திங்கள், 11 ஜூன், 2018

இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் கலெக்டர்


இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் கலெக்டர்

தனது இரண்டு வயதில் பார்வையை இழந்தபோதும், தனது விடாமுயற்சியாலும், மன உறுதியாலும் போராடி படித்து, இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் கலெக்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த பிரஞ்ஜாலின்.

கண்பார்வையற்ற ஒருவருக்கு அப்பணியை ஒதுக்க இயலாது என ரயில்வே கைவிரிக்க, மீண்டும் ஐஏஎஸ் தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்கினார் பிரஞ்ஜாலின். தீவிர முயற்சியின் பலனாக 2017ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் 124 இடத்தைப் பிடித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது கேரள மாநிலம் எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார் பிரஞ்ஜாலின்.

தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் தான் அமர்வதற்கு முன்பாக, ‘தனக்கு ஊக்கமும், தைரியமும் அளித்து, தன்னை இந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்த்திய தனது தாயை கௌரவப் படுத்த’ எண்ணினார் பிரஞ்சாலின்.

அதன்படி, தனது பயிற்சி கலெக்டர் இருக்கையில் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் தனது அம்மாவை அமர வைத்து, அதனை தனது அகக்கண்ணால் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.

தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியும் இருந்தால், உடல் குறைபாடுகள் ஒன்றும் தடையாக இருக்காது என்பதை தனது வெற்றி மூலம் உலகிற்கு நிரூபித்துக்காட்டிய பிரஞ்ஜாலினுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

நேரடி கலெக்டர் தேர்வில் இந்தியாவிலேயே கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கலெக்டராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக