செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

மாமன்னர் அசோகரின் கல்வெட்டுகள். பற்றிய வரலாற்றுச் செய்திகள்.


மாமன்னர் அசோகரின் கல்வெட்டுகள். பற்றிய வரலாற்றுச் செய்திகள்.

* அசோகரின் டெல்லி.மீரட் ஆகிய இடங்களிலுள்ள கல்வெட்டுகளைக் கண்டறிந்தவர்?

பாத்ரே டீஃபென் தாலர்.

* அசோகரின் கல்வெட்டுகளைப் படித்து முதன் முதலில் பொருளறிந்தவர்?

ஜேம்ஸ் பிரின்செப்.

* 1879 இல் அசோகரின் கல்வெட்டுகளைத் தொகுத்து முதன்முதலில் நூலாக வெளியிட்டவர்?

அலெக்சாந்தர் கன்னிங்ஹாம்.

* கன்னிங்ஹாமின் இந்திய சாசனங்களின் தொகுப்பைத் திருத்தி வெளியிட்டவர்?

ஹிதாயிச்.(1925 இல்).

* அசோகரின் கல்வெட்டுகளின் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டவர்கள்?

V,A ஸ்மித்.
டி.ஆர்.பண்டார்க்கர்.
ஆர்.கே.முகர்ஜி.
ரோமிலா தாபர்.

* 1961 இல் அசோகரின் சிறுபாறைக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட இடம்?

அரவுரா நகரின் அருகில்(உ.பி).

* 1966 இல் அசோகரின் சிறுபாறைக் கல்வெட்டு கண்டறியப்பட்ட பகுதி?

காரி(டெல்லி அருகில்).

* அசோகர் சமயத்துறையில் படிப்படியாக அடைந்த முன்னேற்றத்தைக் கூறுவது?

முதலாம் சிறிய கற்பாறை ஆணை.

* 1840 இல் பாப்ரு கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட பகுதி?

பைரத்.

* பாப்ரூ கல்வெட்டாணைகள் தற்போது வைக்கப்பட்ட இடம்?

கொல்கத்தா அருங்காட்சியகம்.

* கரோஷ்டி மொழி வடிவில் பொறிக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டு கிடைத்த இடங்கள்?

ஜௌகடா.எர்ரகுடி.ஆகிய.இடங்கள்.

* அசோகரின் கற்றூண் ஆணைகள் இருந்த இடங்கள்.?

தோப்ரா.

மீரட்.
அலகாபாத்.
சாஞ்சி.
கௌசாம்பி.
சாரநாத்.

அசோகரின் கற்றூண் ஆணைகளின் எண்ணிக்கை?

7.

* அசோகரின் முதல் மூன்று கற்றூண் ஆணைகள் தரும் வரலாற்றுச் செய்தி?

அசோகரின் தர்மம்.

* அசோகரின் நான்காவது கற்றூண் ஆணை கூறும் வரலாற்றுச் செய்தி?

அசோகரின் கவர்னர்கள் ஆட்சி செய்த விதம்.

* அசோகரின் ஐந்தாம் கற்றூண் ஆணை தரும் வரலாற்றுச் செய்தி?

அகிம்சைக்கு அசோகர் தந்த முக்கியத்துவம்.

* அசோகரின் ஆறாவது கற்றூண் ஆணை தரும் வரலாற்றுச் செய்தி?

சமய சகிப்புத்தன்மை.

* அசோகரின் ஏழாம் கற்றூண் ஆணை கூறுவது?

தர்மத்தின் வளர்ச்சிக்கு அசோகர் செய்த சேவைகள்.

* அசோகரின் கற்றூண் ஆணைகளில் நீளமானது?

ஏழாம் கற்றூண் ஆணை.

*சங்கத்தைப் பிளவு படுத்த முயல்வோர் வாழ்நாள் முழுதும் வெள்ளையாடை உடுத்தும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என்று கூறுவது?


சாரநாத் கல்வெட்டு.

* அசோகரின் மனைவிகளின் அறச்செயல்கள் பற்றிக்கூறுவது?

சாரநாத்.கௌசாம்பி கற்றூண் ஆணைகள்.

* அசோகர் புத்தர் பிறந்த லும்பினிக்குச் சென்றதையும் அங்குள்ள மக்களின் வரியைக் குறைத்ததையும் சமயத்தீர்வைகளையும் தவிர்த்ததையும் கூறுவது?

நீக்லிவா என்ற இடத்திலுள்ள ரும்மிண்டி சிறிய கற்றூண் ஆணை.

* மன்னர் மூலம் புத்தசமய அறிவுரைகளை முதலில் கேட்கும் ராஜுகர்கள் மக்களுக்குத் தெரிவிப்பதைக் கூறுவது?

எர்ரகுடி சிறிய கற்பாறை ஆணை.

* குற்றங்களைக் கண்டுபிடிக்க பெண் மகாமாத்திரர்கள் நியமிக்கப்பட்டதைக் கூறுவது.?

அசோகரின் 12 ஆம் பாறைக் கல்வெட்டு.

* அசோகரின் கற்றூண் அமைப்பு ?

15 மீ உயரம்.50 டன் எடை.

* அசோகரின் கற்றூண்களை பாரசீக மணி வடிவத்தை ஒத்தது என்றவர்?

ஹேவல்.

* அசோகரின் கற்றூண்களில் அழகானது?

சார்நாத் கற்றூண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக