செவ்வாய், 31 மார்ச், 2020

பூமியை பற்றிய சில அரிய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்

பூமியை பற்றிய சில அரிய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்


நமக்கு தெரிந்து பூமியைப் பற்றி என்னவென்றால், பூமியில் நாம் வாழ்கிறோம் அதுமட்டும்தான். இந்த பூமியில் நம்மை போன்றுதான் விலங்குகள், தாவரங்கள், மரங்கள் மற்றும் மற்ற உயிரினங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. பூமியானது சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் ஒன்றாகும். பெரிய கோளுமாகும். பூமியின் சுற்றளவு சுமார்40,000 கி.மீ இருக்கும். இதன் ஆரமானது சுமார் 6350 கி.மீ இருக்கும். 
இந்த பூமி தன்னை தானே சுற்றிக் கொண்டிருக்கும். இவ்வாறு இது தன்னை தானே சுற்றி வர இது எடுத்து கொள்ளும் நேரமானது 23மணி நேரம் 56 நிமிடம் என கணக்கிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் ஒரு மணி நேரத்தில் சுமார் 1000 மைல் வேகத்தில் சுழலும். அவ்வாறு படுவேகமாக சுற்றும் பூமியில் எந்தவித அதிர்வுகளும் இல்லாமல் நாம் வாழ்வது ஒரு விந்தையான விஷயம் தான்.
பூமியில் இருக்கும் சமநிலை இல்லாத வானிலையால் பூமி பாதிப்பு ஏற்படுகிறது. புயல், சூறாவளி, வெள்ளம் ஆகியவற்றால். இது போக சுற்றுப்புற சூழலை நமது பங்கிற்கு வேறு தூய்மயை கெடுக்கிறோம். நம்மை வாழவைக்கும் இந்த பூமிக்கு நாம் செய்யும் கைம்மாறு நம்மால் இயன்ற வரை பூமியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக