சனி, 26 ஆகஸ்ட், 2017

TNPSC-TET-VAO important-பொது கேள்விகள் GENERAL QUESTIONS



TNPSC-TET-VAO important-பொது கேள்விகள் GENERAL QUESTIONS

Q1. இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியர்கள் யார்?
போர்ச்சுகீசியர்கள்.
Q2. எந்த போர்ச்சுகீசியர், எங்கு, எப்போது முதன் முதலாக இந்தியாவுக்கு வந்தார்?
20.8.1498 – காலிகட் – வாஸ்கோ டா காமா
Q3. போர்ச்சுகீசியர் இந்தியா வந்தடைந்த போது காலிகட் ஐ ஆண்ட மன்னர்கள் யாவர்?
ஸாமோரின் -- Zamorins.
Q4. இந்தியாவுக்கு முதன் முதலாக நியமிக்கப்பட்ட போர்ச்சுகீசிய வைஸ்ராய் யார்?
ஃப்ரான்சிஸ்கோ டி அல்மெடா -- 1505ல் கொச்சின் வந்தடைந்தார்.
Q5. ஃப்ரான்சிஸ்கோ டி அல்மெடா வை மாற்றம் செய்த போர்ச்சுகீசிய வைஸ்ராய் யார்?
1508ல் -- அஃபோன்ஸோ டி அல்புகெர்கூ நியமிக்கப்பட்டார்.
Q6. ஃப்ரான்சிஸ்கோ டி அல்மெடா நாடு திரும்பும் போது என்ன ஆயிற்று?
1510ல், தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையில், கொய் கொய் பழங்குடி இனத்தவரால் கொல்லப்பட்டார்.
Q7. கோவா வை கைப்பற்றிய போர்ச்சுகீசிய வைஸ்ராய் யார்?
1510ல் அஃபோன்ஸோ டி அல்புகெர்கூ.
Q8. கோவா வை கைப்பற்ற உதவியவர் யார்?
திம்மய்யா -- பீஜாப்பூர் ராஜ்யத்தின் உள்ளூர் தலைவனாக இருந்தவர்.
Q9. கோவா எப்போது இந்தியாவுடன் சேர்ந்தது?
12 டிசம்பர் 1961.
Q10. கோவா வை கைப்பற்ற இந்தியா எடுத்த ராணுவ நடவடிக்கையின் ரகசிய குறியீடு பெயர் என்ன?
Operation Vijay.
Q11. இந்தியா சுதந்திரம் பெறும் வரை, போர்ச்சுகீசியரால் ஆண்டு வந்த பகுதிகள் யாவை?
கோவா, தாத்ரா நாகர் ஹவேலி, தாமன் & டையூ.
Q12. பாம்பே மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகள் எவ்வாறு போர்ச்சுகீசியர் வசம் வந்தது?
முகலாயர்கள் வளர்ச்சியை பார்த்து பயந்த, இந்த பகுதியை ஆண்டு வந்த குஜராத் சுல்தான் போர்ச்சுகீசியர்களின் உதவியை நாடி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு பாம்பே மற்றும் அதை 1534ல் சுற்றியுள்ள தீவுகளை அவர்களுக்கு அளித்தார்.
Q13. போர்ச்சுகீசியர் பகுதியாக இருந்த பாம்பே, எவ்வாறு ஆங்கிலேயர்களுக்கு சென்றது?
பாம்பே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை, போர்ச்சுகீசியர்கள், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் போர்ச்சுகீசிய இளவரசி ப்ரகன்ஸா வின் திருமண பரிசாக 1661ல் கொடுக்கப்பட்டது. எஞ்சியிருந்த பகுதிகளும் பிற்காலத்தில் ஆங்கிலேயருக்கு குத்தகையில் கொடுக்கப்பட்டது.
Q14. தாத்ரா நாகர் ஹவேலி பகுதிக்கு, இந்தியாவுடன் சேருவதற்கான உடன்படிக்கைகளில் கையொப்பம் இடுவதற்காக பிரதம மந்திரி யாக உயர்த்தப்பட்ட இந்திய அதிகாரி யார்?
திரு. பத்லானி, IAS அதிகாரி, அப்போது தாத்ரா நாகர் ஹவேலி கமிஷனராக இருந்தார். இந்த ஒரு நாளுக்கு அவர் பிரதமர் மந்திரியாக பதவி ஏற்று, ஆவணங்களில், ஜவஹர்லால் நேருவுடன் கையொப்பமிட்டார்.
Q15. போர்ச்சுகீசியர்களின் கடைசி இந்திய வைஸ்ராய் யார்?
மானுவேல் அந்தோனியோ வசலோ இ சில்வா – 1958-1961.
Q16. போர்ச்சுகீசிய பகுதிகளை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றிய போது, போர்ச்சுகல் அதிபராக இருந்தவர் யார்?
அமெரிக்கோ தோமஸ்.
Q17. போர்ச்சுகீசியர் பகுதிகள் மீது ராணுவ நடவடிக்கை எடுத்த போது இந்திய பிரதம மந்திரி யார்?
ஜவஹர்லால் நேரு.
Q18. போர்ச்சுகீசியர் இந்திய பகுதிகளை ராணுவ நடவடிக்கை எடுத்த போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் யார்?
கிருஷ்ண மேனன்.
Q19. போர்ச்சுகீசியர் இந்திய பகுதிகளை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றிய போது இந்திய ராணுவ தளபதியாக இருந்தவர் யார்?
ப்ரான் தப்பார்.
Q20. ஃப்ரெஞ்ச்சுகாரர்கள், இந்தியாவில் முதன் முதலாக எங்கு தங்கள் தொழிற்சாலையை துவக்கினர்?
1668 – சூரத்.
Q21. ஃப்ரெஞ்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முதல் குடியிருப்பு காலனி எது?
பாண்டிச்சேரி (புதுச்சேரி) -- பீஜாப்பூர் சுல்தானிடமிருந்து பெறப்பட்டது.
Q22. ஃப்ரெஞ்சுக்காரர்களின் முதல் இந்திய கவர்னர் யார்?
ஃப்ராங்கோய்ஸ் மார்டின் – 1674.
Q23. 1693-1699 காலத்தில் பாண்டிச்சேரி டச் காரர்கள் வசமானது. மீண்டும் எவ்வாறு ஃப்ரெஞ்சுக்காரர்களிடம் வந்தது?
1699 ரிஸ்விக் உடன்படிக்கை மூலம்.
Q24. எந்தப் போரின் மூலம், ஃப்ரெஞ்சுக்காரர்களின் வளர்ச்சி இந்தியாவில் தடைபட்டது?
முதலில் 1760ல் வந்தவாசி போர், பிறகு முடிவாக 1763ல் மூன்றாம் கர்நாடிக் போர்.
Q25. ஃப்ரெஞ்ச் ஆளுநர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்?
ஜோசஃப் ப்ராங்காய்ஸ் டூப்ளெக்ஸ் – 1742-1754 – புதுச்சேரியின் இன்றைய நிலைக்கு அவரே காரணம்.
Q26. இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஃப்ரெஞ்ச் காரர்கள் வசமிருந்த பகுதிகள் யாவை, அவை எப்போது இந்தியாவுடன் இணைந்தது?
1. மசூலிப்பட்டினம், கோழிக்கோடு, சூரத் -- அக்டோபர் 1947ல் சேர்ந்தது.
2. சந்தர் நாகூர், வங்காளம் -- 1950ல், பிறகு 1955ல் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது.
3. பாண்டிச்சேரி, யாணம், மாஹே, காரைக்கால் -- நவம்பர் 1954.
Q27. ஃப்ரெஞ்ச் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரால் யார்?
சார்லஸ் ஃப்ராங்காய்ஸ் மாரி பேரோன் -- 20.3.1946 -- 20.8.1947. பிறகு 20.8.1947 முதல் மே 1949 வரை சுதந்திர இந்தியாவில் அவர் ஆளுநராகத் தொடர்ந்தார்.
Q28. டச்சுக்காரர்கள் தங்களது முதல் குடியிருப்பு பகுதியை எங்கு உருவாக்கினார்கள்?
1608 ல் கொச்சின் (கேரளா)
Q29. இந்தியாவுக்கு வந்த முதல் வணிக யாத்திரிகர் யார்?
ஜான் மில்டென்ஹால் -- 1599ல்
Q30. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் யாரால் நிறுவப்பட்டது?
1599ல் -- ஆங்கிலேய வணிகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து தொடங்கினர்.
Q31. உலகின் கிழக்கு பகுதிகளில் சென்று வணிகம் செய்ய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்தது?
31.12.1600 -- மகாராணி எலிசபெத் 1 வழங்கினார்.
Q32. எந்த ஆங்கிலேயர் இந்தியாவுக்கு முதன் முதலாக வந்து, தொழிற்சாலை துவங்க அனுமதி பெற்றார்?
1609 – கேப்டன் ஹாக்கின்ஸ் -- முகலாய மன்னர் ஜஹாங்கீரிடமிருந்து பெற்றார்.
Q33. ஆங்கிலேயர்கள் எங்கு தங்களது முதல் தொழிற்சாலையை துவக்கினர்?
சூரத் – 1613.
Q34. முகலாய மன்னர் ஜஹாங்கீர் ன் அரசவைக்கு வந்த இரண்டாவது ஆங்கிலேயர் யார்?
சர் தாமஸ் ரோ -- 1615ல் - மேலும் சில தொழிற்சாலைகள் துவங்க அனுமதி பெற்றார்.
Q35. கிழக்கிந்திய நிறுவனம், இந்தியாவில், நிலம் வாங்கவும், தங்கள் சொந்த படையை உருவாக்கவும், சொந்த நாணயம் அச்சிடவும், அனுமதி கொடுத்தவர் யார்?
1670 – மன்னர் ஜேம்ஸ் 2.
Q36. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் மதராஸ் நகரை யாரிடமிருந்து பெற்றனர்?
23 ஆகஸ்ட் 1639 அன்று, சந்திரகிரி மன்னர் சென்னப்ப நாயக்கர் இடமிருந்து பெற்றனர். அப்போது இது சென்னபட்டனம் என அழைக்கப்பட்டது. இதுவே ஆங்கிலேயர்கள் தங்களின் எதிர்காலத்தை ஊன்றிய இடம்.
Q37. பாம்பே எவ்வாறு ஆங்கிலேயர் வசம் வந்தது?
1668 ல், பகுதி சார்லஸ் 2 திருமணப் பரிசாகவும், எஞ்சிய பகுதி குத்தகையிலும் போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கிடைத்தது. ஆங்கிலேயர்கள் மேற்கில் தங்களது எதிர்காலத்தை ஊன்றிய இடம்.
Q38. பாம்பேயின் முதல் கிழக்கிந்திய நிறுவன ஆளுநர் யார்?
ஜெரால்ட் ஆங்கியர் – 1669-1677.
Q39. ஆங்கிலேயர்களுக்கு, கிழக்கில் கல்கத்தா எவ்வாறு கிடைத்தது?
1690ல் ஆங்கிலேயர்கள் முதலில் வங்காளத்தில் சுதாநூதி என்ற இடத்தில் தொழிற்சாலையை துவக்கினர். இந்த இடத்தைச் சுற்றி, காளிகட்டா மற்றும் கோவிந்த்பூர் கிராமங்கள் இருந்தன. இவை மூன்றும் சேர்ந்து கல்கத்தா ஆனது. 1698ல் சுதாநூதி தொழிற்சாலையை சுற்றி கோட்டை எழுப்பினர். இதுவே பிற்காலத்தில் வில்லியம்ஸ் கோட்டை ஆனது. இவ்வாறாக ஆங்கிலேயர்கள் கிழக்கில் தங்கள் எதிர்காலத்தி ஊன்றினர்.
Q40. வில்லியம்ஸ் கோட்டையின் முதல் தலைவர் யார்?
சார்லஸ் அயர் -- டிசம்பர் 1699.
Q41. எந்த முகலாய மன்னர், ஆங்கிலேயர்களுக்கு, முதலில் சுங்க வரி சலுகைகள் அளித்தார்?
1691ல் அவுரங்கசீப்.
Q42. ஆங்கிலேயர்கள் எந்த பகுதியை முதன் முதலில் ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றினர்?
1745 – முதல் கர்நாடிக் போர்.
Q43. 1746ல், மதராஸ் ஃப்ரெஞ்ச் காரர்களால் கைப்பற்றப்பட்டது. அது எவ்வாறு ஆங்கிலேயர் வசம் திரும்பி வந்தது?
ஆஸ்திரியாவில் நடந்த வாரிசுச் சண்டையில் ஆங்கிலேயருக்கும் ஃப்ரெஞ்சுக்கும் 1748ல் அய்க்ஸ் லா சாபெல் என்ற இடத்தில் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி, மதராஸ் ஆங்கிலேயருக்கு திரும்ப கொடுக்கப்பட்டது.
Q44. ப்ளாசி என்ற இடம் எங்குள்ளது?
வங்காளத்தில், மூர்ஷிதாபாத் அருகில் ஒரு கிராமம்.
Q45. 1757ல் ப்ளாசி போர் யாரிடையே நடந்தது?
23 ஜூன் 1757 – ஆங்கிலேயருக்கும், வங்காள் நவாப் சிராஜ் உத் தௌலாவுக்கும் இடையில்.
Q46. ப்ளாசி போரில், வங்காள் நவாப் சிராஜ் உத் தௌலாவுக்கு எதிராக சதி செய்தவர் யார்?
மீர் ஜாஃபர் -- சிராஜ் உத் தௌலா வின் ராணுவ தளபதி.
Q47. பக்ஸார் என்ற இடம் எங்குள்ளது?
பீஹாரில் பாட்னாவுக்கு அருகில்.
Q48. பக்ஸார் போர் யாரிடையே நடைபெற்றது?
22 அக்டோபர் 1764 - மேஜர் ஹெக்டர் மன்றோ தலைமையில் ஆங்கிலேயர்களுக்கும், வங்காள நவாப் மீர் காசிம், ஆவாத் நவாப் ஷூஜா உத் தௌலா மற்றும் முகலாய ஷா ஆலம் 2 சேர்ந்த அணிக்கும் இடையில் நடந்தது.
Q49. சிராஜ் உத் தௌலாவிடமிருந்து வங்காளம் கைப்பற்றப்பட்ட போது இருந்த ஆங்கிலேய ஆளுநர் யார்?
ட்ரேக்.
Q50. ராபர்ட் க்ளைவ் கிழக்கிந்திய நிறுவனத்தில் என்னவாக சேர்ந்தார்?
எழுத்தர். (க்ளார்க்)
Q51. வங்காளத்தில் "இரட்டை ஆட்சி" முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ராபர்ட் க்ளைவி - 1765-1772.
Q52. வங்காளத்தில் "இரட்டை ஆட்சி" முறையை ஒழித்தவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் -- 1772/73களில், இரட்டை ஆட்சி முறையை ஒழித்து, நிர்வாகத்தை கிழக்கு இந்திய நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தார்.
Q53. 1769ல் மதராஸ் உடன்படிக்கை யாரிடையே ஏற்பட்டது?
ஏப்ரல் 1769 -- ஆங்கிலேயருக்கும், மைசூர் ஹைதர் அலிக்குமிடையில் ஏற்பட்டது. அந்த நிலையில் ஹைதர் அலி மதராஸூக்கு அருகில் 5 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தார்.
Q54. மைசூரை ஆண்ட உடையார் மன்னரிடம் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றும் முன் ஹைதர் அலி என்னவாக இருந்தார்?
மைசூர் மன்னர் கிருஷ்ணராஜா உடையார் 2 இடம் ராணுவ தளபதியாக இருந்தவர்.
Q55. 1784ல் மங்களூர் உடன்படிக்கை யாரிடையே ஏற்பட்டது?
திப்பு சுல்தானுக்கும் மதராஸ் ஆளுநர் மெக் கார்ட்னி பிரபுவுக்கும் இடையில்.
Q56. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் யாரிடையே நடந்தது?
திப்பு சுல்தானுக்கும் கார்ன் வாலிஸ் பிரபுவுக்கும் இடையில் – 1790-1792.
Q57. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் எந்த உடன்படிக்கையால் முடிவுற்றது?
ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை 1792 -- ஒரு புறம் திப்பு சுல்தான் மறுபுறம் ஆங்கிலேயர், நிஸாம் மற்றும் பேஷ்வா வுக்கிடையில் ஏற்பட்ட உடன்படிக்கை.
Q58. நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் யாரிடையே நடந்தது?
வெல்லெஸ்லி பிரபுவுக்கும் திப்புசுல்தானுக்கும் இடையில் மார்ச் 1799ல்
Q59. நான்காம் ஆங்கிலேய மைசூர் போரில், திப்பு சுல்தானுக்கு துரோகம் புரிந்தவர் யார்?
மீர் சாதிக் -- திப்பு சுல்தானின் ராணுவ தளபதி -- போர் நடந்து கொண்டிருக்கும் போது, மீர் சாதிக் படைகளை ஊதியம் பெற அனுப்பிவிட்டதினால், திப்பு சுல்தான் தோல்வியும் மரணமும் அடைந்தார்.
Q60. ஆங்கிலேய மைசூர் போர்களில் திப்பு சுல்தான் ஏவுகணைகளை பயன்படுத்தியது சரித்திரம். இதனால் பிற்காலத்தில் ஏற்பட்டது என்ன?
1804 "கான்க்ரீவ்" ராக்கெட்டுகளை வில்லியம் கான்க்ரீவ் என்ற ஆங்கிலேயர் கண்டுபிடித்தார்.
Q61. எத்தனை ஆங்கிலேய மைசூர் போர்கள் நடந்தன?
நான்கு -- 1767-69; 1780-84; 1790-92; 1798-99.
Q62. எத்தனை ஆங்கிலேய மராத்தா போர்கள் நடந்தன?
மூன்று -- 1775-82; 1803-1805; 1816-1819 (இந்த போர் பிந்தாரி போர் எனவும் அழைக்கப்பட்டது).
Q63. முதல் ஆங்கிலேய மராத்தா போர் எதன் அடிப்படையில் முடிவடைந்தது?
சால்பாய் உடன்படிக்கை – 1782. வாரன் ஹேஸ்டிங்ஸ் அப்போதைய கவர்னர் ஜெனரல்.
Q64. இரண்டாம் ஆங்கிலேய மராத்தா போர் நடந்த காலம் ……..
1803-1805.
Q65. பிந்தாரிகள் என அழைக்கப்பட்டவர்கள் யார்?
ஆப்கானிஸ்தானின் பழங்குடி இன மக்கள் தலைவர்கள், குஜராத்தின் மேற்கு மற்றும் வடக்கில் சில சிறிய பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள். இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தனர். கரீம் கான், வாசில் முகமது மற்றும் சிட்டு என்பவர்கள் இதன் தலைவராக இருந்தவர்கள். 1817-1818 களில் ஆங்கிலேயர்கள் (பிந்தாரி போர் == ஆங்கிலேய மராத்தா போர் 4 என அழைக்கப்பட்டது) வாரன் ஹேஸ்டிங்ஸ் தலைமையில் கட்டுப்படுத்தினர்.
Q66. ஆங்கிலேயர்களுக்கும் மராத்தியர்களுக்கும் இடையில் சில உடன்படிக்கைகள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் எந்த உடன்படிக்கை மூலம், மராத்திய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது?
பசீன் உடன்படிக்கை 1802.
Q67. 1802 பசீன் உடன்படிக்கையைப் பற்றி ஆர்தர் வெல்லெஸ்லி எவ்வாறு வர்ணித்தார்?
ஒரு பூஜ்ய உடன்படிக்கை. Treaty with a cipher.
Q68. எத்தனை ஆங்கிலேய சீக்கிய போர்கள் நடைபெற்றன?
இரண்டு.
Q69. முதல் ஆங்கிலேய சீக்கிய போர் 1845-1846 எவ்வாறு முடிவுற்றது?
1846 லாகூர் உடன்படிக்கை -- அப்போதைய ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் ஹார்டிஞ்ச் பிரபு.
Q70. பிளவு படாத இந்தியாவின் சிந்த் பகுதியை ஆங்கிலேயர்கள் எப்போது கைப்பற்றினர்?
1843
Q71. சிந்த் பகுதியை கைப்பற்றியவுடன், சர் சார்லஸ் நேப்பியர், கவர்னர் ஜெனரல் அனுப்பிய தந்தியில் என்ன கூறப்பட்டிருந்தது?
"நான் பாவம் செய்து விட்டேன்" “I have sinned”.
Q72. இங்கிலாந்து அரசின் எந்த சாசனத்தின் மூலம், கிழக்கிந்திய நிறுவன நிர்வாகத்துக்கு கவர்னர் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டனர்?
1773 - கட்டுப்பாட்டுச் சட்டம் Regulating Act of 1773. அதைத் தொடர்ந்து பிட்ஸ் சட்டம் -- Pitts Act of 1784.
Q73. ஆங்கிலேய இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் -- 1773-1785.
Q74. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் நடந்த போர்கள் யாவை?
முதல் மாராத்தா போர்(1775-1782); இரண்டாம் மைசூர் போர் (1780-1784) & ரோஹில்லா போர் - 1774.
Q75. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் நடந்த எந்த நிகழ்ச்சி அவருக்கு அரசியல் சங்கடத்தை ஏற்படுத்தியது?
1778 - சைல் சிங் விவகாரம். இதனால், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1785ல் அவர் இந்த விவகாரத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.
Q76. ஜமீந்தார் முறை யை (நில வருவாய் வசூலிக்க ஒரு நிரந்தர திட்டம்) அறிமுகப் படுத்தியவர் யார்?
காரன் வாலிஸ் பிரபு – 1793 – வங்காளம் மற்றும் பீஹாரில்.
Q77. இந்தியாவில் பொதுப் பணி முறையை Civil Services அறிமுகப்படுத்தியவர் யார்?
காரன் வாலிஸ் பிரபு – 1793
Q78. 1806 வேலூர் கலகம், பின் காலங்களில் வந்த இதர கலகங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. இந்த கலகம் யாருடைய காலத்தில் நடந்தது?
மிண்டோ 1 பிரபு -- கவர்னர் ஜெனரல்.
Q79. மதராஸ் மாகாணம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது?
வெல்லெஸ்லி பிரபு – 1785.
Q80. மதராஸ் மாகாணத்தில் ரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஹேஸ்டிங்ஸ் பிரபு -- 1820. இந்த முறையின் மூலம் அரசாங்க வருவாய்களை, அரசாங்கத்தால் நியமனம் செய்யப்படும் முகவர்கள் (பொதுவாக ஜமீந்தார்கள்) மூலம் நேரடியாக வசூலித்தல்.
Q81. "சதி" என்ற விதவை தீக்குளித்தல் முறையை முதலில் ரத்து செய்தவர் யார்?
வில்லியம் பெண்டிக் பிரபு -- 1829ல்.
Q82. எந்த கவர்னர் ஜெனரல் காலத்தில் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது?
வில்லியம் பெண்டிக் பிரபு 1835ல்
Q83. ஆங்கிலேயரின் எந்த போர் தோல்வி ""ஆக்லாண்ட் மடத்தனம்"" “Auckland’s folly” என வர்ணிக்கப்பட்டது?
முதல் ஆங்கிலேய ஆப்கான் போர் (1836-1842)
Q84. எந்த சீக்கிய மன்னரிடமிருந்து கோஹினூர் வைரம் ஆங்கிலேயர்கள் பெற்று இப்போது இங்கிலாந்து அரசாங்கத்திடம் உள்ளது?
துலீப் சிங்.
Q85. காஷ்மீர் பகுதியை சீக்கியர்களிடமிருந்து பெற்று, ஆங்கிலேயர்கள் அப்பகுதியை யாருக்கு விற்றனர்?
குலாப் சிங்
Q86. "வாரிசு இல்லா சட்டம்" “Doctrine of Lapse” யார் அறிமுகப்படுத்தினார்?
டல்ஹௌசி பிரபு.
Q87. வாரிசு இல்லா சட்டத்தின் மூலம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டப்பட்ட முதல் பகுதி எது?
சத்தாரா 1848.
Q88. பொதுப்பணித் துறை - Public Works Department யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது?
டல் ஹௌசி பிரபு
Q89. ஆங்கிலேய ஆட்சியின் எந்த வருடம், இந்தியாவின் கட்டுமான வசதிகள் மேம்பாட்டு வருடம் என கருதப்படுகிறது?
1853 – ரயில்வே (16.4.1853 – பாம்பே -- தானே ), பிறகு, கல்கத்தா-ஆக்ரா இடையில் தந்தி வசதி, மற்றும் தபால் வசதி ஏற்படுத்தப்பட்டது. இவையெல்லாம் டல்ஹௌசி காலத்தில் ஏற்பட்டது.
Q90. விதவை மறுமணச்சட்டம் யாரால் இயற்றப்பட்டது?
1856 -- டல் ஹௌசி பிரபு.
Q91. கல்கத்தா, மதராஸ் மற்றும் பாம்பே பல்கலைக்கழகங்கள் எந்த கவர்னர் ஜெனரல் காலத்தில் உருவாக்கப்பட்டது?
கேனிங் பிரபு -- 1857.
Q92. 1857 சிப்பாய் கலகம் யாருடைய காலத்தில் நடந்தது?
கேனிங் பிரபு.
Q93. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும், ஆங்கிலேய இந்தியாவுக்கும் தலைநகராக இருந்த நகரம் எது?
கல்கத்தா -- 1911 வரை. பிறகு 1911ல் தலைநகர் டெல்லிக்கு மாற்றப்பட்டது.
Q94. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கடைசி கவர்னர் யார்?
ராபர்ட் க்ளைவ் (1758-1773). இவருக்குப் பிறகு, வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரல் ஆக 1773ல் பதவி ஏற்றார்.
Q95. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் நிகழ்ந்த ஆங்கிலேய மைசூர் போர் எது?
இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் – 1780-1784--ஹைதர் அலியுடன்.
Q96. வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் சர் வில்லியம் ஜோன்ஸ் சேர்ந்து நிறுவிய அமைப்பு எது?
1784 – Asiatic Society of Bengal.
Q97. இந்தியாவில் நீதிமன்றங்கள் அமைக்க தொடங்கியவர் யார்?
கார்ன்வாலிஸ் பிரபு 1793.
Q98. கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையை நிறுவியவர் யார்?
வெல்லெஸ்லி பிரபு.
Q99. எந்த ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் காலத்தில் மதராஸ் மாகாணம் உருவானது?
வெல்லெஸ்லி பிரபு 1803
Q100. இந்திய பொதுப்பணித்துறை தேர்வில் முதலாவதாக தேர்வு எழுதிய இந்தியர் யார், அவரின் சாதனை என்ன?
1905 – குருசதாய் தத்தா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக