சனி, 15 பிப்ரவரி, 2020

தமிழின் சிறப்பு......


தமிழின் சிறப்பு......

*போதாது போதாது....* *அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது!*

1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி 15.சிறுபஞ்சமூலம் 16.முதுமொழிக் காஞ்சி 17.ஏலாதி 18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம் 2.மணிமேகலை 3.சீவக சிந்தாமணி போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம்  2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.தேவாரம் 2.திருவாசகம், 3.திருவருட்பா, 4.திருப்பாவை 5.திருவெம்பாவை 6..நாச்சியார் திருமொழி 7. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.முத்தொள்ளாயிரம் 2.முக்கூடற்பள்ளு 3.நந்திக்கலம்பகம் 4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதி
களைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள் 4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை 7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்,   2. இராமதேவர், 3. கும்பமுனி,  4. இடைக்காடர்,
5. தன்வந்திரி,  6. வான்மீகி, 7. கமலமுனி, 8. போகநாதர், 9. குதம்பைச் சித்தர், 10. மச்சமுனி,  11. கொங்கணர், 12, பதஞ்சலி,  13. நந்திதேவர், 14. போதகுரு, 15. பாம்பாட்டிச் சித்தர்.   16. சட்டைமுனி,   17. சுந்தரானந்த தேவர்,   18. கோரக்கர்.

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்,  2. அழுகணிச் சித்தர், 3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர், 4. சதோகநாதர்,  5.இடைக்காட்டுச் சித்தர்,  6. குதம்பைச் சித்தர், 7. புண்ணாக்குச் சித்தர்.  8. ஞானச்சித்தர், 9.மௌனச் சித்தர், 10. பாம்பாட்டிச் சித்தர், 11. கல்லுளி சித்தர், 12, கஞ்சமலைச் சித்தர். 13. நொண்டிச் சித்தர், 14. விளையாட்டுச் சித்தர்,   15. பிரமானந்த சித்தர்,   16. கடுவெளிச் சித்தர், 17. சங்கிலிச் சித்தர், 18.திரிகோணச்சித்தர்.

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும்
அடங்குவர்.

1. வான்மீகர், 2. பதஞ்சலியார்,  3. துர்வாசர், 4. ஊர்வசி,  5. சூதமுனி,
6. வரரிஷி,  7. வேதமுனி,  8. கஞ்ச
முனி,  9. வியாசர், 10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல். 

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5. கருணா
னந்தர், 6. போகர்,  7. சட்டைநாதர்,  8. பதஞ்சலியார்,  9. கோரக்கர், 10. பவணந்தி, 11. புலிப்பாணி 12.அழுகணி.13. பாம்பாட்டி,  14. இடைக்காட்டுச் சித்தர்,  15. கௌசிகர், 16. வசிட்டர், 17. பிரம்மமுனி, 18. வியாகர், 19. தன்வந்திரி, 20. சட்டைமுனி, 21. புண்ணாக்கீசர், 22. நந்தீசர்,  23, அகப்பேய்,  24. கொங்கணவர், 25. மச்சமுனி, 26. குருபாத நாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி, 31. காகபுசுண்டர்,  32. பராசரர். 33. தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர், 36. திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39. தொழுகண், 40. நவநாதர்
(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.
வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்டவசுக்கள், 42. சப்த ரிஷிகள்.

இப்படிச்  சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது.  கிடைத்தவை இவைமட்டுமே.

 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய மொழி என் தாய்மொழி தமிழ்..!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது , நாமாக அழித்தால் தான் உண்டு. பெருமை கொள்வோம் தமிழரென்று.


டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் அறிவிப்பு

 டிஎன்பிஎஸ்சி தேர்வுகலில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் முறைகேடுகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் புதிய புதிய முறைகேடு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதில், குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும். காலை 10 மணிக்கும் நடைபெறும் தேர்வுக்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வருதைத் தர வேண்டும். தேர்வு எழுதுபவர்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய, விதிமுறைகளை விளக்க முன்பே வரவேண்டும் என்ற தெரிவித்துள்ளது.

வியாழன், 13 பிப்ரவரி, 2020

குரூப்4 கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கவனத்திற்கு ...

குரூப்4 கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கவனத்திற்கு 👇🏻

சிறுசேமிப்பு துறையில் முதல்முறையாக TNPSC மூலம் பணியாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
எனவே Junior assistant ah அந்த துறையை தேர்வு செய்பவர்கள் 2வருடத்தில் Assistant பதவி உயர்வு பெறலாம்

நிலம் மற்றும் பதிவேடுகள் துறை

தற்போது அந்த துறையை தேர்வு செய்தால் பணி ஓய்வு பெறும் வரை  உதவியாளர் நிலை தான் தொடரும் பதவி உயர்வு மிகவும் தாமதம்

அந்த துறையை  தேர்வு செய்ய வேண்டாம்

மற்றும்
Land settlement department
Land administration
இந்த துறையின் பணி ஓய்வு பெறும் வரை சென்னை நகரத்தில் தான் தோழர்களே

Revenue administrator department இதுவும் பணி சென்னையில் தான் ஓய்வு வரை

 பொதுப்பணி துறை

இந்த துறையில் பொறியாளர் முறையில் உள்ளே இருப்பவர்களுக்கு தான் அதிகாரம்
குரூப் 4
குரூப் 2A
மூலம் உள்ளே நுழைப்பவர்க்கு அதிகாரம் இல்லை
நாம் நிர்வாகம் சார்ந்த பணிகளை மட்டும் தான் செய்வோம்
பதவி உயர்வு மிகவும் தாமதம்
உதவியாளர் நிலை வர 6 வருடம் ஆகும்
கண்காணிப்பாளர் நிலை வர 15 வருடம் ஆகும்
அமைதியான துறை
வேலைப்பளு குறைவு
சொந்த மாவட்டம் மற்றும் வட்ட அளவில் பணி புரியலாம்.....

கல்லூரி கல்வி துறை

இந்த பணி பெரும்பாலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் வேலை இருக்கும்
உள்ளூரில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்
பதவி உயர்வு மிகவும் குறைவு
மிகவும் அமைதியான துறை
பெண்களுக்கு மிகவும் உகந்த துறை

 தடய அறிவியல் துறை

துறை பொருத்தவரையில்  காவல்துறையின் ஒரு பகுதியாக தான் செயல்படுகிறது

ஆனால் நமக்கு இந்த துறையில் தொழில்நுட்ப பணி அல்ல
நாம் அமைச்சு பணியாள் மட்டுமே

இந்த துறைக்கு தொழில் நுட்ப தகுதி அதாவது அறிவியல் கல்வி தகுதி மூலம் TNPSC ஆட்களை தேர்வு செய்கிறது

எனவே அவருகளுக்கு தான் அங்கு பணி அதிகமாகவேயிருக்கும் 

தொழில்நுட்ப தகுதியில் உள்ளே செல்பவர்க்கு தான் பதவி உயர்வு நன்றாக இருக்கும்

நமக்கும் வேலைப்பளுயிருகும்

பதவி உயர்வு நிலைகள்

இளநிலை உதவியாளர் /தட்டச்சர்

உதவியாளர்

கண்காணிப்பாளர் நிலை

துறை பொருத்தவரையில் சென்னையில்தான் பணி

தடய அறிவியல் துறை

துறை பொருத்தவரையில் அதிகமாக சென்னையில் பணி

மதுரை கோயமுத்தூர் திருநெல்வேலி போன்ற இடங்களிலும் அலுவலங்கள் உள்ளன....

பொது நூலகத்துறை

இந்த வேலையில்லாத்துறை

முதலில் சென்னையில் தான் பணி பிறகு சொந்த மாவட்டத்தில் பணி புரியலாம்

இந்த துறை பெண்களுக்கான துறை ஏனென்றால்  அமைதியான துறை பணி தொந்தரவு இல்லாத துறை

மாவட்ட தலைநகர நூலகங்களில் மட்டுமே பணி இருக்கும்

சனி ஞாயிறு விடுமுறை தான்
இருந்தால் பணி உண்டு

மக்கள் அதிகாரம் இல்லாத துறை

பதவி உயர்வு நிலைகள்

உதவியாளர்
கண்காணிப்பாளர்

பதவி உயர்வு மற்ற துறைப்போல் குறைவு தான்

அமைதியான துறைக்கு உதாரணம்

வேற சொல்லும் அளவுக்கு இல்லை

இந்த துறையில் துறையின் கல்வி தகுதிக்கு ஏற்ப TNPSC மூலம் உள்ளே செல்பவர்க்கு தான் அதிகாரம் மற்றும் நல்ல பதவி உயர்வு உள்ளன

 கரூவூலத்துறை

இந்த துறையில் வேலைப்பளு இருக்கும்

மற்ற துறை போன்றதுதான் பதவி உயர்வு
உதவியாளர் நிலை
கண்காணிப்பாளர் நிலை

பதவி உயர்வு தற்போதைய நிலைமையில் குறைவு

B.COM முடித்தவர்கள் Account  Officer Grade போகலாம்

எப்போதாவது சனி கிழமை வேலை இருக்கும்

சொந்த மாவட்டத்தில் பணி புரிய வாய்ப்பு உண்டு

பணி தொந்தரவு இருக்காது

பெண்களுக்கு அருமையான துறை

துறை கிடைத்தால் எடுத்து கொள்ளுங்கள் மற்ற துறையைவிட 👌👌👌👌👌👌

 உயர்நீதிமன்றத்துக்கும்➖➖மாவட்ட நீதிமன்றதுக்கும் இடையேயுள்ள பணி விவரங்கள்

முதலில் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் பதவி உயர்வு இரண்டிலும் சமமான பதவி உயர்வு தான் மாற்றம் இல்லை

நீதித்துறையில் வேலை என்றால் அவ்வளவு மரியாதை இருக்கும் சமுதாயத்தில் அவ்வளவு மரியாதை தான்

இரண்டிலும் சம வேலைப்பளுதன் இருக்கும்

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இரவு உண்டு வாரத்தில் குறிப்பிட்ட தினங்கள் மட்டும் இரவு 1மணி வரை வேலை
இது மாவட்ட நீதிமன்றத்துக்கு பொருந்தாது

இரண்டிலும் அடுத்தடுத்த பதவி உயர்வு நிலைகள்


1.உதவியாளர் நிலை வர 4 வருடம் ஆகும்

2.உதவி பிரிவு அலுவலர் நிவை வர 5-6 வருடங்கள் ஆகும்

இரண்டுக்கும் பொதுவான வித்தியாசம் என்னவென்றால் உயர்நீதிமன்றத்தில் அமைச்சு பணியாளுக்குகும் நீதிபதிக்கும் சம்பந்தம் இல்லை அமைச்சு பணியாள் தவறு செய்தாள் பதிவாளரிடம் தான் போய் நிற்க வேண்டும்
மற்றும் நீதிபதி கீழ் தட்டச்சு செய்யும் பணியும் கிடையாது

ஆனால் மாவட்ட நிதீமன்றத்தில் நீங்கள் தவறு செய்தால் நீதிபதி ஐயாவிடம் தான் செல்ல வேண்டும் மற்றும் நீதிபதியின் கீழ் இருந்து தட்டச்சு செய்யும் வேலையும் கடுமையான பணி

குறிப்பு : நீதிதுறையில் பணி புரிபவர்கள் தமிழக அமைச்சு பணியாளர்கள் அல்ல
நீங்கள் நீதிதுறை அமைச்சு பணியாளர்கள்.....

மற்றப்படி நீதிதுறை ஒரு அருமையான பணி வேலைப்பளுதான் இருக்கும் தவிர 👌👌👌👌

 வரைவாளர் துறை

இந்த வருவாய்துறையின் ஒரு பிரிவு தான்

இது அவ்வளவு மரியாதையான வேலை

வேலைப்பளு உள்ள துறை

சனி ஞாயிறு விடுமுறை தான்

வேலை இருந்தால் சனி உண்டு

மற்றப்படி அடுத்தகட்ட பதவி உயர்வு Interview post level
Senior வரைவாளர்

இந்த துறையில் தற்போது அனைத்து பணிகளும் முடிவுபெற்றன என்று சொல்கிறார்கள் அதாவது நீங்கள் இந்த பணியை தேர்வு செய்தால் 3 வருடம் கழித்து உங்களை நில அளவர் துறையில் சேர்த்து விடுவார்கள் ந

பிறகு நில அளவர் பிரிவில் Seniority ல் கடைசியாக சேர்க்கப்படுவீர்

துறையில் தற்போது உள்ள நிலைமை

எனவே தீர விசாரித்து எடுப்பது நலம்....

நிலம் மற்றும் பதிவேடுகள் துறை

இந்த துறை பொருத்தவரையில் வேலைப்பளு குகறைவு அலுவகத்தில் எப்போதும் சும்மா இருப்பது போன்றுதான் இருக்கும்
ஆனால் இந்த துறை மாவட்டத்திற்கு ஒரு  அலுவலகம் தான்
மிகவும் சிறிய துறை தான்

இந்த துறையில் பதவி உயர்வு உதவியாளர் நிலை விரைவில் 4 வருடத்தில் வந்துவிடும்

அடுத்த நிலை கண்காணிப்பாளர் நிலை வர 20 வருடம் ஆகலாம்
சில வரமால் கூட போகலாம் ஏனென்றால் இந்த துறையில் அனைவரும் இளைஞர்கள் தான் உள்ளனர்

இந்த துறையின் கட்டுபாட்டில் தான்
வரைவாளர்கள்
நில அளவர்கள்

பணி புரிகிறார்கள்

பெண்கைளுக்கு ஏற்ற துறை பணி தொந்தரவு இருக்காது

சனி ஞாயிறு விடுமுறை

50 வருடத்துக்கு முன்பு உள்ள நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளது என்பது இந்த துறையில் தான் உள்ளன பணி

Land Reforms Department

இந்த துறையின் பணி சென்னையில் தான் பணி ஓய்வு பெறும் வரை
இந்த துறை வருவாய் துறையின் ஒரு பிரிவு தான்
இந்த துறை போன்றதுதான்

Land and settlement Department
மாற்றம் இல்லை
பதவி உயர்வு நிலைகள்

அடுத்த நகர்வு
உதவியாளர்
கண்காணிப்பாளர்

வேலைப்பளு ரொம்ப அதிகம் இருக்கும்

சனி கிழமையும் வேலை உண்டு

சென்னை காஞ்சிபுரம் போன்றவர்களுக்கு இந்த துறை பொருந்தும்

 டவுண் பஞ்சாயத்து துறை

அதிகமான வேலைப்பளு உள்ள துறை

சனி கிழமையும் வேலை உண்டு

பஞ்சாயத்து என்றாலே வேலை தான் அதுவும் டவுண் பஞ்சாயத்து னா ரொம்ப வேலை

மற்ற துறைபோல் இல்லை பதவி உயர்வில்
அடுத்த நிலை

செயல் அலுவலர் நிலை வர 8-13 வருடங்கள் ஆகும்

ஆனால் அந்த பதவியின் சம்பளம் குரூப் 4 சம்பளம் தான் இதான் கொடுமை
ஆனால் அதிகாரம் நிறையவேயிருக்கும்

அமைதியில்லாத துறை என்றே சொல்லலாம்.....

 மறுசீரமைப்பு துறை(Rehdabilitation)

இந்த துறை பொருத்தவரையில் வருவாய்துறையின் கீழ் இயங்கும் ஒரு பிரிவு தான் இந்த துறை ஆனால் சென்னையில் மட்டும் தான் பணி ஓய்வு பெறும் வரை

பேரிடர் காலங்களில் இந்த துறையின் பணி அளவிட முடியாத பணி
முழு வீச்சில் செயல்பட வேண்டியயிருக்கும்

வேலைப்பளு அதிகமாகவேயிருக்கும்

சென்னை காஞ்சிபுரம் போன்றவர்களுக்கு சரி இந்த துறை

பதவி உயர்வு நிலைகள்

1.இளநிலை உதவியாளர் /தட்டச்சர்

2. உதவியாளர்

3. கண்காணிப்பாளர்

4.தனி பிரிவு அலுவலர்

இந்த நிலைகள் மட்டுமே

மாவட்ட அளவில் வருவாய்துறையில் பேரிடர்க்கு என்றே ஒரு பிரிவு உள்ளன அதன் பதவி நிலைகள்

இளநிலை உதவியாளர்/தட்டச்சர்

உதவியாளர்

சிறப்பு வருவாய் ஆய்வாளர்

சிறப்பு வட்டாச்சியர்

மழைகாலங்களில் பேரிடர்க்கு உருவாக்கப்பட்டது

 Stationary And Printing Department

சென்னை மதுரை திருச்சி போன்ற இடங்களில் மட்டும் தான் பணி புரிய முடியும்

ஆனால் அமைதியான துறை

பெண்களுக்கு உகந்த துறை

அமைதியான துறை தான் வேலைப்பளு இல்லாத துறை

சனி ஞாயிறு விடுமுறை தான்

பணி தொந்தரவு இருக்காது

பதவி உயர்வு காலதாமதம் ஆகும்

அடுத்தடுத்த நிலைகள் பதவி உயர்வில்

இளநிலை உதவியாளர் /தட்டச்சர்

உதவியாளர்

கண்காணிப்பாளர்

இன்னும் அடுத்தடுத்த இரண்டு நகர்வுகள் உள்ளன

துறையை பொருத்தவரையில்  குறிபிட்ட இடத்தில் தான் பணி புரிய முடியும்.....

Bill collector Department

இந்த துறை பொருத்தவரையில்  டவுண் பஞ்சாயத்துல் தான் பணி அவர்களுக்கு உள்ளே ஒரு பிரிவு இருக்கும்

அவர்களுக்கு பணி செய்யும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியினை கொடுத்து வரி வசூலிக்கும் பணி இருக்கும்

VAO,FILLED SURVYER போன்ற துறை போல் களப்பணி தான்ஆற்ற வேண்டும்

இதுவும் அதே மாதிரி தான் உங்களுக்கும் ஒரு உதவியாளர் உண்டு

வேலைப்பளு இருக்கும் சனிகிழமை வேலை இருக்கும்

அடுத்த பதவி உயர்வு பார்த்தால் செயல் அலுவலர் நிலை வர குறைந்நபட்சம் 10 - முதல் 14 வருடங்கள் ஆகும்
அடுத்த நிலை வர கண்காணிப்பாளர் நிலை என்று சொல்கிறார்கள்

இந்த பணியும் டவுண் பஞ்சாயத்து ல் உள்ள இளநிலை உதவியாளர் நிலைக்கும் அடுத்த பதவி உயர்வு செயல் அலுவலர் தான்

இளநிலை உதவியாளர்க்கு அலுவலக பணி

வரி வசூலிப்பவர்க்கு களப்பணி அவ்வளவு தான்
வித்தியாசம்

பெரும்பாலோனானர் வரி வசூலிப்பவர் நிலையே பணி ஓய்வு பெறும் நிலையில் இருந்து விடுகின்றர்
அடுத்த பதவி உயர்வு வேண்டாம் என்று

துறை பொருத்தவரையில் வேலைப்பளு அதிகமே......

1. பொதுநலம் மற்றும் தடுப்பு துறை மற்றும்

2. மருத்துவம் ஊரக சுகாத்தார துறை

இதில் முதல் உள்ள துறை கிராமங்களிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப்படுவீர்கள்

இரண்டாவதாக உள்ள துறை மாவட்ட தலைநகரங்களில் உள்ள தலைமை மருத்துவ மனைகளில் பணியமர்த்தப்படுவீர்கள்

இரண்டிலும் பதவி உயர்வு என்பது காலதாமதம் ஆகும்

இந்த துறையை பொருத்தவரையில்   உங்களுக்கு தலைமை ஒரு மருத்துவர் தான்

வேலைப்பளு கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும்

பதவி உயர்வு நிலைகள்

1. இளநிலை உதவியாளர் /தட்டச்சர்

2. உதவியாளர்

3.கண்காணிப்பாளர்

உதவியாளர் நிலை வர 4-6 வருடங்கள் ஆகலாம்

அமைதியான துறை தான்

சொந்த மாவட்டத்தில் பணி புரிய வாய்ப்புண்டு

பெண்களுக்கு ஏற்ற துறை 

ஆதி திராடவிடர்கள் நலத்துறை  மற்றும்

பிற்படுத்தப்பட்டோர் துறை

இந்த இரண்டு துறைக்கும் பொதுவான வித்தியாசம் ஏதும் இல்லை

ஆனால் கொஞ்சம் வேலைப்பளு உள்ள துறை

மாவட்டத்திற்கு ஒரு  அலுவலகம் இருப்பதால் தாங்கள் சொந்த மாவட்டத்தில் பணி புரிய வாய்ப்புண்டு

பெண்களுக்கு மிகவும் உகந்த துறை

பணி தொந்தரவு இருக்காது

பதவி உயர்வு பொருத்தவரையில் மற்றதுறைப்போல் தான் காலதாமதம் ஆகும்

பதவி உயர்வு நிலைகள்

1. இளநிலை உதவியாளர்

2. உதவியாளர்

3.கண்காணிப்பாளர்

4. அடுத்தும் 1 கட்ட பதவி உயர்வு உண்டு என சொல்கிறார்கள்

அமைதியான துறைக்கு எடுத்துக்காட்டு இவை

சனி ஞாயிறு விடுமுறை தான்

 Information and public relation Department

இது மற்றத்துறை போல் இல்லை வேலை பளு அதிகம் அதிகம் ்அதிகம் அதிகம்

பதவி உயர்வு நிலைகள்

1. உதவியாளர் நிலை வர 4 வருடங்கள் ஆகும்

2. அதற்கு பிறகு 2 வழிகளில் பதவி உயர்வு பெறலாம்
1.Assistant public information officer
2. Public relations officer

இதில் எதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்

முதலில் சென்னையில் தான் பணி

பெண்களுக்கு இந்த துறை செட் ஆகாது வேலை அதிகமாக இருக்கும்

சென்னையில் வாரத்தில் 5 நாட்கள் தான் வேலை இருக்கும்

ஆனால் சொந்த மாவட்டதில் பணி மாறுதல் பெற்றால் வாரத்தில் 7 நாட்களும் வேலை இருக்கும் விடுமுறையே எதிர்பார்க்க முடியாத துறை

இதில் என்ன பணி என்றால்
அரசியல் கட்சி தலைவர்களின் மாவட்டத்தில் எங்கேயாவது பபொது கூட்டம்நடை பெற்றால் அந்த உரையை நாம் தொகுத்து மீடியா துறைக்கு அனுப்ப வேண்டும்

இதான் பணி

ஊரக வளர்ச்சி துறை( Rural Development Department)

இந்த துறை பொருத்தவரையில் சென்னையில் தான் பணி
பணி ஓய்வு பெறும் வரை....

பஞ்சாயத்து துறையில் உள்ள பதவி உயர்வு நிலைகள் இதிலும் தொடரும்

இரண்டும் ஒரே துறை தான்

சென்னையில் இருப்பது ஊரக வளர்ச்சி துறையின் தலைமையிடம் அங்கு தான் பணி...

வேலைப்பளு அதிகமாகவே இருக்கும்

சனி கிழமையும் வேலை உண்டு...

புதன், 12 பிப்ரவரி, 2020

நாகர்கோவிலில் பிப்ரவரி 16ஆம் தேதி இந்து தமிழ் திசை மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் "ஆளப்ப் பிறந்தோம் " யுபிஎஸ்சி , டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி.

நாகர்கோவிலில் பிப்ரவரி 16ஆம் தேதி  இந்து தமிழ் திசை மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் "ஆளப்ப் பிறந்தோம் " யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி.
அனுமதி இலவசம்.நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படும், அனைவரும் கலந்து கொண்டு  
பயன்பெறுங்கள்...



உலக வானொலி தினம் பிப்ரவரி 13


உலக வானொலி தினம் பிப்ரவரி 13

அறிமுகம்

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி, உலக வானொலி தினமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

ஒரு தரமான வானொலி சேவை என்பது சிறந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவேண்டும். பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தகவல்கள் போன்றவற்றினை வழங்குவதற்கு அப்பால், சாதாரண சமூகத்தில் மற்றும் தங்களது பிரதேசத்தில் இடம்பெறும் முக்கிய பிரச்சனைகளினையும் சிக்கல்களினையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பினை உருவாக்கும் வகையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவேண்டும்.

யுனெஸ்கோ வழங்கும் வானொலி தினச்செய்தி
இன்று நாம் எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்கின்றோம் மற்றும் தகவல்களை அணுகுகின்றோம் என்பது தொடர்பான தகவல் புரட்சியின் மத்தியில் வாழ்கின்றோம். இதுவரை இந்த ஆழமான மாற்றத்தின் மத்தியில் வானொலிகளின் ஈடுபாடும் முக்கியத்துவமும் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக உள்ளது.

கொந்தளிப்பு மிக்க நேரங்களில் முக்கிய இயங்குதளமாக செயற்பட்டு சமூகங்களை ஒன்று திரட்டுகின்றது. வேலைக்குச் செல்லும் வழியிலும், வீடுகளிலும், அலுவலகங்களிலும் அமைதியான நேரங்களிலும், மோதல் மற்றும் அவசர நிலைமைகளிலும் வானொலிகளானவை தகவல் மற்றும் அறிவுக்கான உயிர்நாடியாக விளங்குகின்றது. தலைமுறைகளினையும் கலாச்சாரங்களினையும் அலசி ஆராய்வதுடன் மனித இனத்தின் சொத்தான பன்முகத்தன்மையினை ஊக்குவிக்கவும், நம்மை உலகத்துடன் இணைத்துக் கொள்ளவும் வானொலி முக்கிய பங்காற்றுகின்றது.

அனைத்து இடங்களிலும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக குரல் கொடுக்கின்றது. இது நேயர்களது கருத்துக்களுக்கு செவிமடுப்பதுடன் அவர்களது தேவைகளுக்கும் பதிலளிக்கின்றது. மனித உரிமைகளினைப் பாதுகாப்பதற்கான சக்தியாக விளங்குவதோடு கௌரவம் மிகுந்ததும் அனைத்து சமூகங்களும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வினை ஏற்படுத்தும் சக்திவாய்ந்ததொரு ஊடகமாகவும் வானொலிகள் செயற்படுகின்றன.

நிலைத்திரு அபிவிருத்தி இலக்குகளினை 2030 இல் அடைவதற்கான நிகழ்ச்சி நிரலினை அடைவதில் வானொலிகளது முக்கியத்துவம் பற்றி நோக்கின், அடிப்படை சுதந்திரங்களை முன்னெடுத்துச் செல்லுதல், சிறந்த ஆளுகை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான அவசியமான தகவல்களை மக்கள் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவித்தல் ஆழ்ந்த உட்படுத்தல் மற்றும் உரையாடல், புதிய சவால்களை கையாளுதல், காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளுதல் பாரபட்சங்களை எதிர்கொள்ளுதல் போன்றவற்றிற்கு வானொலிகள் இலகுவில் மக்களை அணுகக்கூடியதாகவும் மேலே கூறப்பட்டவை சார்ந்த உரையாடல்களை வலுத்தப்படுத்தக்கூடிய ஒரு ஊடகமாக காணப்படுகின்றது.

இந்த வானொலி தினமானது ஓலிபரப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், வானொலி நேயர்கள் போன்ற அனைத்து தரப்பினருடைய வானொலிக்கான அர்ப்பணிப்புக்களையும் வேண்டி நிற்கின்றது. அனைவரும் இணைந்து வானொலியினை சக்திமிக்கதொன்றாக வளர்த்தெடுக்க வேண்டும். வானொலி நேயர்களது கிளப் மற்றும் மன்றங்கள் இணைந்து அவர்களிடம் உள்ள ஒலிபரப்பாக்கும் அதிகாரம் மற்றும் அவர்கள் சொல்வதனை ஏனையோர் கேட்கும் தன்மை ஆகியவற்றினை பயன்படுத்தி சமூகத்தில் காணப்படும் பிரச்சனைகளுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்ட வேண்டும். நேயர்களை கவரக்கூடியதான கொள்கைகள் வானொலி ஒலிபரப்பின் இதயமாக விளங்குகின்றது. எண்ணங்கள் உண்மைக்கு சவால்விடும் போது நம்பகத் தன்மையான தகவல் மற்றும் அறிவு மிகவும் முக்கியமானது. சாதாரணமாக சமூகத்தில் இடம்பெறும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு வானொலி ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்கமுடியும் மற்றும் மனிதஉரிமைகள், பாலின சமத்துவம், சமாதானம் போன்றவற்றினை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

தமிழ்நாடு அரசின் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்


Chithirai New year award
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்
தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் தைத்திங்கள் 2-ஆம் நாளான திருவள்ளுவர் திருநாளில் நிகழ்த்தப்பெற்று வருகிறது. இவ்விழாவில், தமிழின் பெருமையை நிலைநிறுத்துவதோடு தமிழன்னைக்குப் பெருமை சேர்த்திடும் வகையில் தம் வாழ்நாளெல்லாம் தமிழ்ப்பணியாற்றி வரும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் பின்வரும் விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

1. தமிழ்த்தாய் விருது (2012 முதல்) தமிழ் அமைப்புகளுக்கு வழங்கப்படும் விருது



தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காப்பதற்காகப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மொழி இலக்கியம், கலை ஆகியப் பணிகளை மேற்கொண்டு வரும் சிறந்த அமைப்புக்கு “”””தமிழ்த்தாய் விருது”” வழங்குதல். (விருதுத்தொகை ரூ.5.00 இலட்சம், தகுதியுரை)

2. கபிலர் விருது (2012 முதல்)



பழந்தமிழர், தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும் தமிழுக்கு அணி சேர்க்கும் வகையிலும் மரபுச் செய்யுள் / கவிதைப் படைப்புகளை புனைந்து வழங்கும் தமிழறிஞருக்கு வழங்குதல்.
(விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

3. உ.வே.சா விருது (2012 முதல்)



கல்வெட்டுகள், அகழாய்வு, ஓலைச்சுவடிகள் அரிய கையெழுத்துப்படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் காணக்கிடைத்து வெளிக்கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் பதிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் அறிஞருக்கு வழங்குதல்.
(விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

4. கம்பர் விருது (2013 முதல்)



தமிழ் இலக்கிய உலகில் சிறந்து விளங்கிய கம்பரைப் பற்றித் திறனாய்வு செய்வோர், கம்பர் படைப்புகளை ஆய்வு செய்வோர், கவிபாடும் ஆற்றல் கதை நிகழ்ச்சி பாத்திரப்படைப்பு மற்றும் அவரது புகழ் பரப்பும் வகையில் கவிதை நூல்களை படைப்போர் மற்றும் பிற வகையில் தமிழ்த் தொண்டு செய்து வரும் தமிழறிஞருக்கு வழங்குதல்.
(விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

5.சொல்லின் செல்வர் விருது (2013 முதல்)



சிறந்த இலக்கியப் பேச்சாளராகவும், தமிழர் நாகரீகம் பண்பாட்டை மக்கள் மனதில் சொற்பொழிவு வழி விதைப்பவராகவும் பிற வகையில் தமிழ்த் தொண்டு செய்வோராகவும் உள்ளவருக்கு வழங்குதல்
(விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

6. உமறுப் புலவர் விருது (2014 முதல்)



இஸ்லாமிய தமிழ் காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிவரும் தமிழறிஞருக்கு வழங்குதல்
(விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

7.ஜி.யு.போப் விருது (2014 முதல்)



அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கு வழங்குதல்
(விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

8. இளங்கோவடிகள் விருது (2015 முதல்)



இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்பி வருபவருக்கோ வழங்குதல் (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

9. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது (2013 முதல்)



சிறந்த தமிழ் மென்பொருளுக்கு வழங்கப்படும் விருது (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை) சிறந்த தமிழ் மென்பொருள் தயாரித்த நிறுவனம்/தயாரித்தவருக்கு.

10. அம்மா இலக்கிய விருது (2015 முதல்)



மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்மா இலக்கிய விருது என்ற புதிய விருது வழங்கப்படும். (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

11. மொழி பெயர்ப்பாளர் விருது (2015 முதல்)



பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்”” என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தரமான பிறமொழிப் படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்படும். (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தகுதியுரை, பொன்னாடை, தங்கப்பதக்கம் இல்லை)

12. சிங்காரவேலர் விருது (2018 முதல்)



தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் சிங்காரவேலர் விருது என்ற புதிய விருது வழங்கப்படும். (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

13. அயோத்திதாசப்பண்டிதர் விருது (2019 முதல்)



சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் ஆகிவற்றில் தனக்கென தனிமுத்திரைப் பதித்த தகைமையாளர் தமிழறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் அவர்தம் இலட்சிய நோக்கோடு செயன்மையாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அயோத்திதாசப் பண்டிதர் விருது வழங்கப்படும்.  (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை,   பொன்னாடை)

14. மறைமலையடிகளார் விருது (2019 முதல்)



தனித் தமிழில் படைப்புகள் அருகிவரும் நிலையில் தனித் தமிழில் படைப்புகளை உருவாக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் மறைமலையடிகளார் விருது என்ற புதிய விருது வழங்கப்படும். (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

15. சி.பா. ஆதித்தனார் விருது (2020 முதல்)



தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றியும், பிறமொழிக் கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டுவரும் நாளிதழ், வாரஇதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் இதழைத் தெரிவு செய்து “”””தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்”” அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் நாளிதழ் விருது, வார இதழ் விருது, திங்களிதழ் விருது என மூன்று விருதுகள் வழங்கப்படும். இவ்விருது ஒவ்வொன்றிற்கும் விருதுத்தொகையாக ரூபாய் 1.00 இலட்சமும், கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.

16. அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது (2020 முதல்)



சமரச நெறிகளால் ஆன்மீகத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்குதல்.விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும்.

17. காரைக்கால் அம்மையார் விருது (2020 முதல்)



காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றி வரும் மகளிர் ஒருவருக்கு வழங்குதல்.விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும்.

18. தமிழ்ச்செம்மல் விருது (2015 முதல்)



தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களுக்கு அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் வழங்குதல். (விருதுத் தொகை ரூ. 25,000/- மற்றும் தகுதியுரை வழங்கப்படும். மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 பேருக்கு வழங்கப்படும்).

நன்றி தமிழ்த்துறை 

புதன், 5 பிப்ரவரி, 2020

முதல் பிரதமர்... நேரு கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன?

முதல் பிரதமர்... நேரு கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன?


இந்தியாவின் முதல் பிரதமர்..!!
கல்வி திட்டங்கள் :

🌹நேரு, 'இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது" என்பதை நன்கு உணர்ந்தார்.

🌹அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்,

🌹இந்திய தொழில்நுட்ப கழகங்கள்,

🌹இந்திய மேலாண்மை கழகங்கள்,

🌹தேசிய தொழில்நுட்ப கழகங்கள் போன்ற அரசாங்க உயர்கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார்.

🌹இலவச கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளை கட்டினார்.

🌹சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார்.

🌹தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.

நேருவின் வெளியுறவு கொள்கைகள் :

👉நேரு அவர்கள், பல பிரச்சனைகளை திறம்பட சமாளித்து தீர்த்ததால், உலக பார்வையில் 'சமாதானப்படுத்துவதில் மன்னர்" என்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளராகவும் போற்றப்பட்டார்.

👉நேரு இந்திய வெளியுறவு கொள்கையின் சிற்பி எனப் போற்றப்படுகிறார். இந்திய மற்றும் சீன உறவை பேணுவதற்காகவும், அண்டை நாடுகளோடு நட்புறவை நிலை நிறுத்துவதற்காகவும் பஞ்சசீல கொள்கையை வெளியிட்டார்.

பஞ்சசீல கொள்கை :

👉நாடுகள் ஒன்றுக்கொன்று பிரதேச ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மதித்தல்

👉ஆக்கிரமிப்பை தவிர்த்தல்

👉பிற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல்

👉சமத்துவம்

👉பரஸ்பர உதவி மற்றும் சமாதான சகவாழ்வு ஆகியவையே பஞ்சசீல கொள்கைகளாகும்.

அணிசேரா இயக்கம் :

🌹அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே இரண்டாம் உலகப் போருக்கு பின் பனிப்போர் நிலவிய நிலையில் நேரு இரு நாடுகளோடும் சேராமல் மூன்றாம் உலக நாடுகள் தனி அமைப்பாக செயல்படுவதற்காக அணிசேரா இயக்கத்தை (ழேn-யடபைnஅநவெ ஆழஎநஅநவெ)தொடங்கினார்.

🌹முன்னாள் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பில் இந்தியா தொடர்வதற்கு நேரு வழிவகை செய்தார்.

🌹நேரு பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளால் பதினொரு முறை நோபல் (அமைதி) பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

🌹விண்வெளி மற்றும் அணுசக்தி துறையில் முன்னேற்றத்திற்கான விதைகள் அவர் காலத்திலே போடப்பட்டன. அயல்நாட்டில் இருந்த இந்திய விஞ்ஞானிகள் பலர் நேருவின் வேண்டுகோளால் இந்தியாவில் சேவை செய்ய வந்து சேர்ந்தார்கள்.