சனி, 28 டிசம்பர், 2019

2019 - இந்திய விருதுகள் - பகுதி-3



2019 - இந்திய விருதுகள் - பகுதி-3

நோபல் பரிசு 2019 :
🏆 உலகளவில் மருத்துவம், வேதியியல், இயற்பியல், சமாதானம், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

🏆 அண்டை நாடான எரித்திரியா எல்லைப் பிரச்சனையில் அமைதியான முறையில் தீர்வு கண்டதற்காக, அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட்டது.

🏆 2019 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு எழுத்தாளர் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்பட்டது.

🏆 லித்தியம்-அயன் பேட்டரியை மேம்படுத்தியதற்காக அமெரிக்க விஞ்ஞானி ஜான் கூட்எனஃப், இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டான்லி விட்டிங்ஹhம், ஜப்பான் விஞ்ஞானி அகிரா யோஷினோ ஆகியோருக்கு 2019ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

🏆 2019 இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், டிடியர் கியு%2Bலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

🏆 மனித உடல் செல்கள் குறித்த ஆய்வுக்காக வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர் ரேட் கிளிப், கிரேக் எல்.செம்ன்ஸா ஆகியோருக்கு 2019 மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது
🏆 சசிதரூர் ஆங்கில மொழியில் எழுதிய அன் ஈரா ஆப் டார்க்னெஸ் என்ற நு}லுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

🏆 தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளரும், மூத்த படைப்பாளியுமான சோ.தர்மனின் சு%2Bழ் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திடைப்படத் துறை
🏆 திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது இந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.

🏆 பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் படத்திற்கு சிறந்த தமிழ் படம் விருது வழங்கப்பட்டது.

🏆 கோவாவில் நடைபெற்ற 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு 'கோல்டன் ஐகான்" சிறப்பு விருதை ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் வழங்கினார்.
சரஸ்வதி சம்மான் விருது :
'பக்ககி ஒத்திகிலிதே" என்ற கவிதை நு}லுக்காக தெலுங்கு கவிஞர் கே.சிவா ரெட்டிக்கு, சரஸ்வதி சம்மான் விருது குடியரசு துணைத் தலைவர் வெங்கய நாயுடு வழங்கினார்.
பாரத ரத்னா விருது
🏆 முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சமூக செயல்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாம் பாடகர் பு%2Bபென் ஹசாரிகா ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக