ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

இந்திய தேசிய கொடியை வடிவமைத்த‌வர்

இந்திய தேசிய கொடியை வடிவமைத்த‌து யார்?

பதுருதின் தியாப்ஜி குடும்பம் தான் இந்திய தேசிய கொடியை வடிவமைத்த‌து என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? கண்டிப்பாக‌ இதை படித்து மறைக்கப்பட்டு இருக்கும் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். தெரியாதவர்களுக்கு தெரியபடுத்துங்கள்!

லண்டனில் மெட்ரிக் படிப்பை முடித்து Middle Temple Barrister (வழக்கறிஞர்)April 1867-இல் தான் பணியை  தொடர்ந்தார். பாம்பேயின் முதல் வழக்கறிஞராக திகழ்ந்த இவர், பின்னர் மிகவும் புகழ் பெற்று விளங்கினர். 1895 பாம்பே உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். பின்பு 1902-ல் இவரே முதல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்தார் மற்றும் பாரபட்சம் பார்க்காமல் தீர்ப்பு வழங்குவதில் கண்ணிய மிக்கவராக இருந்தார்.

பல வருடகாலம் பொது வாழ்க்கையில் ஈடுபட்டார். இந்திய நேஷனல் காங்கிரஸின் முதல் முஸ்லிம் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். 1876 ajmuan i islam இயக்கம் மூலமாக அனைத்து முஸ்லிம் மக்களின் முனேற்றத்திற்காக பாடுப்பட்டார். இந்தியாவில் முஸ்லிம் மக்கள் அனைத்து மக்களுடனும் சகோதரத்துவ உணர்வுடன்  சரி சமமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அரசியல் வாழ்கையில் நல்ல பெயரும் பெற்றார். இவருடைய ஆளுமை திறனால் தான் முஸ்லிம்கள் அதிகமாக இந்திய நேஷனல் காங்கிரசில் சேர்ந்தனர் என்று புகழாரம் சூட்டினார் மகாத்மா காந்திஜி. அஹ்மத் கான் மற்றும் Badruddin Tyabji இந்திய நேஷனல் காங்கிரசுக்கு பெரும் பங்கு ஆற்றினர். முஸ்லிம் விரோத கொள்கைக்கு எதிராக இருந்தார்.

இந்தியாவில் மத சார்ப்பற்ற அரசியல் வர விரும்பினார். அவருடைய மனைவி தான் முதல் சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்தார். அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் சமுதாயதிற்கும், கல்விக்கும், இந்திய விடுதலைக்கும் பெரும் பங்கு ஆற்றினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக