண்டிப்பாகக் கூறியாக வேண்டும்.
ஷரத்து 23 சுரண்டலுக்கு எதிரான சட்டவிரோதமாக மனிதர்களை வியாபாரம் செய்வது, “பெண்கள்’ நிர்ப்பந்தப்படுத்தி வேலை வாங்குவது போன்ற சுரண்டல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
ஷரத்து 24 - 14 வயதுக்கு சிறுவர்களைத் தொழிற்சாலைகளிலோ, சுரங்கங்களிலோ, அபாயகரமான தொழில்களிலோ வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்கிறது.
ஷரத்து 25 - குடிமக்கள், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி எந்தச் சமயத்தையும் ஏற்கவும், பின்பற்றவும் பரப்பவும் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.
ஷரத்து 26 - எல்லா சமயத்தவருக்கும், பிரிவினருக்கும், சமயஶ்ரீ மற்றும் அறநிலைய அமைப்பு ஏற்படுத்திப் பராமரிக்க, சமயம் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தாமே நிர்வகித்துக்கொள்ள, சொத்துக்களை வாங்கி நிர்வகிக்க அடிப்படைஉரிமையை அளிக்கிறது.
ஷரத்து 27 - எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தின் வளர்ச்சிக்காகவும், பராமரிப்பிற்காகவும் ஆகும் செலவுகளுக்காக வரி செலுத்துமாறு எந்த ஒரு நபரையும் கட்டாயப்படுத்த முடியாது.
ஷரத்து 28 - முற்றிலும் அரசாங்க நிதியில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் சமய போதனை கூடாது என்று கூறுகிறது.
ஷரத்து 29 - இந்தியாவின் எந்தப் பகுதியிலேனும் வசிக்கின்ற குடிமக்களின் எந்த ஒரு பிரிவினரும் தமக்கென்று பிரத்யேகமான மொழியையோ, எழுத்து வடிவத்தையோ, பண்பாட்டையோ கொண்டவர்களாக இருந்தால் அவற்றைப் பேணிக்காக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு.
ஷரத்து 30 - சிறுபான்மையினர் அனைவரும் - அவர்கள் சமயச் சிறுபான்மையினரானாலும் மொழிச் சிறுபான்மையினரானாலும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, கல்வி நிறுவனங்களை உருவாக்கி நிர்வகிப்பதற்கு உரிமையுண்டு.
ஷரத்து 32 - 1. நீதிப்பேராணை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல், ஒருவர் நேரடியாக உச்ச நீதிமன்றத்திலும் அரசியலமைப்பின் 3வது பகுதியில் தாக்கல் செய்யலாம்.
உத்திரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படும் பொழுது, உச்ச நீதிமன்றம் நீதிப்பேராணை வெளியிட அதிகாரம் படைத்துள்ளது.

ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை : சட்டத்திற்குப் புறம்பான முறையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டவரை விடுவிக்கச் செய்ய இவ்வாணை இடப்படுகிறது.
செயலுறுத்தும் நீதிபேராணை : பொதுக்கடமையான ஒரு செயலை ஓர் அதிகாரி அல்லது கீழ் நீதிமன்றம் செய்யத் தவறினால் அக்கடமையை செய்ய இவ்வாணை இடப்படுகிறது.
தடையுறுத்தும் பேராணை: கீழ் நீதிமன்றமோ, ஆட்சி அதிகாரியோ சட்டத்தை மீறி அல்லது சட்டத்துக்கு முரணாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அதை மேற்கொண்டு நடத்தாமல் செய்ய, இவ்வாணை இடப்படுகிறது.
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை: நீதிமுறை சார்ந்த அலுவல்களைச் செய்யும் தீர்ப்பாயங்கள், அதிகாரிகள், தம் அதிகார வரம்பை மீறி செயல்பட்டாலோ நெறிமுறைக்கு மாறாக நடவடிக்கை எடுத்தாலோ அவற்றை மறு ஆய்வு செய்து நீக்கம் செய்வதற்கென சம்பந்தமான ஆவணங்களைத் தமக்கு அனுப்புமாறு நீதிமன்றம் ஆணையிடுவதுதான் நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை ஆகும்.
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை: பொது அதிகாரப் பதவியில் உள்ளவரை அவர் எத்தகுதியில் அப்பதவி வகிக்கிறார் என்று வினவி, பிறப்பிக்கப்படும் ஆணைதான் தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை ஆகும்.
பத்து கடமைகள் புதிதாக அரசியல் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஷரத்தின் கீழ் அப்பத்து அடிப்படை கடமைகள் பின்வருமாறு கூறப்படுகிறது.

அரசியலமைப்பினைப் பின்பற்றுதல், மற்றும் அதன் குறிக்கோள்கள், அமைப்புகள் இவற்றிற்கு மரியாதை செலுத்துதல்
நமது நாட்டு விடுதலைப் போராட்ட வீர்ர்களின் படத்தை, அவர்களின் உயர்ந்த குறிக்கோள்களை பின்பற்றுதல் மற்றும் போற்றி வளர்த்தல்
இந்தியாவின் ஒற்றுமை, இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தல் மற்றும் பாதுகாத்தல்
நாட்டினைப் பாதுகாத்தல் மற்றும் அழைக்கப்படும் பொழுது தேசியப் பணிபுரிதல்
சமயம், மொழி மற்றும் வட்டாரம் அல்லது பிரிவு வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்களுக்குள் பொது சகோதரத்துவ உணர்வு மற்றும் இணக்கத்தினை மேம்படுத்துதல் பெண்களின் மேன்மையைத் தாழ்த்துகின்ற பழக்கங்களைத் துறத்தல்.
நமது பல்வகையான கலாச்சாரத்தின் உயர்ந்த பாரம்பரியத்திற்கு மதிப்பு அளித்தல் மற்றும் பேணுதல்
காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வன வாழ்க்கை உள்ளிட்ட இயற்கை சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல் மற்றும் (மேம்படுத்துதல் மற்றும் வாழும் உயிரினங்களுக்காக இரக்கம்)
ஆய்வறிவு விளைவு நிலை, மனித நலம் மற்றும் சீர்திருத்தங்களை மேம்படுத்துதல்
பொதுச் சொத்துக்கு பாதுகாப்பு அளித்தல்
எல்லாத் துறைகளிலும், தனிமனிதன் மற்றும் கூட்டுச்செயல்பாடுகளின் முதன்மை நிலையை நோக்கி முயலுதல்.
இந்தியக் குடியரசுத் தலைவர்
ஷரத்து 52 - இந்தியாவிற்கு ஒரு குடியரசுத் தலைவர் இருக்கவேண்டும் என்றும் இவர் இந்திய அரசாங்கத்தின் செயலாட்சி அதிகாரம் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது எனவும், இவர் அவ்வதிகாரத்தை இந்திய அரசியல் அமைப்புக்குட்பட்டு நேரடியாகவோ, / தனது கீழுள்ள அதிகாரிகள் மூலமாகவோ செயலுறுத்தலாம் என்று கூறுகிறது.

#தகுதிகள்

ஒரு இந்திய குடிமகனாகவும்
35 வயது நிரம்பியவராகவும்
பாராளுமன்றத்தின் மக்கள் சபைக்குப் போட்டியிடத் தகுதி பெற்றவராகவும் இருக்க வேண்டும்
மத்திய அரசாங்கத்திலோ அல்லது ஏதாவதொரு மாநில அரசாங்கத்திலோ அல்லது மேற்கண்ட அரசாங்கங்களின் கீழ் இயங்கும் ஏதாவதொரு வட்டார பிற அதிகார அமைப்பிலோ ஆதாய அடிப்படையில் அமைந்த ஒரு பதவியையும் வகிப்பவராக இருத்தல் கூடாது.
ஊதியம்

மாதச்சம்பளம் - ரூ.1,50,000
மேலும் வாடகை தராமல் அரசாங்க குடியிருப்பை பயன்படுத்திக்கொள்ள உரிமையுண்டு.

#தேர்ந்தெடுக்கப்படும் முறை

மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் மாறாக, அவர் ஒரு தேர்தல் குழுவின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இத்தேர்தல் (அ) பாரளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் (ஆ) மாநில சட்டமன்றத்தின் கீழவையான சட்டப்பேரவையில் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாகும். இவ்வாறு ஷரத்து 54 கூறுகிறது. இத்தேர்தல் குழுவினரால் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போது விகிதப் பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படும். உறுப்பினர்கள் அளிக்கும் ஓட்டு, ஒற்றைமாற்று ஓட்டு ஆகும்.

இந்தியக் குடியரசுத் தலைவர், தாம் பதவி ஏற்ற தினத்தில் இருந்து 5 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகிக்கலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் பதவித் தேர்தலுக்குப் போட்டியிடலாம்.

“குடியரசுத் தலைவர் மீது பழிச்சாற்றுவது”தொடர்பான நடைமுறைகளை ஷரத்து 61 கூறுகிறது. குடியரசுத் தலைவர் தாமாகவே தனது பதவியை இராஜினாமா செய்யலாம். (அல்லது பாராளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவையில் மொத்த உறுப்பினர்களில் நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்களுக்குக் குறையாது உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஒரு தீர்மானத்தின் வாயிலாக, குடியரசுத் தலைவர் மிது குற்றஞ்சாட்டலாம். குற்றச்சாட்டப்பட்ட தீர்மானத்தின் நகல் குடியரசுத் தலைவருக்கு, அது தொடங்கப்படும் 14 நாட்களுக்கு முன்பாகவே கொடுக்கப்பட வேண்டும். பிறகு அத்தீர்மானம் சபையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

#குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்

செயலாட்சித் துறை - உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநிலங்களின் தணிக்கைத் தலைவர், பொதுப்பணிக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் தனி அலுவலர்கள், தாழ்த்தப்பட்ட பகுதியின் விவரத்தை தயார் செய்யும் குழு, பிற்பட்டோர் நிலையை ஆயும் குழு மற்றும் சிறுபான்மையினருக்கு தனி அலுவலர் - இவர்களை நியமிக்கும் அதிகாரத்தை குடியரசு தலைவர் பெற்றுள்ளார்.
இராணுவ அதிகாரங்கள், தூதாண்மை அதிகாரங்கள், சட்டமன்றத்துறை அதிகாரங்கள் - பாராளுமன்றத்தின் அவைக் கூட்டங்களைப் பொறுத்த வரையில் அவைகளைக் கூட்டும் அதிகாரமும், ஒத்திவைக்கும் அதிகாரமும் குடியரசுத் தலைவரிடம் உள்ளது. மக்களவையைக் கலைக்கும் அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலவையான, மாநிலங்களவையைக் (ராஜ்ய சபையை கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) மேலும், குடியரசு தலைவர் பாராளுமன்றத்தின் சபைகளில் உரை நிகழ்த்தவும், அல்லது இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தவும் உரிமைப் பெற்று உள்ளார். சபைகளுக்குச் செய்தி அனுப்பும் உரிமையையும் இவர் பெற்றுள்ளார். (ஷரத்து 86) மேலைவையான மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்களையும், கீழவையான மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களையும் நியமிக்கும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார்.
குடியரசுத் தலைவர் பாராளுமின்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்து தனது இசைவினை அளிக்கலாம் (ஷரத்து 111) அல்லது நிறுத்தி வைக்கலாம், அல்லது பண மசோதா சாதாரண மசோதாக்களில் தாம் குறிப்பிட்டுள்ள விபரம் குறித்து மிண்டும் மறு பரிசீலனை செய்வதற்காக அம்மசோதாவை அவைக்கே திருப்பி அனுப்பலாம். அம்மசோதா குடியரசுத் தலைவரின் யோசனைப்படி திருத்தப்பட்டோ அல்லது திருத்தப்படாமலோ மீண்டும் அவருடைய இசைவிற்கு அனுப்பட்டால், குடியரசுத் தலைவர் தன்னுடைய இசைவினை மறுக்க முடியாது. ஆனால் நிதி மசோதாக்களைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது.

ஒரு சாதாரண மசோதா குறித்து, பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கு இடையே முரண்பாடு எழுமேயாயின், அதனை தீர்த்து வைக்க, இரு அவைகளின் கூட்டு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு (ஷரத்து 108).

இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர்
அரசாங்கத்திற்கு சட்ட சம்பந்தமான விஷயங்களில் ஆலோசனை வழங்கவும் சட்ட சம்பந்தமாக இடப்படும் பிற பணிகளை செய்யவும் உச்சநீதிமன்ற நீதிபதி ஆக நியமிக்கப்படுவதற்கான தகுதிகளை உடைய ஒருவரை இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
(ஷரத்து 76) குடியரசுத் தலைவர் விரும்பும்வரை அரசுத்தலைமை வழக்கறிஞர் பதவி வகிப்பார்.
அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரிலேயே அவர் நியமிக்கப்படுவதால் ஆட்சி மாறியவுடன் அட்டர்னி-ஜெனரலும் பதவி விலகுவது ஒரு மரபாக உருவாகிவிட்டது.
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்திலும் முதலில் தன்னுடைய கருத்தைக் கேட்குமாறு அவருக்கு உரிமை உண்டு. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலுமே கூட்டத்தொடரின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டு பேசுகிற உரிமையும் அவருக்கு உண்டு எனினும் தீர்மானங்களின்மீது கிடையாது.

#நாடாளுமன்றம்

மாநிலங்களவை மற்றும் மக்களவை என்ற இரண்டு அவைகள் ஆகியவற்றைக் கொண்டதாக இந்திய நாடாளுமன்றம் அமைந்துள்ளது.

#குடியரசுத் தலைவர்

நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளின் கூட்டத்தொடர் நடைபெறாதபோது, குடியரசுத் தலைவர் உடனடியாகச் செயல்படவேண்டிய அவசியமான சூழ்நிலை திருப்தியடைந்தால், நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தைப் போலவே செயல்வீச்சுடைய அவசரச் சட்டத்தை குடியரசுத்தலைவர் பிறப்பிக்கலாம்.

#மாநிலங்களவை:

மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுப்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டது.

உத்தரப்பிரதேசத்திலிருந்து அதிகபட்சமாக 34 உறுப்பினர்களும், மணிப்பூர், மிசோரம், சிக்கிம், திரிபுரா போன்ற சிறிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு உறுப்பினரும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

மாநிலங்களவையில் 250 - க்கும் மிகாத உறுப்பினர்கள் இருப்பர். இவர்களில் 238 பேர் மாநிலங்களில் இருந்தும், 12 பேர் நேரடி ஆட்சிப் பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சட்டத்தின்படி தகுதியிழப்புச் செய்யப்படாத பட்சத்தில், மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றவராவார். மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் இருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 530 - க்கு மிகாமலும், நேரடி ஆட்சிப்பகுதிகளில் இருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 20 - க்கு மிகாமலும் கொண்டதாக மக்களவை இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புக் கூறுகிறது. மேலும், ஆங்கிலோ இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் மக்களவைக்கு நியமனம் செய்யலாம்.

நாடளுமன்ற உறுப்பினர்களின் தகுதிகள்
மாநிலங்களவைக்கு உறுப்பினராக வேண்டுமானால் இந்திய குடிமகனாகவும் 30 வயது நிரைந்தவராகவும் மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாதவராகவும் இருக்க வேண்டும்.
மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் தலைவர் ஒருவரும் துணைத்தலைவர் ஒருவரும் இருக்க வேண்டும் என அரசியலமைப்புக் கூறுகிறது. அத்தலைவரே மாநிலங்களவையின் தலைவரும் ஆவார். மாநிலங்களவையின் துணைத்தலைவராக தமக்குள்ளேயே ஒருவரை அந்த அவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வர். மக்களவையின் தலைவரையும் (சபாநாயகர்) துணைத்தலைவரையும் (துணை சபாநாயகர்), தமக்குள்ளேயே அந்த அவையின் உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பர்.
மக்களவைத்தலைவரும், துணைத்தலைவரும், மக்களவையின் உறுப்பினர்களாக நீடிக்க முடியாத நிலையில் பதவி விலக வேண்டும். இருவரில் எவரேனும் பதவி விலக எண்ணினால் மற்றவருக்குத் தமது பதவிவிலகல் கடிதத்தை அனுப்ப வேண்டும். அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால், 14 நாட்கள் முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவைத் துணைத் தலைவரைப் பதவி நீக்கம் செய்வதற்கும் இதே போன்ற ஏற்பாடு பிரிவு 90ல் சொல்லப்பட்டு உள்ளது. மக்களவைத் தலைவர் தொடர்ந்து பதவியில் இருப்பார்.

ஒவ்வொரு கூட்டத்தொடருக்கும் இடையே ஆறுமாத கால இடைவெளி இருக்கக்கூடும். பொதுவாக ஒவ்வோராண்டும் மூன்று நாடாளுமன்றத்தின் கூட்டங்கள் நடைபெறும்

அவை

பட்ஜெட் கூட்டத்தொடர் (பிப்ரவரி.மே)
கூட்டத்தொடர் (ஜூலை,செப்டம்பர்)
குளிர்காலக் கூட்டத்தொடர் (நவம்பர், டிசம்பர்). ஆனால் மாநிலங்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மட்டும் மூன்று-நான்கு வாரகால இடைவெளியுடன் இரண்டு முறைகள் நடைபெற்று, ஒராண்டில் நான்கு கூட்டத்தொடர்களாக நடைபெறும்.
எந்த ஓர் அவையானாலும், அதனை நடத்திச் செல்வதற்கு அவையின் மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கட்டாயம் ஆஜராகி இருக்க வேண்டும்.

பண மசோதாக்கள், நிதி மசோதாக்கள் தவிர வேறு எந்த மசோதாவானாலும் அதனை ஏதேனும் ஓர் அவையில் முதலில் அறிமுகப்படுத்தலாம். அவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் முன்னர், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும், திருத்தங்கள் ஏதுமின்றியோ, இரண்டு அவைகளும் ஒப்புக்கொண்ட திருத்தங்களுடனோ, ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். பண மசோதாவைத் தவிர, ஏதேனும் ஒரு மசோதா சம்பந்தமாக இரண்டு அவைகளுக்கும் இறுதியாகக் கருத்து வேறுபாடுகள் இருக்குமானால் அவற்றைத் தீர்ப்பதற்காகக் குடியரசுத் தலைவர் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை அழைக்கலாம்.

#பண மசோதா
ஒரு மசோதா, பணமசோதாவா என்ற ஐயம் தோன்றினால், அதில் மக்களவைத் தலைவரின் தீர்ப்பே இறுதியானது. மசோதாவைக் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பும்போது, அது பூரண மசோதா என்று மக்களவை தலைவர் சான்றளிக்க வேண்டும்.

பணமசோதாவைக் குடியரசுத்தலைவரின் பரிந்துரையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் மாநிலங்களவைக்கு அனுப்பப்படும் பணமசோதாவின் மீது ஏதேனும் திருத்தங்களுக்கான பரிந்துரைகள் இருக்குமானால் அவற்றை 14 நாட்களுக்குள் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட வேண்டும்

14 நாட்களுக்குள் அந்த மசோதா திருப்பி அனுப்பப்படாவிட்டாலும், மக்களவை ஏற்றுக்கொண்ட வடிவத்திலேயே அந்த மசோதா இரண்டு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படும்.

ஓர் உறுப்பினர் பேசியது குறித்தோ, வாக்களித்தது குறித்தோ, எந்த அதிகார அமைப்பிலோ அல்லது நீதிமன்றத்திலோ எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்று அரசியல் சட்டம் விதித்துள்ளது.

நாடாளுமன்றத்திற்குள் ஓர் உறுப்பினர் பேசிய பேச்சு நீதிமன்றத்தை அவமதிப்பதாக இருந்தாலும்கூட, எந்த ஒரு நீதிமன்றமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தின் மீது அல்லது அவர்களின் இடத்தைக் காலிசெய்வது சம்பந்தமாக பேசும்போது தவிர மற்ற சமயங்களில், அவர்களின் நடத்தையை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும்கூட விமர்சிக்க கூடாது.

கட்சித்தாவல் தடைச்சட்டம்
ஐம்பத்திரண்டாவது திருத்தச் சட்டம் 1985, அரசியலமைப்பின் 101, 191 ஆகிய பிரிவுகளைத் திருத்தியதுடன், புதிய அட்டவணை ஒன்றையும் (பத்தாவது அட்டவணை) சேர்த்தது. கட்சித்தாவல் காரணமாக உறுப்பினர்கள் பதவியிழப்பது சம்பந்தமான சில சட்டங்கள் இந்தத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன.

#உச்சநீதிமன்றம்

நீதித்துறை (ஷரத்து 124-147 மற்றும் 214-23 )

தலைமை நீதிபதி ஒருவரும், பிற நீதிபதிகள் எழுவரையும் கொண்டதாக உச்சநீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 124வது பிரிவு கூறுகிறிது. எனினும் ஏனைய நீதிபதிகளின் எண்ணிக்கையை சட்டம் இயற்றுவதன் மூலம் அகிகரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, தலைமை நீதிபதியைத் தவிர உச்சநீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் போன்றோரைக் கலந்தாலோசித்து உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார். தலைமை நீதிபதி நியமனம் தவிர மற்ற நீதிபதிகளை நியமிக்கும் போது கட்டாயமாகத் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற நீதிபதி ஒவ்வொருவரும் 65 வயதுவரை பதவியில் இருக்கலாம். குடியரசுத் தலைவரின் ஆணையின் பேரிலேயே உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரைப் பதவியிலிருந்து நீக்க முடியும். குடியரசுத்தலைவர் அத்தகைய ஆணையைப் பிறப்பிக்க வேண்டுமானால் சம்பந்தபட்ட நீதிபதிக்குத் அவர் முறைகேடாக நடந்துகொண்டார் என்றோ காரணம் காட்டி, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு உறுப்பினர்கள் ஆஜராகி வாக்களித்துப் பெரும்பான்மைவுடன், தனித்தனியாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற, அதனை நாடாளுமன்றத்தின் அந்தக் கூட்ட தொடரிலேயே குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, மாதமொன்றுக்கு ரூபாய் 1,00.000) ஏனைய நீதிபதிகளுக்கு 90,000 ரூபாயும், ஊதியமாக வழங்கப்படுகிறது. ஊதியம், தவிர ஏனைய படிகள், இலவசக் குடியிருப்பு, நாடுமுழுவதும் பயணச் செலவுகள், ஓய்வூதியம் போன்ற பிற சலுகைகளும் அவர்களுக்கு உண்டு.

ஏதேனும் ஒரு உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் போதிய நீதிபதிகள் இல்லை என்றால், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்துவதற்காக, உயர்நீதிமன்ற நீதிபதிகளிடையே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறும் தகுதியுடையவர்களைத் தேவையான காலத்திற்குத் தற்காலிக நீதிபதிகளாக நியமிக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு உண்டு. எனினும், சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசித்த பின்னரும், குடியரசுத்தலைவரின் முன் அனுமதியைப் பெற்ற பின்னருமே இத்தகைய தற்காலிக நியமனங்களைச் செய்யலாம்.

உச்சநீதிமன்ற அதிகாரமும் நீதிவரம்பும்
உச்சநீதிமன்றத்தின் மூல நீதிவரம்பு.
உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு நீதிவரம்பு
உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை கூறும் நீதிவரம்பு
உச்சநீதிமன்றத்தின் மறுசீராய்வு அதிகாரம்
உயர்நீதிமன்றம்
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் உயர்நீதிமன்றம் இருக்கவேண்டுமென அரசியலமைப்பு விதிக்கிறது. எனினும் சட்டம் இயற்றுவதன் மூலம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களை பொதுவானதாகவும் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் ஒரு நேரடி ஆட்சிப் பகுதிக்கும் பொதுவானதாகவும், ஓர் உயர் நீதிமன்றத்தை நாடாளுமன்றம் உருவாக்கலாம்.

உச்சநீதிமன்றத்தைப் போலே ஒவ்வோர் உயர்நீதிமன்றமும் ஓர் ஆவண நீதிமன்றமாகத் திகழ்வதுடன், மூலவிசாரணை வரம்பு, மேல்முறையீட்டு வரம்பு ஆகியவற்றுடன், நீதிமன்ற அவமதிப்புக்காகத் தண்டனை அளிக்கும் அதிகாரமும் உடையதாகத் திகழ்கிறது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியையும், சம்பந்தப்பட்ட மாநில ஆளுநரையும் கலந்தாலோசித்து, உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார். உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியைத் தவிர மற்ற நீதிபதிகளை நியமிக்கும்போது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியையும், குடியரசுத்தலைவர் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்.

62 வயதாகும் வரை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியில் இருக்கலாம். உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவிநீக்கம் செய்வதற்கான நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலமே உயர்நீதிமன்ற நீதிபதியையும் பதவிநீக்கம் செய்யமுடியும்.

மாதச்சம்பளம் : தொன்னுாறாயிரம் ரூபாய்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து, ஓர் உயர்நீதி மன்றத்திலிருந்து இன்னோரு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் இடமாற்றம் செய்யலாம் எனினும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை அவருடைய ஒப்புதல் இன்றி இடமாற்றம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது

குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்று, ஒய்வுபெற்ற நீதிபதி ஒருவரை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமிக்கலாம்.

ஒவ்வொர் உயர்நீதிமன்றத்திற்கும் தன்னுடைய அலுவலர்கள் மீது முழுமையான கட்டுப்பாடு இருக்கும். நீதிபதிகள் மற்றும் ஏனைய அலுவலர்களின் ஊதியமும் மற்றபடிகளும், அந்தந்த மாநிலத்தின் ஒருங்கிணைப்பு நிதியத்திலிருந்து வழங்கப்படுகின்றன.

உயர்நீதிமன்றத்தின் நீதிவரம்பு மற்றும் அதிகாரங்கள்
எல்லா நீதிமன்றங்களையும் மேற்பார்வையிடும் அதிகாரம்
வழக்குகளைத் தானே எடுத்துக் கொள்ளும் அதிகாரம்.
சில நீதிப்பேராணைகளை வெளியிடும் அதிகாரம்.
பொது நீதிவரம்பு.
அதிகாரிகளையும் ஊழியர்களையும் நியமிக்கும் அதிகாரம்
ஆட்சிமொழி
மத்திய அரசின் ஆட்சிமொழி தேவநாகரி எழுத்துருவிலுள்ள இந்தி ஆக இருத்தல் வேண்டும் என்றும், மத்திய அரசின் அலுவல் முறை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய எண்களின் வடிவம், இந்திய எண்களின் பன்னாட்டு வடிவமாக இருத்தல் வேண்டும் என்றும், கூறுகிறது.

இந்திய அரசியலமைப்பு அடங்கிய 15 ஆண்டு கால அளவுக்கு அத்தகைய தொடக்கத்தை ஒட்டி முன்பு ஆங்கில மொழி, மத்திய அரசின் எந்த அலுவல் முறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்ததோ அந்த அலுவல் நோக்கங்கள் அனைத்திற்கும் இது தொடர்ந்து பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

ஆனால் மேற்சொன்ன கால அளவின் போது, மத்திய அரசின் அலுவல்முறை நோக்கங்களில் எதற்காகவேனும் ஆங்கில மொழியோடும் கூட தேவநாகரி வடிவ எண்களையும் (இந்தி மொழி எண்கள்) பயன்படுத்துவதற்கு குடியரசுத் தலைவர் ஆணை வாயிலாக அதிகாரமளிக்கலாம் என ஷரத்து 343 (2) கூறுகிறது.
Thanks Vikaspedia.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

காற்றுக்கு பெயர்


காற்றுக்கு பெயர்!!!

தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் --வாடை
கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் ---மேலை

(அ) திசை பொறுத்து காற்றின் பெயர்கள்:

(௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
(௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
(௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
(௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

(ஆ) காற்று வீசும் வேகம் பொறுத்து பெயர்கள்:

(௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
(௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
(௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
(௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
(௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
(௬) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
(௭) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
(௮) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வியாழன், 21 நவம்பர், 2019

தென்காசி மாவட்டம் உதயம் நவம்பர் 22.2019.


தென்காசி மாவட்டம் உதயம் நவம்பர் 22.2019.

தென்காசி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இம்மாவட்டத்தின் தலைநகரம் தென்காசி நகரம் ஆகும். புதிய இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார்.


தென்காசி மாவட்டம்
—  மாவட்டம்  —
அமைவிடம்
நாடு
 இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
மாவட்டம்
தென்காசி
வட்டம்
கடையநல்லூர், செங்கோட்டை, சங்கரன்கோவில்,ஆலங்குளம், சிவகிரி,வீரகேரளம்புதூர்,தென்காசி ,
மாவட்ட துவக்கம்
ஜூலை 18, 2019
தலைமையகம்
தென்காசி
ஆளுநர்
பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர்
எடப்பாடி க. பழனிசாமி
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றம் (தொகுதிகள்)
5

மொழிகள்

தமிழ்

நேர வலயம்

இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
தட்பவெப்பம்
வெப்பநிலை
• கோடை
• குளிர்
•      37 °C (99 °F)
•      22 °C (72 °F)

குறியீடுகள்

மாவட்ட நிர்வாகம் தொகு
இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.


வருவாய் கோட்டங்கள்

தென்காசி
சங்கரன்கோவில்
வருவாய் வட்டங்கள் தொகு
கடையநல்லூர் வட்டம்
சங்கரன்கோயில் வட்டம்
சிவகிரி வட்டம்
ஆலங்குளம் வட்டம்
வீரகேரளம்புதூர் வட்டம்
தென்காசி வட்டம்
செங்கோட்டை வட்டம்
திருவேங்கடம் வட்டம்
நகராட்சிகள் தொகு
கடையநல்லூர்
தென்காசி
சங்கரன்கோவில்
புளியங்குடி
வாசுதேவநல்லூர்
செங்கோட்டை
பேரூராட்சிகள் தொகு
செங்கோட்டை புதூர்(செ)
அச்சம்புதூர்
ஆலங்குளம்
ஆய்க்குடி
இராயகிரி
வடகரை கீழ்பிடாகை
பண்பொழி
சாம்பவர் வடகரை
சுந்தரபாண்டிபுரம்
ஊராட்சி ஒன்றியங்கள் தொகு
இம்மாவட்டம் 7 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.

தென்காசி
வாசுதேவநல்லூர்
சங்கரன்கோவில்
செங்கோட்டை
ஆலங்குளம்
கடையநல்லூர்
கீழப்பாவூர்

அரசியல்

தென்காசி மாவட்டம் தென்காசி மக்களவைத் தொகுதியும் மற்றும் கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம் என 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.


ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
குற்றாலம்
பண்பொழி திருமலைமுருகன் கோவில்
இலஞ்சி குமரன் கோவில்
இலத்தூர் சனீஸ்வரன் ஆலயம்
புளியரை தட்சிணாமுர்த்தி ஆலயம்

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

புதன், 20 நவம்பர், 2019

இதுவரை தமிழ் ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்..அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.

இதுவரை தமிழ் ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்..அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.

*1.* பிரபவ - *நற்றோன்றல்*

*2.* விபவ - *உயர்தோன்றல்*

*3.* சுக்கில - *வெள்ளொளி*

*4.* பிரமோதூத - *பேருவகை*

*5.* பிரசோத்பத்தி - *மக்கட்செல்வம்*

*6.* ஆங்கீரச - *அயல்முனி*

*7.* சிறிமுக - *திருமுகம்*

*8.* பவ - *தோற்றம்*

*9.* யுவ - *இளமை*

*10.* தாது - *மாழை*

*11.* ஈசுவர - *ஈச்சுரம்*

*12.* வெகுதானிய - *கூலவளம்*

*13.* பிரமாதி - *முன்மை*

*14.* விக்ரம - *நேர்நிரல்*

*15.* விச - *விளைபயன்*

*16.* சித்திரபானு- *ஓவியக்கதிர்*

*17.* சுபானு - *நற்கதிர்*

*18.* தாரண- *தாங்கெழில்*

*19.* பார்த்திப - *நிலவரையன்*

*20.* விய - *விரிமாண்பு*

*21.* சர்வசித்த - *முற்றறிவு*

*22.* சர்வதாரி - *முழுநிறைவு*

*23.* விரோதி - *தீர்பகை*

*24.* விகிர்தி- *வளமாற்றம்*

*25.* கர - *செய்நேர்த்தி*

*26.* நந்தன - *நற்குழவி*

*27.* விசய - *உயர்வாகை*

*28.* சய - *வாகை*

*29.* மன்மத - *காதன்மை*

*30.* துன்முகி - *வெம்முகம்*

*31.* ஏவிளம்பி - *பொற்றடை*

*32.* விளம்பி - *அட்டி*

*33.* விகாரி - *எழில்மாறல்*

*34.* சார்வரி - *வீறியெழல்*

*35.* பிலவ - *கீழறை*

*36.* சுபகிருது - *நற்செய்கை*

*37.* சோபகிருது - *மங்கலம்*

*38.* குரோதி - *பகைக்கேடு*

*39.* விசுவாவசு - *உலகநிறைவு*

*40.* பராபவ - *அருட்டோற்றம்*

*41.* பிலவங்க - *நச்சுப்புழை*

*42.* கீலக - *பிணைவிரகு*

*43.* சவுமிய - *அழகு*

*44.* சாதாரண - *பொதுநிலை*

*45.* விரோதி கிருது - *இகல்வீறு*

*46.* பரிதாபி - *கழிவிரக்கம்*

*47.* பிரமாதீச - *நற்றலைமை*

*48.* ஆனந்த - *பெருமகிழ்ச்சி*

*49.* இராட்சச - *பெருமறம்*

*50.* நள - *தாமரை*

*51.* பீங்கள - *பொன்மை*

*52.* காளயுக்தி- *கருமைவீச்சு*

*53.* சித்தார்த்தி - *முன்னியமுடிதல்*

*54.* ரவுத்ரி- *அழலி*

*55.* துன்மதி- *கொடுமதி*

*56.* துந்துபி- *பேரிகை*

*57.* உருத்ரோத்காரி - *ஒடுங்கி*

*58.* இரக்தாட்சி- *செம்மை*

*59.* குரோதன்- *எதிரேற்றம்*

*60.* அட்சய - *வளங்கலன்*

திங்கள், 18 நவம்பர், 2019

உலக ஆண்கள் தினம் நவம்பர் 19


உலக ஆண்கள் தினம் நவம்பர் 19.

ஆண்கள் பற்றிய அறிவியல் உண்மைகள்.

ஆண் (Man) என்பவன் மனித இனத்தில் வளர்ந்த ஓர் ஆண்பால் உயிரினமாகக் கருதப்படுபவன் ஆவான். பொதுவாக ஆண் என்றாலே நன்கு வளர்ந்த நிலையிலுள்ள ஆண் பாலினமாக அடையாளம் காணப்படுகிறது. சிறுவயது ஆண்பால் மனிதர்களைப் பொதுவாகச் சிறுவன், பையன் போன்ற சொற்களால் குறிப்பிடுவது வழக்கம். வளர்ந்த ஆண்களைக் குறிப்பிடுவதற்கு தமிழ்ப் பேச்சு வழக்கில் ஆம்பளை, ஆம்பிளை போன்ற சொற்களைப் பயன்படுத்துவர்.ஆண் என்னும் சொல், வளர்ந்த ஆண் மனிதர்களை மட்டுமன்றி, பிற ஆண்பால் உயிரினங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மனித இனத்தில் வயது வேறுபாடில்லாமல் எல்லா ஆண்களையும் குறிக்கவும் ஆண் என்ற சொல் பயன்படுகின்றது. ஆணுக்கு உரிய இயல்புகளைப் பொதுவாக ஆண்மை என்னும் சொல்லால் குறிப்பர்.

இவ்வுலகிலுள்ள மற்ற ஆண் பாலூட்டிகளைப் போலவே, ஓர் ஆண் மனிதனின் மரபணு பொதுவாக தாயின் ஒரு எக்சு (X) குரோமசோமையும் அவனது தந்தையிடமிருந்து ஒரு ஒய் (Y) குரோமோசோமையும் மரபுரிமையாகப் பெறுகிறது. ஆண் சிசு ஒரு பெண் சிசுவை விட அதிகமான அளவு ஆண்ட்ரோசன்களையும் குறைவான அளவு ஈசுட்ரோசன்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த பாலின சிடீராய்டுகளின் அளவுகளில் காணப்படும் இந்த வேறுபாடுதான் ஆண், பெண் என வேறுபடுத்துகின்ற உடலியல் வேறுபாடுகளுக்கு மிகவும் பொறுப்பானதாக உள்ளது. பருவமடைதல் நிகழ்வின்போது ஆண் உடலில் சுரக்கும் இயக்குநீர்கள் ஆண்ட்ரோசன் உற்பத்தியை தூண்டுகின்றன. இதனால் இரண்டாம் நிலை பாலியல் பண்புகளின் வளர்ச்சிகள் தோன்றுகின்றன. தொடர்ந்து பாலினங்களுக்கு இடையில் அதிக வேறுபாடுகள் வெளிப்படுகின்றன. எனினும் விதிவிலக்காக சில மூன்றாம் பாலின ஆண்கள், இருபாலின ஆண்கள் போன்ற ஆண்களும் உருவாகி விடுகின்றனர்.

சொற்பிறப்பியல்

ஆண் என்ற பொருள் கொண்ட ஆங்கிலச் சொல்லான "man" என்ற சொல் புரோட்டோ-இந்தோ -ஐரோப்பிய வேர்ச் சொல்லில் இருந்து பெறப்பட்டது ஆகும். பழைய ஆங்கில மொழியிலிருந்து நேரிடையாக தருவிக்கப்பட்டுள்ளது. பழைய ஆங்கிலத்தில் வளர்ந்த ஆண் என்பதைக் குறிக்கும் சொல்லாகவே "man" என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. பாலினம் அறியப்படாத ஒருவனைக் குறிக்கவும் இதே சொல்லே பழைய ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டது. பழைய ஆங்கிலப் பிரதிப்பெயரான "man" நெருங்கிய தொடர்புடைய நவீன செருமன் மொழியில் "ஒருவன்” என்ற பொருள் கொண்ட "one" என அடையாளம் பெறுகிறது.. புரோட்டோ செருமானிய மொழிகளிலிருந்து மனித இனம், நபர், கணவன், ஒருவன் என்ற பொருள்களுடன் பழைய ஆங்கில மொழிக்கு இச்சொல் வந்துள்ளதாகக் கருதப்படுகிறது. செருமானிய தொன்ம பழங்குடியினர் புராணத்தில் மானுசு என்று அழைக்கப்பட்டதாக ரோமானிய வரலாற்றாளர் டாசிடசு கூறுகிறார். இந்தோ-ஐரோப்பிய புராணங்களிலும் முதல் மனிதர் மனு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயதும் பெயர்களும்

சிறுவன் என்ற நிலையை கடந்து பருவமடைதல் மூலம் மனித வாழ்க்கையில் ஆண் எட்டும் அடுத்தக் கட்ட வளர்ச்சி நிலையே ஆண் பருவம் எனப்படுகிறது. இக்கால கட்டத்தில் ஆணுக்கு இரண்டாம் நிலை பாலின நடத்தைகள், வளர்ச்சிகள் தோன்றுகின்றன. இதையே ஆண் வயதுக்கு வருதல் அல்லது பருவமடைதல் என்கிறார்கள். இத்தகைய பருவநிலையை அடைந்த முதியோர் எவரையும் ஆண் என்ற சொல் குறிக்கிறது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் கைய், டியூடு, பட்டி, புளோக், ஃபெல்லோ, சாப், பாய், அல்லது லேடு என பல பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆணின் பருவநிலையுடன் ஆணின் குணங்களாக ஆண்மையும் வீரமும் தொடர்புபடுத்தப்படுகின்றன.

உயிரியலும் பாலியலும்

மனிதர்களில் பால் அடிப்படையிலான பலவகையான ஈருருவத் தோற்ற இயல்புகள் காணப்படுகின்றன. இவற்றுள் பல நேரடியாக இனப்பெருக்கத் தேவைகளுடன் தொடர்பு கொண்டவையாக இல்லாவிட்டாலும், பாலியல் இனக்கவர்ச்சிக்கு உதவுகின்றன எனலாம். மனிதர்களில் பாலியல் ஈருருத்தோற்றத்தின் வெளிப்பாடுகள் பெரும்பாலும், உயரம், நிறை, உடற்கட்டு போன்றவற்றைச் சார்ந்தனவாக உள்ளன. இவ்வெளிப்பாடுகள் யாவும் உதாரணங்களே என்றாலும் மிகவும் பொதுமைப் படுத்தப்பட்ட இக்கூற்று எல்லா வேளைகளிலும் பொருந்தும் என்று கூறவியலாது. எடுத்துக்காட்டாக, ஆண்கள் பொதுவாகப் பெண்களை விட உயரமானவர்கள் எனக் கருதினால் எல்லா ஆண்களும் பெண்களை விட உயரமானவர்களாக இல்லை என்பதை காணமுடிகிறது.


பருவமடைந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணின் புகைப்படம் ஒப்பீட்டிற்காகத் தரப்பட்டுள்ளது. இரண்டு மாதிரிகளிலும் ஓரளவிற்கு உடலில் இருந்த முடி அகற்றப்பட்டுள்ளது
.

பால் உறுப்புகளின் வளர்ச்சியில் பூப்படைதல் என்பது ஒரு வளர்ச்சி நிலையாகும். ஆண் பூப்படைந்தவுடன் அவனுடைய இரண்டு விந்துச் சுரப்பிகளிலும் தொடர்ந்து விந்துச் செல்கள் உற்பத்தியாகின்றன. ஆண்பால் ஆர்மோனாகிய டெசுடோசிடரானின் உற்பத்தி தூண்டப்படும். சுரக்கும் அளவும் அதிகரிக்கும். மனித இனத்தில் சிறுவனாயிருந்து ஒருவன் பருவமடைந்து வாழ்க்கையில் ஆண் என்ற நிலையில் அடியெடுத்து வைக்கும்போது அவனிடத்தில் தோன்றுகின்ற இரண்டாம் நிலை பாலின வளர்ச்சிகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.

மறைவிடங்களில் முடி வளர்தல்.
முகத்தில் தாடி, மீசை வளர்தல்.
பெரிய கைகள் மற்றும் பாதங்கள்,
விரிந்த தோள்களும், மார்பும்.
பெரிய மண்டையோடும் எலும்பு அமைப்பும்.
மூளை வளர்ச்சியும் முதிர்ச்சியும்
கனமான குரல்,
தசைநார்களின் திரட்சி
அதிக உயரம்

பாலினச் செயற்பாடுகள்


லியானோர்டோ டாவின்சி வரைந்த ஒரு மனிதனின் ஓவியம் அவனுடைய விகிதசமத்தைக் காட்டுகிறது.
மனித இனத்தின் உயிரினத் தொகையினை இனப்பெருக்கம் மூலம் தற்காத்துக் கொள்ள ஆண் ஒரு முக்கியமான காரணியாகிறான். ஆண் இனப்பெருக்கச் செல்களால் பால் முறை இனப்பெருக்கம் நிகழ்கிறது. மனித இனத்தில் பொதுவாக கருவுறுதலின்போது விந்தணு கொண்டு செல்லும் மரபியல் பொருள் மூலம் பால் வகை தீர்மானிக்கப்படுகிறது. ஒரு விந்தணு எக்சு (X) குரோமோசோம்களுடன் சென்று பெண்ணின் கரு முட்டையை கருத்தரிக்கச் செய்தால் உருவாகும் சந்ததி பெரும்பாலும் பெண் குழந்தையாக (XX) இருக்கும். ஒருவேளை விந்தணு ஒய் (Y) குரோமோசோம்களுடன் சென்று பெண்ணின் கரு முட்டையை கருத்தரிக்கச் செய்தால் உருவாகும் சந்ததி பெரும்பாலும் ஆண் குழந்தையாக (XY) இருக்கும். தனிநபர்களின் உடலமைப்பு அல்லது குரோமோசோம் உருவாக்கம் இந்த வகைகளிலிருந்து வித்தியாசப்படும்.

இம்முறை XY பாலியல்-நிர்ணயிப்பு முறை என குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலான பாலூட்டிகளுக்கு இம்முறை பொதுவானதாக உள்ளது, இதைத்தவிர மரபணு சாராத வகை உள்ளிட்ட பிற பாலியல்-நிர்ணய முறைகள் சிலவும் உள்ளன,

மூளையின் ஐப்போதாலமசு, முன் பிட்யூட்டரி, விந்துச் சுரப்பி ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. டெசுடிரோசிடிரோன் விந்துச் சுரப்பி நாளங்களில் நுழைந்து விந்துச் சுரப்பைய் கட்டுப்படுத்தலாம். இன உறுப்புகளில், இனப்பெருக்க உட்சுரப்பி செய்யும் உற்பத்தி முதனிலை பாலியல் செயற்பாடாகக் கருதப்படுகிறது. பெண்களில் அண்டம் கருமுட்டைகளை உற்பத்தி செய்கிறது. ஆண்களில் விந்தகம் விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது. விந்தணுவையும் கருமுட்டையையும் ஒருங்கிணைப்பதில் மறைமுகமாக நிகழும் அனைத்து செயல்பாடுகளும் இரண்டாம் நிலை பாலியல் நடத்தைகளாகும். பிறப்பு மற்றும் பாலின உறுப்புகளின் தோற்றம், ஆண் தோற்றம், மனிதர்களின் முகத்தில் முடிகள் தோன்றுதல், காதல் போன்ற நடத்தைகளில் நாட்டம் உள்ளிட்ட செயல்பாடுகளும் இரண்டாம்நிலை பாலின செயல்பாடுகளின் சிறப்பு அம்சங்களாகும்.

பாலினம்

ஒரு நபர் தன்னை ஆணாக கருதுகிறாரா அல்லது அவர் ஆணாக கருதப்படுகிறாரா என்பதைப் பற்றி உறுதிப்படுத்துவதற்கு உயிரியல் காரணிகள் போதுமானதாக இல்லை. உடல் அல்லது மரபணு அம்சங்களில் ஒரு பாலினமாக அல்லது பிறழ்ந்து கலவையான பாலினமாகத் தோற்றம் கொண்டவர்களும் உண்டு. இவர்களில் திருநம்பி என்போர் திருநர்களில் ஒரு வகையாகும். பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து ஆணாக வாழ்வோர் "திருநம்பிகள்" என்றழைக்கப்படுகின்றனர். திருநங்கைகள் என்போர் ஆணாகப் பிறந்து, பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ்வோர் ஆவர். திருநங்கைகளைப் பற்றி அறியப்பட்ட அளவுக்கு திருநம்பிகள் பற்றி அறியப்படவில்லை. திருநங்கைகள் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட அளவுக்குத் திருநம்பிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை .

இனப்பெருக்கத் தொகுதி

மனித இனத்தின் ஆண் இனப்பெருக்கத்தொகுதியும் சூழலும்
ஆணுக்குரிய பாலுறுப்புக்கள் யாவும் இனப்பெருக்கத் தொகுதியின் பகுதிகள் ஆகும். இவற்றுள், ஆணுறுப்பு, விதைகள், விந்துக் குழாய், விந்துச் சுரப்பி உள்ளிட்டவை அடங்குகின்றன. ஆண் இனப்பெருக்க உறுப்புக்களின் முக்கியப் பணியை விந்துச் சுரப்பிகள் நிறைவேற்றுகின்றன. ஓர் ஆண் இனப்பெருக்க முதிர்ச்சியடைந்தவுடன் அவரது விந்துச்சுரப்பியில் தொடர்ந்து விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன. விந்தணு எனப்படும் ஆண் இனப்பெருக்கச் செல்கள் இவ்வாறு உண்டாகி பெண்ணின் கருமுட்டையுடன் கஒருங்கிணைந்து கருவாகிக் குழந்தையாக வளர்கிறது. கரு வளர்ச்சிக் காலத்தில் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புக்களுக்கு எவ்வித பங்களிப்பும் கிடையாது. பிட்யூட்டரி சுரப்பி விந்துச் செல் உற்பத்தியை தூண்டிவிடவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. மனிதச் சமூகத்தில் தந்தை மற்றும் குடும்பம் என்ற கருத்து பின்பற்றப்படுகிறது. ஆண் இனப்பெருக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உறுப்புகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது ஆண்மையியல் எனப்படுகிறது.

பாலின ஆர்மோன்கள்

ஆணின் இனப்பெருக்கச் செயல்கள் பல ஆர்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பாலூட்டிகளில் ஆர்மோன்கள் இனப்பெருக்க உறுப்புகளைத் தூண்டிவிடும். விந்துச் சுரப்பி விந்துச் செல்களையும் டெசுடோசிடிரான் ஆர்மோனையும் உற்பத்தி செய்கிறது. டெசுடோசிடிரான் பிற ஆண் இனப்பெருக்கச் செயல்களைக் கட்டுப்படுத்துவதோடு இரண்டாம்நிலை பாலினப்பண்புகளையும் தோற்றுவிக்கிறது. குரல் மாற்றம், முடி வளர்ச்சி மற்றும் இதர பருவ மாற்றங்கள் நிகழ்கின்றன.

பல சுரப்பிகளால் சுரக்கப்பட்டு அடர்த்தியான திரவப்பொருளாக விந்து திரவம் சுரக்கப்படுகிறது. விந்துத் திரவம் வெண்மை நிறக் கோழைப் பொருளாகக் காணப்படும். இதற்கு செமினல் பிளசுமா என்று பெயர். இப்பொருளும் விந்துப்பை, புராசிடேட்டு சுரப்பி போன்ற பல சுரப்பிகளால் சுரக்கப்படுகிறது. விந்துத் திரவம் விந்து செல்களுக்கு உணவளிக்கவும் நீந்தி செல்லும் ஊடகமாகவும் பயன்படுகிறது.

ஆண்மை

ஆண்மையைச் சுட்டும் மைக்கலேஞ்சலோவின் மேற்கத்திய ஓவியம்

ஒரு செருமானிய ஆனழகனின் கட்டுமசுத்தான உடலமைப்பு ஆண்மைக்கு எடுத்துக்காட்டாய் காட்டப்பட்டுள்ளது
ஆண்மைக்கான வேர்கள் மரபணுக்களில் இருந்து தோன்றுகிறது .

ஆகவே பல்வேறு கலாச்சாரங்களில் ஆண்மை என்பதை பல்வேறு கோனங்களில் பார்த்தாலும் அனைத்துக் கலாச்சாரத்தின் ஆண்மை குறித்த வரையறையில் சில பொதுவான அம்சங்கள் உள்ளன . சில சமயங்களில் பாலின அறிஞர்கள் ஆணுறுப்பின் மிகுந்த ஆளுமை வாய்ந்த வடிவத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்கான சொற்றொடராக இச்சொல்லை பயன்படுத்துகிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் யான் வெய்ன் என்பவரை ஒரு விதமான ஆணாகவும், அதே நேரத்தில் ஆல்பர்ட் ஐன்சுடீனை மற்றொரு விதமான ஆணாகவும் கருதியதாகக் குறிப்பிடுவர்.

செல்வம், இனம் மற்றும் சமூக வர்க்கம் போன்றவற்றைப் போலவே ஆண்மைக்கும் சமூக மதிப்பு உள்ளது என்று மானுடவியல் சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக மேற்கத்திய கலாச்சாரத்தில், அதிக ஆண்மையுள்ளவருக்கு பொதுவாக அதிக சமூக நிலைமை கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே வீரம் மற்றும் வீரியம் போன்ற சொற்கள் பிறந்தன. உடல் வலிமையும் மனவலிமையும் ஆண்மையுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. சிறுவர்களுடன் ஒப்பிடுகையில் பருவமடைந்த ஆண்களுக்கே ஆண்மை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இனப்பெருக்கச் செயல்பாட்டினை பெண்களை விட ஆண்கள் நீண்ட நாட்கள் வழங்கிட இயலும். ஆண்மையின் பண்புகளை மேம்படுத்துவது தொடர்பாக தற்காலத்தில் பெரிய ஒப்பந்தங்கள் அறியப்படுகின்றன. குரோமோசோமில் உள்ள எக்சு, ஒய் மரபணுக்களின் இயல்புநிலைகள் ஆராயப்படுகின்றன. ஆரோக்கியமான இனப்பெருக்க உறுப்புகள், ஆர்மோன்கள் உற்பத்தி ஆகியவற்றையும் மேம்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரத்தில் மனிதர்களின் குழுக்களில் ஆண்கள் பலவிதமான சமூக மற்றும் கலாச்சார பாத்திரங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. வேட்டையாடும் கூட்டாளிகளாகவும் அனைத்து பெரிய விளையாட்டுகளிலும் போர் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஆண்கள் பெரும் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது. வரலாறு முழுமைக்கும் ஆண்களுக்கான கடமைகள் அவ்வப்போது மாறி வந்துள்ளன.
நன்றி விக்கிபீடியா.
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

ஞாயிறு, 17 நவம்பர், 2019

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி செயலர் பணிக்கு நேரடி ஆள்சேர்ப்பு - 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி செயலர் பணிக்கு நேரடி ஆள்சேர்ப்பு - 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

RECRUITMENT OF CANDIDATES FOR PANCHAYAT SECRETARY: ஒவ்வொரு மாவட்ட இணையதளத்தில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கிராமங்களில் காலியாக உள்ள ஊராட்சி செயலர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிக்கு நேரடி ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் மூலம் பணியமர்த்தப்படும் இந்த பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1.7.2019 தேதியின் படி, 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு மேற்படாதவராகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப்பகுதிக்குள் வசிக்க வேண்டும் அல்லது அவ்வூராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

காலியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட தகவல் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட உரிய சான்றிதழ்களின் நகல்களுடன், அந்தந்த கிராம ஊராட்சி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே, நோ்முகத் தோ்வுக்கான அழைப்புக் கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலர்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Thank you News18 tamil.

உங்கள் மாவட்டங்களில் கிளிக் செய்க :

திருவண்ணாமலை  - https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment/

மதுரை- https://madurai.nic.in/notice_category/recruitment/

நாமக்கல்- https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment/

தேனி- https://theni.nic.in/notice_category/recruitment/

வேலூர்- https://vellore.nic.in/notice_category/recruitment/

காஞ்சிபுரம்- https://kancheepuram.nic.in/notice_category/recruitment/

கரூர்- https://karur.nic.in/notice_category/recruitment/

நாகை- https://www.nagapattinam.nic.in/notice_category/recruitment/

பெரம்பலூர்- https://perambalur.nic.in/notice_category/recruitment/

ஈரோடு- https://erode.nic.in/notice_category/recruitment/

கிருஷ்ணகிரி- https://krishnagiri.nic.in/notice_category/recruitment/

நாமக்கல்- https://namakkal.nic.in/notice_category/recruitment/

சேலம்- https://salem.nic.in/notice_category/recruitment/

திருப்பூர்- https://tiruppur.nic.in/notice_category/recruitment/

திண்டுக்கல்- https://dindigul.nic.in/notice_category/recruitment/

ராமநாதபுரம்- https://ramanathapuram.nic.in/notice_category/recruitment/

சிவகங்கை- https://sivaganga.nic.in/notice_category/recruitment/

விருதுநகர்- https://virudhunagar.nic.in/notice_category/recruitment/

கடலூர்- https://cuddalore.nic.in/notice_category/recruitment/

விழுப்புரம்- https://viluppuram.nic.in/notice_category/recruitment/

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சனி, 16 நவம்பர், 2019

பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

  1. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?
                                    12,500
  1. புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?
                                        1886.
  1. இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?
                                           20 கிமீ
  1. கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது அதை அறிமுகப்படுத்தியவர் யார்
               உர்ஸா இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான்
              (பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர்.
  1. அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?
                                ஜான் எப் கென்னெடி
  1. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?
                            ஹோவாங்கோ ஆறு
  1. வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?
                                            ஹர்ஷர்
  1. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?
                                      சமுத்திர குப்தர்
  1. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?
                                       ரஸியா பேகம்
  1. உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?
                                     இந்தோனேசியா
  2. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது?
                                     தென்னாப்பிரிக்கா
  3. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது??
                                        டென்மார்க்
  4. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?
                                         இங்கிலாந்து
  5. காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது
                                        பிரிட்டன்.
  6. மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
                                             ஷா கமிஷன்
  1. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
                                           நானாவதி கமிஷன்
  1. நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
                                                சாக்ளா கமிஷன்
  1. நேதாஜி சுபாஷ் சந்திர போஸே பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள் எவை?
                      ஷாநவாஸ் கமிஷன்கோஸ்லா கமிஷன்,
                       ஜஸ்டிஸ் முகர்ஜிகமிஷன்
  1. அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கம்மிசியன் எது?
                                      லிபரான் கமிஷன்
  1. சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?
                                   ஆர்கேபச்சோரி கமிட்டி
  1. ராஜீவ் காந்தி படுகொலையின் உண்மை நிலவரத்தை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
                                      ஜெயின் கமிஷன்
  1. பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடூ பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்?
                                             மண்டல் கமிஷன்
  1. இந்தியாவின் பரப்பளவு?
                                             32,87,263 .கி.மீ
  1. வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள தூரம் ?
                                                 3214 கி.மீ.
  1. மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை உள்ள தூரம்?
                                                      2933 கி.மீ.
  1. இந்தியாவின் நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
               இந்தியாவின் நடுவே அலகாபாத் வழியாக செல்லும்
               82°30′கிழக்கு தீர்க்கரேகையின்  மூலமாக
               கிரீன்விச்0° தீர்க்கரேகையை விட 5 மணிநேரம் 30 நிமிடம்
                முன்னதாகஉள்ளது.
  1. இந்தியாவின் அண்டை நாடுகள் ?
                 பாகிஸ்தான்அப்கானிஸ்தான்
                நேபாளம்பூடான்சீன,வங்காளதேசம்மியான்மர்.
  1. இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி?
                              பாக் நீர்ச்சந்தி.
  1. அதிக மலை பெய்யம் இடம்?
                                   சிரபுஞ்சி
  1. இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர்?
                                     பூர்வாச்சல்
  1. வட இந்திய சமவெளிகள் என்ன?
    1. இராஜஸ்தான் சமவெளி
    2. பஞ்சாப்-ஹரியானா சமவெளி
    3. கங்கைச் சமவெளி
    4. பிரம்மபுத்ரா சமவெளி
  2. பீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு?
                             கோசி ஆறு
  1. இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?
                                    2560 கிலோமீட்டர்கள்
  1. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?
                                     8848 மீட்டர்கள்.
  1. உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?
                  மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்).
  1. கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது ?
                                                 தோஆப்
  1. விந்தய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?
                                   தக்காண பீடபூமி
  1. மேற்க் தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்?
                        தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்)
  1. எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
                                    நைல் நதி.
  1. எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது?
               நைல் நதியின் நன்கொடைநைல் நதியின் மகள்.
  1. பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?
                        ஹெய்ரோகிளிபிக்ஸ்
  1. யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்?
                                 மெசபடோமியா
  1. மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?
                                         சுமேரியர்
  1. சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன?
                    சுமேரியர்களின் எழுத்துமுறை
                    அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.
  1. உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?
                                   கில்காமேஷ்
  1. சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
                           ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
  1. சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?
                     ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
  1. அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?
                         ஜான் டால்டன்(John Daltan)
  1. ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?
                   பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.
  1. நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?
                     அணுக்கள் பிளக்ககூடியவை.
  1. அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?
                          எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)
  1. அணு எண் என்றால் என்ன?
              அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள
              ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்.
  1. .தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?
                       நெல்சன் மண்டேலா
  2. மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?
                                        27 ஆண்டுகள்
  3. மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?
                                        ராபன்தீவில்
  4. மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?
                                        பிப்ரவரி 2 1990 ஆண்டு
  5. மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?
                                                        71
  6. அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது
                                                 1993
  7. மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?
                பாரத ரத்னா,அமைதி,நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி  சர்வதேச விருது.
  8. மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?
                நெல்சன்ரோபிசலா மண்டேலா
  9. தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
                 மடிபா(Madiba)
  10. வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ?     புதன்வெள்ளி,செவ்வாய்வியாழன்சனி
  11. தொலைநோக்கியில்மட்டும்பார்க்க்கூடியகோள்கள் ?
                  யுரேனஸ், நெப்ட்யூன்
  1. சூரியகுடும்பத்தில் உள்ளதிடக்கோள்கள் எவை ?
                 புதன்வெள்ளி, பூமி, செவ்வாய்
  1. சூரியகுடும்பத்தில் உள்ளவாயுக்கோள்கள் எவை ?
                வியாழன்சனியுரேனஸ், நெப்ட்யூன்
  1. சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ?
                 பூளூட்டோசெரஸ்ஏரிஸ், மேக்மேக்ஹவ்மீயே,
  1. கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?
                         வெள்ளியுரேனஸ்
  1. மலர்என்றால்என்ன ?
               மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக
               மாற்றுரு கொண்ட தண்டு.
  1. மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது?
                            சூரியகாந்தி
  1. மஞ்சரிஎன்றால்என்ன?
             ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட 
              பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.
  1. மலரின் உறுப்புகள் என்ன?
    1. பூவடிச் செதில்
    2. பூக்காம்பூச் செதில்பூத்தளம்
    3. புல்லிவட்டம்அல்லிவட்டம்,
    4.  மகரந்ததாள் வட்டம்சூலக வட்டம்
  2. மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று?இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?
                                ஆகாயத்தாமரை
  1. கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?
                                காந்தள்(Gloriosa)
  1. அல்லி வகைகள் என்ன ?
                   குளிரை தாங்குகிற நீர் அல்லிகள்
                  பகலில் மட்டுமே பூக்கும்
                  ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில்
                  அல்லது இரவில் பூக்கின்றன.
  1. இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ?
                              தாமரை
  1. எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்
                          மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ
                   தேநீர்  என்றழைக்கிறார்கள்.
  1. எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?
                   மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை.
                    இது தற்போது மீன் சந்தையாக உள்ளது
  1. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?
                                      ஹரி சிங்.
  1. 2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?
                                 ஜபுலணி(Jabulani).
  1. ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?
                            மும்பை தாராவி.
  1. தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?
                            ஐசக் சிங்கர்.
  1. யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?
                                   வீரமாமுனிவர்
  1. பலூசிஸ்தானில் உள்ள மக்கள் பேசும் ஒரு திராவிட மொழி எது?
                                பிராகுயிஇது திராவிட மொழி.
  1. எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?
                              அர்ஜென்டீனா மற்றும் உருகுவே
  1. ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?
                          பெஷாவர்.
  1. இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி என்ன?
                          அராமைக்(Aramaic)
  1. பாகிஸ்தான் என்ற பெயர் கொடுக்க காரணம் யார்?
                           சௌத்ரி ரஹம்மத் அலி.
  1. ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?
  1. எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும் செயல்முறையை பயன்படுத்துகிறது?
                                   ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
                                   ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்.
  1. அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?
                                    லுஃப்ட்வாஃபே(Luftwaffe)
  1. இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன?
                        கடன்-குத்தகை(Lend-Lease Agreement) ஒப்பந்தம்
  1. முருகபெருமானின் சமஸ்கிருத பெயர் என்ன?
                              ஸ்கந்தா.
  1. எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?
                               கோலாலம்பூர் (மலேஷியா)
  1. தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?
                                பிராமி வெட்டெழுத்துகள்.
  1. எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது?
           தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.
  1. முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?
                  வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.
  1. ஜெலோடோலாஜி(Gelotology)  என்றால் என்ன?
                     சிரிப்பை பற்றிய படிப்பாகும்.
  1. எது உலகின் நீண்டநேர நாடகம்?
                  ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும் 
               29551 சொற்களையும் கொண்டுள்ளது.
  1. யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?
                   1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்.
  1. எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?
                        பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்(Gilgamesh).
  1. எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?
                  குலசேகர பாண்டியன்.
  1. மிசா(MISA)மற்றும்பொடா(POTA) என்றால் என்ன ?
               உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா)
  1. பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்(பொடா)
        (பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))
  1. யாரால் மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?
                         பேட்ரிக் மேக்-மில்லன்
  1. எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள் உள்ளது?
                   இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்
  1. சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன?
     துமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்.
  1. எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன?
                         குவாண்டனமோ வளைகுடா
  1. தமிழ்நாட்டின் ரயில்வேபாதையின் நீளம்எவ்வளவு?
                                5952 கிலோமீட்டர்கள்
  1. தமிழ்நாட்டின்மொத்த ரயில்நிலையங்கள் எத்தனை?
                                     532
  1. தமிழ்நாட்டில்எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன?
                                       24
  1. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எப்பொழுது தொடங்கப்பட்டது?
                                  1972 ஆம் ஆண்டு
  1. தமிழ்நாட்டின்முக்கிய பெரியதுறைமுகங்கள் ?
             தூத்துக்குடிசென்னைஎண்ணூர் துறைமுகங்கள்
  1. தமிழ்நாட்டின்பன்னாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
            சென்னை(அண்ணா)திருச்சிராப்பள்ளிகோயம்புத்தூர்
  1. தமிழ்நாட்டின்உள்நாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
                  சென்னை(காமராஜ்)மதுரைதூத்துக்குடிசேலம்
  1. ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
                          சென்னைக்கு அருகில் ஆவடியில்
  1. பொதுத்துறை நிறுவனமான மாநிலதொழில்மேம்பாட்டுக் கழகம்(SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது
                               1972 ஆம் ஆண்டு
  1. தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்அலுவலகங்கள் மட்டும் எத்தனை?
                              12,115 ( 2013 வரை )
  1. தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை ?
                               3504 ( 2013 வரை )
  1. தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாககொண்டுவரப்பட்டது ?
                                      1958
  1. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ?
                         1,30,058 சதுர கிலோமீட்டர்கள்
  1. தமிழ்நாட்டின்மாநிலப் பறவை எது?
                       மரகதப் புறா
  1. தமிழ்நாட்டின்மாநிலப்பூ ?
                செங்காந்தள் மலர்
  1. தமிழ்நாட்டின்மாநிலவிலங்கு ?
                  வரையாடு
  1. தமிழ்நாட்டின்மாநிலமரம்
                     பனை மரம்?
  1. தமிழ்நாட்டின் மிகஉயர்ந்தசிகரம்?
                       தொட்டபெட்டா
  1. இந்தியாவின் நீளமான ஆறுஎது?
                       கங்கை.
  1. இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறுஎது?
                     கோதாவரி ஆறு.
  1. பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படிஅழைக்கப்படுகிறது?
             யார்லுங் ட்சாங்போ(Yarlung Tsangpo)
  1. ஹிராகுட்அணைஎந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?
                       மகாநதி ஆறு.
  1. எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?
            ஜீலம்செனாப்ரவிபியாஸ் மற்றும் சட்லெஜ்.
  2. தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும்ஆறு
                                கோதாவரி ஆறு.
  1. கிருஷ்ணா நதியின் முக்கிய துணைநதி?
    கிருஷ்ணா நதியில் பாயும மிகவும் முக்கியமான கிளைநதி?
                           துங்கபத்ரா நதி.
  2. 1600 ஆண்டுகளுக்கு முன்ஆணை எந்த நதியில் யாரால்கட்டப்பட்டது ?
             கல்லணைகரிகாலனால் காவிரியின் குறுக்கேகட்டப்பட்டது
  1. லட்சுமி நாராயணி தங்கக் கோவில் எங்குள்ளது?
                    வேலூர் ஸ்ரீபுரம்
  2. உலகின் மிகப்பெரிய தீவு எது?
               கிரீன்லாந்து
  3. 2008ல், தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற படம் ?
               தசாவதாரம்
  4. எது பாலைவனம் இல்லாத கண்டம்?
               ஐரோப்பா
  5. 1966ல்,  ஐநாவில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார் ?
               எம்எஸ்சுப்புலட்சுமி
  6. எத்தியோப்பியாவின் தலைநகரம் ‘அடிஸ் அபாபா’ வின் பொருள் என்ன?
              புதிய மலர்
  7. International Air Transport Association IATA – தலைமையகம் எது ?
              ஜெனிவா
  8. நிரங்கரி – என்பது என்ன ?
             சீக்கிய மதப்பிரிவு
  9. ஐரோப்பிய மொழிச்சொற்களை வைத்து உருவாக்கப்பட்ட எஸ்பெராண்டோ(ESPERANTO) மொழியை உருவாக்கியது யார்?
                 லஸாரஸ் லுட்விக் ஸாமெனாஃப்
  10. உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?
                  பாபிலோன்
  11. ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது ?
                  லூதுவேனியா
  12. உலகின் முதல் பெண் பிரதமர்?
                         திருமதி பண்டாரநாயஹ
  1. தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?
                               மேலக்கோட்டை
  1. முதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது
                            திருநெல்வேலி
  1. மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
                       ஆர்.எஸ்சர்க்காரியா
  1. வரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்?
                            7 ஆண்டுகள்
  1. தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?
                             மேலக்கோட்டை
  1. மிசா(MISA) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?
                            1971
  1. கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?
                 நீதியரசர் கோகுலகிருஷ்ணன் குழு
  1. மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?
                                      1971
  1. பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
                                                 30
  1. இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவர் யார் ?
                             டாக்டர்.எஸ்ராதாகிருஷ்ணன்
  1. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
                           ஜானகி ராமச்சந்திரன்
  1. பூஜ்ஜிய நேரம் என்றால் என்ன ?
                  கேள்வி நேரம்
  1. ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்?
                       வாரத்துக்குள்
  1. இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
                          ஜாஹிர் உஷேன்
  1. வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன ?
         தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல
  1. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
                                       1949
  1. ஜெயின் விசாரணைக் குழு யாருடைய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டது?
                              ராஜீவ் காந்தி
  1. மத்திய திட்டக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது ?
                                 1950
  1. இந்தியாவின் பிரதமராகதேர்வு செய்யப்படக் குறைந்தபட்ச வயது என்ன?
                                   25
  1. இந்தியாவின் மக்களவையையும் மாநிலங்களவையையும் ஒரே நேரத்தில் கூட்டும் அதிகாரம் உள்ளவர்?
                      குடியரசுத்தலைவர்
  1. 1997-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை எந்த விழிப்புணர்வுக்காகத் தேர்ந்தெடுத்தது?
                      சுற்றிச்சுழல் மற்றும் வளர்ச்சி
  1. சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது?
                             1969
  1. அகில இந்தியா பணிகளை உருவாக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?
                          பாராளுமன்றம்
  1. இந்தியாவில் வாக்குரிமை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வயது என்ன?
                      18 வருடம்
  1. கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் மைய அரசால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
                         1976
  1. இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
                       ஜாஹிர் உஷேன்
  1. ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
                            குடியரசுத்தலைவர்
  1. சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?
                                     1968
  1. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் பெயர் என்ன?
                          எல்ஸ்ரீராமுலு நாயுடு
  1. ஆ.தி.மு.க முதல் முதலாக வெற்றி பேட்டர பாராளுமன்றத் தொகுதி எது?
                      திண்டுக்கல்
  1. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
                                234
  1. தமிழக சட்டமன்றத்தின் மேலவை எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?
                                   1986
  1. மாநகராட்சியின் மேயர், துணை மேயர் ஆகியோரின் பதவிகாலம் எவ்வளவு?
                         ஐந்து(5) ஆண்டுகள்
  1. தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கபடுகிறார் ?
                             சேர்மன்
  1. எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரையில் தொடங்கப்பட்டது ?
                     2003
  1. பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?
                   1858
  1. அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?
                       பிரிவு 51 
  1. தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு(SAARC) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?
                         டாக்கா
  1. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
                 அம்பேத்கர்
  1. எது அடிப்படை உரிமை கிடையாது?
                       சொத்துரிமை
  1. குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க வயது வரம்பு என்ன ?
                          35 வயது
  1. மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்?
                           ஆளுநர்
  1. கி.பி. 1947-ல், இந்தி விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையில் தலைவராக இருந்தவர் யார்?
                       ஓமந்தூராயார்
  2. வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார்
                      1962
  3. இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?
                   குடியரசுத்தலைவர்
  4. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
               28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்
  5. வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
                                     1961
  1. பல கட்சி ஆட்சி நடைபெறும் நாட்டுக்கு ஓர் உதராணம்?
                           இந்தியா
  2. எதன் அடிப்படையில் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன?
                          மொழி
  3. இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது ?
                             உச்சநீதிமன்றம்
  4. குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பதவி காலியாக இருக்கும் போது குடியரசுத்தலைவர் பணியினை செய்வது யார் ?
                         தலைமை நீதிபதி
  5. இந்தியாவின் மைய அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?
                            பிரதமர்
  6. இந்தியாவில் பொதுவாக அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பவர் யார் ?
                      காபினெட்
  7. மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?
                        பிரதமர்
  8. மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார் ?
                    குடியரசுத்தலைவர்
  9. மாநிலங்கள் அவையின் தலைவர் ?
                   துணை குடியரசுத்தலைவர்
  10. இந்திய குடியரசுத்தலைவர் எந்த தேர்தல் முலமாக தேர்ந்தெடுக்கபடுகிறார் ?
                    மறைமுகத் தேர்தல்
  11. தெற்க்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு எந்த ஆண்டில் ஏற்பட்டது ?
                         1988
  12. அரசியலமைப்பு யாருடைய சுரண்டலுக்கு எதிரான உரிமையை வழங்கியிருக்கிறது ?
                    குழந்தைகளுக்கு
  13. இவற்றில் எந்த நாடு தெற்காசியப் பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பு நாடக இல்லை?
                    பர்மா
  14. சட்டவிதி 300-ஏ, இவற்றில் எதைச் சார்ந்தது?
                    சொத்துரிமை
  15. இந்தியாவின் முதல் முனிசிபல் கார்ப்பரேஷன் எங்கு ஏற்ப்படுத்தபட்டது?
                   சென்னை
  16. செய்தித்தாள்கள் எந்த அரசின் கட்டுப்பாட்டில் வரும்?
                  மாநில அரசு
  17. தமிழ்நாட்டில் பல்கழைகழகங்களின் வேந்தர் யார் ?
                 கவர்னர்
  18. 2004-ல் ஏற்பட்ட சுனாமியின்போது மிக அதிக அளவில் எங்கே பாதிப்பு ஏற்பட்டது?
                லிட்டில் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள்
  19. இந்திய அரசியலமைப்பின் எந்தச் ஷரத்து, ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவரக் குடியரசுதலைவர்க்கு அதிகாரமளிக்கிறது?
                 356வது ஷரத்து
  20. போர் பிரகடனம் செய்யும் அதிகாரம் பெற்றவர் யார் ?
    யாருடைய கையொப்பம் பெற்ற பின்னர் மசோத, சட்டம் ஆகும் ?
                   குடியரசுத்தலைவர்
  21. “சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை” என்று கூறியவர் யார் ?
                 லாஸ்கி
  22. இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு எது ?
                     1959
  23. இந்திய ஜனாதிபதி என்பவர் யார் ?
                இந்திய அரசின் தலைவர்
  24. பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கடைசி நிறுவனம் எது ?
                கிராமப் பஞ்சாயத்து
  25. பன்னாட்டு நிதியகத்தில் இந்திய எப்போது உறுப்பினராக சேர்ந்து?
                               1950
  1. இந்தியா-அமெரிக்கா நாடுகள் அணுசக்தி ஒப்பந்தம் செய்த நாள் எது?
                        அக்டோபர் 11, 2008.
  2. முதலில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஏற்படுத்திய மாநிலம்?
                      ராஜஸ்தான்
  3. ராஜ்ய சபைக்கு இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
                                          12
  1. ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து எதை கூறுகிறது?
                 தனி அரசியலமைப்பு
  2. அலிகார் இயக்கத்தின் நிறுவனர் யார்?
                   சையது அகமது கான்
  3. நிதி மசோத முதலில் எங்கு அறிமுகம் செய்யப்பட முடியும்?
                      மக்களவை
  4. இந்தியாவின் முன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
                    ஜாகீர் உசேன்
  5. யார் மாநிலத்தின் ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர்?
                  குடியரசுத்தலைவர
  6. உலகின்முதல்செல்பேசி/கைப்பேசி/செல்போன் உருவாக்கிய நிறுவனம்?
                    மோட்டோரோலா (Motorola)
  1. பாராசூட்டில்இருந்துகுதித்த முதல் மனிதன் யார்?
               ( Louis-Sébastien Lenormand )
  1. எந்தவிமானநிறுவனத்தில் இருந்து ஏர் இந்தியா தொடங்கப்பட்டது?
                              மகாராஜா ஏர்லைன்ஸ்
  1. இந்தியாவில்மொழிவாரிமாநிலங்கள் அமைவதற்கு காரணமாக அமைந்தவைர் யார்?
                          பொட்டி ஸ்ரிரமாலு
  1. எந்தபுத்தகம்அமெரிக்காவின் விடுதலை போராட்டத்திற்கு காரணமாக இருந்தது?
                 காமன் சென்ஸ் – “Common Sense” By Thomas Paine.
  1. எந்தநகரத்தில்முதன் முதலில் வனவிலங்கு பூங்கா தொடங்கப்பட்டது ?
                                   பாரிஸ்
  1. தமிழ்நாடுஅரசின்சின்னத்தில் எந்த கோவிலின் கோபுரம் உள்ளது?
                            மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
                           9 அடுக்கு மேற்கு கோபுரம்.
  1. நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அரசியல் குரு யார் ?
               சித்த ரஞ்சன் தாஸ்(C. R. தாஸ்)
  2. இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு யாரால் எப்போது தொடங்கப்பட்டது ?
              லார்ட் ரிப்பன், 1881
  3. இந்தியாவில் பதவியில் இருக்கும்போது இறந்த பிரதமர்கள் யார்?
              ஜவஹர்லால் நேருலால் பஹதூர் சாஸ்த்ரிஇந்திராகாந்தி
  4. தமிழ்நாட்டின் முதல் ரயில்வே நிலையம் எது?
              ரயில்வே நிலையம்.
  5. தமிழின் முதல் நாவல் எது?
                பிரதாப முதலியார் சரித்திரம்
  6. ஜனதா கட்சியை தோற்றுவிக்க காரணமாக இருந்தவர் யார்?
                 ஜெயப்ரகாஷ் நாராயணன்.
  7. இந்திய ஹாக்கி அணி உலககோப்பையை வெல்லும்போது அதன் அணித்தலைவர் யார்?
                  அஜித் பால் சிங்
  8. உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலில் ஹாட்-ரிக் விக்கெட்டுகள் எடுத்தவர் யார்?
                சேட்டன் ஷர்மா 1987 vs நியூசிலாந்து
  9. இந்தியாவின் மிகப்பெரிய கால்வாய் எது?
               இந்திரா காந்தி தேசிய கால்வாய் – ராஜஸ்தான்
  10. இந்திய ஹாக்கியின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?
                மேஜர் தியான் சந்த சிங்
  11. வைரம் வெட்டி எடுக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரம்?
                   சூரத்
  12. மேற்கு வங்காளத்தின் துயரம் என அழைக்கப்படும் ஆறு எது?
                    தாமோதர் ஆறு
  13. ஆஸ்கர் விருதுக்கு தமிழின் எந்த படம் முதன் முதலாக பரிந்துரை செய்யப்பட்டது?
                      தெய்வ மகன் (1969)
  14. இந்தியாவின் புவியியல் மையமாக எந்த நகரம் உள்ளது?
                           நாக்பூர்.
  15. உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது ?
                          நேபாளம்
  16. இமயமலையில் அமைந்துள்ள பிற சிகரங்கள்?
                   கஞ்சன்ஜங்கா(8598 மீ)               நங்கபர்வத்(8126 மீ)               தவளகிரி( 8167 மீ )               நந்திதேவி( 7818 மீ)
  17. வெள்ளகொலுசு நிறம்மாறக் காரணம் என்ன ?
            வெள்ளிகாற்றில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடும்
           வினைபுரிந்து வெள்ளி சல்பைடாக(Ag2S) மாறிவிடுகிறது