புதன், 5 ஏப்ரல், 2017

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

1. திராவிடர்களின் புனிதமான மொழி 'தமிழ்" எனக் கூறியவர்? - சி.ஆர்.ரெட்டி

2. மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கண்டறியப்பட்ட மொழி திராவிட மொழி என முதன் முதலில் கூறியவர்? - ஹீராஸ்பாதிரியார்

3. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கும் ஒரு தனி மொழிக் குடும்பத்தை சார்ந்தவை என்று முதன் முதலில் கூறியவர்? - எல்லீஸ்

4. சங்க இலக்கியத்தில் வரும் 'தொகை" (எ.கா. குறுந்தொகை) என்ற சொல்லின் அர்த்தம் என்ன? - பல புலவர்களால் பாடப்பட்டது

5. சங்க இலக்கியத்தில் கூறப்படும் 'அகுதை" எனப்படுபவன் யார்? - சிற்றரசன்

6. 'பஞ்சுரம்" என்ற பண் எந்த நிலத்தைச் சார்ந்தது? - பாலை

7. கிடுகு - என்ற தமிழ்வார்த்தையின் அர்த்தம் என்ன? - கேடயம்

8. ஏழின்கிழவன் - என சங்க இலக்கியத்தில் அழைக்கப்படுபவர் யார்? - இசைக்கலைஞர்களின் தலைவன்

9. திருக்குறளில் 'ஆர்வலர் புன்கணீர் பு சல் தரும்" என்ற அடியில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆர்வலர்" என்ற வார்த்தையின் பொருள் என்ன? - அன்புடையவர்

10. விக்கிரமசோழன் உலா - பாடியவர் யார்? - ஒட்டக்கூத்தர்

11. முள்   நன்று - எவ்வாறு புணரும்? - முண்ணன்று

12. வலசைபோதல் என்பது எதைக் குறிக்கும் :

அ) மேகங்கள் இடம் பெயர்தல்
ஆ) எறும்புகள் இடம் பெயர்தல்
இ) பறவைகள் இடம் பெயர்தல்

விடை : இ) பறவைகள் இடம் பெயர்தல்

13. சரியான அமைப்பு முறையினை கண்டுபிடி :

அ) எனக்கும் அவருக்கும் ஆயிரம் இருக்கும்
ஆ) இருக்கும் எனக்கும் ஆயிரம் அவருக்கு
இ) அவருக்கும் இருக்கும் ஆயிரம் எனக்கு

விடை : அ) எனக்கும் அவருக்கும் ஆயிரம் இருக்கும்

14. என்பணிந்த தென்கமலை ஈசனார் - இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள்?

அ) தெற்கே உள்ள திருநெல்வேலி
ஆ) தெற்கே உள்ள திருவீரட்டானம்
இ) தெற்கே உள்ள திருவாரூர்

விடை : இ) தெற்கே உள்ள திருவாரூர்

15. இளமைப் பெயர்களைப் பொருத்துக :

1. புலி - அ) கன்று
2. குதிரை - ஆ) குருளை
3. சிங்கம் - இ) பறழ்
4. மான் -

அ) 1-இ , 2- 4-அ
ஆ) 1-அ, 2-ஆ, 3- இ) 1- 3- ஆ, 4-இ
2- 4-அ

விடை : அ) 1-இ , 2- 4-அ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக