புதன், 17 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) சுழ்நிலையியல் - பாதுகாப்பு 009.


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
சுழ்நிலையியல் - பாதுகாப்பு 009.

🌟 அன்றாட வாழ்க்கையில் வீட்டில் மற்றும் வெளி இடங்களில் எதிர;பாராமல் நமக்கு ஆபத்து ஏற்படலாம். இவற்றிலிருந்து நம்மைக் காத்து கொள்ள நாம் மேற்க்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே பாதுகாப்பு எனப்படும்.

விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணம்:

🌟 விபத்து ஏற்படுவதற்கு கவனக்குறைவு, விதிகளை மீறுதல், எச்சரிக்கையின்மை, அவசரம் ஆகியவை முக்கிய காரணங்களாகும்.

🌟 பெரும்பாலான விபத்துகளுக்கு நீர;, நெருப்பு, மின்சாரம் மற்றும் வாகனங்கள் காரணமாகின்றன.

நெருப்பு:

🌟 நமது தினசரி வாழ்க்கையில் பல்வேறு வகையில் பயன்படுகிறது. ஆக்கம் மற்றும் அழிவு இரண்டையும் செய்ய வல்லது.



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
தீ விபத்துக்கான காரணங்கள்:

🌟 எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள்

🌟 சமையல் எரிவாயுக் கசிவு

🌟 மண்ணெண்ணெய் அடுப்பில் அளவுக்கு மீறிக் காற்று அடைக்கும் போது அடுப்பு வெடித்தல்.

🌟 பழுதடைந்த மின்கம்பிகள் ஒன்றின் மீது மற்றொன்று படுதல்

🌟 பட்டாசுகள், வெடிக்கும் போது அருகில் உள்ள குடிசை மற்றும் பொருள்கள் மீது விழுதல் ஆகியவற்றால் தீ விபத்து ஏற்படலாம்.

தீ விபத்தைத் தவிர;க்க நாம் செய்ய வேண்டியவைகள்:

🌟 எளிதில் தீப்பிடித்துக் கொள்ளக்கூடிய பொருள்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

🌟 சமையல் செய்வோர; பருத்தி ஆடையினை அணிதல் நல்லது

🌟 சமையல் முடிந்தபின் எரிவாயு சிலிண்டர; வால்வை மூடி வைக்க வேண்டும்.

🌟 விழாக் காலங்களில் பட்டாசுகளை வெடிக்கும் பொழுது பெரியவர;கள் துணையுடன் கவனமுடன் வெடிக்க வேண்டும்.

தீக்காயம் ஏற்ப்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி:

🌟 தீப்பற்றிக் கொண்டவர; மீது போர;வை அல்லது கோணிப்பையை சுற்றீத் தீயைக் கட்டுப்படுத்த வேண்டும்.

🌟 தீக்காயம் ஏற்ப்பட்ட இடத்தில் குளிர;ந்த நீரைத் தொடர;ந்து ஊற்ற வேண்டும்.

🌟 தீக்காயத்தினால் ஏற்படும் தீக்கொப்பளங்களை உடைக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக