ஆசிரியர் தகுதி தேர்வுக்கு(TET) 6 லட்சம் பேர் விண்ணப்பம்...!
👉 நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
👉 டெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
👉 இந்த வருடம் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத, 6 லட்சத்து 4 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
👉 தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியாற்ற முடியும் என்று கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.
👉 அதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
👉 ஒவ்வொரு ஆண்டும் நடக்க வேண்டிய இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடக்கவில்லை.
👉 ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு முதல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
👉 ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. இடைநிலை ஆசிரியர் பணிக்கு தாள்1, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தாள் 2 என ஒதுக்கப்பட்டுள்ளது.
👉 இதையடுத்து, இடைநிலை ஆசிரியர் பணிக்கு சுமார் 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் விண்ணப்பித்துள்ளனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சுமார் 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக