வியாழன், 30 நவம்பர், 2017

எப்போது புயல் எச்சரிக்கை கூன்டு ஏற்றப்படும், அதற்கான விளக்கம்...



எப்போது புயல் எச்சரிக்கை கூன்டு ஏற்றப்படும், அதற்கான விளக்கம்...

*1-ம் எண்* எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.

*2-ம் எண்* எச்சரிக்கை கூண்டு, புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.

*3-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

*4-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.

*5-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

*6-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

*பெரிய அபாயம்*

*7-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.

*8-ம் எண்* புயல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

*9-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் , துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.

*10-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

*11-ம் எண்* புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுவது தான் அதிகபட்ச எச்சரிக்கையாகும். இந்த எச்சரிக்கை விடப்பட்டால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என அர்த்தமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக