சனி, 11 ஜனவரி, 2020

2019... கடந்து வந்த பாதை..!! நியமனங்கள் - ஓர் பார்வை !!



2019... கடந்து வந்த பாதை..!!

நியமனங்கள் - ஓர் பார்வை !!
2019-ம் வருடமானது பலவகையான மாற்றங்களை கொடுத்தது... அவற்றில் ஒன்று பணி நியமனங்கள்...

ஒவ்வொரு வருடமும் பலதரப்பட்ட துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான பணி நியமனங்களை மாற்றி கொண்டுதான் இருக்கின்றனர்.

அதன்படி 2019ம் வருடத்தில் பல்வேறு துறைகளில், பல்வேறு பணிகளுக்கான நியமனங்கள் இடம்பெற்றன. இதில் சட்டத்துறை, நீதித்துறை, கல்வித்துறை, இராணுவம், முப்படைகள், கட்சிகள், புலனாய்வுத்துறை என பல்வேறு துறைகளிலும் பணி நியமனங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் புதிய நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பணி நீடிப்பு ஆகியவைகளும் அடங்கும். அவற்றில் சில...
ஜனவரி
காங்கிரஸ் கட்சியில் மகளிர் அணியான மகிளா காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளராக அப்சரா ரெட்டி ஜனவரி 8ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
பிப்ரவரி
மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation) இயக்குநராக ரிஷி குமார் சுக்லா பிப்ரவரி மாதம் 02ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.

மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவரான சுசில் சந்திரா, தேர்தல் ஆணையராக பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
மார்ச்
இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பிர் சிங் (Karambir singh) மார்ச் மாதம் 23ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
ஏப்ரல்
தமிழக தேர்தல் பிரிவு டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் ஏப்ரல் 11ஆம் தேதி உத்தரவிட்டது.
மே
குஜராத்தின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் (ஜிஎன்எல்யு%2B) புதிய இயக்குநராக தமிழரான முனைவர் எஸ்.சாந்தகுமார் நியமிக்கப்பட்டார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக