புதன், 28 நவம்பர், 2018

1 . கீழ் உள்ளவையில் நீண்ட ஆயுளைக் கொண்ட விலங்கு எது

1 . கீழ் உள்ளவையில் நீண்ட ஆயுளைக் கொண்ட விலங்கு எது?

முதலை 

விளக்கம்::
நீண்ட ஆயுளைக் கொண்ட விலங்கு முதலை தான். மூக்கில் பற்களைக் கொண்ட உயிரினம் முதலை மட்டுமே.முதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது.

 இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது. ஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு படிவளர்ச்சி அடைந்த உடலமைப்பைப் பெற்றுள்ளன.

 மற்ற ஊர்வனவற்றைப் போல் அல்லாமல் இவை நான்கு இதய அறைகள், டயாஃப்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. முதலைகள் நீரின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக இவை நீந்தையில் கால்களை மடித்துக் கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன.

 .2 . தலையை உயர்த்தி வானத்தைக் காண முடியாத விலங்கு எது?

பன்றி

விளக்கம்::
தலையை உயர்த்தி வானத்தைக் காண முடியாத விலங்கு பன்றி மட்டுமே. பன்றி இரட்டைப்படைக் குளம்பி வரிசையில் பன்றிக் குடும்பத்தில் அடங்கும் ஒரு பேரினம் ஆகும். பன்றிப் பேரினத்தில் கொல்லைப்படுத்தப்பட்ட பன்றி (Sus domestica) காட்டுப் பன்றி (Sus scrofa) உட்பட 12 இனங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. பன்றிகள் அவற்றின் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் பல நாடுகளில் பண்ணைகளிலும் வீடுகளிலும் வளர்க்கப் படுகின்றன.

 இவற்றின் முடி பொதுவாக தூரிகை செய்யப் பயன்படுகின்றது. கிட்டத்தட்ட 2 பில்லியன் எண்ணிகையைக் கொண்டுள்ள கொல்லைப்படுத்தப்பட்ட பன்றிகளே பன்றி இனங்களில் அதிக எண்ணிகையானவையாகும். பன்றிகள் அனைத்துண்ணிகள் ஆகும்.

 பன்றிகள் புத்திகூர்மையுள்ள சமூக விலங்குகள் ஆகும்.பன்றிகளுக்கு தகுந்த வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால் அவை நீரில் இருப்பதன் மூலமோ சேற்றைப் பூசிக்கொள்வதன் மூலமோ தங்கள் உடம்பைக் குளிர்வித்துக் கொள்கின்றன. மேலும், இந்த சேற்றுப் பூச்சானது சூரிய வெப்பம் மற்றும் பூச்சிகளிடம் இருந்து பன்றிகளை காத்துக் கொள்ளவும் உதவுகிறது.

3 . தூங்கிக் கொண்டே நீந்தக் கூடிய பறவை எது?

வாத்து

விளக்கம்::
வாத்து (Duck) பறவை இனத்தை சேர்ந்ததாகும். பொதுவாக வாத்துக்கள் அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. வாத்துக்கள் நீரில் நீந்த வல்லவை. குறிப்பாக ஆசிய மக்கள் வாத்துக்களை உண்கிறார்கள்.

 பறவைகளிலேயே மிகவும் முட்டாள் தனமான பறவையாக வாத்துக்கள் சொல்லப்படுவதுண்டு. இவைகள் அசமந்தங்களின் அடையாளம். பல சமயங்களில் உறங்கிக் கொண்டே நீந்தும்.

 அதனால் எளிதில் இவைகள் மற்ற எதிர் விலங்குகளால் தாக்கப்படும்.

4 . ‘உயிரினங்களின் தோற்றம்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

சார்லஸ் டார்வின்

விளக்கம்::
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.  இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல்.

 இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.

 .5 . பொதுவாக அசை போடும் விலங்குகளின் இரைப்பையில் எத்தனை பகுதிகள் காணப்படுவதுண்டு?

நான்கு

விளக்கம்::
பொதுவாக அசை போடும் விலங்குகளின் இரைப்பையில் நான்கு பகுதிகள் காணப்படுவதுண்டு. இரைப்பை (Stomach) என்பது முதுகெலும்பிகள், பூச்சிகள், மெல்லுடலிகள், முட்தோலிகள் உள்ளிட்ட விலங்குகளின் சமிபாட்டுத் தொகுதியில் மிக முக்கியமான சமிபாட்டை நிகழ்த்தும் ஓர் அகன்ற அறையாகும். இது களம் (Esophagus), சிறுகுடல் ஆகிய பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. உதரவிதானத்திற்குக் (Thoracic diaphragm) கீழாக உள்ளது.

 இதன் வடிவமும் அளவும் உள்ளிருக்கும் உணவின் அளவினைப் பொறுத்து அமையும். உணவு உள்நுழையும் வேளையில் அதிகபட்சமாக 1.5 லிட்டர் அளவிற்குப் பெரிதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக