திங்கள், 9 ஜூலை, 2018

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு விரைவில் அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு விரைவில் அறிவிப்பு.

ஓரிரு நாளில் குரூப்-2 தேர்வு அறிவிப்பு
நகராட்சி ஆணையர் (கிரேடு-2), சார்-பதிவாளர் (கிரேடு-2), துணை வணிகவரி அதிகாரி, தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் ஏறத்தாழ 2500 காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குரூப்-2 தேர்வுக்கான கல்வித்தகுதி பட்டப் படிப்பு ஆகும். இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வைப் போன்று முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு இரு தேர்வுகளும் உண்டு. குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பல தனியார் பயிற்சி மையங்களில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக