ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் 007.
1. மாஸ்லோவின் தேவைகள் படிநிலைகளுள் முதல்படி -------------ஐக் குறிக்கும். - அடிப்படைத் தேவைகள்
2. ′நினைவாற்றல்′ என்ற நு}லின் முதல் பிரதியை வெளியிட்டவர் - எபிங்கஸ்
3. ரோர்ஷாக் என்பவரின் மைத்தடச் சோதனை மிகவும் இதற்கு பிரசித்தமானது - ஆளுமை
4. பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் --------------- - அறிவு வளர்ச்சி பற்றியது
5. மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன்களில் ஒன்று. - ஆக்கத்திறன்
6. உட்காட்சி மூலம் கற்றல் எனும் கொள்கையைக் கூறியவர் - கோலர்
7. நுண்ணறிவுக் கோட்பாட்டின் இரு காரணிக் கொள்கைகளை கண்டுபிடித்தவர் யார்? - ஸ்பியர்மேன்
8. முயன்று தவறிக் கற்றல் எனும் கோட்பாட்டை முதலில் உணர்த்தியவர் - தார்ண்டைக்
9. நுண்ணறிவு பற்றிய குழுக்காரணிக் கொள்கையைக் குறிப்பிட்டவர் - தர்ஸ்டன்
10. காங்க்ரீட் ஆபரேஷன் என்பதை வரையறுக்கும் மூன்று கருத்துக்கள் - ஈடுசெய்தல், மீளும் தன்மை, தனித்துவம்
11. தற்சோதனை என்பது இதனைப் பற்றியப் படிப்பாகும். - தனிமனிதருக்கு தானாக மனதில் எழுகின்ற மனசாட்சியற்ற அனுபவம்
12. உளக்காட்சிகள் (Image) என்பவை -------------இன் கருவிகளாகும். - உள்ளுருவாக்கம் (Imagination)
13. வெகுதொலைவில் உண்டாகும் சப்தத்தால் மாணவனின் கவனம் பாதிப்படைவது. - கவனக் குறைவு
14. பியாஜேயின் கல்விக் கொள்கைகளைப் பற்றிய ஆய்வு குழந்தைகளின் எதைப் பற்றி அறிய உதவுகிறது? - சிந்திக்கும் முறை
15. ஏமாற்றும் குணமுடைய ஒருவன், பிறரும் ஏமாற்றியுள்ளனர் எனக் கூறுவதில் உள்ள ′தற்காப்பு இயக்கத்தினைக்′ (Defence Mechanism) குறிப்பிடுக. - எறிதல் அல்லது முனைப்பு (Projection)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக