வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

வங்காளத்தின் முதன் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் (1772-1785) பற்றிய சில தகவல்கள்:-

வங்காளத்தின் முதன் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் (1772-1785) பற்றிய சில தகவல்கள்:-

🌷 வங்காளத்தின் முதன் தலைமை ஆளுநர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்
🌷 ஒழுங்கு முறை சட்டம் கொண்டு வந்தவர் - 1773
🌷 கலெக்டர் பதவி உருவாக்கியவர்
🌷 முர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு கருவூலம் மாற்றப்பட்டது
🌷 1772ல் கல்கத்தா வங்காளத்தின் தலைநகரமாகியது
🌷 உரிமையில் மேல் முறையீடு நீதிமன்றம் சதர் திவானி அதலத் எனப்பட்டது
🌷 குற்றவியல் மேல் முறையீடு நீதிமன்றம் சதர் நிசாமத் அதலத் எனப்பட்டது
🌷 இந்திய மற்றும் அயல் நாட்டுப் பொருட்கள் அனைத்திற்கும் 2.5 % ஒரே சீரான சுங்க வரி வசூலிக்கப்பட்டது
🌷 வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் 'இந்திய சட்டங்களின் தொகுப்பு' 'ஹால்ஹெட்' என்பவரால் உருவாக்கப்பட்டது
🌷 கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது
🌷 கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீ‌திப‌தி மூன்று துணை நீதிபதிகள் இருந்தனர்.
🌷 முதல் தலைமை நீ‌திப‌தி சர் எலிஜா இம்போ
🌷  வில்லியம் ஜோன்சுடன் இணைந்து 1784ல் வங்காள ஆசிய கழகத்தை (Asiatic Society of Bengal) தொற்றிவித்தார்
🌷 சார்லஸ் வில்கின்ஸ் என்பவர் முதல் முறையாக கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு முன்னுரை எழுதியவர் வாரன் ஹேஸ்டிங்ஸ்
🌷 1787 வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது தேச துரோக குற்றச்சாட்டு (impeachment) போடப்பட்டது.
🌷 தேச துரோக குற்றச்சாட்களில் முக்கியமானவை
1. நந்தகுமார் வழக்கு
2. ரோகில்லா போர்
3. செயித்சிங் பதவியிறக்கம்
4. அயோத்தி பேகம்கள் விவகாரம்
🌷  வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது போடப்பட்ட தேச துரோக குற்றங்கள் - 22
🌷 வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தியவர் - எட்மண்ட் பர்க்
🌷 7 ஆண்களுக்கு விசாரணைக்கு பிறகு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக