செவ்வாய், 31 மார்ச், 2020

திமிங்கலம் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க

திமிங்கலம் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க


உலகில் இருக்கக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியது திமிங்கலம் மட்டுமே. இவை ஒரு பாலூட்டி இனத்தைச் சார்ந்தவை. 100 முதல் 150 டன் எடை வரை திமிங்கலங்கள் உள்ளன.
கடலின் ஆழத்திற்கு சென்று கூட இறையை பிடிப்பதில் வல்லமை கொண்டது இந்த திமிங்கலம். இவை பொதுவாக சாதுவான வை.நுரையீரல் மூலம் சுவாசிக்கும் இது நீர்ப்பரப்பின் மேல் வந்து ஒரு முறை காற்றை சுவாசித்தால் 90 சதவிகித ஆக்ஸிஜனை பெறுகிறது.
இதன் மூலம் கடலின் ஆழம் வரை இதனால் செல்ல முடிகிறது. மனிதன் ஒரு முறை காற்றை சுவாசித்தால் 15 சதவிகித ஆக்சிசன் பெறுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. குளிரை தாங்குவதற்காக எதுவாக அதன் தோள்கள் அமைக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்கத்தின் போது ஒரு வகை சமிக்கைகளை எழுப்புகின்றது. இது தண்ணீரில் பல கிலோ மீட்டர் வரை கேட்கிறது இதன் மூலம் தன் துணையிடம் இனப்பெருக்கம் செய்கின்றன. 70 ஆண்டுகள் வரை ஒரு திமிங்கலம் ஆனது வாழ்கிறது. அந்த காலகட்டங்களில் திமிங்கலத்தின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் விளக்கு ஏற்றுவார்கள். திமிங்கலத்தின் தோலுக்காகவும் அதிக அளவு வேட்டையாடப் படுகிறது. இதனால் திமிங்கலம் ஆனது அழிக்கப்பட்டு வருகிறது. இரண்டு வருடத்திற்கு அல்லது நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டிகள் போடுகிறது. இந்த குட்டிகள் ஒருமுறை பால் அருந்தினால் 200 லிட்டர் வரை அருந்தவும் செய்கிறது.
மீன்களுக்கும் திமிங்கலத்தின் இடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.இவை நுரையீரல் வழியாக சுவாசிக்கின்றன. மீன்கள் செதில்கள் வழியாக சுவாசிக்கின்றன.ப்ளூ வால் என்று சொல்லக்கூடிய நீலத்திமிங்கலம் விளையாட்டு இளைஞர்களையும் சிறுவர்களையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக