திங்கள், 29 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 புதிய சமச்சீர்ப் பாடப்பகுதி 6ஆம் வகுப்பு - முதல் பருவம் - பொதுத்தமிழ் 032


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
புதிய சமச்சீர்ப் பாடப்பகுதி
6ஆம் வகுப்பு - முதல் பருவம் - பொதுத்தமிழ் 032

1. தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் என்று பாடியவர் யார்? - பாரதிதாசன்

2. பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொது உடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை கவிதை வடிவில் பாடியவர் யார்? - பாரதிதாசன்

3. பாவேந்தர் என்று போற்றப்படுபவர் யார்? - பாரதிதாசன்

4. தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும் - என்று பாடியவர் யார்? - கவிஞர் காசி ஆனந்தன்

5. தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது என்று கூறியவர் யார்? - பாரதிதாசன்


6. 'தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் போன்றது" என்று கூறியவர் யார்? - பாரதிதாசன்

7. எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி! என்ற பாடல் வரிக்கு சொந்தக்காரர் யார்? - பெருஞ்சித்திரனார்

8. பொருள் தருக. ஆழிப் பெருக்கு - கடல் கோள்

9. பொருள் தருக. மேதினி - உலகம்

10. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன? - மாணிக்கம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக