புதன், 29 ஜனவரி, 2020

கலீலியோ கலிலி... இவர் வாழ்க்கையில் நாம் என்ன கற்று கொள்ள வேண்டும்?



கலீலியோ கலிலி... இவர் வாழ்க்கையில் நாம் என்ன கற்று கொள்ள வேண்டும்?

கலீலியோ கலிலியின் புத்தகங்கள்..!!
கலீலியோவின் மரணம் :

🌞கலீலியோ கலிலி 1633ஆம் ஆண்டு முதல் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். பத்து ஆண்டுகள் வீட்டுக்காவலிலேயே காலம் கழித்த கலீலியோ கலிலி 1642ஆம் ஆண்டு இருதயக் கோளாறு காரணமாக தனது 78வது வயதில் இயற்கை எய்தினார்.

கலிலியின் புத்தகங்கள் :

📚1621ல் கலீலியோ தனது முதல் நூல் 'த அஸயேர்" (வுhந யுளளயலநச) எழுதினார். இந்நூல் 1623ல் வெளியிட அனுமதி கிடைத்தது.

📚1630ல் னுயைடழபரந உழnஉநசniபெ வாந வுறழ ஊhநைக றுழசடன ளுலளவநஅ என்ற நூலை வெளியிட அனுமதி கோரினார். அதற்கும் 1632ல் தான் வெளியிட அனுமதி கிடைத்தது.

📚கலீலியோ தனது கண்டுபிடிப்புகள் அனைத்தையும் 'உரையாடல்" (டயலாக் - னுயைடழபரந) என்ற தலைப்பில் எழுதி புத்தகமாக வெளியிட்டார்.

📚அந்தப் புத்தகத்தில் மூன்று கற்பனைக் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது போல எழுதினார். ஒரு கதாபாத்திரம் கலீலியோவின் கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிவுப்பூர்வமாக பேசும். அடுத்த கதாபாத்திரம் அதை முட்டாள்தனமாக எதிர்க்கும். மூன்றாவது கதாபாத்திரம் திறந்த மனதுடன் அவற்றைப் பரிசீலிக்கும்.

📚உண்மையை உரக்கச் சொல்கிற தனிக்குரலாக நம் கருத்துக்கள் இருக்கும்பட்சத்தில், நம் கருத்து நம்மை வரலாற்றுப் பக்கங்களில் பதிய வைக்கும் என்பதற்கு கலீலியோ ஒரு சிறந்த உதாரணம்.

📚அவர் இறந்த பிறகு அவரது ஆராய்ச்சிகளையும், கண்டறிந்த உண்மைகளையும் உள்ளடக்கிய புத்தகம் ஐரோப்பா முழுவதும் வலம் வந்து அறிவுக்கண்ணை திறந்தது.

📚கண்கூடாக காணும் வரை அல்லது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படும் வரை எதையுமே ஏற்றுக்கொள்ளாத மனோபாவம்தான் உலகம் வியக்கும் கண்டுபிடிப்புகளை செய்ய கலிலிக்கு உதவியிருக்கிறது. 'வானியல் சாஸ்திரத்தின் தந்தை" என்ற பெயரையும் அவருக்கு பெற்றுத்தந்திருக்கிறது.

📚கலீலியோ போல் கேள்வி கேட்க துணிபவர்களுக்கும், புதிய உண்மைகளை கண்டுபிடிக்க முனைபவர்களுக்கும் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைப்பவர்களுக்கும் நிச்சயம் அந்த வானம் வசப்படும்.இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக