செவ்வாய், 14 ஜனவரி, 2020

2019 இந்திய விருதுகள் - பகுதி 3 நோபல் பரிசு 2019


2019 கடந்து வந்த பாதை.. நோபல் பரிசு.. தட்டிச் சென்றவர்கள் யார்?
2019 இந்திய விருதுகள் - பகுதி 3
நோபல் பரிசு 2019
🏆எரித்திரியா எல்லைப் பிரச்சனையில் அமைதியான முறையில் தீர்வு கண்டதற்காக, அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட்டது.

🏆2019ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு எழுத்தாளர் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்பட்டது.

🏆லித்தியம்-அயன் பேட்டரியை மேம்படுத்தியதற்காக அமெரிக்க விஞ்ஞானி ஜான் கூட்எனஃப், இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பான் விஞ்ஞானி அகிரா யோஷினோ ஆகியோருக்கு 2019ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

🏆2019 இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

🏆மனித உடல் செல்கள் குறித்த ஆய்விற்காக வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர் ரேட் கிளிப், கிரேக் எல்.செம்ன்ஸா ஆகியோருக்கு 2019 மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
சாகித்ய அகாடமி விருது
🏆சசிதரூர் ஆங்கில மொழியில் எழுதிய அன் ஈரா ஆப் டார்க்னெஸ் என்ற நூலிற்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது.

🏆தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளரும், மூத்த படைப்பாளியுமான சோ.தர்மனின் சூழ் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது.
திடைப்படத் துறை
🏆திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது 2019 ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது.

🏆பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் படத்திற்கு சிறந்த தமிழ் படம் விருது வழங்கப்பட்டது.

🏆கோவாவில் நடைபெற்ற 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு 'கோல்டன் ஐகான்" சிறப்பு விருதை ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் வழங்கினார்.
சரஸ்வதி சம்மான் விருது :
'பக்ககி ஒத்திகிலிதே" என்ற கவிதை நூலுக்காக தெலுங்கு கவிஞர் கே.சிவா ரெட்டிக்கு, சரஸ்வதி சம்மான் விருது குடியரசு துணைத் தலைவர் வெங்கய நாயுடு வழங்கினார்.
பாரத ரத்னா விருது
🏆முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சமூக செயல்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக