திங்கள், 29 ஜூலை, 2019

மருத்துவமனை தினம் ஜூலை 30.

மருத்துவமனை தினம் ஜூலை 30.

முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினமான இன்று, அரசு மருத்துவ மனைகளில் ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்படுகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினமான ஜூலை 30-ம் தேதி மருத்துவமனை தினமாக கொண்டாடப்பட உள்ளது. புதுக் கோட்டை மாவட்டத்தில் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி, சென்னை மருத்துவக் கல்லூரியில் 1907-ம் ஆண்டு படித்தார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனை தொடங்க காரணமாக இருந்துள்ளார். பல்வேறு சமூகப் பணிகளை செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக