வியாழன், 25 ஏப்ரல், 2019

TET EXAM - 2019 பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 027


TET EXAM - 2019
பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 027

சொற்றொடர் வகைகள்:-

1. கயல்விழி பாடத்தைப் படித்தாள் என்பது --------- தொடர். - செய்வினை

2. கீழ்க்கண்டவற்றில் எது விழைவுத் தொடர்?

அ) கமலா பரிசு பெற்றாளா?

ஆ) நீடூழி வாழ்க

இ) உழைத்துப் பிழை

ஈ) பாடம் படித்தாயா?

விடை: ஆ) நீடூழி வாழ்க

3. ′என்னே தமிழின் இனிமை!′ என்பது எவ்வகைத் தொடர்? - உணர்ச்சி தொடர்

4. ′கலையரசி துணியைத் தைத்தாள்′ என்பது எவ்வகைத் தொடர்? - செய்வினைத் தொடர்

5. ′முயற்சி திருவினையாக்கும்′ - எவ்வகைத் தொடர்? - செய்தித் தொடர்

6. ஓவியம் மாறனால் வரையப்பட்டது - எவ்வகைத் தொடர்? - செயப்பாட்டு வினை

7. ஆசிரியர் பாடத்தை நடத்தினார் என்பது --------- - செய்வினைத் தொடர்

8. ′தென்னை மரத்திற்கு கிளைகள் இல்லை′ - என்பது -------------. - செய்தித் தொடர்

9. பாரி கபிலரால் போற்றப்பட்டார் - என்பது எவ்வகைத் தொடர்? - செயப்பாட்டு வினை

10. இந்தச் செயலைச் செய்தது யார்? என்பது எவ்வகைத் தொடர்? - வினாத் தொடர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக