வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

காரன் வாலிஸ் பிரபு

காரன் வாலிஸ் பிரபு (1786 - 1793) பற்றிய சில தகவல்கள்:-
🌸 நிலையான நிலவரி திட்டம் (1793) கொண்டுவந்தவர்
🌸 நிலையான நிலவரி திட்டம் வேறு பெயர் ஜமீன்தாரி முறை
🌸 தகுதியின் அடிப்படையிலேயே நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கொள்கையை தொடங்கினார்.
🌸 ஜார்ஜ் பார்லோ என்பவர் உதவியுடன் ஒரு முழுமையான சட்டத் தொகுப்பு உருவாக்கினார்
🌸 ஜார்ஜ் பார்லோ சட்டத் தொகுப்பு 'மாண்டெஸ் கியூ' வின் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
🌸 மூன்றாம் மைசூர் போர் முடிவில் திப்பு சுல்தானோடு ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கை (1792) செய்து கொண்டார்.
🌸 மாவட்ட நீதிபதி பதவியை உருவாக்கினார்.
🌸 தற்கால இந்திய ஆட்சி பணியின் தந்தை என போற்றப்பட்டார்.
🌸 காவல்துறை சீர்திருத்தம் ஒவ்வொரு மாவட்டமும் 'தாணா' என்ற காவல் சரகமாக பிரிக்கப்பட்டது.
🌸 ஒவ்வொரு 'தாணா' வும் தரோகா எனப்பட்ட இந்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக