வியாழன், 9 ஜனவரி, 2020

காலம் கடந்து நிற்கும் வானொலி... அன்றும்.. இன்றும்.. என்றென்றும்.. யார் அவர்? வானொலியின் தந்தை..!!



காலம் கடந்து நிற்கும் வானொலி... அன்றும்.. இன்றும்.. என்றென்றும்.. யார் அவர்?
வானொலியின் தந்தை..!!
📻இவ்வுலகில் பலதரப்பட்ட விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் இருந்தாலும் வெகுசிலரே ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் சாதனங்கள் மற்றும் கருவிகளை கண்டுபிடிக்கின்றனர்.

📻மனிதனின் வாழ்வில் மிக முக்கிய திருப்பமாக அமைந்தது இவரது கண்டுபிடிப்பு...!!

📻தொலைக்காட்சி, இணையம் என்று பல தொடர்பு சாதனங்கள் வந்தாலும், இன்றும் பலரது வாழ்க்கையில் இவரின் கண்டுபிடிப்பிற்கென்று ஒரு தனி இடம் உண்டு.

📻இவரது விடாமுயற்சியால்தான் அதுவரை நிசப்தமாக இருந்த வானம் அதன்பிறகு குரல் மூலமும், இசை மூலமும் பேசத் தொடங்கியது.

📻இவரது கண்டுபிடிப்பு வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி தகவல் களஞ்சியமாகவும் செயல்பட்டு வருகிறது.

📻என்ன சாதனம் அது? அதை கண்டுபிடித்தவர் யார்? என கண்டுபிடித்துவிட்டீர்களா?....

📻 ஆம்... நீங்கள் நினைத்தது சரிதான்...

📻வானொலியையும், கம்பியில்லாத தந்தி முறையையும் உலகிற்கு தந்த 'வானொலியின் தந்தை" என போற்றப்படும் மார்க்கோனி தான் அவர்...

👇👇



📻தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பு ரேடியோதான் செய்தி அறிந்துகொள்ளவும், பொழுதுபோக்கு சாதனமாகவும் இருந்தது.

📻நமது தாத்தா, பாட்டி காலங்களில் ஏன்? இப்போதும் கூட பலரின் உற்ற தோழனாக வானொலிதான் இருக்கிறது.

📻வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் பலர்.

📻வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர்.

📻இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கிவிட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை உங்கள் செவிகளில் வந்து மோதும்.

📻இப்போது இணையம், கைத்தொலைபேசி ஆகியவற்றின் மூலமும் கேட்க முடியும் என்றாலும், காற்றலைகளில் தவழ்ந்து வரும் வானொலியின் ஒலிப்பரப்பை உங்களின் செவிகளுக்கு கொண்டு வந்து சேர்க்க உதவும் முக்கியமான கருவி வானொலிதான்.

📻வானொலியை உலகிற்கு தந்து அதன் மூலம் நூற்றுக்கணக்கான வானொலி நிலையங்களின் ஒலிப்பரப்பை வான் அலைகளில் உலா வரச்செய்த மார்க்கோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இனிவரும் பகுதிகளில் விரிவாக பார்க்கலாம்...!!
இதுபோல் இன்னும் 100-க்கும் மேற்பட்ட அரசியல், அறிவியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக